தம் பெயரில் நூல் பெறாத இறைவாக்கினர் முனைவர்பேரருள்திரு வ. மரியதாசன் விவிலிய அன்பர்களே, வணக்கம்.யூத ராபிகள் பழைய ஏற்பாட்டை மூன்று பெரும் பிரிவுகளாகப்பிரித்தார்கள். 1. சட்ட நூல்கள், 2. இறைவாக்கு நூல்கள், 3. அறிவுரை நூல்கள்.நம் ஆண்டவர் இயேசுவும் எம்மாவு நோக்கிச் சென்ற சீடர்களிடம் இந்தப்பிரிவுகள் குறித்துப் பேசுவது ஈண்டு கவனிக்கத்தக்கது (லூக் 24:44).இறைவாக்கு நூல்களை முற்கால இறைவாக்கினர், பிற்காலஇறைவாக்கினர் என்று இருபெரும் பிரிவுகளாகவும் யூத ராபிகள்பிரித்திருந்தனர். பிற்கால இறைவாக்கினரை பெரிய, சிறிய இறைவாக்கினர்என்று இருபிரிவுகளாகப் பிரித்திருந்தனர். அவர்கள் முற்காலஇறைவாக்கினர்கள் என்று அழைத்த நூல்களை இன்றைய விவிலிய அறிஞர்கள்வரலாற்று நூல்கள் என்னும் பெயரில் அழைக்கின்றார்கள். ஆயினும்இந்நூல்களில் #8220;தம் பெயரில் நூல் எழுதாத இறைவாக்கினர்கள்” பலரின்வாழ்க்கையும் செயல்பாடுகளும் காணக்கிடக்கின்றன. அரசர்கள் தவறு இழைக்கிற போது நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம்குற்றமே என இடித்துப் பேசுகிறவர்கள் இறைவாக்கினர்கள். அரசர்களுக்கும்அஞ்சாது ஆண்டவனுக்கு மட்டுமே அஞ்சி துணிச்சலுடன் செயல்பட்டவர்கள்இந்த இறைவாக்கினர்கள். இஸ்ரயேல் வரலாற்றில் அரசர்களைவிடஇறைவாக்கினர்களுக்குத்தான் முதன்மை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுஎன்பதும் இங்கே நினைவு கூறத்தக்கது.தம் பெயரில் நூல் எழுதாத இறைவாக்கினர்களின் பணிகளையும்செயல்பாடுகளையும் அழகுறத் தொகுத்து சுருக்கமாகவும் அதே நேரத்தில்விளக்கமாகவும் பேரருட்திரு வ. மரியதாசன் அவர்கள் இச்சிற்றேட்டைஎழுதியுள்ளார்கள். அவர்களுக்கு நமது நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக. இப்பாட நூலிலும் ஏராளமான விவிலியக் குறிப்புகள் உள்ளன. அன்புகூர்ந்து விவிலியத்தை அருகில் விரித்து வைத்து இக்குறிப்புகளை வாசித்துஇச்சிற்றேட்டில் சொல்லப்பட்டுள்ளவற்றை முழுமையாக அறிந்து கொள்ளமுயற்சிகள் எடுக்க வேண்டுமென்று மாணவர்களை கேட்டுக்கொள்கிறேன். இறைவார்த்தைப் பணியில்
பகுதி - 1 1 . இறைவாக்கினர் - பொது முன்னுரை
பகுதி 1 பொது முன்னுரை: 1.1. இறைவாக்கினரின் வெவ்வேறு பெயர்கள்
மேற்காணும் பெயர்கள் இறைவாக்கினர்களின் அழைப்பு, அவர்கள்இறைவாக்குப் பெறும் முறை, அவர்களின் குண நலன்கள், அவர்களின் பொறுப்பு,இவற்றைச் சிறப்புறச் சுருக்கிக் கூறுவது குறிப்பிடத்தக்கது. 1.2. இறைவாக்கினர் வரலாற்றின் வளர்ச்சிப் பருவங்கள்: ஐந்து வகைஇறைவாக்கினர்கள்
1.3. வேற்றினத்தாரிடையில் இறைவாக்கினர்கள் இவர்கள் கூட்டமாகக் கூடிப் பாடி ஆடுவார்கள்; பரவசநிலை அடைவர்;இந்த நிலை மற்றவர்க்கும் பரவக்கூடியது, இந்தப் பரவச நிலையில் அவர்கள்கூறுவதுஇறைவாக்காகக் கருதப்படும்.
