புதிய ஏற்பாடு - பொது முன்னுரை முனைவர் மேதகு ஆயர் அ. பீட்டர் அபீர் விவிலிய அன்பர்களே, விவிலியம் பழைய ஏற்பாடுபுதிய ஏற்பாடு என்று இருவகையாகப்பிரிக்கப்படுகின்றது. இயேசுவின்வருகைக்கு முன் இறைவன்வரலாற்றில் பேசியது, செய்தது, மீட்பர்குறித்து வாக்களித்தது யாவும் பழையஏற்பாடாக 46 நூல்களில் காணப்படுகின்றன. (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவபிரிந்தசபையினர் அவற்றில் 39 நூல்களை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர்). புதிய ஏற்பாடு கிறிஸ்துவின் வாழ்வு, மற்றும் இறப்பு, உயிர்ப்புஆகியவற்றின்அடிப்படையில்எழுந்த27நூல்களைக்கொண்டுள்ளது. பிரிந்தசபையினரும் புதிய ஏற்பாட்டில் மீட்பராக 27 நூல்களையும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் யூதர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாததால்புதிய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வதில்லை.பழையஏற்பாடுசட்டநூல்கள், இறைவாக்கினர் நூல்கள்வரலாற்றுநூல்கள்அறிவுரை நூல்கள்என்று நான்கு வகையாகக் கத்தோலிக்கரால்பிரிக்கப்படுகிறது. அதுபோல புதிய ஏற்பாட்டின் 27 நூல்களையும் பலபிரிவுகளாகஅமைக்கலாம். நான்குநற்செய்திநூல்கள், திருத்தூதர் பணிகள்தொடக்ககாலநூலாகவும், 21 கடிதங்கள் அறிவுரை நூல்களாகவும், யோவான்எழுதிய திருவெளிப்பாடு இறைவாக்கினர் நூலாகவும் பிரித்துக் காணலாம்.ஆனால் புதியஏற்பாட்டில் இப்படிப் பிரித்துகாண்பது அவ்வளவு பொதுவானவழக்கமல்ல.பழைய ஏற்பாட்டுநூல்களில் பெரும்பான்மை எபிரேய மொழியிலும் சிலகிரேக்க மொழியிலும் சிலநூல்களின் சில பகுதிகள்அரமேய மொழியிலும்உள்ளன. புதிய ஏற்பாட்டின் நூல்கள் அனைத்தும் கிரேக்க மொழியில்எழுதப்பட்டுள்ளன.பழையஏற்பாட்டு நூல்கள்கிறிஸ்துவின் வருகைக்குத ;தயாரிப்பாகவும்,அவர்குறித்த இறைவாக்குகளின் தொகுப்பாகவும் விளங்குகின்றன என்றால்புதிய ஏற்பாட்டு நூல்கள் அந்த தயாரிப்பின் மற்றும் இறைவாக்குகளின்நிறைவாக கிறிஸ்துவந்துள்ளதை முக்கியமாகக் காட்டுகின்றன.நான்கு நற்செய்தி நூல்கள் உள்ளன. தொடக்ககாலத ;திருச்சபையினர்இவற்றுக்கு அடையாளங்கள் கொடுத்திருந்தனர் (காண்க திருவெளிப்பாடு 4: 7). மத்தேயு- மனிதன் இந்த நற்செய்திகளில் கிறிஸ்து உலகிற்குக் காட்டப்படு கின்றார்.அவரின்வாழ்வு, பணி, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம்ஆகியவற்றில்அவரதுநற்செய்திவழங்கப்படுகிறது. திருத்தூதர்பணிகளில் கிறிஸ்து அறிவிக்கப்படுகின்றார். அவரதுநற்செய்தி உலகெங்கும் பரப்பப்படுகிறது. திருமுகங்களில் இயேசுவின்நற்செய்தியின் மூலக்கூறு தத்துவார்த்தமாகவும் நடைமுறையிலும்விளக்கப்படுகிறது. திருவெளிப்பாட்டில் கடவுளின் எல்லா மீட்புத் திட்டமும் மீட்பர்இயேசுவில்நிறைவடைவதுசொல்லப்படுகிறது. இவ்வாறுபுதியஏற்பாடுபழையஏற்பாட்டிலுள்ளஇறைவாக்குகளின்நிறைவாகவிளங்குகிறது. புதியஏற்பாடுஎனும் கட்டடம் எழுப்பப்பட அடிப்படையாக பழைய ஏற்பாடுவிளங்குகிறது.புதியஏற்பாட்டுநூல்கள்கி.பி. 51-லிருந்து100-க்குள்எழுதப்பட்டிருக்கவேண்டும். முதலில் எழுந்தவை திருமுகங்கள்தாம். நற்செய்தி நூல்கள்வரலாறாக எழுதப்படாமல் மறைக் கல்விநூல்கள் போல் எழுதப்பட்டுள்ளன.எனவேஇவற்றை நாம் நேரடியாகப் புரிந்துகொள்வது சிலநேரம் கடினமே.அவை எழுந்த பின்னணிகள் விவரமாக இங்கே தரப்பட்டுள்ளன. இறுதியில் புதியஏற்பாடு பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்கம் என்னசொல்கிறது என்பது தரப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டின் பின்னணியை அறிவதோடு, அது எழுந்ததிருச்சபையைப் பற்றிஅறிவதோடு, புதியஏற்பாடுபற்றிய ஒரு பொதுவானகண்ணோட்டத்தை அறிவது தொடர்ந்து வரும் புதிய ஏற்பாடு பற்றியநூல்களைக் கண்டு அறிந்திடத் துணைபுரியும். இறைவார்த்தைப் பணியில்இறைவார்த்தைப் பணியில் பொருளடக்கம்: 1. பாலஸ்தீனா பூகோளப் பன்னனி 1. பாலஸ்தீனா - பூகோளப் பின்னணி இயேசு கிறிஸ்து பிறந்த நாடு பாலஸ்தீனா. இஸ்ரயேல்மக்களுக்குகடவுள்வாக்களித்த நாடு இது(யோசு 12) என்ற காரணத்தில் யூதர்களும்,இயேசுவின் காரணத்தினால் கிறிஸ்தவர்களும் பாலஸ்தீன நாட்டைப்புண்ணிய பூமியாகக் கருதுகின்றனர். எந்த நாட்டுக்கும் இல்லாதஇத்தகைய சிறப்பினை இந்நாடு பெற்றிருக்கிறது.கடவுள்அளித்த நாடு என்பது ஒருபுறமிருக்க, அந்தக் கடவுளே இந்தஉலகில் தோன்றுவதற்குத் தேர்ந்தெடுத்த நாடு இது (யோவா 1: 14)என்பதும் சிறப்பாகும். கடவுள் மனிதராக நடமாடிய இந்த நாட்டின்அமைப்பு, பூகோளப் பின்னணி என்னவென்று இவண்காண்போம். நாம் வாழும் ஆசியக் கண்டத்தின்மேற்குப் பகுதியில்உள்ளதுதான்பாலஸ்தீனா நாடு. இந்தியாவின் வடக்கே இமயமலை உள்ளது போல்,பாலஸ்தீனாவின் வடக்கே லெபனான் தொடர் உள்ளது. தெற்கேஇதுமெயா பாலைவனமும், மேற்கே மத்திய தரைக்கடலும், கிழக்கேஅரேபியா பாலைவனமும் அரண்களாக அமைந்துள்ளன. இதனால்இயற்கையாகவே பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை இந்நாடு பெற்றுள்ளது. உலகில் எந்தப் பகுதியும் அடையாத பெருமையும் முக்கியத்துவமும்பெற்ற பாலஸ்தீனா நாடு பரப்பளவில் மிகச் சிறியதுதான். தெற்குவடக்காக அதன் நீளம் - பெயர்செபா முதல் 'தாண்' வரையில் 300 கி.