விவிலியம் பொது முன்னுரை

ஆசிரியர்: மறைந்த முன்னாள் பேராசிரியர் சாக்கோ முள்ளுர்

 


I. விவிலியம் என்பது என்ன?

விவிலியத்தை நாம் பல கோணங்களிலிருந்து பார்க்க முடியும்; பல்வேறு முறைகளில் விளக்கவும் முடியும்.
அ) விவிலியம் என்பது மனித வார்த்தைகளில் கடவுளின் வார்த்தை. ஏனெனில் விவிலிய ஆசிரியர் இருவர்: கடவுளும் - மனிதனும்.

ஆ) விவிலியம் இறைவெளிப்பாட்டின் பதிவேடு. கடவுள் தம்மைப்பற்றியும், தம் மீட்பின் திட்டத்தைப்பற்றியும் ஆழ்ந்த உண்மைகளை சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்துகிறார். இவ்வுண்மைகளை மனிதன் தன் சொந்த முயற்சியினால் அறிய முடியாது. எனவே இறை வெளிப்பாடு இன்றியமையாதது. (எ.கா.) கடவுள் - ஒருவர்; ஆள்வகையில் மூவர்... உலக மீட்பே அவர் திட்டம்..., உயிர்ப்பு, நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம்....

இ) விவிலியம் நம்பிக்கையின் இலக்கியம்: விவிலியத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மைகளை நன்கு புரிந்துகொள்ள விசுவாசத்தின் ஒளி மிகவும் தேவை. எனவே விவிலியத்தை நம்பிக்கையின் இலக்கியம் என்பது தகும்.

ஈ) விவிலியம் மீட்பின் வரலாறு ஆகும்: விவிலியத்தின் மையக்கருத்து மனித குலத்தின் மீட்பு ஆகும்.

உ) விவிலியம் இறையாட்சியின் வரலாறு ஆகும். கடவுள் மனிதனை தம் ஆட்சியின் வழியாக மீட்கிறார்.

ஊ) இறைவன் தம் மக்களுக்கு அனுப்பியிருக்கும் ``அன்புக் கடிதமே விவிலியம்” (புனித கிறிஸ்தோத்தம் அருளப்பர்) ``நம் தந்தையாகிய இறைவன் விவிலியத்தின் வழியாக தம் மக்களைக் கண்டிக்கிறார், திருத்துகிறார், பாராட்டுகிறார், ஊக்குவிக்கிறார், புனிதத்திற்கு இட்டுச் செல்கிறார் ( 2 திமொ 3:16-17; காண்க: இரண்டாம் வத்திக்காண் சங்க ஏடு, இறைவார்த்தை எண்2).

எ) விவிலியம் தூய ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டு, திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படுகிற 73 புத்தகங்களின் தொகுப்பாகும்.
- விவிலியம் 73 புத்தகங்களால் ஆனது.
- தூய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டது.
- திருச்சபையின் அங்கிகாரம் பெற்றது.


2. விவிலியம் என்ற சொல்லின் தோற்றத்தையும் பொருளையும் விளக்குக? *

பிப்ளோஸ் என்பது லெபனான் நாட்டிலுள்ள ஒரு துறைமுகப் பட்டிணம். புத்தகம் செய்யப் பயன்படும் பாப்பிரஸ் என்ற நாணல் புல் ஓலை விற்கப்பட்ட இடம் இது. இந்த பாப்பிரஸ் என்ற வார்த்தை பேப்பர் (Paper) ஆயிற்று. பாப்பிரஸ் விற்கப்பட்ட `பிப்ளோஸ்’ என்ற நகரத்தின் பெயரால் Biblion - Book - புத்தகம் ஆயிற்று. விவிலியம் என்ற சொல்லின் மூலம் “Biblion” என்ற கிரேக்க சொல்லாகும்.* இச்சொல்லிற்கு `புத்தகம்’ அல்லது `சுருள்’ என்று பொருள். ஒருமைச்சொல் - Biblion, பன்மைச்சொல் Biblia. இந்த பன்மைச்சொல் இலத்தீன் மொழியில் ஒருமைச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. Biblia = Book; இந்த இலத்தீன் வார்த்தையை வேறு ஐரோப்பிய மொழிகளில் சொந்தமாக்கிக் கொண்டன. (உம்) Bible (English), Biblia (Italian), Bibel (German), Bible (French)..

3. விவிலியத்தின் வேறு பெயர்கள் யாவை? அவற்றின் தோற்றத்தையும் பொருளையும் விளக்குக.

(i) Scripture- எழுதப்பட்டது (இலத்தீன் - - Scriptura).
(ii) Testament - - உடன்படிக்கை; (லத்தீன் Testamentum); பழைய ஏற்பாடு (உடன்படிக்கை): கடவுளுக்கும் பழைய இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே உள்ளது; புதிய ஏற்பாடு (உடன்படிக்கை): கடவுளுக்கும் புதிய இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவுவது.
(iii) மேலும் தமிழில்: வேதாகமம், விவிலியம், திருமறை நூல், திருநூல்.

4. விவிலியம் எவ்வாறு ஒரே சமயத்தில் ஒரு புத்தகமாகவும், பல புத்தகங்களாகவும் அமைந்துள்ளது?

விவிலியம் ஒரு புத்தகம், ஏனென்றால்,
- அதன் மூல ஆசிரியர் - கடவுளே
- அதன் அடிப்படை நோக்கம் ஒன்றே - மனிதனின் ஞான வளர்ச்சி
- அதன் மையப்பொருள் - மீட்பின் வரலாறு மட்டுமே.

விவிலியம் பல புத்தகங்களின் தொகுப்பு. ஏனெனில்,
- இது 73 புத்தகங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது;
எனவே இதை ஒரு ``நூலகம்” எனலாம்.
- மனித எழுத்தாளர் பலர்.
- ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு தனி நோக்கமும், பொருளும் உண்டு

(உம்) யோசுவா நூல்
பொருள்: கானான் நாட்டைப் பெறுதல் (போராட்டம் - வெற்றி)
நோக்கம்: கடவுள் பிரமாணிக்கமுள்ளவர்; தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதைக் காட்டல்.

5. விவிலியத்தின் மிக முக்கியமான பிரிவு யாது?
பழைய ஏற்பாடு - புதிய ஏற்பாடு.

* யூதர்கள் `பழைய ஏற்பாடு’ என்ற பெயரை விரும்புவதில்லை .. அவர்கள் அப்பகுதியை TANANK என்று அழைக்கிறார்கள். கூ-கூடிசயா சட்டம்;
N - Nebim இறைவாக்கினர்;
K - Ketubim இலக்கிய நூல்கள்.

புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டில் மறைந்துள்ளது; பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டில் தெளிவாய் தோன்றுகிறது (புனித அகுஸ்தீனார்).


6. யார் யாரெல்லாம் பழைய ஏற்பாட்டைத் தங்களுடைய புனித புத்தகமாக ஏற்கின்றனர்?

யூதர்களும், கிறிஸ்தவர்களும்.

7. இவர்கள் ஒருமித்த கருத்துடன் பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களை ஏற்கிறார்களா?
இல்லை - இவர்களிடையே பல வேறுபாடுகள் உண்டு

அ) யூதர்கள்: இவர்களுள் பாலஸ்தீனாவிலுள்ள யூதர்கள் எபிரேய மொழியிலுள்ள 39 புத்தகங்களை மட்டும் பழைய ஏற்பாடாக ஏற்றனர். பாலஸ்தீனாவிற்கு வெளியே உள்ள யூதர்கள் கிரேக்க மொழிபெயர்ப்பான `செப்துவசின்த்’ நூலில் காணப்படும் 39 + 7 = 46 புத்தகங்களையும் பழைய ஏற்பாடாக ஏற்றனர்.

இன்று யூதர்களிடையே இந்த வேற்றுமை கிடையாது. எல்லா யூதரும் 39 நூல்களை மட்டுமே ஏற்றுள்ளனர்.

ஆ) கிறிஸ்தவர்கள்: கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், பழைய ஏற்பாட்டில் கிரேக்க யூதர்களைப் பின்பற்றி 46 புத்தகங்களை ஏற்கிறார்கள்.

கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவர்கள் எபிரேய யூதர்களைப் பின்பற்றி பழைய ஏற்பாட்டில் 39 நூல்களை மட்டுமே ஏற்கிறார்கள்.

8. எந்தெந்த பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களை எபிரேய யூதர்களும் (அவர்களைப் பின்பற்றி கத்தோலிக்கர் அல்லாத பிற கிறிஸ்தவர்களும்) ஏற்றுக்கொள்வதில்லை?

1) தோபித்து
2) யூதித்து
3) பாரூக்கு
4) சீராக்கின் ஞானம்
5) சாலமோனின் ஞானம்
6) 1. மக்கபேயர்
7) 2. மக்கபேயர்

9) எந்தெந்த காரணங்களால் 7 புத்தகங்களையும் (வேறு ஒரு சில பகுதிகளையும்) எபிரேய யூதர்கள் ஏற்பதில்லை?

கீழ்க்காணும் காரணங்கள் தரப்படுகின்றன.
-பிற்காலத் தோற்றம்: பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின் எழுதப்படல்...
- அல்லது கிரேக்க மொழியில் எழுதப்படல்
- அல்லது பாலஸ்தீனாவுக்கு வெளியே எழுதப்படல்
ஆனால் இந்த காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாயில்லை; ஏனேனில் தூய ஆவியின் ஏவுதலை நாம் ஒரு குறிப்பிட்ட இடம், காலம் மொழிக்கு உட்படுத்தக்கூடாது. எனவேதான் ஆதித்திருச்சபை இந்த 7 புத்தகங்களையும் ஏற்றுக்கொண்டது.

10) எபிரேய யூதர்கள் பழைய ஏற்பாட்டு நூல்களை எவ்வாறு வகைப்படுத்துகின்றனர் (லூக் 24:44)?
அ) சட்டநூல்கள்: தொடக்கநூல்கள், விடுதலைப்பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச்சட்டம் (5)

ஆ) இறைவாக்கு நூல்கள்: முன்னைய இறைவாக்கினர் (6), யோசுவா, நீதித்தலைவர்கள், 1,2 சாமுவேல், 1,2 அரசர்கள் பின்னைய இறைவாக்கினர் (15):

* பெரிய இறைவாக்கினர்: எசாயா, எரேமியா, எசேக்கியேல்.
*பன்னிரு சிறிய இறைவாக்கினர்: ஓசேயா முதல் மலாக்கிவரை.

இ) இலக்கியம் (அறிவுரை நூல்கள் (13):
திருப்பாடல்கள், நீதிமொழிகள், யோபு, இனிமைமிகு பாடல், ரூத்து, புலம்பல், சபை உரையாளர், எஸ்தர், தானியேல், எஸ்ரா, நெகேமியா, 1,2 குறிப்பேடு. ஆக மொத்தம் 39 நூல்கள்.

11. கத்தோலிக்கர் பழைய ஏற்பாட்டை எவ்வாறு பிரிக்கின்றனர்?
அ) வரலாற்று நூல்கள் ஆ) இலக்கிய நூல்கள் இ) இறைவாக்கு நூல்கள்

அ) வரலாற்று நூல்கள்
- தொடக்கநூல், விடுதலைப்பயணம், லேவியர், எண்ணிக்கை இணைச்சட்டம்: ஐந்நூல் வரலாறு.
- யோசுவா, நீதித்தலைவர்கள், 1,2 சாமுவேல் 1,2 அரசர்கள்: - இணைச்சட்ட வரலாறு
- எஸ்ரா, நெகேமியா, 1,2 குறிப்பேடு: குறிப்பேட்டு வரலாறு.
-1,2 மக்கபேயர்: மக்கபேயர் வரலாறு
-ரூத்து, தோபித்து, யூதித்து, எஸ்தர்; அறிவுரை நூல்கள்

ஆ) இலக்கிய நூல்கள்:
யோபு, திருப்பாடல்கள், நீதிமொழிகள், சபை உரையாளர், சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், இனிமைமிகு பாடல்.

இ) இறைவாக்கு நூல்கள்
பெரியவர் 4 + 2= (6):
எசாயா, எரேமியா, (புலம்பல், பாரூக்கு), எசேக்கியேல், தானியேல்

சிறியவர் - (12):
ஓசேயா, ஆமோஸ், யோவேல், மீக்கா, ஒபேதியா, யோனா, நாகூம், அபகூக்கு, செப்பானியா, ஆகாய், செக்கரியா, மலாக்கியா மொத்தம் 46 நூல்கள்.

12. யார் புதிய ஏற்பாட்டைத் தங்களுடைய `புனித’ புத்தகமாக ஏற்கின்றனர்?
கிறிஸ்தவர்கள்

13. புதிய ஏற்பாட்டு புத்தகங்களை எவ்வாறு வகைப்படுத்துகின்றனர்?
அ) நற்செய்தி ஏடுகள் (இயேசுவின் வரலாறு) ..... 4
ஆ) திருத்தூதர் பணிகள் (தொடக்கத் திருச்சபை வரலாறு) ..... 1
இ) திருமுகங்கள் (தொடக்கத் திருச்சபைக்கு அறிவுரை) ..... 21
ஈ) திருவெளிப்பாடு (துன்புற்று மகிமையுறும் திருச்சபை) ..... 1

மொத்தம் 27


சுருங்கக் கூறின்:

  ப.ஏ. பு.ஏ
மொத்தம்
எபிரேய யூதர்கள் 39 - 39
கிரேக்க யூதர்கள் 39+7 - 46
கத்தோலிக்கர் - அல்லாத கிறிஸ்தவர் 39 27 66
கத்தோலிக்கர் 39+7 27 73



14. பழைய - புதிய ஏற்பாட்டின் 73 நூல்களை 72 என்று ஒரு சிலர் கணக்கிடுவது ஏன்?

