2 கொரிந்தியர் திருமுகம் முனைவர் மேதகு ஆயர் அ. ஸ்டீபன் விவிலிய அன்பர்களே, வணக்கம்.கொரிந்து நகரை கி.மு. 146 ல்உரோமைப் பேரரசு அழிப்பதற்குமுன்னால் அது செழிப்பும்பெருமையும் நிறைந்த ஒன்றாகத்திகழ்ந்தது. பின்னர் கி.மு. 44 ல்ஜுலியஸ் சீசர் இந்நகரை மீண்டும்கட்டி எழுப்பி உரோமையின்காலனியாக, இத்தாலி நாட்டு வியாபாரிகளின் புதிய கொரிந்து நகராகமாற்றினார். இக்காலத்திற்குப் பிறகு, இது பல நாட்டு வியாபாரிகளும்சாதனையாளர்களும் வந்து செல்கின்ற ஒரு முக்கிய நகராக உயர்ந்தது. கி.மு.29 ல் நிலவிய அமைதி, செழிப்பு இவற்றின்காரணமாகஅக்காயாமாநிலத்தின்செனட் தலைநகராகவும் இது விளங்கிற்று. மேலும் கொரிந்தின் புவியியல் அமைப்பும் அது முக்கியத்துவம்பெறுவதற்குக் காரணமாய் அமைந்தது. இத்தாலி, ஸ்பெயின் போன்றஐரோப்பிய நாடுகளிலிருந்து பாலஸ்தீனம் போன்ற மத்திய கிழக்குநாடுகளுக்கு கடல் வழியாக நடைபெற்ற வாணிபத்திற்கு மையப்பகுதியாகவும், பண்டமாற்று இடமாகவும், பலவகைச் சமூக, சமய நம்பிக்கைஉடையவர்கள் கூடி வரும் இடமாகவும் இது இருந்தது. மேற்குக் கரையில்அத்ரியாட்டிக் கடலும் கிழக்குக் கரையில் ஆகேயன் கடலும் தொட்டுத்தழுவும் கொரிந்து நகரம், எப்பொழுதும் பரபரப்பான வண்ண மயமானதுறைமுகங்களையும், முதலாளிகள், அடிமைகள், சமயவாதிகள், தத்துவஞானியர், இன்பம் சுவைப்போர் என்று பல வகையான மக்களையும்,கேளிக்கை விளையாட்டு இடங்களையும் கொண்டதாய் இருந்தது. இத்தகைய நகரில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்துத்திருச்சபையை புனித பவுல் நிறுவினார். ஆனால், இத்திருச்சபை அங்குநிலவிய பல்வகைக் கோட்பாடுகள், ஐதீகங்களால் பிரச்சனைகளுக்குஉள்ளாயிற்று. தனது திருமடல்கள் மூலமாக இப்பிரச்சனைகளைப் புனிதபவுல் எப்படித் தீர்த்தார் என்பதைத்தான் இப்பாடத்தில் படிக்கப்போகிறோம்.இப்பிரச்சனைகள் இன்றைக்கும் நமது சமூகத்திலும் திருச்சபையிலும்நிலவுவதால் புனித பவுலின் பதில்கள் நமக்கும் பயன்தரும்படிஅமைந்துள்ளது இம்மடல்களின் தனிச்சிறப்பு ஆகும். இப்பாடங்களைஎழுதித்தந்த புனித பவுல் விவிலிய நிலையத்தின் முன்னாள் இயக்குநர்பேரருள்திருமுனைவர் வ. மரியதாசன்பேரருள்திருமுனைவர் வ. மரியதாசன்பேரருள்திருமுனைவர் வ. மரியதாசன்அவர்களுக்கும், திருச்சி புனித பவுல்குருத்துவக் கல்லூரி பேராசிரியர்பேரருள்திரு முனைவர் அ. ஸ்டீபன்அவர்களுக்கும் நமது நன்றிகள் உரித்தாகுக. இறைவார்த்தைப் பணியில் 2 கொரிந்தியர் 1. முன்னுரை