2. இஸ்ரயேல் நாட்டில் இறைவாக்கினர்கள் 2.1. இறைவாக்கினருக்கு முன் இறைவாக்கினர்
இவர்கள் ஏன் இறைவாக்கினர் என அழைக்கப்பட்டனர்? ஏனெனில்இவர்களும் கடவுளோடு பேசினர். சான்றாக, ஆபிரகாமும் மோசேவும் கடவுள்பெயரால் பேசினர். கடவுளுக்கும் மக்களுக்கும் இடைநிலையாளராக நின்றனர்.ஆயினும் இவர்களது சிறப்புப் பெயர் வேறு ஆகும். ஆபிரகாம் குலமுதுவர்ஆவார். ஆரோன் குரு, மோசே சட்ட வல்லுநர், மற்றும் தெபோரா பெண் நடுவர்,தாவீது மற்றும் சவுல்-அரசர்கள்ஆவர். 2.2. இறைவாக்கினர் சங்கம் நீதித்தலைவரின் காலத்திலும் (சாமுவேலின் காலம்) அதற்குப் பின்னரும்இறைவாக்கினரின் சங்கம் இருந்தது. ஒருவகையான 'பொதுவாழ்வு' வாழ்ந்ததால் சங்கம் எனப்பட்டது. இவர்கள் சில சமயங்களில் ஒன்று கூடுவர். சான்றாக,
எனவே சாமுவேல், எலியா, எலிசா என்பவர்களுக்கு இச்சங்கத்தோடுதொடர்பிருந்தது என்பது தெளிவு. சாமுவேல் காலத்திலேயே இறைவாக்குஉரைப்பதற்காக அவர்கள் சமயப் பண்ணுக்கேற்ப ஆடுவது வழக்கம். இதுஇறைவாக்குப் பணியின் குழந்தைநிலை ஆகும். இவர்கள் அடிக்கடி பரவச நிலைஅடைந்ததாகவும், பரவசநிலை அடைவதற்காகக் கள்ளும், இசையும் நாட்டியமும்பயன்படுத்தியதாகவும் அறிகிறோம் (1 சாமு 10:5-10; 2 அரச 3:15; 2 குறி 29:25-30).எலிசா காலத்தில் அவர்கள் ஒன்றாகச் சமைத்து உண்டனர் (2 அரச 4:38).சங்கத்தில் 50 பேர், 100 பேர், 400 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களுள் சிலர்இளைஞர்; சிலர் மணமானவர். சிலசமயங்களில் அவர்கள் பழித்துரைக்கப்பட்டனர்(2 அரச 9:1-11 ). ஒருமுறை 400 பேர் அடங்கிய சங்கம்கூட தவறாக இறைவாக்குரைத்து விடுகிறது (1 அரச 22:6-12,22) அவர்கள் வாக்குப் பலித்துவிடலாம் (2அரச 9:1-3). பொதுவாகப் பொய்த்துவிடுவதும் உண்டு. இஸ்ரயேல் மக்களுடைய வரலாற்றில் 'இறைவாக்கினரின் புதல்வர்கள்' மிகமுக்கியப் பணியைச் செய்திருக்கிறார்கள். இவர்கள்தான் 'இறைவாக்குப் பள்ளியை'(ளுஉhழழட ழக pசழிhநவளைஅ) உருவாக்கியவர்கள். 2.3. இறைவனால் நேரடியாக அழைக்கப்பட்ட இறைவாக்கினர்