புலம்பல் - எரேமியா நூல்களை ஒரே நூலாக கருதும்போது பழைய ஏற்பாட்டில் 45, புதிய ஏற்பாட்டில் 27, மொத்தம் 72. இரு நூலாகப் பிரிக்கும்போது 73, நூல்கள்.

15. எப்போது விவிலியம் அதிகாரங்களாகவும், வசனங்களாகவும் பிரிக்கப்பட்டது?
விவிலியம் எழுதப்பட்டபோது இந்த பிரிவுகள் இல்லை. அதிகாரங்களாகப் பிரித்தவர்: கான்டர்பரி பேராயர் - ஸ்டீபன் லாங்டன் (13 நூல்கள்).
வசனங்களாகப் பிரித்தவர்: சாந்தஸ் பஞ்ஞினோ - கி.பி. 1528 (39 நூல்கள்), பிரான்சு அச்சு வல்லுநர் ராபர்ட் ஸ்டீபன் - 1555 (ஏனைய நூல்கள்).

* ராபி நாத்தான் என்பவர் 16 ம் நூற்றாண்டில் எபிரேய விவிலியத்தை (39 நூல்கள்) அதிகாரங்களாகவும், வசனங்களாகவும் பிரித்ததாக ஒரு சிலர் கூறுவர்.

16. திருவழிபாட்டுக்குத் தேவையானவாறு விவிலியப் பிரிவுகள் எப்போது செய்யப்பட்டன?
இந்த பழைய வழக்கம் யூதர்களிடமிருந்து பெறப்பட்டது. யூதர்கள் 5 சட்ட நூல்களை 167 பகுதிகளாகப் பிரித்து 3 வருடங்களாக ஓய்வு நாட்களில் வாசித்தனர். மேலும் முக்கியமான நாள்களில் வேறு புத்தகங்களிலிருந்தும் படித்தார்கள். (உம்) பாஸ்கா - இனிமைமிகு பாடல்; பெந்தகோஸ்தே - ரூத்து; கூடாரப் பண்டிகை - சபை உரையாளர்; பூரிம் பண்டிகை- எஸ்தர்; ஆலய நினைவு விழா - புலம்பல். இதைப்பின்பற்றியே திருப்பலியிலும் அருட்சாதனங்கள் மற்றும் திருச்சடங்குகள் நிறைவேற்றும்போதும் தகுந்த பகுதிகளை நாம் வாசிக்கிறோம்.

17. விவிலியத்தின் முக்கியத்துவம் என்ன? பல காரணங்கள் உண்டு
அ) நமது ஞான வாழ்க்கைக்கு விவிலியம் முக்கியமானது:
திபா 1- கடவுள் வார்த்தையை தியானிப்பவன் பேறு பெற்றவன்.
திபா 19- கடவுள் வார்த்தை மனிதனை மாற்றவல்லது;
தேன் - தேனடையிலும் இனியது.
திபா 119 -கடவுள் வார்த்தை ஒளி, கேடயம், வழி, வாழ்வு...
1கொரி 10:1-11 பழைய ஏற்பாட்டு அனுபவங்கள் நமக்கு சிறந்த படிப்பினை.
2 திமொ 3:16-17 உத்தம மனிதனை உருவாக்குகிறது.
எபி 4:12-13 மிகக் கூர்மையான வாள்
உரோ 1:16-17மீட்பின் கருவி
எசே 55:10-11 மழை
மாற்கு 4:26-29 விதை
எரே 1:9-10 கட்டி எழுப்பவும் அடித்துத் தகர்க்கவும் வல்லது எரே 23:29 சம்மட்டி

ஆ) இறையியல் படிப்பதற்கு: (காண்க: சங்க ஏடு - இறைவெளிப்பாடு எண். 24)
இ) போதிக்கும் பணிக்கு: ``விவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறியாதவன்” (புனித எரோனிமுஸ்).
ஈ) முழு மனிதனை உருவாக்குகிறது.

* விவிலியம் அறிவுக்களஞ்சியம். எகிப்து, அசீரியா போன்ற நாடுகளைப் பற்றிய அறிவு, விவிலியம் வழி நமக்குக் கிடைக்கிறது. மேல்நாட்டு இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கத்திய எழுத்தாளர்கள் விவிலியக் கருத்துக்களை ஏராளமாகப் பயன்படுத்தி இலக்கியம் படைத்துள்ளனர். (உம்) ஞயசயனளைந டுடிளவ. * கலைகள் படைத்துள்ளனர். (உம்) பொதுத்தீர்வை; இறுதி இராவுணவு * விவிலியக் கருத்துக்களை எந்நாட்டினரும், எம்மொழியிலும், கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர் அல்லாதவரும் கூட பயன்படுத்துகிறார்கள்.
* விவிலியம் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது இதற்குத்துணையாக அமைகிறது.

18. விவிலியப் புத்தகங்கள் எக்காலத்தில் உருவாயின?
பழைய ஏற்பாடு - கி.மு. 13-ம் நூற்றாண்டுக்கும், கி.பி. 1-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டட காலத்தில். புதிய ஏற்பாடு கி.பி. முதல் நூற்றாண்டு. ஆக மொத்தம் 14 நூற்றாண்டுகளில் உருவாயின.

19. விவிலிய ஏடுகள் எவ்வாறு படிப்படியாக உருவாயின?
- விவிலியத்தின் கருத்துக்கள் புத்தக வடிவம் பெறுவதற்கு முன் பல நூற்றாண்டுகளாக வாய்மொழி பரம்பரையாக இருந்தன.
- (உம்) குலமுதுவர்கள் வரலாறு
- வெகுகாலத்திற்குப் பின் இந்த வரலாறு எழுதப்பட்டது
(உம்) குல தந்தையர்கள் வரலாறு எழுதத் தொடங்கியக் காலம் கி.மு. 9-ம் நூற்றாண்டு.
- திருப்பாடல்கள்: பல குழுக்களால் பல கால கட்டங்களில் (குறிப்பாகத் தாவீதின் காலத்தில்) இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு.
- நீதிமொழிகள்: சாலமோன் இன்னும் பல்வேறு காலத்திலுள்ள பல்வேறு ஞானிகளுடைய பொன்மொழிகளின் தொகுப்பு.
- இறைவாக்குப் புத்தகங்கள்: இறைவாக்கினர் பேசியதை பெரும்பாலும் அவர்களுடைய சீடர்கள் எழுதினர்.
- வரலாற்று நூல்கள்: யோசுவா, நீதித்தலைவர்கள், சாமுவேல், அரசர் ஏடுகள் வாய்மொழிப் பரம்பரைகளையும், அரசவை நாள்குறிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை.
- நற்செய்தி நூல்கள்: இயேசு புத்தகம் எழுதவில்லை. எழுதக் கட்டளையிட்டார். ஏறக்குறைய 40 வருடங்களாக சீடர்கள் போதித்தனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இயேசுவைக் கண்கூடாகக் கண்டவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. எனவே அவருடைய வாழ்க்கை, போதனை எழுத்துருவம் பெற வேண்டியதன் அவசியத்தை சீடர்கள் உணர்ந்தனர். இயேசுவின் நற்செய்தி புத்தகம் உருப்பெற்றது.

20. விவிலிய புத்தகங்களின் (மனித) ஆசிரியர்கள் யார்?
பழைய ஏற்பாட்டைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் ஆசிரியர்கள் யார் என அறியோம். எரே 26:1-2; 36:21, 23; சீஞா 50:27 இவை இரண்டும் விதிவிலக்கு என்று சொல்லலாம்.

காரணங்கள்
1) மேலே கூறப்பட்டதுபோல, பழைய ஏற்பாட்டின் புத்தகங்கள் எழுத்து வடிவம் பெற நீண்டகாலம் எடுத்தது. பல தலைமுறைகள் ஒத்துழைத்தன.
2) எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய கருத்துக்களைச் சொந்த கருத்துகள் என்று கருதாமல், சமூகத்தின் கருத்துக்கள் என எண்ணினார்கள். சமூகத்தின் பெயரால் எழுதினார்கள். எனவே எழுத்தாளர்கள் தங்கள் சொந்த பெயரை மறைத்து வைத்தார்கள் ( நற்செய்தி உட்பட).
3) பரம்பரை வழியாக நூலின் ஆசிரியர் பற்றி மக்கள் நினைத்ததை அறிகிறோம்.

சான்றாக,
ஆ) சட்டநூல்கள்: மோசே - ஏனெனில் அவர் ஒப்பற்ற தலைவர் சட்டம் கொடுத்தவர்.
இலக்கியம் (ஞான நூல்கள்): சாலமோன் - ஏனெனில் சாலமோன் ஒப்பற்ற ஞானி.
திருப்பாடல்கள்: தாவீது - ஏனெனில் தாவீது பாடல் நிபுணர்; சில பாடல்களையும், சங்கீதங்களையும் இயற்றியுள்ளார். இது யூதர்களின் கருத்து.
ஆ) புத்தகத்தின் தலைப்பு ஆசிரியரைக் குறிப்பதில்லை - மாறாக புத்தகத்தின் உட்பொருளைக் குறிக்கிறது. (உம்) யோசுவா நீதித்தலைவர்கள், சாமுவேல்...
இ) மேலே கூறியதுபோல புத்தகம் தற்போதைய வடிவம் பெறுவதற்கு நெடுநாள் பிடித்தது.
- பலர் ஒத்துழைத்தனர். எனவே யார் குறிப்பாக இப்போது உள்ள வடிவம் கொடுத்தார் என்று திட்டவட்டமாகச் சொல்ல இயலாது.
- ஆனால் ஒரு மனிதன் கடைசி வடிவம் கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு புத்தகத்திற்கும் அதற்குரிய தனிநடை, சொற்றொடர், இலக்கிய வகை உண்டு. சமூகத்துக்குச் சொந்தமான கருத்துக்களை சமூகத்தின் பெயரால் தனி மனிதர்கள் எழுதியிருக்க வேண்டும். (உம்) நற்செய்தி ஏடுகள்.

 

II. விவிலியத்தில் இறை ஏவுதல்

21. `இறை ஏவுதல்’ என்பது என்ன?
மற்ற புத்தகங்களிலிருந்து வேதாகமத்தைப் பிரித்துக் காட்டும் இன்றியமையாத பண்பு இறை ஏவுதல் ஆகும். இறை ஏவுதல் 2 சொற்கள் கொண்ட வார்த்தை: இறை + ஏவுதல் = இறைவனுடைய ஏவுதல் - தூண்டுதல் - இறையூக்கம். எழுவதற்கு இறைவன் அளிக்கும் வரம் இது.

22. இறை ஏவுதல் - தனிப்பட்ட ஒரு வரம். ஏன்?
விவிலியத்தை (இறைவனின் வார்த்தையை) எழுதும்படி கடவுள் தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டும் சிறப்பாக அளிக்கப்பட்ட ஒரு வரம்; தனி ஆற்றல்.

23. கடவுள் இந்த வரத்தை சிலருக்கு மட்டுமே கொடுத்தார் என்று எப்படி தெரியும்?
இறை ஏவுதல் ஒரு மறைபொருள்; நம்பிக்கையுடையோர் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த நம்பிக்கையை விவிலியத்திலும், யூதர்கள் பரம்பரையிலும், திருச்சபையின் அதிகாரப்பூர்வமான படிப்பினை களிலும் காண்கிறோம்.