மீட்டரும், வடக்குப் பகுதியில் 40 கி. மீட்டர் பரப்பளவும் கொண்டுள்ளது.உலகை மீட்க வந்த இயேசு, தனது மீட்புப் பணியை ஆரம்பிக்கத்தேர்ந்தெடுத்த நாடு, இவ்வளவு சிறியதாக இருப்பது நமக்கு வியப்பாகஉள்ளது. இறைவனது திட்டத்தை அறிபவர் யார்? 1.1. யோர்தான் நதி 1.2. எருசலேம் இயேசு கிறிஸ்து தனது போதனையைக் கலிலேயாவில்தொடங்கினாலும் (மாற் 1: 28-39) எருசலேமில்தான் அவரது வாழ்வின்முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி மன்னராக எருசலேமில்நுழைந்த இயேசு, தனது வாழ்வை நமக்காக அங்குதான்அர்ப்பணிக்கின்றார் (மாற் 9: 30, 10: 30). தாவீதின் நகரம்என்றழைக்கப்படும் எருசலேமின் சிறப்புக்கு இதைவிடச் சிறந்த சான்றுயாது உளது? 1.3. பெத்லகேம் 1.4. எரிக்கோ மற்றும், இயேசு வளர்ந்த நாசரேத்,அவரின் முதற் புதுமை நிகழ்ந்த கானா, புனிதபேதுருவின் ஊரான கப்பர்நாகூம், மார்த்தா,மரியாள் ஊரான பெத்தானியா போன்றஇடங்களையும் இம்மேற்குப்பகுதியில்காணுகிறோம். இயேசு தனது 33 ஆண்டுகாலஇவ்வுலக வாழ்க்கையினைப் பாலஸ்தீனா வின்இப்பகுதியில்தான் பெரும்பாலும் வாழ்ந்தார். 1.5. கலிலேயாக் கடல் இயேசு பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இயேசு தன் முதல்திருத்தூதர்களைஅழைத்தபோதுஇக்கடலில்தான்அவர்கள்மீன்பிடித்துக்கொண்டிருந்தார்கள் (மத்4: 18; மாற்1: 16 : 20). இயேசு தன்மலைப்பொழிவை ஆற்றியதும் (மத் 5: 1) பல அருங்குறிகளைநிகழ்த்தியதும், அற்புதமாக மீன்கள்பிடிபட்டதும் இங்கேதான். இக்கடலில்இயேசு நடந்தார் (மத் 14: 21-33). இதனில் ஏற்பட்ட புயலை அடக்கினார்(மத் 23: 27). எல்லாவற்றிற்கும் மேலாக உயிர்த்த இயேசுகாட்சியளித்ததும் இங்குதான் என்றால் இதன் பெருமையைச்சொல்லவும் வேண்டுமோ? 1.6. சாக்கடல் இன்றுஇப்பகுதியில், இஸ்ரயேல், ஜோர்டான்போன்ற நாடுகள்பலஉப்புத் தொழிற்சாலைகளையும், இரசாயனத் தொழிற்சாலைகளையும்நிறுவியுள்ளன. 1.7. பருவநிலை பாலஸ்தீனாவை - கடற்கரைப் பகுதி, மலைப்பகுதி, யோர்தான்நதிப்பள்ளத்தாக்கு - என்ற மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இம்மூன்றுபகுதிகளிலும் மூன்று விதமான காலநிலை நிலவுகின்றன.கடற்கரைப்பகுதியில் அடிக்கடி மழை பெய்வதைக் காணலாம்.மலைப்பகுதிகளிலும் பருவ மழை சுமாராக இருப்பினும், தேவையானமழை பொழிந்து திராட்சைத் தோட்டங்களும் செழிப்புடன் வளர்கின்றன.ஆனால் யோர்தான் நதிப்பள்ளத்தாக்கு வெகு விநோதமானபருவநிலையைக் கொண்டுள்ளது. கோடையில் கடும் வெயில்;சிரோக்கோ போன்ற பகுதியிலிருக்கும் பாலைவனத்திலிருந்து மே முதல்அக்டோபர் வரையில் கடும் வெப்பக் காற்று வீசும் (எசா 27: 8; எரே 4:11).குளிர்காலத்தில் கடும் குளிராக இருக்கும். ஒருவர் யோப்பாவிலிருந்துஎருசலேமுக்குப் போவதற்குள்குளிரால்அவரதுஉடல்மரத்துவிடும்போல்தோன்றும். எருசலேம் தேவாலயத்தின் அபிசேகத் திருவிழா இந்தக்குளிர்காலத்தில் நடைபெற்றதனால், பலர் கோவிலுக்குள்ளேயேஇருந்தனர்; இயேசு அதனைப் பயன்படுத்தி, அங்குப் போதித்தார் என்றுபுனித யோவான்எழுதுகிறார் (யோவா 10 : 22-24). ஆக பாலஸ்தீனாவின்பருவ நிலையை மழையோடு கூடிய குளிர்காலம் (அக்டோபர் - மே )என்றும் கடுமையான வெயில் கொண்ட வறட்சிக் காலம் (ஜுன் -செப்டம்பர்) என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். 1.8. இயற்கை வளம் 1.9. பயிர் வளம் 1.10. சமுதாய வாழ்வு பிள்ளைப் பேற்றை இறைவனின் ஆசீராகக் கருதினர். ஒருபெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லையென்றால் அதனைச்சாபக்கேடாகக் கருதினர் (தொநூ 16 : 2; 1 சாமு 15). ஆதலின்அக்குறையை மறைக்க வேற்றுப் பிள்ளைகளைத் தத்து எடுத்துவளர்ப்பதுண்டு (தொநூ 16 : 2, 30 : 3). மேலும் பாலஸ்தீனாவில் முதல்குழந்தைஆணாகப் பிறக்கவேண்டும்என்றுமிகுந்தஆசைப்படுவதுண்டு.ஏனெனில் அவன் தான் வருங்காலத்தில் குடும்பத் தலைவனாகவிளங்குவான்(தொநூ24 : 50; 49 : 3). குழந்தை பிறந்தவுடன் நாம் திருமுழுக்குக் கொடுப்பது போல்யூதர்கள் தங்கள் குழந்தை பிறந்த முதல் வாரத்தில் விருத்தசேதனம்செய்வர் (தொநூ 26 : 4; 29 : 3). அப்பொழுது குழந்தைக்குப் பெயர்சூட்டுவர். குழந்தை யேசுபிறந்த எட்டாம்நாள்மாதாவும்யோசேப்பும்பெயர்சூட்டுவதற்காகப் பாலகனைஆலயத்திற்குகொண்டுசென்றனர் என்றுபடிக்கிறோம் (லூக் 1: 59-68).ஆபிரகாம் கடவுளோடு செய்தஉடன்படிக்கைப்படி பிறக்கும் குழந்தைக்குவிருத்தசேதனம் செய்யக் கடமைப்பட்டிருந்தனர் (காண்தொநூ17 : 9-14). 1.11. சமய அறிவு 2. பாலஸ்தீனா: வரலாற்றுப் பின்னணி பாலஸ்தீனாவின் வரலாற்றை, இயேசு பிறப்பிற்கு முந்தையபாலஸ்தீனா (கி.மு. 63-4), இயேசுவின் காலத்துப் பாலஸ்தீனா (கி.மு. 4கி.பி. 30) என்று இரு பெரும் பிரிவில் அடக்கலாம். 2.1. இயேசு பிறப்பிற்கு முன் (கி.