2 கொரிந்தியர் 1. முன்னுரை இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள்எங்கு சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள்உடலில் சுமந்து செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள்உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும் போதே நாங்கள் அவரைமுன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம்'(2 கொரி 4: 10-11) எனக் கூறும் பவுல் தனது மடலில் காணப்படும்கருத்துக்களை தனது அனுபவச்சாறாகப் பிழிந்து தருகிறார். இயேசுவையும் அவரது போதனைகளையும் தான் ஏற்படுத்தியகொரிந்து சபையில் நிலை நாட்ட பவுல் அடைந்த இடர்பாடுகள்,மனவேதனைகள், உள்ளக்குமுறல்கள், சிந்தியகண்ணீர் அனைத்தையும்இம்மடலில் காணலாம் ( 2:4, 7:5; 6:5 அதி 10, 11, 12).தூய பவுல் மனம் விட்டுப் பேசி இதயத்தில் ஒளிவு மறைவு இன்றிபிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல் இம்மடலில் சொல்கிறார் (3:11-13).தானே ஏற்படுத்திய இத்திருச்சபையின் சகோதரர்களை நன்குஅறிந்த பவுல்தனதுமடலில் பரிவு, பாசம் ஒப்புரவுஉணர்வு, (2:4-10, 3:1-3), அதேநேரத்தில்கடுமை, கண்டிப்பு (7:8, 10:10) முதலியஉணர்வுகளைக்காட்டுகிறார். 2.பின்னணpஏறத்தாழ கி.பி. 55-56 -இல் மாசிதோனியாவிலிருந்து எழுதப்பட்டகொரிந்தியர் இரண்டாம் மடலில்பவுலுக்குஏற்பட்ட பெருந்துயர்களையும்,இடர்பாடுகளையும் அவர் மீதுசாற்றப்பட்ட களங்கங்கள், குற்றச்சாட்டுகள்முதலியவற்றைக் காணலாம். இம் மடல்தான் இதற்குச் சான்றுகள்தருகின்றன. அவற்றை இங்கு நோக்குவோம். 2.1. பயணம்கைவிடல் #8220; பல போலிப் போதகர்கள் கொரிந்துக்குள் நுழைந்து பவுலின்அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர் (7:8-9). பவுலை இகழ்ந்து,அவர் ஏமாற்றுபவர், அறிமுகமில்லாதவர் (6:8-10) என அவமதித்தனர்.நாவன்மையில்லை, அறிவற்றவன் என இகழ்ந்தனர் (11:6, 16). பவுல்அறிவித்த இயேசுவைத் தவிர வேறொரு ஆவியையும் பற்றிப் பேசினர்(11:4). இந்தக் குழப்பமான சூழ்நிலையில் கொரிந்து நகருக்குச் சென்றபவுலுக்கு அவமதிப்பும் இகழ்ச்சியும் காத்திருந்தது. சூழ்ச்சிகளும்சந்தேகங்களும்நிறைந்த சூழ்நிலையைக் கண்டார் ( 11:19-20). கிறிஸ்தவசமூகம் அவரை நல்ல முறையில் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே,மறுமுறையும் கொரிந்துக்குப் பயணம் செல்லவிருந்த திட்டத்தைக்கைவிட்டு விட்டார் (1:13-16). இந்நிலையில் மறுபடியும் வந்து வருத்தத்தைக் கொடுக்க பவுல்அடிகளார் விரும்பவில்லை. அவரிடம் உள்நோக்கம் எதுவுமில்லை(1:17-18). ஒரே நேரத்தில்ஆம் என்றும் இல்லையென்றும் சொல்பவரல்லஅவர். கோழைத்தனம் அறவே இல்லை.பவுல் கொரிந்துக்கு வந்தால் பகையும் குழப்பமும் மேலும் வளரநேரிடும். குழப்பியவர்களுக்கு எதிராகக்கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்(10:2, 10). எனவே, பின்விளைவுகள்ஏற்படலாம் என்ற அச்சம்இருந்ததால்திட்டத்தை கைவிட்டார். எனினும் அவரை கோழை என்றும்,சொன்னவாக்கை நிறைவேற்றாதவர் என்றும் குறை கண்டார்கள். 