24. இறை ஏவுதலைப் பற்றி விவிலியம் கூறும் சான்றுகள் யாவை?
* பழைய ஏற்பாட்டு நூல்களில் கடவுளின் ஈடுபாடு: மனிதன் எழுத கடவுள் கட்டளையிடல்: எசா 30:8; விப 17:14; எரே 30:2; 36:2
- கடவுள் எழுதத் தூண்டியதை சில மனிதர் உணர்தல்: எசா 34:16; 61:1.
* பழைய ஏற்பாடு கடவுளிடமிருந்து வந்தது என்ற உணர்வு புதிய ஏற்பாட்டிலும் உள்ளது.
- சான்றாக இயேசுவின் சாட்சியம்: யோவா 10:35, மத் 5: 17; 10 : 26; 19:4-5; தொநூ 2:24. அப்போஸ்தலரும் சான்று பகர்கின்றனர்: 2 திமொ 3: 16-17; 2 பேது 1:20-21.
- `மறை நூல்’ என்ற பெயர் 51 தடவை புதிய ஏற்பாட்டில் உள்ளது. அது பழைய ஏற்பாட்டின் வெவ்வேறு பகுதிகளை குறிக்கிறது. (2 பேது 3:16 பழைய ஏற்பாடு முழுவதையும் திருநூல் என்று குறிக்கிறது).
- `திருநூலின்’ வார்த்தைகள் தூய ஆவியின் துணையால் மனித மொழிகளாகப் பேசப்பட்டவை திப 1:16. 10
- `மறைநூல்’ என்ற சொல்லும் `கடவுளுடைய வார்த்தை’ என்ற சொல்லும் ஒன்றுக்குப் பதில் ஒன்றாக மாறி மாறி கையாளப்படுகின்றது. விப. 9:16-20 ஆண்டவரின் வார்த்தைகள்
- உரோ 9:17 திருநூல், தொநூ 12:13 ஆண்டவரின் வார்த்தைகள்- கலா 3:8 திருநூல்.
- பழைய ஏற்பாடு கடவுளின் வார்த்தைகள்: எபி 3:7; திபா 95:7; 4:25- 26; 2:1; 13:34; 16:10; எசா 56:38; (காண்க எபி 1:5-13; உரோ 15:9-12).
* புதிய ஏற்பாடு கடவுளுடைய வார்த்தை என்பதற்குப் புதிய ஏற்பாடு சான்றுகள் உள்ளன.
- வெளிப்பாடு கடவுளிடமிருந்து வரல்: திருவெளிப்பாடு 1:1-3; 22:7, 10, 18-19.
- பவுலின் கடிதங்கள் மறை நூலோடு ஒப்பிடப்படுகிறது ( 2 பேது 3:16). பழைய ஏற்பாட்டு புத்தகங்களிலுள்ள கடவுளின் வார்த்தையைத் தவறாக விளக்குபவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை பவுலுடைய கடிதங்களைத் தவறாக விளக்குபவருக்கும் அளிக்கப்படும்.
- பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு இரண்டுமே கடவுளுடைய வார்த்தைகளாக எடுத்துரைக்கப்படுகிறது. 1 திமொ 5:17-18; எசே 25 : 4; லூக் 10:7. மனிதனும் உண்மையான ஆசிரியர்: நூல்களுக்கு இடையேயுள்ள இலக்கிய வேற்றுமை நோக்கின் இது தெளிவு. மனித ஆசிரியர் எடுத்த முயற்சி: 2 மக் 2:24-33; 15:38 லூக் 1:1-4; 1 கொரி 1:14- 16 (வாசிக்க சங்க ஏடு: இறை வெளிப்பாடு). வார்த்தையானவர் தொடக்கத்தில் பலவீனம் நிறைந்த மனித உடலை ஏற்றபொழுது எவ்வாறு மனிதனைப் போல் இருந்தாரோ, அவ்வாறே மனிதனின் மொழியில் வெளியிடப்பட்ட இறைவனின் சொற்களும் மனித மொழியை ஒத்தே இருக்கின்றன. (இறை வெளி 13).

25. இறை ஏவுதல் பற்றி பாரம்பரியம் தரும் சான்றுகள் யாவை?
அ) யூதர்கள்
பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் இறை ஏவுதலால் எழுதப்பட்டவை என்பது யூதர்களுடைய உறுதியான நம்பிக்கை; இதை மறுத்த யூதர்கள் நாத்திகர் என அழைக்கப்பட்டனர். பிளாவியுஸ் யோசேப்பு என்ற யூத எழுத்தாளன் (கி.பி. முதல் நூற்றாண்டு) கூறுவது: ``ஒவ்வொரு யூதனும், சிறு வயது முதல் வேதாகம புத்தகங்களை இறைவாக்காக ஏற்றுக்கொள்கிறான். அதில் எதுவும் மாற்றவோ, குறைக்கவோ, கூட்டவோ துணிய மாட்டான். ஏன், அதற்காகத் தன் உயிரைக்கூட கொடுப்பான்.”

ஆ) கிறிஸ்தவர்கள்
தொடக்க முதல் கிறிஸ்தவர்கள் விவிலியத்தை (பழைய ஏற்பாடு - புதிய ஏற்பாடு) வெகுவாக மதித்து, கடவுள் வார்த்தைக்குரிய மரியாதையையும், வணக்கத்தையும் செலுத்தினர்.
- திருவழிபாட்டில் உபயோகித்தனர்
- மறையுரை வாயிலாக விளக்கம் கூறப்பட்டது
- விவிலியத்தைப் பாதுகாப்பதற்கு உயிரைக்கூட கொடுத்தனர்.
- தனி வாழ்க்கையிலும் அதிகமாக பயன்படுத்தினர்.

இ) தொடக்கத் திருச்சபையின் தந்தையர்
விவிலியம் ``கடவுள் வார்த்தை”, ``கடவுள் விவிலியத்தின் ஆசிரியர்” என்பதை தெளிவுப்படுத்துகிறார்கள்.
* ``வேதாகமம் இறைவனிடமிருந்து புறப்படுவதால் விவாதிக்கக் கூடாத, முடியாத உண்மைகளைக் கொண்டுள்ளது”- உரோமை புனித கிளெமெண்ட்.
* ``வேதாகமம் தூய ஆவியிடமிருந்து புறப்படுகிறது” - புனித யுஸ்தினார்.
* ``வேதாகமம் கடவுளால் ஏவப்பட்டது” - புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார்.
* ``வேதாகமத்தின் ஆசிரியர் கடவுள்” - எருசலேம் நகர் புனித சிரில்.
* ``வேதகமம் கடவுளால் சொல்லப்பட்டது” - புனித எரோணிமுசு.

ஈ) மேலும் இடைக்காலத்தில்:
9-ம் சிங்கராயர் (1053) 2-ம் திருச்சங்கம் (1274) புளோரன்ஸ் திருச்சங்கம் (1441) திரிதெந்தீன் (1546) வத்திக்கான் 1 (1870) விவிலியத்தைப் பற்றி பேசின.
- விவிலியம் கடவுளின் வார்த்தை
- கடவுளும் மனிதனும் ஆசிரியர்
- மனித ஆசிரியர்கள் ``கடவுளின் கருவிகள்”

உ) சமீப காலத்திலுள்ள ஏடுகள்:
13-ம் சிங்கராயர் . . . Providentissimus Deus
10-ம் பத்திநாதர் . . . Lamentabili, Pascendi
15-ம் ஆசீர்வாதப்பர் . . . Spiritus Paraclitus
12-ம் பத்திநாதர் . . . Divino Afflante Spiritu (1942)
2-ம் வத்திக்கான சங்கம் . . .Dei Verbum (1965)
பாப்பிறை விவிலிய சங்கம் . . .The Interpretation of the Bible in the Church (1995)

26. இறை ஏவுதல் எதில் அடங்கியுள்ளது?
13-ம் சிங்கராயர் வருணிக்கும் முக்கிய அம்சங்கள்:
- இது தூய ஆவியாகிய கடவுளின் பணி ( அர்ச்சிப்பின் பணி).
- இயற்கைக்கு மேலானது (மனிதருடைய தகுதிக்கும், உரிமைக்கும் மேலானது, மறைபொருளானது).
- ஒரு சிலரைத் தேர்ந்தெடுக்கிறார். கடவுளின் விருப்பப்படி திறமை மிகுந்தவர்களையும், குறைந்தவர்களையும் தேர்ந்தெடுக்கிறார். - அவர்களுக்கு தேவையான அருளுதவி அளிக்கிறார்... பல்வேறு கட்டங்களில்.
- அறிய வேண்டியவற்றை அறியவும், நன்கு புரிந்து கொள்ளவும் சேகரித்த செய்திகளைப் பயன்படுத்தவும், புத்திக்குத் தேவையான ஒளி நல்குகிறார்.
- சித்தத்திற்கு (றுடைட) திடனளிக்கிறார்... எப்படி எந்த வடிவத்தில் எழுத வேண்டுமென்று நிச்சயிக்க.
- புலன்களுக்கும் ஆற்றல் அளிக்கிறார்.
- கடவுள் தாம் விரும்புவதை எல்லாம், தாம் விரும்புவதை மட்டும் எழுதுவதற்கு உதவுகிறார். முழு சுதந்திரத்துடன் தவறாமல் எழுத உதவுகிறார்.

ஆக கடவுள் 100 சதவிகிதம் ஆசிரியர்;
மனிதனும் 100 சதவிகிதம் ஆசிரியர்.

ஆனால் முக்கிய ஆசிரியராகிய கடவுளிடமிருந்துதான் ஏவுதல் வருகிறது. இந்த ஏவுதல் இல்லாமல் மனித ஆசிரியர்கள் விவிலியத்தை எழுத முடியாது. மனிதன்: மனிதனும் ஆசிரியர் - அவன் முழுமூச்சோடு கடவுளோடு ஒத்துழைக்கிறான். விவிலியம்: 100 சதவிகிதம் இறைவனின் புத்தகம். ஏனெனில் அவருடைய ஏவுதலால் எழுதப்பட்டது. துவக்க முதல் முடிவுவரை இறை ஏவுதல் பெற்றது. அவர் விரும்பியது மட்டும்; அவர் விரும்பியதெல்லாம் எழுதப்பட்டுள்ளது. 100 சதவிகிதம் மனிதருடைய புத்தகம். மனிதர் முழு மூச்சுடன் ஒத்துழைத்தனர். மனித ஆசிரியர் கடவுளோடு ஒத்துழைத்தார். உயிருள்ள உழைப்பாளி. கவிஞர் கவிதைகளில் எழுதுகிறார். வரலாற்று ஆசிரியர் வரலாற்றின் வடிவத்திலும், கடித வல்லுநர் கடித வடிவத்திலும் எழுதுகிறார்கள். கிரேக்கம் தெரிந்தவர் கிரேக்கத்திலும், எபிரேயம் தெரிந்தவர் எபிரேயத்திலும் எழுதுகிறார். விவிலியத்தில் சட்டம் உண்டு; சிறுகதை, பக்திப்பா உண்டு; திருமண கவிதை உண்டு.

27. இறை ஏவுதலைப் பற்றிய தவறான விளக்கங்கள் யாவை?
1. சொல்லச் சொல்ல எழுதும் கொள்கை: (Dictation)
விவிலியத்தில் எழுத வேண்டியவற்றை கடவுள் நேரடியாக ஆசிரியர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். (Banez).

மறுப்பு: இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் எழுத்தாளர் தங்களது சக்திகளை முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள். சொல்லச் சொல்ல எழுதுதல் அப்படியல்ல. இங்கு ஒருசில திறமைகள் மட்டும் பயன்படுகின்றன.

2. பரவசக் கொள்கை (Ecstacy):
கடவுளால் ஆட்கொள்ளப்பட்ட ஆசிரியர்கள் சுய உணர்வு மறந்து மயக்க நிலையில் எழுதினார்கள். (Philo).

மறுப்பு: ஒரு சில ஆசிரியர்கள் ஒரு சில பகுதிகளை பரவச நிலையில் எழுதியிருக்கலாம். (திருவெளி: 1:10); ஆனால் பொதுவாக ஆசிரியர்கள் மயக்க நிலையில் எழுதவில்லை. (லூக் 2:1-4; பவுலின் கடித துவக்கங்களைக் காண்க).

3. எதிர்மறை உதவிக் கொள்கை (Negative Assistance)
ஆசிரியர்கள் சொந்த சக்தியைப் பயன்படுத்தி விவிலியத்தை எழுதினார்கள். தவறு எழுதாமல் தடுப்பதே கடவுளின் பங்காக இருந்தது.

மறுப்பு: விவிலியம் இப்படி எழுதப்பட்டதாயின் கடவுள் முழுக்க முழுக்க அதன் ஆசிரியர் எனச் சொல்ல முடியாது.

4. விவிலியம் வானின்று நேரடியாக புத்தக வடிவத்தில் தரப்பட்டது என்ற கொள்கை (Arrival from Heaven):
முஸ்லிம் நண்பர்கள் குரானைப் பற்றிக் கொண்டுகொள்ள சிந்தனையில் தோய்ந்தோர், கொண்டுள்ள கருத்து இது.

மறுப்பு: இந்த விளக்கத்தின்படி `மனிதர்’ திருநூலின் ஆசிரியர் அல்ல.

5. திருச்சபையின் பின்னைய அங்கீகாரக் கொள்கை (Subsequent approval of the Church):
விவிலியம், மனிதர்களால் எழுதப்பட்டது; ஆனால் பிற்பாடு திருச்சபை கொடுத்த அங்கீகாரத்தினால் அது இறைவனின் வார்த்தையாகக் கொள்ளப்படுகிறது.

மறுப்பு: இந்த விளக்கத்தில் விவிலியம் கடவுளுடைய நூல் என்பதற்குத் தகுந்த ஆதாரமில்லை.

28. இறை ஏவுதலைப் பற்றிய அரைகுறையான விளக்கங்கள் யாவை?
1. கர்தினால் பிரான்சலின்: 19-வது நூற்றாண்டில் வாழ்ந்த இந்த பேரறிஞர் இறை ஏவுதலைப் பற்றி தரும் விளக்கம். இறைவன் கருத்துக்களை (Ideas) கொடுத்தார். மனிதர் ஆசிரியர் தகுந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்துக்களை எழுதினார்.

மறுப்பு: இந்தக்கொள்கை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் சற்று ஆழ்ந்த சிந்திக்கும்போது இந்தக் கொள்கையை முழுiமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என விளங்கும். ஏனெனில், வார்த்தைகளை கருத்துகளிடமிருந்து முற்றிலும் பிரிக்க முடியாது. ஒரு சில கருத்துக்களை ஒரு சில சொற்களால் மட்டும் வெளிப்படுத்த முடியும். கருத்துக்கும் வார்த்தைக்கும் இத்துணை நெருங்கிய தொடர்பு இருக்கக்கூடும். எனவே இறை ஏவுதல் கருத்துக்களை மட்டுமல்ல; வார்த்தைகளையும் பாதிக்கிறது என்று சொல்ல வேண்டும்.

2. ஒரு சிலர்: மீட்பின் மறை உண்மைகள் மட்டும் இறை ஏவுதலால் எழுதப்பட்டவை.

மறுப்பு: விவிலியம் முழுவதும் இறைவனுடைய ஏவுதலால் எழுதப்பட்டது. மீட்பின் மறை உண்மையை நேரடியாகச் சாராத கருத்துக்களும் மறையுண்மையை விளக்க எழுதப்பட்டவையே.