மு. 63-4) கி.மு 49-இல் ஜூலியஸ்சீசர் ரூயஅp;பிகோன் என்ற இடத்தைக் கடந்துசென்றார். இவருடன் போரிட போம்பே கீழ்த்திசை நோக்கிச் செல்லவேண்டியிருந்தது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, இரண்டாம்'pர்கானுஸ{ம் இதுமேயாவைச் சார்ந்த இரண்டாம் அந்திப்பார்என்பவரும் போம்பேயின்நல்லெண்ணத்தையும் சலுகைகளையும் பெற,போம்பேயைஆதரித்தனர். ஆனால்எகிப்தில்பார்சாலுஸ் (Pயசளயடரள)என்றஇடத்தில் கி.மு. 48 ஆம் ஆண்டில் போம்பேயை ஜூலியஸ் சீசர்தோற்கடித்ததால், அந்திப்பாரின்தலைமையில் ஒரு படையைச் சீசருக்குஆதரவாக ஹிர்கானுஸ்அனுப்பினான். இதனால், ஜூலியஸ்சீசர் கி.மு.47 ஆம் ஆண்டில் சிரியாவிற்கு வந்தபோது ஹிர்கானுசுக்கு ஆளுநன்என்ற பட்டத்தை அளித்தார். யூதேயாவின் உரோமையப் பிரதிநிதியாகஅந்திப்பார் நியமிக்கப்பட்டார். அந்திப்பாரின்இருமக்களில், தலைவனானபாசேயலைஎருசலேமுக்கும், ஏரோதை கலிலேயாவிற்கும் ஆளுநர்களாகசீசர் நியமித்தார். பாலஸ்தீன மக்களுக்காக ஜூலியஸ் சீசர் பலவிதநன்மைகளைச் செய்தார். கி.மு. 44 மார்ச் மாதத்தில், ஜுலியஸ் சீசர்கொலை செய்யப்பட்டபோது, உரோமையர்களைவிட யூதர்களேஅதிகமாகத் துக்கம் கொண்டனர். சீசரின் மரணத்திற்குப் பின் ஹிர்கானுசின் உதவியாட்கள்அந்திப்பாரை நஞ்சிட்டுக் கொன்றனர். அந்திப்பார் இறந்தபின் அவரதுமகனான ஏரோதுக்கு ஹிர்கானுஸ் தனது பேத்தி மரியாம் என்பவளைத்திருமணம் செய்து வைத்து, தனது உறவைப் பலப்படுத்திக் கொண்டான்.இவ்வேளையில், மார்க் அந்தோனி, ஆக்டேவியன்காசியுஸ் என்பவரால்தோற்கடிக்கப்பட்டதனால், சிரியாவில் உரோமையர் ஆட்சிபலவீனப்பட்டது. இந்தக் குழப்பமான சூழ்நிலையில் பாலஸ்தீனாவில்ஏரோதுவின் செல்வாக்கு உயர்ந்தது. 2.2. பெரிய ஏரோது (கி.மு. 37-4) கி.மு. 37-27 ஆம் ஆண்டில் தனது எதிரிகளான மூன்றாம்அரிஸ்டோபுலுஸ், தனது சொந்த சகோதரி சலோமையின் கணவரானயோசேப்பு, தனது சொந்த மனைவியான முதலாம் மரியாம், மாமியார்அலெக் சாண்டராள் போன்றோர்களைக் கொலை செய்து, தனதுஅதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டான். கலாச்சாரமுன்னேற்றத்திற்கான பல பணிகளைக் செய்தான். பல்கலைக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், புதிய நகரங்கள்,தோட்டங்கள், பழமரங்கள், அரச மாளிகைகள், "அந்தோனியா'' என்றபடையரண் போன்றவை இவனது ஆக்கச் செயல்களாகும். பேரரசர்வழிபாட்டையும் ஏரோதுதான் யூதர்களிடையே வற்புறுத்தினான். இதனால்யூதர்களிடையே இவனது செல்வாக்குக் குறைந்தது.எனவேயூதர்களதுசெல்வாக்கைப் பெற தனதுஆட்சியின்18 ஆம்ஆண்டில் எருசலேம் தேவாலயத்தைக் கட்டத் துவங்கினான். இந்தத்தேவாலயம் ஒரு சில ஆண்டுகளில் ஓரளவு முழுமையடைந்தாலும், கி.பி63- ஆம்ஆண்டில்தான், முழுமையாகக் நிறைவுபெற்றது. (ஆனால்கி.பி.எழுபதாம் ஆண்டில் உரோமையர்களால் அழிக்கப்பட்டது). சமாரியாநகரம் இவனால் புதுப்பிக்கப்பட்டது. அங்குப் பல படையரண்கள்அமைக்கப்பட்டன. தனக்கு மிகவும் பிடித்த இடமானஎரிக்கோவில், நாடகஅரங்கு, உடற்பயிற்சிக் கூடம், கோபுரம் போன்றவைகளை நிறுவினான்.இவையெல்லாவற்றிலும் கிரேக்கக் கலாச்சாரம்தான் அதிகம்தென்பட்டது. ஆதலால், இவன் யூதர்களுக்கு அரசனாக இருந்தாலும் யூதஅரசனாக வாழவில்லை. 2.3. இயேசுவின் காலத்தில் (கி.மு. 4 - கி.பி. 30) 2.4. ஆர்க்கெலாவு: (கி.மு.4- கி.பி. 6) 2.5. ஏரோது அந்திப்பா (கி.மு. 4- கி.பி. 39) 2.6. பிலிப்பு (கி.மு. 4 - கி.பி 34) 2.7. போந்தியுஸ் பிலாத்து (கி.பி. 26-36) யூதேயாவின் ஆளுநராகப் போந்தியுஸ் பிலாத்து கி.பி. 26 ஆம்ஆண்டில்பதவிஏற்றார் (லூக் 3 : 4). செசாரியா மாரிடிமா என்ற இடத்தில்கண்டுபிடிக்கப்பட்டகல்வெட்டின்படி, யூதேயாவின்ஆளுநராக பிலாத்து,திபேரியு சீசரின் காலத்தில் இருந்ததாகக் காண்கிறோம். 'பிடிவாதகுணமும், கொடூரத்தன்மையும் கொண்டவராக இருந்தார்' பிலாத்து.ஆளுநராக வந்தவுடன், பேரரசின் உருவம் பதித்த சின்னங்களைஎருசலேம் ராணுவத்தினருக்கு அளித்தார். யூதர்களுக்கு இது அறவேபிடிக்கவில்லை. ஆதலால், அவற்றினை நீக்கிவிட பிலாத்துவிடம்வேண்டினர். அவர் அதற்கு மறுக்கவே செசாரியாவில் இருந்த அவரதுமாளிகைக்கு முன் ஐந்து நாட்கள் மௌனமாகத் தங்களது எதிர்ப்பைக்காட்டினர். யூதர்கள் தங்களது புரட்சியைக் கைவிடவில்லையென்றால்,எல்லோரையும் கொன்றுவிடப் போவதாக பிலாத்துஎச்சரித்தார். ஆனால்அவருக்குப் பணிவதைவிட இறக்கவே அனைவரும் தயாராக இருந்ததால்,அவர்களது உறுதியைக் கண்டு வியப்படைந்து, பேரரசின் உருவச்சின்னத்தை நீக்கிவிட இணங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிலாத்து கலிலேயரின் இரத்தத்தை அவர்களுடைய பலியோடுகலந்தான்என்ற செய்தியை லூக்கா குறிப்பிடுகின்றார் (லூக் 13 : 1). இதுஅவனது கொடுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இந்தப் பிலாத்து இயேசுவின் பாடுகள் சமயத்தில், எப்படி ஓர்அரசியல்வாதியாகச் செயல்பட்டான் என்பதை எல்லாநற்செய்தியாளர்களும் குறிப்பிடுகின் றனர்.