(1) அடையாள வாழ்க்கை நிலை ஓசேயாவின் மணவாழ்க்கை (நூல் முழுவதும்) (2) அடையாளச் செயல்கள் அகியா தன் மேலாடையை 12 பாகங்களாகப் பிரித்து அவற்றுள் பத்தைஎரொபவாமுக்குக் கொடுத்தார் (1 அர 11:29-39); எரேமியாவின் அரைக்கச்சை(எரே 13:1-14); எரேமியா பெருங்குடி மக்கள் காண மண்கலயம் ஒன்றைஉடைத்தார் (எரே 19:1-15); இரு கூடைகள் (எரே 28:1-17); நிலம் வாங்குதல்(எரே 32:8-9); புத்தகத்தை ஆற்றிலே எறிதல் (எரே 51:59-61); எசாயாஆடையின்றியும், வெறுங்காலோடும் எருசலேம் வீதிகளில் திரிந்தது (எசா 20:1-6); எசேக்கியேல் நகர அழிவைச் சித்திரித்தல் (எசே 4:1-17); தலையையும்,தாடியையும் மழித்தல் (எசே 5:1-4); சுவரில் துவாரம் (எசே 12:3-16);நடுக்கத்தோடு அப்பத்தை உண்ணுதல் (எசே 12:17-20); வாள் வீச்சு (எசே 21);இணைந்த கோல்கள் (எசே 37:15). (3) அடையாளப் பெயர்கள்ரூரஅட் ஓசேயா 1:4-9 மகன் இஸ்ரியேல் : தண்டனை பெறுபவர், கடவுள்விதைக்கிறார்.மகள் லோ - ருகாமா : கருணை பெறாதவள்.மகள் லோ - அம்மீ : என் மக்கள் அல்ல.ரூரஅட் (ஒ) இறைவாக்கினர் வழியாய் இறைவன் பேசாவிடில் அது தண்டனையாகக்கருதப்பட்டது. ஆமோ 8:11-12; எசே 7:26.மலாக்கி என்ற இறைவாக்கினருக்குப்பின் நெடுங்காலமாகஇறைவாக்கினர் இல்லை (1 மக் 9:27; புல 2:9; தானி 3:38; திபா74:9). இதனால் ஓர் இறைவாக்கினரை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர் (1 மக் 4:46; 14:41).எனவேதான் திருமுழுக்கு யோவானுக்கு நல்ல வரவேற்பு இருந்தது (மத் 3:1-12; 11:7-19; 21:25-27; யோவா 10:41). அவரே பழைய ஏற்பாட்டின் இறுதிஇறைவாக்கினர் - புதிய ஏற்பாட்டின் முன்னோடி. இயேசுவே புதிய ஏற்பாட்டின்ஈடு இணையற்ற இறைவாக்கினர் ஆவார். 2.4. போலி இறைவாக்கினர்கள்: இஸ்ரயேல் நாட்டில் இருந்த உண்மையான இறைவாக்கினருக்குப் பெரும் எதிரிகளாக இவர்கள் திகழ்ந்தனர். மேலும் இவர்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருந்தனர்.மன்னன் எதிர்பார்ப்பதையே எடுத்துச் சொல்லி மன்னனிடம் நன்மதிப்புப் பெற்று இருந்தனர்.சிலர் அரசவையில் கூட இடம் பெற்றிருந்தனர். மக்களின் தலைவராய் இருந்தவரும் உண்டு.எனவே போலி இறைவாக்கினரால் இஸ்ரயேல் நாட்டில் பெரும் தொல்லை ஏற்பட்டது என்றேகூற வேண்டும். ஓசேயா, எசாயா, மீக்கா, செப்பனியா, எரேமியா, எசேக்கியேல் போன்றஉண்மையான இறைவாக்கினர் இதனைக் குறிப்பிடுகின்றனர்.