3. கார்ல் ரானர்: கடவுள் எவ்வாறு திருநூலின் ஆசிரியர் என்பதை இவர் விளக்குகிறார். கடவுள் ஆதித் திருச்சபையின் அடிப்படை அமைப்பாளர். திருச்சபையின் இன்றியமையாத ஓர் அம்சம் விவிலியம். எனவே திருச்சபையின் ஸ்தாபகர், விவிலியத்தினுடையவும் நிறுவனர் என்று சொல்ல வேண்டும். திருச்சபையின் நன்மைக்காக விவிலியத்தைத் தந்தார்.

மறுப்பு: கடவுள் எவ்வாறு விவிலியத்தின் ஆசிரியர் என்று இது விளக்குவதில்லை; இறை ஏவுதலின் தன்மையும் தெளிவாயில்லை.

4. மக்கென்சீ: இறை ஏவுதல் திருச்சபைக்கு கொடுக்கப்பட்ட வரம். திருச்சபையின் நம்பிக்கையை பிரதிபலிப்பது விவிலியம். இந்த நம்பிக்கையை விவிலிய ஆசிரியர்கள் திருச்சபையின் பெயரால் எழுதினார்கள். எனவே, இறை ஏவுதல் தனி மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வரம் என்று கூறுவதைவிட திருச்சபைக்கு அளிக்கப்பட்ட வரம் என்று கூறுவது பொருத்தமாகும்.

மறுப்பு: மக்கென்சீ கூறுவது பெரும்பாலும் உண்மை; முற்றிலும் உண்மை என சொல்ல முடியாது. ஏனெனில் திருச்சபை ஒரு சமூக அமைப்பு; சமூக அமைப்பு எழுத முடியாது; தனி மனிதரால்தான் எழுத முடியும். விவிலிய புத்தகங்களைக் கூர்ந்து கவனிக்கும்போது அவற்றில் ஆசிரியர்களுடைய தனிப்பட்ட இலக்கியத் திறமைகளையும் குறைகளையும் எளிதில் பார்க்க முடியும். எனவே ஆசிரியர்களுக்கும் இந்த வரம் தரப்படுகிறது.

29. இறை ஏவுதலின் விளைவுகள் யாவை?
மூன்று விளைவுகள்:
1. விவிலியம் முற்றிலும் உண்மையானது
2. விவிலியம் முற்றிலும் புனிதமானது
3. விவிலியம் முற்றிலும் வணக்கத்துக்குரியது

1. உண்மையானது:
ஏனெனில் விவிலியத்தின் ஆசிரியர் கடவுள்; அவர் உண்மையின் ஊற்று; அவரே உண்மை. எத்தகைய உண்மை? மீட்புக்குத் தேவையான உண்மைகள். ``நமது மீட்புக்காக இறைவன் விவிலியத்தில் அடக்க விரும்பிய உண்மைகளையே அவை நமக்கு உறுதியுடனும், உண்மையுடனும் தவறின்றி போதிக்கின்றன (இறைவெளி 3:11).
விவிலியம் மீட்பின் வரலாறு: யோவான் 20:30, 31; 2திமொ 3:16-17; உரோ 1:16-17.

குறிப்புகள்
விவிலியத்தின் ஆசிரியர்கள் உலகைப் பற்றியும், பல்வேறு நிகழ்ச்சிகளைப் பற்றியும் எழுதுகிறார்கள். ஆனால் அறிவியல் முறையில் (அல்லது) அறிவியல் அறிவைத் தரும்படி எழுதவில்லை. புனித அகுஸ்தினார் கூறுகிறார்: விண்ணின் கோளங்கள் எவ்வாறு செல்கின்றன என்று கூற அல்ல; நாம் எவ்வாறு விண்ணகம் செல்லலாம் என்று கூறவே விவிலியம் தரப்பட்டுள்ளது. மேலும் விவிலிய ஆசிரியர்கள் காலத்தில் அறிவியல் தோன்றவில்லை. அவர்கள் மக்களின் பேச்சு வழக்குப்படி எழுதி வைத்தனர். (உம்) சூரியன் உதிக்கிறது; இத்தகைய பேச்சு வழக்கு இந்த அறிவியல் காலத்தில்கூட பயன்படுத்தப்படுகிறது.

* கடவுள் உண்மையுள்ளவர் என்பது உலகை மீட்க வந்த கடவுளின் குறையாத பிரமாணிக்கத்தையும் சுட்டிக்காட்டும்.

2.விவிலியம் புனிதமானது
தூயவராகிய கடவுள் விவிலியத்தின் ஆசிரியர்; நாம் தூய்மையடையும் பொருட்டு விவிலியத்தைக் கொடுத்தார் ( 2 திமொ 3:16-17). ஆனால்š தூŒய்மையாக மக்கள்Ÿ நடவாததை விவிலியத்திšல் நாம் படிக்கிறோம். (உம்: பல மனைவிகளைக் கொள்Ÿளுதšல், மணமுறிவு, பழி வாங்குதல்š).

3. விவிலியம் மு‰ற்றிலும் வணக்கத்துக்குரியது
- தீப தூப மலர் ஆரத்தி.
- விவிலிய அரங்கே‰ற்றம்.
- தொடக்க கிறிஸ்தவர்கள்Ÿ திருநூšல் கைப்பிரதிகளை வேத விரோதிகŸள் கையிšல் ஒப்படைப்பதைவிட தம் உயிரையே கொடுக்கத் தயாராயிருந்தார்கŸள்.
- இறைவாக்காக மதித்து தினமும் வாசித்தார்கள்Ÿ: வாசி-யோசி-வசி.
-``எந்த ஆவியானவராšல் திருமறை நூšல் எழுதப் பெ‰றதோ அதே ஆவியானவரின்‹ துணை கொண்டு, அதை நாம் படிக்கவும் அத‰ற்குப் பொருள்Ÿ விளக்கம் செŒய்வும் வேண்டும்” (இறை வெளி -12).


III. விவிலியத் திருநூல் தொகுப்பு

30. `திருநூல் தொகை’ என்பது என்ன?
இறை ஏவுதலால் எழுதப்பட்டவை இவை என்றும் உண்மையையே போதிப்பதால் திருவெளிப்பாட்டின் வாய்க்கால் என்று திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புத்தகங்களின் பட்டியலே ``திருநூல் தொகை” (Canon) எனப்படும்.

31. `பின்னைய திருநூல் தொகை’ என்பது என்ன?
பழைய ஏற்பாட்டிலுள்ள ஒரு சில நூல்கள் இறைவனால் ஏவப்பட்டவையா? இல்லையா? என்று இஸ்ரயேல் மக்களுக்கிடையில் ஐயப்பாடு அல்லது மறுப்பு இருந்து வந்தது. புதிய ஏற்பாட்டின் ஒரு சில புத்தகங்களைப் பற்றி திருச்சபையின் தந்தையருக்கிடையில் ஐயப்பாடுகளும் மறுப்புகளும் இருந்தன. ஆனால் பின்னர் ஐயப்பாடுகளும் மறுப்புகளும் மறைந்தன. இவ்வாறு பிற்காலத்தில் படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல்கள் ``பின்னைய திருநூல் தொகுப்பு”எனப்படும்.
* முன்னைய/ பின்னைய திருநூல் தொகுப்பு என்ற வார்த்தைகளை முதன் முதலில் பயன்படுத்தியவர் சீயென்னா சிக்ஸ்துஸ் (1528- 1569).

32. பழைய ஏற்பாட்டின் முன்னைய, பின்னைய திருநூல் தொகுப்பு யாது?
எல்லா யூதர்களும் (பாலஸ்தீனிய - எபிரேய யூதர்களும் அலெக்ஸாந்திரிய - கிரேக்க யூதர்களும்) ஐயப்பாடும் மறுப்பும் இன்றி தொடக்கத்திலிருந்தே ஏற்றுக்கொண்ட பழைய ஏற்பாட்டு நூல்கள் 39. இவையே பழைய ஏற்பாட்டின் `முன்னைய திருநூல்’ தொகுப்பு ஆகும். பாலஸ்தீனிய யூதர்கள் மறுப்பு தெரிவித்ததும், அலெக்சாந்திரிய கிரேக்க யூதர்கள் மட்டும் மேலும் ஏற்றுக்கொண்ட பழைய ஏற்பாட்டு நூல்கள் 7. இவை பழைய ஏற்பாட்டின் `பின்னைய திருநூல்’ தொகுப்பு ஆகும்.

இந்த ஏழு நூல்கள்: தொபித்து, யூதித், சாலமோனின் ஞானம், பாரூக், 1 மக், 2 மக்; சி.ஞா (எஸ்தர் 10:4-16:24; தானி 3:2-80; 13:14).

34. புதிய ஏற்பாட்டின் முன்னைய, பின்னைய `திருநூல் தொகுப்பு’ யாது?
எல்லா கிறிஸ்தவர்களும் ஐயப்பாடும் மறுப்புமின்றி தொடக்கத்திலிருந்து ஏற்றுக்கொண்ட புதிய ஏற்பாட்டு நூல்கள் 20. இவை புதிய ஏற்பாட்டின் `முன்னைய திருநூல் தொகுப்பு’ ஆகும். ஏழு புதிய ஏற்பாட்டு புத்தகங்களைப் பற்றி திருச்சபை தந்தையருக்கிடையில் ஐயப்பாடுகளும் மறுப்பும் இருந்தன. பின்னர் இவை நீங்கி திருச்சபையால் இந்நூல்கள் படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த 7 நூல்களும் புதிய ஏற்பாட்டின் `பின்னைய திருநூல் தொகுப்பு’ ஆகும் (எபி, யாக, 2பேது, 2 யோவா, 3 யோவா, யூதா, திருவெளி)*.

35. `திருநூல் தொகுப்பு’ மொத்தம் 73 புத்தகங்கள் என ஏன் ஏற்றுக் கொள்கிறோம்?
வழுவா வரம் பெற்ற திருச்சபை ஒரு நம்பிக்கை சத்தியமாக இந்த உண்மையைப் பாரம்பரியமாக கற்பிப்பதால் ஏற்றுக் கொள்கிறோம். ``பாரம்பரியத்தின் வழியே முழு திருநூல் தொகுப்பு திருச்சபைக்கு தெரியவருகிறது” (இறை வெளிப்பாடு 8).

36. திருநூல் தொகையை நிர்ணயிக்கும் இந்த அதிகாரம் திருச்சபைக்கு எங்கிருந்து கிடைத்தது?
இறை இயேசு திருச்சபையை ஏற்படுத்தி தம் பெயரால் உண்மையைப் போதிக்க அதற்கு அதிகாரம் கொடுத்தார் (யோவா 20:21; மத் 28:18-20; 1 திமொ 3:15). மேலும் தூய ஆவி திருச்சபையின் உயிர்நாடி; அந்த ஆவிதான் விவிலியத்தின் ஆசிரியர்; நிறை உண்மை நோக்கி வழிநடத்துபவர் (யோவா 14:26).

37. இந்த அதிகாரம் தேவையா?
ஆம், ஏனென்றால் உலகில் எண்ணற்ற புத்தகங்கள் உள்ளன. மிகவும் பொருள் நிறைந்த, பயனுள்ள, பக்தி பரவசமூட்டும புத்தகங்கள் பல உள்ளன. ஆனால் எந்தெந்த நூல் தேவ ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டது; திருச்சபைக்குத் தேவையானது எனக் கண்டுபிடிக்க அந்த ஆவியின் துணை திருச்சபைக்குத் தேவை.

38. திருநூல் தொகை 73 என்பதில் இனி ஐயப்பாட்டுக்கு இடமுண்டா?
திருநூல் தொகையைத் தெளிவாக புனித அகுஸ்தினார் தலைமையில் நடந்த ஆப்பிரிக்க மறை ஆயர்களின் சங்கம் `ஹிப்போ’ என்ற இடத்திலும் (கி.பி. 393) கார்தேஜ் (397) என்ற இடத்திலும் எடுத்துக் கூறியது. 382 ல் பரிசுத்த தந்தை தாமசுஸ் காலத்தில் தொடங்கிய ஜெலாஸியஸ், ஹெர் மிஸ்டாஸ் காலங்களில் முற்றுப் பெற்ற னுநஉசநவரஅ துநடயளயைரேஅ என்ற உரோமைச் சட்டமும் அதையே வரையறுத்துக் கூறியது. பின்னர் புளோரன்ஸ் திருச்சங்கமும் (கி.பி. 1441). இறுதியாக திரிந்தெந்தின் திருச்சங்கமும் (கி.பி. 1546) எல்லா ஐயப்பாடுகளையும் அகற்றின. இனி ஐயப்பாட்டிற்கு இடமில்லை.

39. மறைவு நூல்கள் (Apocrypha)* என்பவை யாவை?
ஒரு காலத்தில் மக்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டாலும் அவை கடவுளால் ஏவப்பட்டவை அல்ல என்று திருச்சபையால் ஒதுக்கப் பட்ட நூல்கள் மறைவு நூல்கள். இந்நூலின் ஆசிரி யர்கள் தங்கள் பெயரை மறைத்து, புகழ் பெற்றோரின் பெயரை இட்டு, எழுதியுள்ள தால் `மறைவு நூல்கள்’ எனப் படுகின்றன.
* இயேசுவின் இளமைப்பருவம் திருத்தூதர்களின் வாழ்க்கை விளக்கம் போன்றவை புதிய ஏற்பாட்டில் குறைவாகவே உள்ளதால் அதை நிறைவு செய்ய விரும்பிய பலரால் தொகுக்கப்பட்ட - நம்ப முடியாத செய்திகள், மறைவு நூலில்’ உள்ளன. மேலும் சில தப்பறைகளைப் பரப்பவும் தவறான செய்திகளை திருத்தூதர்கள் பெயரில் நூலாக எழுதியுள்ளார்கள். (எகா) புனித தோமையார் நற்செய்தி, இயேசுவின் இளமைப் பற்றிய நற்செய்தி; பர்னபாஸ் எழுதிய திருத்தூதர் பணி.