2.2. பவுலின்எதிரிகள் இவர்கள் பணி புரியாமலேயே பணியாளர்கள் எனக்காட்டுகின்றனர். இத்தகையோர் போலித் திருத்தூதர், வஞ்சகவேலையாட்கள், கிறிஸ்துவின் திருத்தூதராக நடிப்பவர்கள் (10:13-15)எனக் கடுமையாகச் சாடுகிறார். இவர்கள்தங்களைஇஸ்ரயேலர் என்றும்எபிரேயர் என்றும் (11:22) மார்தட்டிக் கொள்வார்கள்.இவர்கள் பவுலின் மடல்கள் கடுமையானவை, ஆற்றல்மிக்கவைஎன்றாலும் இவரே பார்க்கச் சகியாதவர், பேச்சுத்திறனற்றவர் (10:10)என்றனர். இவ்வெதிரிகள் கடவுளின் வார்த்தையை மலிவுச்சரக்காக்கியவர்கள் (2:17). இவர்கள் சான்றுக் கடிதங்கள் பெற்றுவந்தவர்கள். ஆனால் பன்னிரு திருத்தூதர்களிடமிருந்தல்ல. பவுலின்இவ்வெதிரிகள் போலிப் போதகர்கள். இவர்கள் பவுல் போதித்தநற்செய்திக்கு எதிராகப் போதித்து பிற இனத்தாரை யூதச்சட்டத்திற்கு உட்படுத்தி கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தைப் பொருளற்றதாகமாற்றியவர்கள் (கலா 2:4; 2 கொரி 11:4). பவுலிடம் நற்சான்றுக் கடிதம்இல்லாததால்இவரதுதூததிகாரத்தின்மீதும், தூதுரையின்மீதும்களங்கம்கற்பித்தனர் (3:1-3). இரு விதமாகப் பேசும் பண்புடையவர் (1:17-18),நேரடியாக வரமுடியாதவர் (1:23), வஞ்சிப்பவர் (7:2); பிறர் மூலமாகஆதாயம் தேடுபவர் (12:17-18) என்று பவுலை குற்றம் சாட்டினர். பவுல் காணிக்கைப் பொருளை கொள்ளையடித்திருக்க முடியும்(8:20-21) என்றும் குற்றப்படுத்தியிருக்கலாம். இவர் தன்னைப் பற்றிப்பெருமையாகவும்(3:1; 12:1-17) தனதுஅதிகாரத்தை அதிகமாகக் காட்டியும்(4:5) வந்தார் என்றும் கூறியிருக்கலாம். இவையெல் லாம் பவுலைஅதிகமாகப் புண்படுத்தி யது. உள்ளம் உடைந்து மனம் நொந்துஇத்திருமடலில் தனது உணர்வுகளையும் கவலைகளையும்கடுமைகளையும் கொட்டி வைக்கிறார். 2.3. உறவுபழுதானநிலை 2.4. தீத்துவின் தூதால் உறவு மலர்ந்த நிலை 3. திருமுகத்தின்அமைப்பு#8220; இந்த நோக்கத்தின் அடிப்படையில் இத்திருமுகத்தை மூன்றுபகுதிகளாகப் பிரிக்கலாம். 1. முன்னுரை: வாழ்த்தும் ஆசீரும் (1:1-11)
3. எருசலேம் திருச்சபைக்கு நன்கொடை திரட்டுதல்
4. பவுல்தன்னைப்பற்றிகாப்புரை தருதல்(10:1-13:10)
5. முடிவுரை: வாழ்த்தும் ஆசீரும் (13:11-13) 4. திருமுகத்தின் செய்தி புதிய உடன்படிக்கையின் பணியாளரான பவுல் புதியஉடன்படிக்கைக்கும்பழையஉடன்படிக்கைக்கும்உள்ளவேறுபாடுகளைத்தருகிறார். பின்பு புதிய உடன்படிக்கையின் மேன்மையையும்அவ்வுடன்படிக்கையின் பணியாளர்களின் சிறப்பையும்எடுத்துரைக்கின்றார்.