போலி இறைவாக்கினரைக் கண்டுபிடிப்பது எப்படி? 1) அவர்களது வாக்கு நிறைவேறாது (இச 18:21-22); உண்மையான இறைவாக்கினர் வரும் பொருள் உரைப்பர். அது நிறைவேறும் (1 சாமு 12:16-18; 1 அரச 17:1, 18:1;22:28; 2 அரச 6:32-33; 8:13-15; 19:32-36; எசா 41:23; 44:24-26; 48:1-8; எரே 28:9, 16;32:6-8). ஆனால் பல காலம் காத்திருக்க வேண்டும். அதற்குள் ஒரு தலை முறைகூடக்கடந்து போகலாம். 2) இறைவன் இறைவாக்கினர் வழியாய்ப் புதுமை ஆற்றுவதுண்டு. உண்மைதான்.ஆயினும், இதுவும் நிச்சயமான அருங்குறி அல்ல. (இச 13:2-6) புதுமை போல் செய்து பிறதெய்வத்தை வழிபடத்தூண்டியவர்களும் உண்டு. அவர்கள் போலி இறைவாக்கினர்கள்.தம் பணி இறைவனிடமிருந்து வந்தது என எண்பிக்க அந்த இறைவன் யாவே ஒருவரேஎன்று காட்ட உண்மை இறைவாக்கினர் புதுமை செய்யும் வரம் பெற்றிருந்தனர் (1 சாமு12:12-19; 1 அரச 13:1-5; 17:24; 18:37-39; 2 அரச 20:1-11; எசா 7:11-14; 38:7). ஆம்யாவே இறைவனுக்குப் பிரமாணிக்கமாயிருப்பதுதான் இறைவாக்கினருக்கு உரைகல் (எரே23:13-32). 3) அழிவை எடுத்துரைப்பவர் உண்மை இறைவாக்கினர். ஏற்றவிதம் கூறுபவர்ஏமாற்றுபவர். நல்ல இறைவாக்கினர் தம் அழைப்புக்குப் பிரமாணிக்கமாயிருந்து தியாகம்செய்பவர்கள்; உண்மைக்காகத் தன் உயிரையே கொடுப்பவர்கள் (எரே 11:4-6; 26:12-15).சுருங்கக்கூறின், உண்மையான இறைவாக்கினர் பிற்காலத்தைஅறிவிக்கும்போது, அது நிகழும் (வுசரவா). பல தெய்வ வழிபாட்டை அகற்றி 'ஒரே தெய்வவழிபாட்டைப் போதிப்பவர்' (அழழெவாநளைஅ); நல்வாழ்வு வாழ்ந்து பிறரும் நல்வாழ்வு வாழத்தூண்டுபவர். நடத்தையைச் சீர்திருத்திக் கொள்ளாமல் வெறும் திருக்கோவிலையும்,இறைப்பணியை யுமே நம்பினவர்களைக் கண்டிப்பவர் (அழனயடவைல) (எரே 7:4-1 5; மீக். 3:11;ஆமோ 2:6-16) (ஆமோஸ் - சமூக நீதி; ஓசேயா - அன்பு; எசாயா- தூய்மை) (Pசழிhநவள யசந வாந சநடபைழைரள உழளெஉநைnஉந ழக ஐளசயநட).