* புதிய ஏற்பாட்டு மறைவு நூல்கள்:
1. தோமையார் பணி
2. குழந்தைப் பருவ நற்செய்தி
3. எதேசா அரசருக்கு இயேசுவின் கடிதம்
4. பேதுருவின் திரு வெளிப்பாடு
* பழைய ஏற்பாட்டு மறைவு நூல்கள்:
1. சாலமோன் திருப்பாடல்கள்
2. 12 பிதாப் பிதாக்களின் உடன்படிக்கைகள்
3. ஆதாம் - ஏவாள் வாழ்க்கை
4. மோசேயின் விண்ணேற்பு.

IV. விவிலிய மொழிகள்

40. திருநூல் எத்தனை மொழிகளில் எழுதப்பட்டது?
மூன்று மொழிகளில் எழுதப்பட்டது. எபிரேயம், அரமேயம், கிரேக்கம். யூதர்கள் பாலஸ்தீனாவில் குடியேறும் முன்பே அங்கு எபிரேய மொழி வழக்கிலிருந்தது. கி.மு. 587-க்குப்பின் (பாபிலோனிய அடிமைத்தனத் திற்குப் பின்) எபிரேய மொழி வழக்கொழிந்து போயிற்று. இறை பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. (கி.பி. 1948-க்குப் பின் எபிரேய மொழி இஸ்ரயேல் நாட்டில் வழக்கிற்கு வந்துள்ளது). அடிமைத்தனத்தின்போதுதான் யூதர்கள் அரமேய மொழியை கற்றிருக்க வேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றனர். கி.மு. 4-ம் நூற்றாண்டில் யூதர்கள் எபிரேய மொழியைக் கைவிட்டு அரமேய மொழியைப் பேசி வந்தனர். கி.மு. 4-ம் நூற்றாண்டில் கிரேக்க ஆதிக்கம் பரவத் தொடங்கியது. எனவே படிப்படியாக கிரேக்க மொழி பரவிற்று. ஆதி கிறிஸ்தவர் பலர் கிரேக்க மொழி பேசுவோராவர். இவ்வாறு விவிலிய ஏடுகள் 3 மொழிகளில் எழுதப்பட நேர்ந்தது.

41. எபிரேய மொழியில் எந்த நூல்கள் எழுதப்பட்டன?
பழைய ஏற்பாட்டில் முன்னைய திருநூல்களாகிய 39 நூல்களும், மேலும் யூதித் நூல், பாரூக் நூல், 1 மக்கபேயர் நூல், சீராக் ஞானம் ஆகிய 4-ம் துவக்கத்தில் எபிரேய மொழியில் எழுதப்பட்டன. இந்த நான்கும் கிரேக்க மொழியில் மட்டுமே இன்று உள்ளன.

42. அரமேய மொழியில் எந்த நூல்கள் எழுதப்பட்டன?
பழைய ஏற்பாட்டில் தோபித்து நூல் மட்டுமே, அரமேய மொழியில் எழுதப்பட்டதாக தெரிகிறது, ஆனால் இது தற்போது கிரேக்கத்தில் உள்ளது. மேலும் சில நூல்களின் சில அதிகாரங்கள் மட்டும் (எஸ்ரா 4:8-6:18; 7:13-26; தானி 2:4-7:28; எரே 10:11; தொநூ 31:47). அரமேய மொழியில் உள்ளன. மத்தேயு நற்செய்தி அரமேய மொழியில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது நம்மிடம் உள்ள மத்தேயு கிரேக்க மூலத்தில் எழுதப்பட்டது.

43. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட நூல்கள் யாவை?
எஞ்சிய நூல்கள் யாவும் அதாவது பழைய ஏற்பாட்டில் சாலமோனின் ஞானம், 2 மக்கபேயர் நூலும், புதிய ஏற்பாட்டில் எல்லா ஏடுகளும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை.

44. எழுதுவதற்குப் பயன்படுத்திய பொருட்கள் யாவை?
பாப்பிரஸ் ஓலை, பதனிட்ட தோல், கல், செங்கல் முதலியவை பயன் படுத்தப்பட்டன. ஓலைகளைக் கோர்த்து செய்யப்பட்ட நூல் Codex தோலினாலானவை Scroll - `சுருள்’ எனப்படும்.

45. முதல் ஆசிரியர்கள் எழுதிய முதல் ஏடு (Codex, Scroll) இப்போது இருக்கிறதா?
இல்லை. காலப்போக்கில் மறைந்துவிட்டன (அழிந்து போயின) ஆனால், அவை மறைந்து விடுவதற்கு முன் பெரும் கவனத்துடன் பிரதிகள் எழுதப்பட்டன. மேலும் விவிலியப் பிரதிகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டன.

V. விவிலிய மொழிபெயர்புகள்

46. முதல் மொழி பெயர்ப்பு
கிறிஸ்துவுக்கு முன்பே பழைய ஏற்பாடு எபிரேயத்திலிருந்து கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. தாய்நாடு விட்டு பிற நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் கிரேக்க மொழி பேசி வந்தனர். வழி பாட்டிற்காகக் கிரேக்க மொழியில் எபிரேய திருநூல் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பெயர் ‘ளுநயீவரயபiவே’ (`செப்துவாஜிந்’): எழுபதின்மர் மொழி பெயர்ப்பு (எழுபத்திரண்டு பேர் மொழி பெயர்ப்பு) என்று (டுஓஓ) இதனை அழைப்பர். அரிஸ்தேயாஸ் என்பவர் பிலோக்ராத்தஸ் என்பவருக்கு எழுதிய திருமுகம் கூறும் கதை, ``அலெக்சாந்திரியா அரசன் பிதோலெமி ஐஐ பிலெதேல்புஸ்: (கி.மு. 283-246) எகிப்திலுள்ள அலெக்சாந்திரியாவில் ஒரு பெரிய நூல் நிலையம் அமைத்தார். அதில் வைக்க எபிரேய திருநூலைக் கிரேக்கத்திற்கு மொழி பெயர்த்துத்தர 72 அறிஞர்களை அனுப்பும்படி எலியாசார் என்கிற பெரிய குருவை வேண்டினார். எருசலேமிலிருந்து சென்ற அறிஞர்கள் இருவர் இருவராக 36 குழுவினர் பாரோஸ் தீவில் வைக்கப்பட்டனர். 72 நாட்களில் பழைய ஏற்பாடு முழுவதையும் 36 குழுவினரும் மொழி பெயர்த்தனர். அனைவருடைய மொழி பெயர்ப்பும் முழுக்க முழுக்க ஒத்து இருந்ததாம்!”

சரித்திரம் கூறுவது:
மொழிபெயர்க்க வெகுகாலம் சென்றிக்க வேண்டும். சுமார் கி.மு. 250-ல் மொழியாக்கம் தொடங்கி இருக்கலாம். மொழியாக்கம் செய்தவர் அலெக்சாந்திரிய யூதர். நோக்கம்: அவர்களது வழிபாடு. பித்தோலெமி காலத்தில் முதல் ஐந்து புத்தகங்களும் மொழியாக்கம் பெற்றிருக்கலாம். கி.மு. 2-ஆம் நூற்றாண்டின் முடிவில் எபிரேய திருநூலின் 39 ஏடுகளும் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

47. கிரேக்கத்தில் வேறு மொழிபெயர்ப்புகள் உள்ளனவா?
ஆம், ஆக்குயிலா, சிம்மாகுஸ், தெயொதோசியோன் ஆகியோர் செய்த மொழிபெயர்ப்புகள் உள்ளன.

48. முக்கியமான வேறுசில பழைய மொழிபெயர்ப்புகள் யாவை?
கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எரோணிமுஸ் செய்த லத்தீன் மொழியெர்ப்பு திருச்சபையின் அங்கிகாரம் பெற்று, வெகுவாகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு முன்னரே ஆதித் திருச்சபையில் பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் இலத்தீனில் மொழிப்பெயர்க்கப் பட்டிருந்தாலும் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பு புனித எரோணிமுஸ் செய்த ``வுல்கத்தா” (ஏரடபயவந) ஆகும். கீழ்நாட்டு மொழிபெயர்ப்புகளுக்கும் (சிரியாக், கோப்டிக்) திருச்சபையில் மதிப்புக்குரிய இடம் அளிக்கப்பட்டன.

49. தற்போது மொத்தம் எத்தனை திருநூல் மொழிபெயர்ப்புகள் உள்ளன?
* உலகில் மொத்தம் 1848 மொழிகளில் உள்ளன.
குறிப்பாக: - இந்தியாவில்
முழு விவிலியம் ... 283 மொழிகளில் 4 0 மொழிகளில்
புதிய ஏற்பாடு ... 572 மொழிகளில் 42 மொழிகளில்
விவிலியப் பகுதிகள் ... 930 மொழிகளில் 60 மொழிகளில் (தோழன், 1984)

தமிழ் மொழியில் குறிப்பிடத்தக்க விவிலிய மொழி பெயர்ப்புகள்:
1) புதிய ஏற்பாடு 1857 பாரிஸ் அன்னிய வேத போதக சபைக்குருக்களின் மொழி பெயர்ப்பு
2) புதிய ஏற்பாடு 1891 திரிங்கால் சே.ச.
3) பழைய ஏற்பாடு(1/2) 1904 பொத்தேரோ மொழி பெயர்ப்பு
4) புதிய ஏற்பாடு 1970 தமிழக ஆயர் நியமித்த மொழி பெயர்ப்புக்குழு
5) பரிசுத்த வேதாகமம் 1973 தமிழ் இலக்கியக் கழகம்
ப. ஏ. 1904 திருத்தியது & TNBCLC வெளியீடு
பு. ஏ. 1970

6) ஒன்றிப்புத் திருமறை மொழியாக்கம்
(ப.ஏ. பணி தொடங்கியது) 1974

7) திருவிவிலியம்
(பொது மொழி பெயர்ப்பு) 1995 TNBCLC & UBS வெளியீடு

 


VI. விவிலியப் பொருள்கோள் முறை

50. விவிலியத்திற்கு `பொருள் விளக்கம்’ தேவையா?
விவிலியத்திற்குப் பொருள் விளக்கம் தேவைதான். ஏனென்றால் இது தொன்மை வாய்ந்த நூலாகும். தற்போது காணப்படும் சமய, சமூக, அரசியலிலிருந்து மாறுபட்ட சூழ்நிலையில் பேசப்பட்ட மொழியில் அமைந்த நூலாகும். இது இறைத் தன்மையும், மனிதத் தன்மையும் கொண்டுள்ள நூலாகும். விவிலியம் என்பது மனித மொழியில் கடவுளின் வார்த்தையாகும்! இறை வாக்குகளும் அடையாளச் செய்திகளும் இந்நூலில் மிகுந்து காணப்படுகின்றன. இவைகள் அனைத்திற்கும் பொருள் விளக்கம் தேவைப்படுகின்றன.
பொருள் விளக்கம் தருவதின் நோக்கம்:
விவிலிய ஆசிரியர் வெளிப்படுத்த விரும்புகின்ற கருத்தை கண்டுபிடிப்பதே பொருள் விளக்கம் தருவதின் நோக்கமாகும்.

51. உட்கருத்து என்றால் என்ன?
உட்கருத்து என்றால் விவிலிய ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வெளிப்படுத்த விரும்பிய பொருளே உட்கருத்து. ஒரு வார்த்தை அல்லது சொற்றொடர் பல பொருட்களைக் கொண்டிருக்கலாம். உதாரணமாக ``வழி” என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

அ) இதுதான் சென்னைக்குச் செல்லும் வழி (இங்கு `வழி’ என்பது ``பாதையைக்” குறிக்கின்றது).
ஆ) இந்த வழியில் சென்றால்தான் நீ வாழ்க்கையில் முன்னேற முடியும் ( இங்கு `வழி’ என்பது ``வாழ்க்கை முறை”யைக் குறிக்கின்றது). எனவே சொல்லின் உட்பொருள் இடம், பொருள், ஏவல் இவற்றைப் பொறுத்தே அமைகின்றது.

52. எவ்வாறு இந்த உட்கருத்தை அறிந்து கொள்ளலாம்?
பொருள் விளக்கம் தரும் தத்துவத்தைப் பயன்படுத்துவதின் வாயிலாக உட்கருத்தினை கண்டுபிடிக்கலாம். இந்த தத்துவங்கள் அனைத்தும் சேர்ந்து பொருள்கோள் முறை (இலக்கணம்) (Hermeneutics) என்று அழைக்கப்படுகிறது. இவ்வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வருகின்றது. இச்சொல்லுக்கு ``பொருள் விளக்கம் தருதல்” என்று அர்த்தமாகும். அதற்கான விதிகள் (சட்டம்) உள்ளன. அவற்றை பயன்படுத்தி கண்டு பிடிக்கலாம் (விதிகள் யாவை என்று பார்ப்போம்).