இவன் யூதர்களைத் திருப்தி செய்ய விரும்பி,பரபாசை விடுதலை செய்து, இயேசுவைச்சாட்டைகளால் அடித்து, சிலுவையில்அறையும்படிக் கையளித்தான் என்றுநற்செய்தியாளர்கள் (மாற் 5: 1; மத் 24; லூக்23 : 24; யோவா 14 : 16) கூறுகின்றனர்.சிலுவையில் அறைந்து கொல்வதற்குஇயேசுவை யூதர்களிடம் கையளிப்பதில்பிலாத்து நடந்து கொண்ட முறையைவிவரிப்பதில் நற்செய்தியாளர் களுக்கிடையேசிறு வேறுபாடுகள் தென்படலாம். ஆனால்,இயேசுவின் குற்றமற்ற தன்மையைஉணர்ந்திருந்தும் அரசியல் காரணங்களால், தனது பதவியைக்காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்துடன், இயேசுவை யூதர்களிடம்கையளித்தான்என்பதில் யாதொரு வேறுபாடும் இல்லை. கெரிசிம் என்ற மலையில் கூடியிருந்த சமாரியர்களைக்கொடுமைப் படுத்திக் கொலை செய்ததனால், பிலாத்துவுக்கு எதிராகசீரியாவில் இருந்த உரோமைப் பிரதிநிதியான விட்டலியுஸ் (ஏவைவநடடரைள)என்பவரிடம் சமாரியர்கள் முறையிட்டனர். எனவே, பிலாத்துஉரோமைக்குத் திருப்பி அனுப்பப்பட்டான். அதன் பிறகு அவனதுவாழ்வைப் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை. நீரோ மன்னனால்கொலை செய்யப்பட்டான் என்று அந்தியோக்கியாவின் யோவான்கூறுகிறார். 2.8. காலத்தை கணிக்கும் முறை 2.9. இயேசு பிறந்த நாள் 2.10. உண்மையில் இயேசு பிறந்த ஆண்டு அடுத்து, உரோமைய ஆண்டு 750-இல் (கி.மு. 4) மன்னர் பெரியஏரோது இறந்தார். அவருடைய வாழ்க்கை பற்றிய வரலாற்றுக்குறிப்புகளின் மூலம் இது தெரிய வருகிறது. மேலும், வரலாற்றுஆசிரியர்களின்கூற்றுப்படி, இந்த ஏரோது மன்னன்இறப்பதற்குச் சற்றேமுன்பு, சந்திர கிரகணம் ஒன்று தோன்றியதாகக் கூறுகின்றனர். வானசாஸ்திரிகளின்கணிப்புப்படி, இந்தச் சந்திர கிரகணம் உரோமையஆண்டு750 மார்ச் மாதம், 12-13 தேதிகளில் நிகழ்ந்தது. இயேசு பிறந்த போது,ஏரோதுஉயிரோடுஇருந்திருக்கிறார் (மத் 2). எனவே, ஏரோதுஇறக்குமுன்(உரோமைய ஆண்டு 750) இயேசு பிறந்திருக்க வேண்டும். எனவே, நமதாண்டவர் உரோமைய ஆண்டு 747-750 (கி.மு. 7-4)இடைப்பட்டக் காலத்தில் பிறந்திருக்கவேண்டும். அதாவது, இயேசுவின்பிறப்பு ஆண்டினை, இளையடென்னிஸ், சுமார் 4 அல்லது5 ஆண்டுகள்குறைத்துக் கணித்து விட்டார். இதன்படி பார்த்தால், இப்பொழுது கி.பி.2003 என்பது கி.பி. 2007 அல்லது 2008 என்று இருக்க வேண்டும்.ஆனால், இன்றைய அன்றாட நடைமுறையில் இளையடென்னிஸ்கணிப்பு முறையே பயன்படுத்தப்படுகிறது. 3. பாலஸ்தீனா: சமயப் பின்னணி இயேசு கிறிஸ்துவின் காலத்தில், பாலஸ்தீனாவில் யூதமதத்தைக்கட்டிக் காக்க, போற்றி வளர்க்க சமயத்தலைவர்கள் பலர் வாழ்ந்தனர்.சட்டமே முக்கியம் என்று பறைசாற்றிய பரிசேயர்கள், மனித சுதந்திரமேஅடிப்படை உண்மை என்று போதித்த சதுசேயர், கடுமையான துறவறவாழ்க்கையை மேற்கொண்ட எசேனியர்கள் என்ற பல்வேறுசமயவாதிகளை நாம் பாலஸ்தீனாவில் காண்கிறோம். 3.1. பரிசேயர்கள் இவர்களதுஇயக்கம் கி.மு. 150 ஆண்டுகளுக்குமுன்தோன்றியது,கி.மு. 134-104 ஜான் 'pர்கானுஸ் என்ற மன்னன் பரிசேயர்களைவெறுத்ததனால் சுமார் 50, 000 பரிசேயர்களை அழித்தான். ஆனால்,கி.மு. 76-67-இல் அரசி சலாமே அலெக்சாந்தராவின் காலத்தில்,இவர்களின் செல்வாக்கு ஓங்கியது. ஆதலால், பல யூதர்கள்பரிசேயர்களின்கொள்கைகளைஆதரித்தனர். இயேசுவின்காலத்திலும்இவர்களின் செல்வாக்குக் குறைந்ததாகத் தெரியவில்லை. 'தோரா' என்ற சட்ட நூலுக்கே இவர்கள் முதலிடம் கொடுத்தனர்.சட்டம் பயிலாதவர்களை 'நாட்டுப் புறத்தினர்' என்று அழைத்தனர்(யோவா7: 49). இயேசுவையும், இந்த நாட்டுப் புறத்தினர்களின்ஒருவராகத்தான் கருதினர். தேவ பராமரிப்பில் நம்பிக்கை வைத்துஅவர்கள், பாவிகளுக்கு மறுவாழ்வில் தண்டனையுண்டு என்பதையும்போதித்தனர். பாரம்பரியத்தைக் காப்பாற்ற, 'தோரா' எனப்படும் மோசேசட்ட நூலுக்குத் தங்கள் விருப்பம் போல் விளக்கம் தந்தனர். சட்டங்களை நுணுக்கமாக கடைப்பிடிப்பதனால்தான், யூதரினம்நிலைத்து நிற்கும் என்று நம்பினர். அதனால், உயிரே போனாலும் ஓய்வுநாளைஅனுசரித்தனர். எளிய வாழ்க்கை வாழ்ந்தனர்; இன்ப வாழ்வைக்கண்டித்தனர். அடிக்கடி உபவாசம் இருந்தனர்; ஒரு நாளில் பலமுறை தங்கள் கைகால்களைக் கழுவிச் சுத்தம் செய்யும் மூடப் பழக்கத்தைக்கொண்டிருந்தனர். பரம்பரையை அனுசரிக்க வேண்டும் என்றபோர்வையில், கடவுளின் கட்டளைகளை மீறுவது பற்றிக்கவலைப்படாதவர்கள். "பரிசேயனும் வரிதண்டுபவரும்'', என்ற உவமையில் இயேசுபரிசேயர்களின் தற்பெருமையை வெகு அழகாகச் சுட்டிக் காட்டுகிறார்."கடவுளே! கள்வர், அநீதர், விபசாரர் முதலான கீழான மனிதரைப்போலவோ, இந்த ஆயக்காரனைப் போலவோ, நான்இராததுபற்றிஉமக்குநன்றி கூறுகிறேன். வாரத்தில் இருமுறை நோன்பிருக்கின்றேன்''(லூக் 18 : 11-13) என்று சொல்கிறான். தம்மை நீதிமான்கள் என்றுஎண்ணி, பிறரைப் புறக்கணிக்கும் இவர்களது இந்த மனப் பான்மையைஇயேசு கண்டிக்கிறார் (லூக் 18 : 9). சட்டம்தெரியாத ஆயக்காரர்களை விடத்தாங்கள் உயர்ந்தவர்கள் என்றேகருதினர்.