இவ்வாறு வேறுபாடுகளைத் தந்து புதிய உடன்படிக்கையின்மேன்மையைக் காட்டுகிறார் பவுல். பவுலின் எண்ணப்படி பழையஉடன்படிக்கை கற்பலகைகளில் மோசேக்கு எழுத்து வடிவமாகக்கொடுக்கப்பட்டது. பல கட்டளைகள் அடங்கி இருந்தும் அவற்றைக்கடைபிடிக்க அவை உதவி தரவில்லை. மாறாக சட்டம்வெளிப்படுத்தப்பட்டபிறகுதான் மனிதர் தன் பாவநிலையை உணர்ந்துகொண்டார். திருச்சட்டம் தரப்படுமுன்உலகில்பாவம் இருந்தது. ஆனால்சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. பாவ உணர்வைக் கொடுத்த சட்டத்திற்கு, பாவ நிலையிலிருந்துவிடுதலைப்பெறும் ஆற்றல் அளிக்க முடியவில்லை. மாறாக பாவஇச்சைகள்நம்முடையஉறுப்புகளில்செயலாற்றின. அதனால்விளைந்தபயன் சாவு (உரோ 7:5) என்று தெளிவாக விளக்குகிறார். புதியஉடன்படிக்கை பற்றி எரேமியா (31:31-34) இறைவாக்குரைக்கிறார்(காண். லூக் 22:20; 1 கொரி 11:25; எபி 9:9; 9:15), அவர் கூறும் புதியஉடன்படிக்கைபோல் இராது. #8220;என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில்பதிப்பேன்; அதை அவர்களதுஇதயத்தில்எழுதிவைப்பேன்” (31:33 காண்எசே 36:26-27; 11:19) இறைவன் தனது ஆவியை உங்களுள்புகுத்துவதால் இவையெல்லாம் நிகழ்கின்றன. இஸ்ரயேல் மக்களோடு மோசே வழியாக இறைவன் செய்துகொண்ட உடன்படிக்கையை (இச 19:18-19) காண்கிறோம். மேலும்திருச்சட்டம் பலகைகளைப் பெற்ற மோசே முகத்தில் ஒளி வீசியது (விப 34:29-35). ஆனால் இச்சட்டங்களும் இதன் வழியாக வருகின்றதிருப்பணியும் இஸ்ரயேல் மக்களுக்கு வழிகாட்டியதேயொழியவாழ்வளிக்க முடியவில்லை. சாவைவிளைவித்தது(உரோ 7:9-10; கலா3:21). இவ்வாறு கூறுவதால் பவுல் சட்டங்களில் குறை காண்கிறார்என்றில்லை (உரோ 7:12,14). மாறாக தனது சொந்த அனுபவத்தில்சட்டங்கள்வாழ்வளிக்கும்ஆற்றலைக் கொண்டிருக்கவில்லைஎன்பதைஅறிகிறார். 4.2. புதிய உடன்படிக்கையின்பணியாளர் (அதி 3-7) 1) இத்திருப்பணி வாழ்வுக்கு இட்டுச் செல்கிறது (வச 6). தீர்ப்புஅளிப்பதல்ல மாறாக விடுதலைத் தீர்ப்பு ஒப்புரவாக்கும்இத்திருப்பணியால் அளிக்கிறது (வச 9). ஒருவர் கிறிஸ்துவோடுஇணைந்திருக்கும்போதுஅவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய்இருக்கிறார்(5:16-21). 2) சட்டத்தின் மாட்சியும் சட்டப்பணியாளர் மோசேயின் மாட்சியும்காலத்தால் மங்கி மறைந்துப்போனது. இவ்வாறு கூறுவதால் சட்டத்தில்நிலையற்ற தன்மை நற்செய்தியின் நிலையான தன்மைக்கு வழிவகுக்கிறது (வசனங்கள் 10,11). இனிமேல் இம்மாட்சிமையைக்கிறிஸ்துவில் ( 2 கொரி 4:6 தீத் 2:13) காணமுடிகிறது (காண்யோ 1:17;எபி 8). 