53. எத்தனை வகையாக உட்கருத்துக்கள் உள்ளன?
பலவகை உள்ளன.
அ) நேர்ப்பொருள் உட்கருத்து (Literal sense): இது மிகவும் முக்கியமானது. சொல்லிலேயே கருத்துக்கள் வெளிப்படையாக உணர்த்தப்படுவதால் இது நேர்ப்பொருள் உட்கருத்து என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் ஒரு வார்த்தை பல முறைகளில் உட்கருத்தை வெளிப்படுத்தலாம். எனவே நேர்பொருள் உட்கருத்தில் பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
1. குறிப்பிட்ட பொருள் கருத்து (Proper Sense) இதில் உட்கருத்தானது மிகத் தெளிவாகவும், குறிப்பாகவும் வெளிப்படையாகவும் உணர்த்தப்படுகிறது.
(உம்) இது ஒரு சிங்கம். இங்கே சிங்கம் என்ற மிருகம் குறிப்பிடப்படுகின்றது.

2. உருவகம் சார்ந்த உட்கருத்து ((Metaphorical Sense) இங்கு பயன்படுத்தும் சொல்லினால் மறைமுகமாகவும் (Indirectly) ஒப்புமையினாலும் உட்கருத்து வெளிப்படுத்துப்படுவது. (உம்) ராஜன் சிங்கம் போன்றவன் - இங்கு சிங்கத்தின் வீரகுணம் ராஜனுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

3. தொடர் உருவக உட்கருத்து (Allegorical Sense) உருவகமானது தொடர்ந்து வந்து உட்கருத்தினை அளிப்பது ((Extended Metaphor). இங்கு ஒப்புமைகள் தொடர்ந்து அளிக்கப்படு கின்றது. (உம்) நல்லாயன் (யோவான் 10) இங்கு ஆயனுடையவும், ஆடுகளுடையவும் தன்மைகள் கிறிஸ்துவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் அளிக்கப்படுகின்றது. அவ்வாறே திராட்சை, திராட்சைக் கொடிகளைப்பற்றி (யோவான் 15) கூறப்பட்டுள்ளது.

4. அடையாள உட்கருத்து (Symbolic Sense) அடையாளங்களினால் உட்கருத்துக்கள் வெளிப்படுத்தப்படு கின்றன.

அவை:
மனிதன் (Person) : அரசர் அரியணையில் வீற்றிருப் பவர் என்ற அடையாளத்தால் கடவுளின் பிரசன்னத்தைக்’ குறிக்கிறது (திவெ 4:2).

மிருகம் (Animal): ``ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்” - இங்கு குதிரை, கடவுளின் தண்டனையைக் குறிக்கும் அடையாளமாகத் தரப்பட்டுள்ளது. (திவெ 7:4)

எண்ணிக்கை (Number) : 1,44,000 என்ற எண் `பெரிய கூட்டம்’ என்ற பொருளுக்கு அடையாளமாகக் குறிப்பிடப்பட் டுள்ளது. (திவெ 7:4).

நிறம் (Colour): வெளிறிய நிறம் (Pale Colour) சாவுக்கு அடையாளமாகத் தரப்பட்டுள்ளது (திவெ 6:8)

செயல் (Action) : அகியா என்ற இறைவாக்கினர் தாம் போர்த்தியிருந்தப் புதுச்சால்வையே எடுத்து அதைப் பன்னிரு துண்டுக ளாய் கிழித்தது, பத்து துண்டுகளை எரோபவாமுக்குக் கொடுத்தது, `சாலமோனின் ஆட்சியைப்பிடுங்கி பிரித்து அதைப் பத்துக்கோத்திரங் களாக்கி எரோபோவாமுக்குக் கொடுப்போம் என்பதன் அடையா ளமாக அமைகின்றது.(1 அர 11:29-36)

காட்சி (Vision) : உலர்ந்த எலும்புகளின் காட்சி (எசே 37) பாபிலோனிய பயணங்களின் முடிவைக் குறிக்கும் அடையாள மாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

5. உவமைகளில் உட்கருத்து (Parabolic Sense)
ஒவ்வொரு நாளும் உலகில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை மையமாக வைத்து அமைக்கப்படும் கதைதான் உவமைகள் என்று அழைக்கப்படு கின்றது. உதாரணமாக, விதைவிதைத்தல், மீன் பிடித்தல், கட்டிடம் கட்டுதல் போன்றவைகளாகும். இங்கு வார்த்தைகள் அனைத்தும் ஒருமித்த கருத்துச்சாயலில் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு உணர்த்த விரும்புவது கதைகளை அல்ல; மாறாக கதை உணர்த்தும் நல்ல உண்மைகளையே அது உணர்த்த விரும்புகின்றது. (உம்) - நல்ல சமாரியன் உவமை கற்பிப்பது என்னவென்றால் அனைவரையும், ஏன் பகைவர்களைக்கூட அன்பு செய்ய வேண்டும் என்பதே. - மனம் திருந்திய உவமை கற்பிப்பது என்னவெனில் கடவுளின் அளவற்ற இரக்கத்தையும், மனந்திரும்பும் பாவிக்கு மன்னிப்பு அளிக்கப்படுவதையும் உணர்த்துகின்றது.

54. விவிலியத்திற்கே உரித்தான சில உட்கருத்து முறைகள் உள்ளனவா?
இறைவனின் வார்த்தைகள் அடங்கிய விவிலிய நூலிற்கே உரித்தான சில உட்கருத்து முறைகள் உள்ளன. அவைகளாவன:

1) மாதிரி- உட்கருத்து Typical Sense):
பழைய ஏற்பாட்டில் காணப்படும் ஓர் ஆளோ, இடமோ, பொருளோ அல்லது நிகழ்ச்சியோடு ஆழ்ந்த தொடர்புடையதாய் கூறும்பொழுது, அது மாதிரி உட்கருத்து எனப்படும். புதிய ஏற்பாட்டின் வழியாகவே இது நமக்குப் புலப்படுகின்றது. எவ்வாறெனில் விவிலிய ஆசிரியர், புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டின் நிறைவு என்று விளக்கும்பொழுது இது நன்கு வெளிப்படுகின்றது.
- ஆதாம், இயேசுவின் மாதிரி - உட்கருத்து: உரோமை 5:12-21; 1 கொரி 15:21-22
- பழைய பாஸ்கா பயணம் , புதிய பாஸ்கா பயணத்தின் (கடத்தல்) மாதிரி கருத்து உரோ 6:1-11; 2 பேது 2:4-10,
- பழைய வழிபாட்டு இடம் - பலிகள், புதிய வழிபாட்டு இடம்
பலிகளின் மாதிரி கருத்து எபிரேயர் 9:10.

2. முழுமைப் பெற்ற உட்கருத்துச் சாயல் (Fuller Sense)
பழைய ஏற்பாட்டில் காணப்படும் ஆழ்ந்த கருத்தானது புதிய ஏற்பாட்டில் முழுமையடைகிறது. (உம்) தொநூ 3:15-.ல் காணப்படும் `பெண்’ என்ற சொல்லின் முழுப்பொருள் யோவா 2:4; 19:26-இன் வழியாக இன்னும் தெளிவாக்கப்படுகின்றது.

3. இணங்கிப்போகும் ( ஏவாள்- மரியாள்) உட்கருத்து (சாயல்) (Accomodative Sense)
புதிய ஏற்பாட்டின் ஆசிரியர், பழைய ஏற்பாட்டு வசனங்களை, புதிய ஏற்பாட்டுக்கு இணங்கிப் போவது போல் எழுதுவது. ``ஆயினும் அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது. அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது” (திபா 19:4). இந்த தி.பாவில் பகலும், இரவும் எவ்வாறு அமைதியாக இறைவனைப் போற்றுகின்றது என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறே, உரோமை 10:18-இல் ``அப்படியானால், அவர்கள் கேள்விப் படவில்லை என்று சொல்ல முடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்?” ஏனெனில், ``அவர்களது அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவர்கள் கூறும் செய்தி உலகின் எல்லை வரை எட்டுகின்றது”. இவ்வாறு பழைய ஏற்பாட்டு வசனங்களை புதிய ஏற்பாட்டு வசனங்களுக்கு எதிராகச் சொல்லாமல் இணங்கிப் போவது போல் இருந்ததால் அதைப் பயன்படுத்துவது மரபு ஆகும். அதுவும் இரண்டும் ஒரே விதமாக (ளுiஅடையச) இருக்க வேண்டும். போதனையாளர்கள் இத்தகைய விளக்கங்களை அடிக்கடி பயன்படுத்துகின்றார்கள்.

55. எத்தனை வகையான விதிமுறைகள் உள்ளன?
இரண்டு வகையான விதிமுறைகள் உள்ளன
1. பொதுவான விதிமுறைகள் - எல்லா புத்தகங்களுக்கும் பொருந்தக் கூடியது.
2. சிறப்பு விதிமுறைகள் - இறைவார்த்தைகளைக் கொண்ட விவிலியத்திற்கு மட்டுமே பொருந்தக் கூடியது.

56.பொதுவான விதிமுறைகள் யாவை?
பொதுவான விதிமுறைகள் பின்வருவனவாகும்.
1. பாடப்பகுதியை மிகக் கவனத்துடன் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் நமக்கு உண்மையான பொருள் விளங்கும். கவனக் குறைவுடன் ஆராயும் பொழுது, நாம் உண்மைப் பொருளை விட்டு விட்டு பழக்கத்திற்கும், தவறான விளக்கங்களுக்கும் அடிமையாகி விடுவோம். உதாரணமாக ``ஞானிகள் வருகை” (மத் 2). மத்தேயு நற்செய்தி யாளர் இவர்களை ``கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகள்” என்று குறிப்பிடுகின்றனர்.

அவர்கள் எத்தனை பேர்?
அவர்கள் மூவர் என்று பொதுவாக நம்பப்படுகின்றது. ஆனால் பாடக் குறிப்பில் எண்ணிக்கை சரிவரக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் உண்மையிலேயே ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்தான் வந்திருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு ... என்ற எண்ணிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் இருப்பிடம் அல்லது சொந்த ஊர் எது? இந்தியா? ஆப்பிரிக்கா? சீனா? இதைப் பொறுத்தமட்டில் பல கதைகள் உள்ளன. ஆனால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று விவிலியம் குறிப்பிட்டுக் கூறவில்லை. பொதுவாக கீழ்த்திசை யிலிருந்து வந்தவர்கள் என்றே குறிப்பிடுகின்றது. அரேபியா அதாவது கிழக்கு பாலஸ்தீனத்திலிருந்து வந்திருக்கலாம். அவர்களின் பெயர்கள் என்ன? கஸ்பார், மெல்கியோர், பல்த்தசார் என்று சில மரபுகள் கூறுகின்றன. அவர்கள் அனைவரும் அரசர்களா? பாடக்குறிப்பில் இப்படி மிக நுணுக்கமாக ஆராய்ந்து பார்ப்பது பயனற்றது. அளிக்கப்பட்ட விளக்கக் குறிப்புகள் அனைத்தும் நம்முடைய எதிர்பார்ப்பை, ஆவலை, நிறைவு செய்கின்றதேயொழிய, நம்பிக்கையை வளர்க்கின்றற குறிப்புகளாகக் கருதப்படவில்லை.

2. சூழ்நிலையை மிகக் கவனத்துடன் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
1) அண்மையிலுள்ள சூழ்நிலை
யோவான் 2:4 ``அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்” இயேசு, தன் தாயிடம் கேட்ட இக்கேள்வியை அப்படியே அந்த சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்பொழுது, அவரின் கேள்வி முறையற்றதொன்றாகக் காணப்படுகின்றது. அல்லது தோற்றமளிக் கின்றது. இயேசு கேட்கும் கேள்வி அவரின் கருத்து வேறுபாட்டினையும், மகிழ்ச்சியற்ற நிலையையும் வெளிப்படுத்துகின்றது. ஆனால், அண்மையிலுள்ள சூழமைவுகளை ஆராயும்பொழுது மகிழ்ச்சியான சூழ்நிலை வெளிப்படுகின்றது. (உம்) மரியாள் பணியாளர்களிடம் `அவர் உங்களுக்குச் சொல்வ தெல்லாம் செய்யுங்கள்’ என்று கூறுகின்றார். இயேசுவும் அவர்களை நோக்கி ``இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறுகின்றார் - இயேசுவும் தாய் மரியாளும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர்களாகக் காட்சி தருகின்றனர். இந்நிகழ்ச்கிள் அனைத்தும் மகிழ்ச்சி நிறைந்த சூழ்நிலையாகக் காட்சி தருகின்றது. மேலும் எழுத்து வடிவங்கள், பேசுபவர்களின் தொனிகள், பேசிய முறை, முக பாவனைகள் வடித்துக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்றன.

2) நெடுந்தொலைவிலுள்ள சூழமைவு (நிலை)
`அம்மா’ என்று யோவா 2:4; 19:26-இல் கூறப்பட்டதை தொநூ 3:15-இல் கூறப்பட்டதோடு சேர்த்து ஆராய்வோமானால் அச்செயலின் பொருள் விளங்கும். பாவமும் சாவும் ஏவாள் என்ற பெண்ணின் வழியாக இவ்வுலகில் வந்தது. இயேசு `பெண்ணே’ என்ற சொல்லை தாய் மரியாளை அழைக்கும்போது பயன்படுத்துகின்றார். இவர் தமது மெசியாவின் பணியின் தொடக்கத்திலும், இறுதியிலும் பயன்படுத்துவதின் நோக்கம் என்னவென்றால் மரியாள், ஏவாளின் பணியை மாற்றியமைக்க வந்தவள் என்று எடுத்துக்காட்டுவதற்கே ஆகும்.