2.5. இறைவாக்கினரின் ஏனைய பிரிவுகள்
3. அரசர்களும் இறைவாக்கினர்களும் (சாமுவேல்)- சவுல் கி.மு. 1020 - 1000
4. தம் பெயரில் நூல் பெறாத இறைவாக்கினர்
பகுதி இரண்டு (ஒவ்வோர் இறைவாக்கினரைப் பற்றிப் படிக்கும்போதும் 'அரசர்களும்இறைவாக்கினரும்' என்ற பெயர் வரிசையையும், 'நூல் பெறாத இறைவாக்கினர்'என்ற பெயர்ப் பட்டியலையும் ஒரு முறையேனும் நோக்குக). 1. சாமுவேல் சாமுவேல் எப்ராயிம் குலத்தைச் சார்ந்த எல்கானாஃஅன்னாஎன்பவர்களின் மகன் ஆவார். இவர் 'நீதித்தலைவர்' (விடுதலை வீரர்)வரிசையில் இறுதியானவர். அரசர் காலத்திலிருந்து தொடங்கும்'இறைவாக்கினர்' வரிசையில் முதல்வர். சவுல், தாவீது, சாலமோன், வடநாட்டுஅரசர்கள், தென்னாட்டு அரசர்கள் ஆகிய அரசர்களைப் பற்றிய நூல்களின்தொடக்கத்தில் இவர் இடம் பெறுகிறார். எனவே நூல் பெறாத இறைவாக்கினர்வரிசையில் இவர் எண்ணப்படுவது சரியே. 1 சாமுவேல், 2 சாமுவேல் என்றுபெயர் கொண்டாலும் கூட டுஓஓ கிரேக்க மொழிபெயர்ப்பு '1, 2, 3, 4 அரசர்கள்'என்றே அரசர் வரலாற்று நூல்களுக்குப் பெயர் இட்டுள்ளது. 1.1. சாமுவேல் விடுதலைத் தலைவர் 1 சாமு 7:15-17,1 சாமு8:1-5,1 சாமு12:1-5 1.2. சாமுவேல் இறைவாக்கினர் 1.3. சாமுவேல்: இஸ்ரயேலுக்கு முதன்முதலாக அரசரை ஏற்படுத்தியஇறைவாக்கினர் 1 சாமு 9:1-27 அரச திருப்பொழிவுக்காகச் சாமுவேல்சவுலை தேர்ந்தெடுத்தல். பென்யமின் குலத்துச் சவுல் அரசனானதற்கு மட்டுமல்ல,அக்குலத்தை ஒழித்து யூதா குலத்துத் தாவீது அரசரானதற்கும் காரணமாகஇருந்தவரும் சாமுவேல்தான் (1 சாமு 16:1-13).ஆயினும் இறைவாக்கினர் சாமுவேல் விரும்பாமல் இவ்வாறு அரசைக்கொடுத்தார் என்றதோர் 'அரசர் வேண்டாம் என்ற மரபு' ( 'யுவெi-ஆழயெசஉhiஉ வுசயனவைழைn) சாமுவேலைப் பற்றிய பகுதிகளுக்கிடையே இழையோடிச் செல்வது நம்கண்களில் படுகிறது. விவிலிய ஆராய்ச்சியாளர் இதற்கு விடை காண முயலுகின்றனர்.தொடக்கப் மரபைப் பின்பற்றிய எழுத்தாளர், சாமுவேல் விரும்பியே அரசரைஏற்படுத்தினார் என்று அவர் மனதைப் மேற்காணும் விவிலியப் பகுதிகளிலேபடம் பிடித்துக் காட்டினர்.ஆனால் சவுல்-தாவீது-சாலமோன் அரசர்களுக்குப் பிறகு வடநாட்டில் வரும் மதத்துரோகி அரசர்களை - அநீத அரசர்களைப் பார்த்தபின்,தென் நாட்டை ஆளும் இறைப் பற்றற்ற அரசர்களைக் கண்டு சலித்துப்போனபின்-பக்தர்கள் மனம் உடைந்துபோய் 'அரசர்கள் தேவையே இல்லை','சாமுவேல் இறைவாக்கினர் அப்படியொன்றும் விரும்பி நாட்டில் அரசரைஏற்படுத்தவில்லை' என்று சாமுவேலின் மனத்துக்கு உள் ஆழம் கொடுக்கத்தொடங்கினர்.