3) மோசே முகத்தில்முக்காடிட்டிருந்தார் (விப 34:33). இந்தத் திரைபவுலின் கூற்றுப்படி வரலாற்று நிகழ்ச்சி மட்டுமல்ல மாறாக, இன்றும்பழைய ஏற்பாட்டை வாசிக்கும் மக்களுக்கு உண்மையை மறைத்துக்கொண்டிருக்கிறது.சட்டமும் இறைவாக்குகளும் இறுதி வெளிப்பாடுகளல்ல. அவைகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தயாரிப்புக்களாகும் (கலா 3:24).கிறிஸ்துவை அறிவித்து அவரே ஆண்டவர் என இப்பணியாளர்கள் பறைசாற்றுகின்றனர்.தன்னை கிறிஸ்துவின் பணியாளன் என்பதற்கு #8220;நற்சான்றுக்கடிதம் நீங்களே. அது வாழும் கடவுளின் ஆவியால் எழுதப்பட்டது.அதுவும் இதயமாகியபலகையில்(3:3) எனும்போதுபவுல்தனதுஉண்மைநிலையைஅப்பட்டமாகக் காட்டிவிளக்குகிறார். இங்குகடவுள், கிறிஸ்து,ஆவி இணைந்து செயல்படுவதைக் காண்கிறோம். #8220;ஆண்டவரின்ஆவியார் இருக்கும்இடத்தில்விடுதலைஉண்டு” (3:17) எனும்போதுதான்பெற்ற 'விடுதலையின் கிறிஸ்து' அவரை ஆட்கொண்ட (திப 9)அனுபவத்தைத் தருகிறார். 5. நன்கொடை திரட்டுதல் (8:9) 5.1. திருச்சபையில்நன்கொடை 5.2. நன்கொடைக்குவேறுபெயர்கள் 5.3. பவுலால் நிதி திரட்டும் பணிநிறைவேறுதல்ஏழைகளுக்குப் பணம் திரட்டும் திட்டத்தை பவுல் கலாத்தியசபையில் துவக்கியவாறே கொரிந்து நகரிலும் துவக்கி வைத்தார். பணம்வசூல் செய்ய வேண்டிய விதிமுறைகளைக் காட்டி தானேஅத்திட்டத்தைமுடித்து வைக்க விரும்பினார் (1 கொரி 16: 1-3). இதற்கிடையில் பவுல்சென்றபோது கொரிந்தில் அவருக்கு அவமதிப்புக் கிடைத்ததால் தீத்துவழியாக வேதனையோடுமடல்வரைந்துகொரிந்துக்குஅனுப்புகிறார். நிதிதிரட்டும்வேலையும்அவரிடம்ஒப்படைக்கப்பட்டது. ஆனால்நிதிசரியாகத்திரட்ட முடியவில்லை. எனவே, மறுபடியும் தீத்துவோடு இருசகோதரர்களையனுப்பி நன்கொடை திரட்டும் பணியை நடத்தி முடிக்கக்கேட்டுக் கொண்டார். இறுதியாக பவுலே கொரிந்து நகருக்குச் சென்றுநன்கொடை சேர்க்கும் பணியை முடித்து, தொகையை எருசலேமுக்குக்கொண்டு போனார் (காண்திப 20:35; உரோ 15:26). 5.4. நன்கொடைபற்றியஅறிவுரை
6. கண்டிப்பும் அன்பும் 6.2. மனவேதனையில்பவுலிடம் சுரக்கும் அன்பு 7. முடிவுரை ------------------------------------------
-------------------------- ---------------- ------ --
|
||||||||||||||||||||