3. இணையான பாடப்பகுதிகளை கவனமுடன் ஆராய வேண்டும்.
அதாவது ஒரே நிகழ்ச்சியை புத்தகத்தின் பல இடங்களில் கூறும்பொழுது நாம் கவனமுடன் ஆராய வேண்டும். இது அதே புத்தகத்திலோ அல்லது வேறொரு புத்தகத்திலோ வரலாம். இதற்கு சிறந்த உதாரணம் 2 சாமு 24 & 1 குறி 21-ம் ஆகும். முதல் உதாரணத்தில் ஆண்டவர் தாவீதை ஏவிவிட்டு இஸ்ரயேலையும், யூதாவையும் கணக்கிட அழைப்பு விடுகின்றார். இறுதியில் தாவீதின் தவறு அவர் உள்ளத்தை வாட்டியது. தாவீது அரசரைக் கடவுள் தண்டிக்கிறார். இரண்டாவது உதாரணத்தில் நாம் பார்ப்பது என்னவென்றால். தாவீது சாத்தானால் ஏவப்பட்டு கணக்கெடுத்ததாக அறிகின்றோம். இவ்வாறு இணையாகக் கூறப்பட்டுள்ள பாடப்பகுதிகளை நாம் கவனமுடன் ஆராயும்பொழுது கருத்து வேறுபாடாகக் காணப்படும் பகுதிகளின் உண்மை நிலையினை அறிந்து கொள்ளலாம்.

4. புத்தகத்தின் பல்வேறு பண்புகளை நாம் கவனமுடன் ஆராய வேண்டும்.
உதாரணமாக: நூலாசிரியர், காலம், நோக்கம், சூழ்நிலைகள் இவற்றை ஆராய வேண்டும். ஆசிரியர்: நூலில் பயன்படுத்தும் வழிமுறைகள், சொற்கள், நடை முறைகள் அனைத்தும் ஆசிரியரின் பின்னணியைப் பொறுத்தே அமைகின்றது.

மத்தேயு: இவர் வரி வசூலிப்பவர். எனவே கணக்கு எழுதுவதில் திறமை மிக்கவராய் இருந்தார். எனவேதான் இவரு டைய நற்செய்தி கோர்வையாக அமைந்திருப்பதைக் காணலாம்.

யோவான்: இவர் நெடுங்காலம் வாழ்ந்து இயேசுவின் வாழ்க்கையை தியானித்து நற்செய்தியை எழுதினார். எனவேதான் இவருடைய நற்செய்தி இறை அன்பை வெளிப்படுத்து வதாகவும் புலன்களால் உணர முடியாதவையாயும் காணப்படுகிறது. ஆமோஸ்: அநீதிகளை எதிர்த்து குரலெழுப்ப இவர் அழைக்கப் பட்டார். ஏனென்றால் இறைவனில் மிகக் குறைந்தளவு நம்பிக்கை கொண்ட ஆகாசிடம், இறைவனில் அதிக நம்பிக்கை கொள்ளும்படி அழைப்பு விடுகின்றார். அவரே எதிரிகளை வெற்றிக்கொள்ள உதவும் இரக சியம் என்று வலியுறுத்துகின்றார்.

நற்செய்திகள்: அரசியல், சமய தலைவர்கள் (பாலஸ்தீன்), யூதர்களி டையே காணப்பட்ட பல்வேறு சமுதாயப் பிரிவினை கள் - சதுசேயர்கள், பரிசேயர்கள், ஏரோதியர்கள், பாலஸ்தீனத்தின் இயற்கை அமைப்புகள் இவைகளைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

நோக்கம்: யோவா 20:31; 21:25 - இவைகளிலிருந்து நற்செய்தி கள் யேசுவின் வாழ்க்கையை முழுமையாக எடுத் துரைக்கவில்லை என்று தெரிகின்றது. இதற்கு காரண மென்ன? யோவான், தான் எழுதிய நற்செய்தி சுருக்க மானது, முழுமையற்றது என்று வெளிப்படையாகவே கூறுகின்றார். யோவானின் நோக்கமனைத்தும் தொடக்கத்திலே இருந்த வார்த்தை மனுவுருவானார்; அவர் தான் இயேசு. அவரை ஏற்று விசுவசிப் போமாகில் மீட்புப் பெறுவோம் என்று கூறுவதே இவரின் நோக்கமாகும். ஆசிரியரின் நோக்கத்தை இவ்வாறு வெளிப்படுத்த இயேசுவின் வாழ்க்கை முழுவதும் தேவையில்லை.

5. விவிலியத்தில் பயன்படுத்தும் சொற்களின் தனித்தன்மையை மனதில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மொழியும் தனக்கென்று சில தனித்தன்மைகளை பெற்றிருக்கின்றன. எபிரேய மொழியில் காணப்படும் சில தனித் தன்மைகளை இப்போது பார்ப்போம். பெரும்பாலான பழைய ஏற்பாட்டு நூல்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டாலும் பல இடங்களில் எபிரேயச் சொற்றொடர்களை பயன்படுத்துகின்றது. ஏனெனில் பெரும்பாலானவர்கள் எபிரேயத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். லூக்கா நற்செய்தியாளர் எபிரேய மொழியின் நடைமுறைகளை நன்கு அறிந்திருந்தார்.

(அ) ஏற்றுயர் படியில் (Superlative) கூறுவதற்குப் பெயர்ச் சொல்லை இருமுறை பயன்படுத்துவது.
அரசர்களுக்கெல்லாம் அரசர் (King of kings) - பேரரசர்.
திருத்தூயகம் (Holy of Holies) - மிகவும் புனிதமானவர்
இனிமைமிகு பாடல் (Song of Songs)- மிகவும் இனிமையான பாடல்
ஆ) மறுப்பதின் மூலமாக ஒப்புமை காணுதல்
நான் யாக்கோபை அன்பு செய்கிறேன்; ஏசாவை வெறுக்கிறேன். அதாவது ஏசாவைவிட யாக்கோபை எனக்குப் பிடிக்கும். நான் பலியை அல்ல, இரக்கத்தை விரும்புகிறேன். என்னைவிடத் தன் தந்தையையோ, தாயையோ அதிகம் நேசிக் கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ, மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன். தன் சிலுவையை ஏற்றுக்கொண்டு, என்னைப் பின்செல்லாதவன் எனக்கு ஏற்றவன் அல்லன். அதாவது பெற்றோர், பிள்ளைகளைவிட இயேசுவே முக்கியம் என்று எடுத்து கூறுகிறார்.


VII. திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு

1. திரு விவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) என்ற பெயருக்கு விளக்கம் என்ன?
¨ இதுவரை தமிழகத்தில் கத்தோலிக்க மக்களின் உபயோகத் திற்காக கத்தோலிக்க அறிஞர்கள் மொழிபெயர்த்து அளித்த விவிலியம் உண்டு; சீர்திருத்த சபை மக்களின் உபயோகத்திற்காக சீர்திருத்த சபை அறிஞர்கள் மொழிபெயர்த்த விவிலியமும் உண்டு. இந்த இருவகை விவிலியங்களிலும் பல வேறுபாடுகள் இருந்தன. ஆனால், கத்தோலிக்க, சீர்திருத்த சபைகளின் விவிலிய - தமிழ் அறிஞர்கள் ஒன்றிணைந்து, அனைத்துக் கிறித்தவ மக்களும் வேறுபாடுகளின்றி எல்லாரும் உபயோகிப்பதற்காக, வழங்கியுள்ள புதிய மொழிபெயர்ப்பு தான் பொது விவிலியம்.

2. பொது விவிலியம் தேவைதானா?
¨ இயேசு கிறிஸ்துவே விரும்பிய கிறித்தவ ஒற்றுமை (யோவா 17:11), எவ்வளவு தேவையோ, அந்த அளவிற்கு ஒரு பொது விவிலியமும் தேவையே! பிளவுப்பட்டுள்ள கிறித்தவ மக்களை ஒன்றிக்க இறைவார்த்தை அடங்கிய விவிலியம் ஒப்பற்ற கருவியாக இருக்க முடியும். வேறுபட்ட மொழிபெயர்ப்புகளால் நம்மிடையே சந்தேகங்கள் வளர்ந்தன. பிளவுகள் நியாயப்படுத்தப்பட்டன. பொது விவிலியம் கிறித்தவ ஒற்றுமைக்கு ஓர் அடித்தளம்.

3. எத்தனை மொழிகளில் பொது விவிலியம் வெளிவந்துள்ளது?
¨ ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் போன்ற அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் பொது விவிலியம் வெளிவந்து விட்டது. இந்திய நாட்டில் மராத்தி, காரோ மொழிகளில் ஏற்கனவே பொது விவிலியம் உபயோகத்தில் உள்ளது. கன்னடம், இந்தி, அசாம் மொழிகளில் விரைவில் வெளியிட இருக்கிறார்கள். மேலும் ஏறக் குறைய 200 உலக மொழிகளில் பொது விவிலியம் தயாராகிக் கொண்டு வருகிறது.

4. பொது விவிலியங்கள் உருவாகக் தூண்டியது யார்?
¨ இரண்டாம் வத்திக்கான் சங்கம் 1965-ம் ஆண்டில் வெளியிட்ட ``இறைவெளிப்பாடு” என்ற ஏட்டில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ``சூழ்நிலைப் பொருத்தமும் திருச்சபை அதிகாரிகளின் ஒப்புதலும் இருக்குமாயின் நம் பிரிந்த சகோதரர்களின் ஒத்துழைப்போடு விவிலிய மொழிபெயர்ப்புகள் செய்யும்போது. எல்லாக்கிறித் தவர்களும் அதைப் பயன்படுத்த இயலும்” இச்சிறப்புப் பரிந்துரைதான் பொது விவிலியங்கள் உருவாகத் தூண்டுதலாக விளங்கியது.

5. பொது விவிலிய மொழிபெயர்ப்பில் கடைபிடிக்கப்பட்ட சில அடிப்படை விதிமுறைகள் எவை?
பொது மொழிபெயர்ப்பு அனைத்து சபைகளிலும் ஏற்றுக் கொள்ளும் மூல மொழி விவிலியத்தினின்றுதான் ஆக்கப்பட வேண்டும். அதாவது, பழைய ஏற்பாடு எபிரேய மொழிப் பாடத்தி னின்று மொழி பெயர்க்கப்பட வேண்டும். சில பகுதிகள் அரமேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளிலும் உண்டு. அதுபோலவே புதிய ஏற்பாடு கிரேக்க மொழிப்பாடத்தினின்றுதான் மொழி பெயர்க்கப் படவேண்டும்.

கத்தோலிக்கர் மட்டும் ஏற்கும் பழைய ஏற்பாட்டு நூல்கள் அல்லது சில நூல்களின் பகுதிகள் `இணைத்திருமுறை நூல்கள்’ என அழைக்கப்பட்டு, பழைய ஏற்பாட்டு நூல்களுக்கும் புதிய ஏற்பாட்டு நூல்களுக்கும் இடையே சேர்க்கப்படும். ¨

பெயர்ச்சொற்களைத் தரும்போது கவனம் செலுத்தப்பட வேண்டும். அவற்றை ஒலிபெயர்க்க வேண்டுமேயன்றி மொழி பெயர்க்கலாகாது (உம். பேதுரு, பவுல், யோவான், எசாயா, எரேமியா, தோபித்து...)

மொழிபெயர்ப்பு காலத்துக்கும் கலாச்சாரத்துக்கும் ஏற்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். பொருள் தெளிவுமிக்கதாக இருக்கவேண்டும் (உம் ஆதியாகமம், யாத்திராகமம், சங்கீதங்கள் போன்ற வடமொழிச் சொற்களைத் தவிர்த்து தொடக்க நூல் விடுதலைப் பயணம், திருப்பாடல்கள்.. எனத் தூய தமிழ்ச் சொற்கள் பொது விவிலியத்தில் வந்துள்ளது). ¨

தகுந்த புலமையும், இணைந்து பணியாற்றும் தகுதியும் கொண்டவர் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டனர். மொழிபெயர்ப்புக்குழு, சரிபார்க்கும் குழு, ஆலோசனைக் குழு எனப் பல படிவங்கள் வழியாக இப்பணி நடைபெற்றது.

6. பொது விவிலியத்தின் முக்கியச் சிறப்புகள் என்ன?
அனைத்துக் கிறித்தவ மக்களும் பயன்படுத்தும் வகையில் மூல மொழிகளினின்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள விவிலியம் இது என்பதே இதன் முதல் சிறப்பு. ¨

தமிழ் நடை இன்றைய காலத்திற்கு ஏற்றதாக உள்ளது. பல்வேறு வடமொழிச் சொற்கள் அகற்றப்பட்டு தூய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. (உம். ஞானஸ்நானம் - திருமுழுக்கு அபிஷேகம் - அருள்பொழிவு; அப்போஸ்தலர் - திருத்தூதர்).

யூத மக்களுக்கே உரிய ஆணாதிக்கச் சொல் மரபுகள் தவிர்க் கப்பட்டு ஆண் - பெண் ஆகிய இருபாலருக்கும் ஏற்ப மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது (உம் ``கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்” என்ற ஆணாதிக்க மரபு “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” (மாற் 4:9) என இருபாலருக்கும் பொருந்தும் வகையில் தரப்பட்டுள்ளது. (அவ்வாறே காண் மத் 4:4; 6:24; 7:9).