இந்தப் பரிசேயர்களைச்சட்டவல்லுநர்களிடமிருந்து நாம்பிரித்துக் காணவேண்டும். சட்டங்களை ஆழ்ந்து கற்று, அவற்றினைவிளக்குவதில் தேர்ந்தவர்களாகசட்டவல்லுநர்கள்இருப்பர். மாறாக பரிசேயர் சட்டங்களைநுணுக்கமாகக்கடைப்பிடிப்பவர்களாகத் தான் இருப்பர். சட்டத்தில் அறிஞர்களாகஇருப்பதில்லை 3.1.1. இயேசுவும் பரிசேயரும் எல்லாப் பரிசேயர்களையும் ஆண்டவர் கண்டிக்கவும் இல்லை.பரிசேயர்களில்நல்லவர்களும், நீதிமான்களும்கூடஇருந்தனர் என்பதைநாம் மறக்கவியலாது. இயேசுவைஇரவில்சந்தித்துவிளக்கம் தேட வந்தநிக்கதேமு (யோ 3: 1; 7 : 50) தன்னுடன் உண்பதற்கு அழைத்தவர்கள்(லூக் 7: 36; 14 : 37; 14 : 1). ஏரோது அந்திப்பாரின் சதித்திட்டத்தைக்குறித்து இயேசுவை எச்சரித்தவர்கள் (லூக் 13 : 31) ஆகியோரும்பரிசேயர்கள்தான். ஒரு சில வேளைகளில், இவர்களே, இயேசுவைக்காப்பாற்றவும் முன்வந்துள்ளனர் (யோவா 7 : 50). "யூதர்களின் நம்பிக்கை கிறிஸ்துவில் நிறைவேறுகிறது'' என்றநற்செய்தியைப் பிற இனத்தார்க்குப் போதிக்கக் கடவுள் தேர்ந்தெடுத்தபுனித பவுல் அடியார் ஒரு பரிசேயர் (திபா2: 5, பிலி3: 5). இயேசுஇறந்தபோது, அவரை அடக்கம் செய்யப் புனித பேதுருவோ யோவானோமுன்வரவில்லை. ஆனால், பரிசேயரான நிக்கதேமும், சதுசேயரானஅரிமத்தேயா யோசேப்பும்தான் முன் வந்தனர். வெள்ளைப் போளமும்,அகில்தூளும் கலந்து நூறு இராத்தல் கொண்டு வருகிறார் நிக்கதேமு;தனது தோட்டத்தில் ஒரு புதுக் கல்லறையை இயேசுவுக்குத் தானம்செய்கிறார் அரிமத்தேயா யோசேப்பு. இன்று பொதுவாக, கிறிஸ்துவப் பூச்சுடன் விளங்கும்போதனையையும் உள்ளத்தையும், வெளி வேடத்துடன் காணப்படும்அனைத்தையும், பரிசேயத் தன்மை என்றுகூறுகின்றோம். இது பரிசேயயூதர்களை இகழ்வதற்கன்று; மாறாக நற்செய்திக்கு முரணானதன்மையைக் கண்டிப்பதுதான் இச்சொல் வழக்கின் நோக்கமாகும்.நீதியின் முகமூடியில் வாழும் கபட மனம் படைத்தவர், ஒழுக்கத்தின்திரைமறைவில் உலவும் அக்கிரமிகள், தனது குறுகிய சமய அறிவினால்கடவுளன்பைப் பிறரன்போடுஇணைக்க மறுக்கும் கிறிஸ்துவர்கள்ஆகியஅனைவரிடமும் - பரிசேயத் தன்மை இல்லாமல் இல்லை.ஊர்க் கட்டுப்பாடு, பள்ளி ஒழுங்கு, கோயில் ஒழுங்கு, மடத்துஒழுங்குகள் - இவை தேவை; நல்லவை. ஆனால் இவற்றையேஆதாரமாகக் கருதி மனித உணர்வுகளைமதிக்க மறுப்பவர்களும் தம்மில்பரிசேயத் தன்மையைக் கொண்டுள்ளனர் என்பதும் உண்மை. 3.2. சதுசேயர ;3.2.1. தோற்றம் 3.2.2.வாழ்க்கை நிலை 3.2.3. கொள்கைகள் 3.2.4. இயேசுவும் சதுசேயரும் 3.3. எசேனியர்கள் மக்கபேயர் காலத்தில் இவர்கள் தோன்றினார்கள் (மத் 2 : 42).சுமார் கி.மு. 150-ஆம் ஆண்டில்இவர்கள்தனிப்பிரிவினராக வாழ்ந்தனர்என்றுகருதஇடமுண்டு; சாக்கடலின்மேற்குப் பகுதியில், எரிக்கோவிற்கும்என் இடி என்ற இடத்திற்கும் இடையில் இவர்கள் ஒரே குழுவாகவாழ்ந்தனர் என்று பிளினி கூறுகின்றார். ஆனால் சமீப காலக்கண்டுபிடிப்பில், இர்பித் - கும்ரான் என்ற இடத்தில் இவர்கள்வாழ்ந்ததாகத் தெரியவருகிறது; அதனால், இவர்களைக் 'கும்ரான்மக்கள்'என்று அழைப்பதும் உண்டு; அந்தியோக்குஸ் மன்னனுக்கு எதிராகமக்கபேயர் புரட்சி செய்ததாக, மக்கபேயர் நூல் கூறுகிறது(1 மக் 2 : 42). இவர்களுடன் எசேனியர்களும் இணைந்துபோராடியதற்குச் சான்றுகள்உள்ளன. எனவே, மக்கபேயர் காலத்தில்தான்,இக்குழுதோன்றியிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டபொது வாழ்க்கையை, இவர்கள் மேற்கொண்டனர். ஆழ்தியானத்தின்மூலம், விண்ணக மறைபொருளைப் பற்றிஅறிந்துகொள்ளமுற்பட்டனர்.'மெசியாவின்' வருகைக்காகத் தங்களையே தயார் செய்து கொண்டனர்.சடங்கு சம்பிரதாயங்களை அறவே நீக்கி, கடுமையான துறவறவாழ்க்கையைப் பின்பற்றினர். இந்தக் கும்ரான்மக்கள் குழுவில் சேர விரும்புவோர், தொடக்கத்தில்மூன்றாண்டுகள் பயிற்சி பெற வேண்டும். பிறகு எல்லா ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்கவும், அவர்களதுகொள்கைகள், பாரம்பரியம்,வேத நூல்கள் ஆகிய அனைத்தையும் இரகசியமாக வைத்திருப்பதாயும்சத்தியப் பிரமாணம் செய்தபின், குழுவில் ஒரு உறுப்பினராகச் சேர்த்துக்கொள்வர்.இவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. சொந்த உடைமைஎன்று எதுவும் இருக்காது. தலைவருக்குக் கீழ்படிவ தாய் வார்த்;தைபாடுகொடுக்க வேண்டும். அவர்கள்வெள்ளைஉடை அணிந்திருப்பர்.செபமும், உடலுழைப்பும் அவர்களதுமுக்கியப் பணியாகும். இன்றைய சிலதுறவறசபைகளில் கடைப்பிடிப்பது போன்று, முன்இரவிலிருந்து காலை வரை கண்டிப்பானமௌன நேரம்; காலை செபம் முடிநத பிறகு11 மணிவரை வேலை; அதன்பிறகு குளியல்நடைபெறும். இதையும்ஒருசமயச் சடங்காகக்கருதினர். அடிமைகளையோ,பெண்களையோ, அவர்கள் அனுமதிப்பதில்லை. மௌனமாகத்தான் உணவுஉட்கொள்ள வேண்டும்; அதன் பிறகு மாலைவரை தோட்ட வேலை. அதன் பிறகு, செபம், இரவு - உணவு எல்லாம்மௌனமாகவே நடைபெறும். கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் ஆகியவைமிக முக்கியமானஅம்சங்களாகும். நாம் கண்ட மற்ற இரு சமயவாதிகளைவிட இவர்கள்மோசேயின்சட்டங்களைப் பெரிதும்போற்றினர். எசேனியர் அல்லாதவருடன் தொடர்புகொண்டவுடன் சுத்திகரிப்புச் சடங்கு செய்வது இவர்களது வழக்கம்.ஆனால் இவர்கள் மற்ற யூதரிடையே அதிகச் செல்வாக்குப் பெற்றதாகத்தெரியவில்லை. பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, இவர்களின்பெயர் கூடக் குறிப்பிடப்படவில்லை. எனினும் புனித திருமுழுக்குயோவான் இவர்களிடையே வாழ்ந்திருக்கலாம் என்று பலர்கருதுகின்றனர். இவர்களது வாழ்க்கை முறை புதிய ஏற்பாட்டில்ஆங்காங்கு காணப்படுவதால், நற்செய்தி ஆசிரியர்கள் இவர்களதுகொள்கைகளையும் மனத்தில்கொண்டே தம் நூல்களைஎழுதினர் என்றுகருதுவோரும் உண்டு. எது எப்படியாயினும், இளந்திருச்சபையின்வாழ்க்கை முறை இவர்களது வாழ்க்கை முறையைத்தழுவியதாயிருந்ததென்பதை மறுக்கவியலாது. கிறிஸ்துவ ஆயர்கும்ரான் மக்களின் தலைவரை ஒத்திருக்கிறார் என்றும் பல அறிஞர்கள்கருதுகின்றனர் (காண். 2 பேது 2 : 25; திப 20 : 25; தீத்து 1 : 7-9). 4. தாழ்த்தப்பட்டோர் 4.1. வரிதண்டுபவர்கள் வசூலிப்பது அனைத்தையும் அப்படியே அதிகாரியிடம் இவர்கள்கொடுப்பதில்லை. நேர்மையற்ற முறையில் வரிப் பணத்தைச் சுருட்டிக்கொள்வதும் உண்டு. இவர்களதுஇந்த நேர்மையற்ற முரட்டுக் குணமானநடத்தைக்காகவும், உரோமையர்களுடன்சேர்ந்துகொண்டுபலவிதமானவரிகளைவசூலித்ததினாலும்இவர்களைமக்கள்வெறுத்தனர். பாவிகள்,தீண்டப்படாதவர் என்று ஒதுக்கி, பாவிகளோடும் புறவினத்தார்களோடும்நாளடைவில், அநீதிக்கும், அக்கிரமத்துக்கும் முரட்டுத் தனத்திற்கும்,இரக்கமற்றதன்மைக்கும், வரிதண்டுபவர்களையேஉதாரணம்காட்டினர். 4.1.1. இயேசுவும் வரிதண்டுபவரும் 4.1.2. வரிதண்டுபவரான மத்தேயு சமுதாயத்தில் தாழ்நிலையில் இருந்த தன்னை, தனது பாவங்கள்அனைத்தையும் மன்னித்து அன்போடு அழைத்த இயேசுவை மிகவும்பிரமாணிக்கத்தோடு பின்தொடர்ந்தார் மத்தேயு.நன்றிக்கடனாக, இயேசுவின்நற்செய்தியைஒருநூலாகவும் எழுதினார்; போதித்தார். அதேஇயேசுவுக்காக, தனது உயிரை அர்ப்பணித்தார்.ஆக வரிதண்டுபவர் (ஆயக்காரர்) மத்தேயுஇன்று, இயேசுவின் 12 திருத்தூதர்களில்ஒருவரான புனித மத்தேயுவாகத் திகழ்கிறார். 4.1.3. வரிதண்டுபவரான சக்கேயு 4.2. சமாரியர்கள் யூதர்கள் வழிபட்ட 'யாவே' என்ற கடவுளையே, இவர்களும்வழிபட்டனர்; மோசேயையும்அவரதுசட்டங்களையும்மதித்தனர்; ஆனால்,மற்ற யூதர்கள் இவர்களைத் தங்களைச் சார்ந்தவர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. குறைவாகவேகருதினர். யூதர்களுடன்சமாரியர்கள்நல்ல உறவு கொண்ட போது தாங்களும் யூதர்களே என்றும், உறவுகெடும்போது தாங்கள் அசீரிய இனத்திலிருந்து உருவானவர்கள் என்றும்சமாரியர் சொல்வது வழக்கம் என்றுஜோசபுஸ்என்ற வரலாற்றுஅறிஞர்கூறுகிறார். 4.2.1. யூதர்களுளுடன் ஏன் பகை? நமதாண்டவர் சமாரியப் பகுதியில் உள்ள சிக்கார் என்ற ஊரில்உள்ள யாக்கோபின் கிணற்றருகே ஒரு சமாரியப் பெண்ணைச்சந்திக்கிறார். அப்பெண்ணிடம் இயேசு குடிக்கத் தண்ணீர் கேட்கிறார்;அவள் வியப்படைகிறாள். ஏனெனில், யூதர்கள் சமாரியர்களைத்தாழ்ந்தவராகக் கருதினர். தண்ணீர் முதலாய் அவர்கள் வீட்டில் குடிக்கமாட்டார்கள். எனினும், ஆண்டவர் அவளிடம் நீண்ட நேரம்உரையாடுகின்றார். இறுதியாகத் தானே மெசியாவென அவளிடம்கூறுகின்றார். தன் இறைத்தன்மையைப் பற்றி இவளிடமே முதன்முதலாக அறிவிக்கிறார்.தொழுநோயிலிருந்து இயேசுவின் புதுமையால் குணம் பெற்றபத்துப் பேரில் சமாரியரான ஒருவர் மட்டும் இயேசுவிடம் திரும்பி வந்துநன்றிசொல்கின்றார் (லூக் 17:16). மற்ற ஒன்பதுபேரும் யூதர்களானதால்இயேசுவிடம் குணம் பெறுவதை ஓர் உரிமையாகக் கருதினர் போலும்.ஆனால் அன்னியரான சமாரியர் இதனைப் பெரும் பாக்கியமாக எடுத்துக்கொண்டு இயேசுவுக்கு நன்றி செலுத்துகின்றார். ஆனால், இயேசு#8220; கடவுளைபோற்றிப் புகழ அன்னியராகியஉம்மைத்தவிர, வேறுஎவரும்திரும்பி வரக் காணோமே' ' (லூக் 17:18) என்று வருத்தப்படுகின்றார்.கடவுளின் அருளைப்பெற உரிமையுள்ளவர் என்று இறுமாப்புடன்இல்லாமல், அதனை ஒரு பாக்கியமாகக் கருதி, இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு இயேசு இந்தசமாரியனைத்தான்உதாரணம் காட்டுகிறார். "எனக்கு அடுத்துதிருப்பவர் யார்?'' என்ற சட்ட வல்லுநரின்கேள்விக்கு விடையளிக்க இயேசு "நல்ல சமாரியர்'' உவமையைக்கூறுகிறார் (லூக் 10 : 30-37). சமயக் கடமைகளைச் சரியாகச் செய்கின்றகுருவையோ, சட்டங்களை அனுசரிக்கின்ற லேவியனையோ இயேசுபின்பற்றச் சொல்லவில்லை. மாறாக அடுத்தவனுக்கு,துன்பப்படுபவனுக்கு அன்பும் இரக்கமும் காட்டுபவன், ஒரு சமாரியராகஇருந்தாலும்கூட பின்பற்றினால் முடிவில்லா வாழ்வுபெறமுடியும்என்றுஉரைக்கின்றார். சமாரியர் ஒதுக்கப்பட்டவர்தான்! ஆனால் அவரதுநற்செயல்களால் அவர் யூதர்களைவிட மேலானவராக மாறுகிறார்.மனிதன் உயர்வடைவது பிறப்பினால் அல்ல் அவனதுநற்செயல்களால்தான்என்பதை இயேசு, இதன் மூலம் தெளிவாக்குகிறார். 4.2.2. சமாரியாவும் கிறிஸ்துவ சமயமும் 5. தொழுகைக் கூடம். தொழுகைக் கூடம்நற்செய்திநூலைப் புரட்டும்போது'தொழுகைக் கூடம்(செபக்கூடம்)'என்ற வார்த்தை நம் கண்களில் பல இடங்களில் தென்படுகின்றது."