தமிழில் வழக்கமாக அவன் - அவர் என்ற வேறுபாடுகள் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் ஏற்பட்டன. இறைவார்த்தை ஒரு சமத்துவ சமுதாயம் மலரவும் துணை புரிய வேண்டும். ஒரு மாற்றுக் கலாச்சதாரத்தை ஏற்படுத்த உதவ வேண்டும். பொது மொழிபெயர்ப்பில் இந்த நோக்கத்துடன், கடவுளின் திட்டத்தை எதிர்த்தவர்கள் தவிர மற்ற அனைவரும் மரியாதைப் பன்மையுடன் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

பொது விவிலியத்தில் ஒவ்வொரு நூலுக்கும் தெளிவான முன்னுரைகள் தரப்பட்டுள்ளன. நூலின் ஆசிரியர். நூல் எழுதப்பட்ட பின்னணி, நூலின் மையக்கருத்து, நூலின் பிரிவுகள் ஆகிய அனைத்தும் ஒரு நூலை சரிவரச் புரிந்துகொள்ள உதவும்., சில சிக்கலான வசனங்களைத் தெளிவுப்படுத்த அடிக்குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.

7. விவிலியத்தில் எத்தனை நூல்கள்?
¨ ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளாகத் திருச்சபை பழைய ஏற்பாட்டில் 46 நூல்களையும் விவிலிய நூல்களாகக் கருதி பயன்படுத்தியது. ஆனால் சீர்திருத்த இயக்கத்தின்போது மார்டின் லூத்தர் (1579) இதனை மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாக்கினார். முதலில் 2 மக்கபேயர் ஒரு விவிலிய நூல் அல்ல என்றார். பின்னர் தூய எரோணிமுசின் கருத்தைத் தனதாக்கிக்கொண்டு விவிலியத் திருமுறையில் 39நூல்களே அடங்கும் என்று வாதாடினார். ஆனால் மற்ற ஏழு நூல்களையும் வாசித்துப் பயன்பெறலாம் என்றார். எனினும் அவை இறை ஏவுதல் பெற்ற விவிலிய நூல்கள் அல்ல என்று அறுதியிட்டுக் கூறினார்.

முதலில் சீர்திருத்தச் சபைகள் இந்த ஏழு நூல்களையும் பிற் சேர்க்கையாக விவிலியத்தில் வெளியிட்டன. ஆங்கில மொழியில் 1825 வரை இவற்றையும் இணைத்தே விவிலியங்கள் வெளியிட்டன. கடந்த சில ஆண்டுகளாகத்தான் சீர்திருத்தக் கிறித்தவச் சபைகள் 39 நூல்களை மட்டும் பழைய ஏற்பாடாக வெளியிட்டு வருகின்றன. ஆனால் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு பொது விவிலியங்கள் பல மொழிகளில் வரத் தொடங்கியுள்ளன. இவை 46 நூல்களையும் கொண்டுள்ளன. பொதுவாக 39 நூல்களை முதல் பகுதியாகவும் பிற 7 நூல்களை இரண்டாம் பகுதியாகவும் புதிய ஏற்பாட்டு 27 நுல்களை மூன்றாம் பகுதியாகவும் வெளியிடுகின்றன.

தமிழ்ப் பொது விவிலியத்திலும் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று முதலில் முடிவாகியது. எனினும் தமிழ்பேசும் சீர்திருத்த கிறித்தவச் சபையார் பலர் இந்த இணைத் திருமுறை நூல்களும் இணைந்தே விவிலயத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குவர் என்னும் கருத்து அடிப்படையில் இந்திய விவிலிய சங்கத்தின் வேண்டு கோளுக்கிணங்க, தமிழக கத்தோலிக்க ஆயர்களின் இசைவைப் பெற்று விவிலியம் இரண்டு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது. (1) திருமுறை நூல்கள் 39 + இணைத் திருமுறை நூல்கள் 7 + புதிய ஏற்பாட்டு நூல்கள் 27 யாவும் அடங்கிய முழு விவிலியம், (2) 27 நூல்கள் அடங்கிய புதிய ஏற்பாடு.

8. பெயர் மாற்றம் ஏன்?
¨ கத்தோலிக்கரின் பழைய மரபில் உள்ள பெயர்களான இராயப்பர், சின்னப்பர், அருளப்பர் என்ற பெயர்கள் இப்போது பேதுரு, பவுல், யோவான் ஆகியுள்ளன. காரணம் என்ன? சிறப்புப் பெயர்களை (Proper Name) மொழிபெயர்ப்பது வழக்கமல்ல. சான்றாக இங்கிலாந்தில் என் பெயர் என்ன என்று யாராவது கேட்டால், `ஆரோக்கியசாமி’ என்று சொல்வேனே தவிர, அதை மொழிபெயர்த்து “டுடிசன டிக ழநயடவா” என்று சொல்லமாட்டேன். பேத்ரோஸ் என்றால் பாறை, கல் என்று பொருள் படும். பேதுரு என்பதை மொழிபெயர்த்தால், பாறையப்பர், கல்லப்பர் என்று சொல்லியிருக்க வேண்டும். அதைவிட்டு, தெலுங்குச் சொல்லைக் கடன்வாங்கி இராயப்பர் என்று பெயர்த்துள்ளோம் 12 பெயர்கள் தான் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப் பதையும் கடன் வாங்குவதையும் விட்டு, சிறப்பு பெயர்களைத் தமிழ் ஒலிக்க ஏற்றவாறு அமைத்துள்ளோம் இயேசுவின் தாய் மரியாவை விளித்த வானதூதர், பழைய மொழி பெயர்ப்பில் ``அருள் நிறைந்தவளே’ என்றார். `அருள் நிறைந்த’ என்ற தொடர் மூலத்தில் இல்லை. இலத்தீன் மொழிபெயர்ப்பில் மட்டும் உண்டு. இதைப்பற்றி உயர்மட்டக் குழு விவாதித்தபோது, மரியாவை இவ்வாறு அழைக் கத்தோலிக்கர் பழக்கப்பட்டிருந்தாலும் `அருள்மிகப் பெற்றவரே’ என்பதுதான் சரியென்று உறுதியோடு கூறினர். அண்மைக் காலத்தில் வெளிவந்த ஆங்கில மொழிபெயர்ப்புகளில் “ ழiபாடல குயஎடிரசநன” என்று பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் `அருள் மிகப் பெற்றவரே’ என்பதே சரியாகும்.

9. அவன், அவள், அது - எது சரி?
¨ தொநூ 3:15 `முதல் நற்செய்தி’ என்னும் சிறப்பைப் பெற்றுள்ளது. இது புதிய, பொது மொழி பெயர்ப்பில் பின்வருமாறு உள்ளது. ``ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம் உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படத்தும்; நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய் என்றார்”. மூலமொழியாகிய எபிரேயத்தில் வித்தைக் குறிக்கும் சொல் `செரா’. இது ஆண்பால் சொல், எனவே `அவன்’ அதாவது பெண்ணின் வித்து, உன் தலையை நசுக்குவான் என்பது பொருள். விவிலியம் எபிரேயத்திலிருந்து கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப் பட்டபோது `அவன்’ என்பது `அது’ என்று மாறியது. இதற்கு காரணம், கிரேக்கத்தில் வித்தைக் குறிக்கும் `ஸ்பெர்மா’ என்னும் சொல் பலர்பால் சொல் ஆகும். எனவே அது அதாவது பெண்ணின் வித்து, உன் தலையை நசுக்கும்’ என்பது பொருள். இலத்தீன் மொழியில் வித்தைக் குறிக்கும் சொல் `சே மென்’ இதுவும் பலர்பால் சொல். ஆனால் `வுல்கத்தா’ எனப்படும் இலத்தீன் மொழி பெயர்ப்பைச் செய்த தூய எரோணிமுசு `அவள், அதாவது பெண், உன் தலையை நசுக்குவாள்’ என்ற பாடத்தைத் தவறாக மாற்றிவிட்டார். இத்தவற்றை அண்மையில் வெளியிடப் பெற்ற புதிய வுல்காத்தா திருத்தியுள்ளது. `அது, அதாவது பெண்ணின் வித்து, உன் தலையை நசுக்கும் என எபிரேயத்தில் உள்ளதுபோல் மாற்றியுள்ளது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் வரை பழைய `வுல்கத்தா’ மொழிபெயர்ப்பே கத்தோலிக்க திருச்சபையின் ஒரே, அதிகாரப்பூர்வமான விவிலிய மொழிபெயர்ப்பாக விளங்கிய காரணத்தால், முன்னர் வழக்கில் இருந்த தமிழ் விவிலியம் இதனின்றே மொழி பெயர்க்கப்பட்டது. `அவள், அதாவது பெண், உன் தலையை நசுக்குவாள்’ என்னும் பாடமே காணப்பட்டது. விவிலியத்தின் மூல மொழிகளாகிய எபிரேயம், அரமாயிக்கு, கிரேக்கம் ஆகியவற்றினின்று செய்யப்பட்டுள்ள பொது மொழிபெயர்ப்பு எபிரேயத்தில் உள்ள பொருளை உள்ளவாறே தருகிறது. `அவன் (அவள் வித்து) உன் தலையை நசுக்குவான்’ என்னும் பாடத்தைப் பொருள் தெளிவு கருதி `அவள் வித்து, அதாவது பெண்ணின் வித்து, உன் தலையை நசுக்கும்’ எனப் பொருத்தமாகத் தரப்பட்டுள்ளது.

10. அன்னை மரியாவை அவசங்கைப் படுத்தலாமா?
¨ அன்னை கன்னி மரியாவைப் பொது விவிலியம் அவசகங்கைப் படுத்துவதாக, அவரின் அமல உற்பவம், கன்னிமை முதலியவற்றை மறுப்பதாகக் குற்றச்சாட்டுச் சொல்லப்படுகிறது. இதற்குச் சான்றாகச் சில வசனங்கள் (தொநூ 3;15; எசாயா 7:14; மத்தேயு 1;23) எடுத்தாளப்படுகின்றன. ``இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் (எபிரேயத்தில் `ஆல்மா’) ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பாள்; அக்குழந்தைக்கு அவள் `இம்மானுவேல்’ என்று பெயரிடுவாள்” என்கிறது( எசா 7:14). `ஆல்மா’ என்றால் திருமண வயதை, வழக்கமாக 12 அல்லது 13 அடைந்த இளம் பெண் எனப் பொருள். அவர் கன்னியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை; திருமணம் செய்தவராகவும் இருக்கலாம். முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை `ஆல்மா’ என்றே அவர் அழைக்கப் பெற்றார். கன்னியைக் குறிக்க எபிரேயத்தில் `பெத்துலா’ என்ற சொல் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது. இச்சொல் இங்கு எடுத்தாளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. `செப்துவாசிந்த்’ எனப்படும் கிரேக்க மொழிபெயர்ப்பு எசா 7:14ல் `பார்த்தெனோஸ்’ என்னும் சொல்லைக் கையாள்கிறது. கன்னிப்பெண் என்பது இச்சொல்லின் பொருள். இளம் பெண் என்னும் பொருள்படும் `நெயானிஸ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தாமல், `பார்த்தெனோஸ்’ என்னும் சொல்லைக் கிரேக்கப் பாடம் எடுத்தாள்வதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

இம்மரைபைப் பின்பற்றி `வுல்கத்தா’ மொழிபெயர்ப்பு `இளம் பெண்ணைக் `கன்னி’ (விர்கோ) என மாற்றுகிறது. `புது வுல்காத்தா’வும் `கன்னி’ என்றே வழங்குகிறது. எசா 7:14ஐ தமது நற்செய்தியில் மேற்கோள் காட்டும் மத்தேயு (1:23) செப்துவாசிந்த்’ பாடத்தைப் பின்பற்றுகிறார். எனவே `பார்த்தெனோஸ்’ (கன்னி) என்னும் சொல் இங்கு கையாளப்படுகிறது. மரியா ஒரு கன்னி என்பதை இதன் மூலம் மத்தேயு தெளிவுப்படுத்தி வலியுறுத்துகிறார்.

ஒரு கருத்தை நாம் நினைவில் கொள்வது நல்லது. எசா 7:14 நேரடியாக அன்னை மரியாவைக் குறிக்கிறதெனப் பொருள் கொள்வது தவறு. அது குறிப்பிடும் இளம் பெண், மன்னர் ஆகாசின் வாழ்க்கைத் துணைவியை - ஏற்கனவே கருவுற்றிருந்த மனைவியைக் குறித்து மெசியாவைக் குறிக்கும் இறைவாக்காக இப்பகுதி காலப்போக்கில் விளக்கப்பட்டபோது, அதில் வரும் இளம் பெண், மரியாவைக் குறிப்பதாக நம்பப்பட்டது. இதன் அடிப்படையில் மத்தேயு (1;23) மரியாவைக் கன்னி என அடையாளம் காட்டுகிறார். இந்த மாற்றத்தை, கருத்து வளர்ச்சியை , நாம் தமிழ் மொழிபெயர்ப்பில் காண முடிகிறது. இதனால் பொது விவிலியம் மரியன்னையை எவ்வகையிலும் இழிவுப்படத்தவில்லை. அவரது புகழைக் குறைக்கவில்லை என்பது தெளிவு.

மேலும், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மறைக்கோட் பாடுகளாகத் திருச்சபை பறைசாற்றிய மரியின் கன்னிமை, அமல உற்பவம் முதலியவற்றை விவிலியப் பாடத்திற்குள் வலிந்து திணிப்பதும், இதனால் மொழி பெயர்ப்புகளில் குறை காண்பதும் எவ்வகையிலும் முறை ஆகாது.