யூதர்களுடைய தொழுகைக் கூடங்களில் அவர் போதித்து வந்தார்''(லூக் 4 : 10) என்று நாம் வாசிக்கின்றோம். பாலஸ்தீனாவில், இயேசுகாலத்தில் பல தொழுகைக்கூடங்கள் இருந்தன. "சினகாக்''(ளுலழெபழபரந)என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து 'தொழுகைக்கூடம்' என்ற வார்த்தைஉருவானது. இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில்அல்லலுற்றபோது, தங்கள் எருசலேம் ஆலயத்திலிருந்து வெகுதொலைவில் இருந்தனர். அப்போது ஒன்றாகக் கூடி செபம் செய்யவும்மோசே சட்டநூலையும் (தோரா) சமய ஒழுங்குகளையும் வாசிக்கவும்ஆர்வம் எழுந்தது. ஆலய வழிபாடு நிறைவேற்ற இயலாத காலத்தில்,இறைவனை ஆராதிக்க அவர்கள் அவ்வப்போது ஒன்றாகக்கூடவேண்டியதேவையை உணர்ந்தனர். அப்படிக் கூடிச் செபிக்கும் இடத்தைச்தொழுகைக் கூடம் என்றழைத்தனர். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவிலிருந்து திரும்பிய நாளில்எஸ்ரா என்பவர், இஸ்ரயேலரின் குருவாகவும் தலைவராகவும்இருந்தார். இவரது காலத்தில்தான் பாலஸ்தீனாவில் தொழுகைக்கூடங்கள்உருவாகின. 5.1. அமைப்பு பாலஸ்தீனாவில் உள்ள தொழுகைக்கூடங்கள் நீள் சதுர வடிவக்கட்டடங்களாகும். யூதர்கள் எருசலேம் நோக்கிச் செபம் செய்யவேண்டுமென்ற ஒழுங்கு இருப்பதனால் எருசலேமை நோக்கி,தொழுகைக்கூடங்கள் இருக்கும்படி அமைத்தனர். தொழுகைக்கூடத்தின்உட்பகுதியில் இறைவாக்குகளின் ஏட்டுச் சுருள் வைக்கப்பட்டிருக்குமிடம்திரைச்சீலை ஒன்றினால் மறைக்கப்பட்டிருக்கும். அதனைப் புனித இடம்என்றழைப்பர். அதனருகில், பேச்சு மேடை ஒன்றிருக்கும். அதில்நின்றுதான், விலியத்தை வாசிப்பர் (காண். லூக் 4 : 17).பெரியோர்களும், பணக்காரர்களும் அமர்வதற்கான வசதியும்செய்யப்படும் விவிலியச்சுருள் வைக்கப்பட்ட பகுதிக்கு அருகில்,செல்வாக்குடையவர்களுக்குத் தனிஇடமுண்டு. பெண்களுக்கானதனிஇடமும் உண்டு. கேரளத்தில் - கொச்சியில், யூத தொழுகைக்கூடம்ஒன்றை இன்றும் காணலாம். 5.2. பயனும் பணியும் எருசலேமிலிருந்து பல மைல் தூரத்தில் வாழ்ந்தஇஸ்ரயேலர்களுக்கு எருசலேம் வழிபாட்டினை ஈடுசெய்யும் முறையில்,தொழுகைக்கூட வழிபாடுபயன்பட்டது. எருசலேம் ஆலயம் கி.பி. 70 இல்அழிக்கப்பட்டது. அதன் பிறகு, இத்தகைய தொழுகைக்கூடங்கள்பெருகின. ஓய்வுநாளின் காலையிலும், மாலையிலும், சமயக்கூட்டங்கள்நடைபெற்றன. சிலஆண்டுகளுக்குப் பிறகு, திங்கள், வியாழன்போன்றநாட்களிலும் கூட ஆரம்பித்தனர்.ஒவ்வொருசெப வழிபாட்டிலும், ஷூமா(ளூநஅய) என்றுகூறப்படும்விசுவாச சத்தியங்களை வாசித்தனர். இது பழைய ஏற்பாட்டு மூன்றுவாசகங்களாகும் (காண். இச 6 : 4-9; 11 : 13-21; எண் 15 : 37-41). ஒருகடவுளின் மேல் அவர்களுக்குள்ள அன்பையும், விசுவாசத்தையும் இதுஉறுதிப்படுத்துகின்றது. ஆதலால், எல்லாவற்றிலும் முதல் கட்டளை எது? என்றுமறைவல்லுநன் இயேசுவைக் கேட்டபோது இந்த ஷூமாவை அவர்குறிப்பிடுகின்றார் (மாற் 12-29). இத்துடன் தோராவையும்,இறைவாக்குகளையும் வாசிப்பது வழக்கம். எபிரேய மொழியில்தான்வழிபாடு நடக்கும். ஆலயத்திற்கும் தொழுகைக் கூடத்திற்கும் வேறுபாடுஉண்டு. ஆலயத்தில்பல்வேறுபலிகள்செலுத்தப்பட்டன. செபவழிபாடும்நடைபெறும். தொழுகைக்கூடத்தில்வார்த்தை வழிபாடும், செபவழிபாடும்மட்டுமே நடைபெறும். 5.3. திருச்சபையும் தொழுகைக்கூடமும் விசுவாசத்தில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர்கள்ஆக்கப்படுவதற்கு திருச்சட்டம் நம்மைக் கிறிஸ்துவிடம் அழைத்துச்செல்லும்வழித்துணையாக அமைந்தது(கலா3: 24). அத்திருச்சட்டத்திற்குமிக முக்கியத்துவம் கொடுத்தது, யூதரின்தொழுகைக்கூடங்கள். எனவே,கிறிஸ்துவில் இளந்திருச் சபையினர், இறைவனுக்கு உகந்தவர்களாகமாறுவதற்கு இத்தகைய தொழுகைக்கூடங்கள் ஒரு தயாரிப்புக்களங்களாக அமைந்தன எனலாம். 6. விவிலிய மொழிகள் உலகம் உருவானது முதல், கடவுள் மனிதனோடு உறவாடினார்.ஆதியில் பிதாப்பிதாக்கள், இறைவாக்கினர்கள், அரசர்கள் மூலம்உறவாடிய இறைவன், புதிய ஏற்பாட்டில் இறைமகன் இயேசு, அவரதுதிருத்தூதர்கள், சீடர்கள் வாயிலாகவும் உறவாடினார். இவர்கள்எல்லோரும் பேசியமொழிகளைக் கையாண்டார். அந்த வார்த்தைநிலைத்து நிற்க, இவர்கள் பேசின மொழிகளில் அதனை எழுதிவைத்தனர். எபிரேய மொழியிலும், அரமேய மொழியிலும், கிரேக்க மொழியிலும் விவிலியம் முதன்முதலில் உருவாயின. ஆதலால்,எபிரேயம், அரமேயம், கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளே - விவிலியமொழிகள் எனப்படும். 6.1. எபிரேயம் ;6.2. அரமேயம் இயேசுவின் காலத்தில் அரமேயந்தான் அனைவரின் பேச்சுமொழியாக இருந்தது. ஆதலால், அரமேயந்தான் இயேசு கிறிஸ்துவின்தாய்மொழியாகும். மரியாளும் யோசேப்பும், அரமேயமே பேசினர் என்றுமுடிவுக்குவரலாம். இயேசுவின்உரையாடல்களைநற்செய்திநூல்களில்படிக்கும்போது அப்பா, எபேத்தா, அக்கலிதமா, கபாத்தா, கொல்கொத்தா,பம்மோன், கேபாஸ், ரபூணி போன்ற அரமேய வார்த்தைகளைக்காணலாம்.தொழுகைக்கூடத் தலைவனான யாயிர் என்பவனின் மகளைஉயிர்ப்பிக்கும், "தலித்தாகூம்'' என்ற வார்த்தையையும் (மாற் 5 : 41) அவர்சிலுவையில் தொங்கியபோது, "ஏலி ஒலிலெமா சபக்தாணி'' என்றவார்த்தைகளையும் (மத் 24 : 6) இயேசு கூறியதாக வாசிக்கிறோம். இவையனைத்தும் அரமேயச் சொற்கள். எனவே நம் ஆண்டவர்,வீட்டிலும், தான்போதித்த பொழுதும், அரமேய மொழியில்தான்பேசினார்என்பது உறுதி.அரமேயம் பெரிதும் பேசப்பட்டபோதிலும், வெகு சிலரேஇம்மொழியில் எழுதினர். பழைய ஏற்பாட்டு நூல்களில் ஒரு சிலஅதிகாரங்களும், புனித மத்தேயு நற்செய்தியும், முதன்முதலாக அரமேயமொழியில் எழுதப்பட்டன. எபிரேய மொழிக்கும், அரமேயத்திற்கும் மிக்க தொடர்பு உண்டு.ஆங்கிலம், தமிழ் போன்ற பல மொழிகளை நாம் இடமிருந்து வலமாகஎழுதுகிறோம். ஆனால், எபிரேயமும் அரமேயமும் வலமிருந்து இடமாகஎழுதப்படுகின்றன. உயிர் எழுத்துக்களைப் பொதுவாக இரண்டும்பயன்படுத்துவதில்லை. பொருள் விளக்கத்திலும், எழுத்து முறையிலும்,இரண்டு மொழிகளுக்கும் அதிக ஒற்றுமைகள் உள்ளன.அரமேயமும் எபிரேயமும் சென்ற நூற்றாண்டு வரை இறந்தமொழிகளாகவே எண்ணப்பட்டன. ஆனால், கடந்த நூறு ஆண்டுகளாகஎபிரேய மொழியில், மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாகஇன்று, இஸ்ரயேல் நாடு முழுவதும் எபிரேயம் பேசப்படுகிறது. இதுஅந்நாட்டின் ஆட்சி மொழியாகவும் உள்ளது. உலக மொழிகளில் வேறுஎம்மொழியும் பெற்றிராத மறுமலர்ச்சியினை எபிரேயம் மட்டும்பெற்றுள்ளது. 1964 ஆம் ஆண்டில் திருத்தந்தையை இஸ்ரயேல்நாட்டின் ஜனாதிபதி சந்தித்தபோது எபிரேய மொழியில்தான்திருத்தந்தையுடன் தமது உரையை ஆற்றினார்.லெபனான் பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் இன்றும்,அரமேயம் பேசப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, எபிரேய- அரமேய மொழிகள் முற்றிலும் இறந்த மொழிகளாகஎண்ணுவதற்கில்லை. 6.3. கிரேக்கம் உயர்ந்த கலாச்சார மொழியாகவும், அனைத்து நாட்டுத் தொடர்புமொழியாகவும் விளங்கியது கிரேக்கம். இயேசுவின்காலத்தில் நகர்வாழ்மக்களின் மொழியாக விளங்கினாலும், மத்திய தரைக் கடலின் கிழக்குப்பகுதியில் வாழ்ந்த எல்லா மக்களுக்குமே கிரேக்கம் தெரிந்திருந்தது.எனவேதான், புனித பவுல்அடியார் எபிரேயமொழியைஅறிந்திருந்தாலும்யூதரல்லாதவர் களிடையே கிரேக்க மொழியிலே நற்செய் தியைப்போதித்தார். ஆசீரியம் அராமேயம், எபிரேயம், அராபிக், எத்தியோப்பியம்ஆகியவற்றை உள்ளிட்ட மொழிகளை செமித்திய மொழி என்றழைக்கிறோம். செமித்திய மொழிகளின் கலப்பினால் இலக்கிய எபிரேயம் அதன்தூயதன்மையை இழந்தது பேசும் எபிரேயம் உருவானது. இயேசுவின்காலத்தில் மக்கள் பேசிய அரமேய மொழியில்தான் முதன் முதலில்இயேசுவின் போதனைகள் என்ற நூலை மத்தேயு எழுதினார். ஆனால்,இந்நூல் மறைந்துவிட்டது. மக்களில் அதிகம் புழக்கத்திலிருந்த கிரேக்கமொழியில் மத்தேயுவும் மற்ற நற்செய்தியாளர்களும் தங்கள் நூல்களைஎழுதினர். 7. புதிய ஏற்பாடு: முக்கியக் காலஅட்டவணைஅட்டவணை
8. புதிய ஏற்பாடு பற்றிஇரண்டாம்இரண்டாம் வத்திக்கான் சங்கம் 8.1. புதிய ஏற்பாட்டின்மேன்மை(இறைவெளிப்பாடு 17லிருந்து 20 வரை) 17. நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் நிறைவாழ்வளிக்கும்கடவுளின் வல்லமையாக இறைவார்த்தை (காண் உரோ 1 : 16) புதியஏற்பாட்டு நூல்களில் மிகவும் சிறப்பான முறையில் அடங்கியுள்ளதுஅவற்றில் தம் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றது. ஏனெனில், காலம்நிறைவேறியபோது (காண். கலா4: 4) வார்த்தை மனிதரானார்; அருளும்உண்மையும் நிறைந்து விளங்கி (காண். யோவா 1 : 14) நம்மிடையேகுடிகொண்டார். கிறிஸ்து கடவுளின் ஆட்சியை இவ்வுலகில்ஏற்படுத்தினார். தம் தந்தையையும் தம்மையும் செயலாலும் சொல்லாலும்வெளிப்படுத்தினார். தாம் இறந்து உயிர் பெற்றெழுந்ததாலும்மாட்சிமையுடன் விண்ணகம் சென்றதாலும் தூய ஆவியைஅனுப்பியதாலும் தமது அலுவலை நிறைவுசெய்தார். மண்உலகிலிருந்துஉயர்த்தப் பெற்று எல்லாமனிதரையும் தம்மிடம் ஈர்த்துக் கொள்கின்றார்(காண்யோவா 12:32). முடிவில்லா வாழ்வுதரும் வார்த்தைகளை(காண்யோவா 6:68) அவர் ஒருவரே கொண்டுள்ளார். நற்செய்தியைபோதிக்கவும் கிறிஸ்துவும் ஆண்டவருமான இயேசுவில் நம்பிக்கையைதூண்டவும் திருச்சபையை ஒன்று கூட்டவும் வேண்டி அவருடையதிருத்தூதர்களுக்கும் இறைவாக்கினருக்கும் தூய ஆவியின் வழியால்(காண் எபே3: 46 கிரேக்க மூலம்) இந்த இறைத் திட்டம் இப்போதுவெளியாக்கப்பட்டது போல மற்ற தலைமுறைகளுக்கு வெளியாக்கப்படவில்லை. இவ்வுண்மைகளுக்கு புதிய ஏற்பாட்டு நூல்கள் நிறைவானதெய்வீகச் சான்றாக நிலவுகின்றன. 8.2. நற்செய்தி நூல்கள்மறைத்தூதர் காலத்தவை 8.3. நற்செய்திநூல்களின்வரலாற்றுத்தன்மை 8.4. புதிய ஏற்பாட்டுப் பிற நூல்கள் ------------------------------------------
-------------------------- ---------------- ------ --
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||