இவ்வாறு, இஸ்ரயேல் நாட்டுக்கு 'அரசர் தேவையில்லை' என்றுசாமுவேல் இறைவாக்கினர் நினைப்பதாக எழுதுகின்றனர். அந்த நினைவுக்குஉரமூட்டும் நிகழ்ச்சிகளைப் பிற்கால மரபு சித்தரிக்கிறது. இத்தகைய அரசர்எதிர்ப்புப் பகுதிகள் பின் வருவன: 1 சாமு 8:1-22 'அரசன் வேண்டாம்'. எப்படியும், சாமுவேல் இறைவாக்கினரின் முக்கியமான பணிஇஸ்ரயேல் நாட்டில் அரசர்களைத் தோற்றுவித்ததேயாகும். இந்த அரசர்களால்நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளையும், ஆட்சிச் சூழலில் இறைவாக்கினர்பணியாற்றிய விதத்தையும் பின்வரும் பக்கங்களில் காணலாம் (1 சாமு 2 :27 -36). குறிப்பு: சாமுவேல் நூல் தொடக்கப் பகுதியில், இறையடியார்(கடவுளின் மனிதர்) என்ற ஊர் பேர் இல்லாத, நூல் எழுதாதஇறைவாக்கினரைச் சந்திக்கிறோம். சாமுவேல் இறைவாக்கினர் இளைஞனாகஇருந்த காலத்தில் வாழ்ந்தவர் இந்த ஊர் பெயர் இல்லா இறைவாக்கினர். 'சீலோ' திருத்தலத்தில் பணியாற்றிய ஏலி என்ற பெரிய குருவின்குடும்பம் அர்ச்சகர் பணியிலிருந்து அகற்றப்படும் என அறிவிப்பதே அவர்பணியாகும். இதற்குமேல் இந்த இறைவாக்கினரைப் பற்றி நமக்கு ஏதும்தெரியாது.
2. காது காது என்ற பெயர் 'செல்வம், சம்பத்து' என்று பொருள்படும். இந்தஇறைவாக்கினர் தாவீது அரசனின் காலத்தவர் (கி.மு.1010-970). அவரதுஅரசவையில் இடம்பெற்றவர். இவரைப் பற்றிய விவிலியப் பகுதிகள்: 2.1 இளைஞன் தாவீதின் உயிரைக் காத்த இறைவாக்கினர் 1 சாமு. 22:5 : இறைவாக்கினரான காது என்பவர், தாவீதை நோக்கி'நீ குகையில் தங்காதே, யுதா நாட்டுக்குப் புறப்பட்டுப் போ' என்றார். தாவீதுபுறப்பட்டு எரேத்து என்ற காட்டை அடைந்தார். இதனால், தாவீதுபேராபத்திலிருந்து தப்பி விடுகிறார்.தாவீது அரசனின் காலம் இஸ்ரயேல் நாட்டு முடியரசின் பொற்காலம்ஆகும். தாவீது மாமன்னன் பல்வேறு பகுதிகளையும் இணைத்துஒருங்கிணைந்த அரசை உருவாக்கினார். எப்ரோனிலிருந்த தலைநகரைஎருசலேமுக்கு மாற்றினார். இது மையமான இடம்; 12 குலத்தவரும் அவர்ஆட்சியில் மகிழ்ச்சி கண்டனர். ஆண்டவரின் பேழையை அவர் கிரியத் எயாரி மிலிருந்துஎருசலேமுக்குக் கொண்டு வந்து, புனிதத் தலத்தில் வைத்தார். மேலும் அரண்மனையைக் கட்டி முடித்தார். கோயில் கட்டத் தேவையான பொருட்களையும்சேகரித்தார். சுற்றிலும் இருந்த நாடுகளின் பகைவர்களை ஒடுக்கி அமைதியைநிலைநாட்டினார். தாவீது ஒரு வீரர் மட்டுமன்று, ஓர் இசைக்கலைஞரும் கூட.பாடற் குழுவுக்கும், திருப்பாக்களுக்கும் வித்திட்டு வளர்த்தவர் அவரே. இறைவழிபாட்டைச் சிறப்பான விதத்தில் நடத்திக் காட்டியவரும் அவரே.காது இறைவாக்கினர் இந்த மாமன்னரது காலத்தில் வாழ்ந்தவர்; அரசஅவையில் நாள் குறிப்புக் காப்பாளராக அவர் விளங்கினார் (1 குறி 29:29).எனவே தாவீதின் வாழ்க்கையில் ஒரு சில முக்கிய நிகழ்ச்சிகளில் அவர்பங்குகொள்ள முடிந்தது. 2.2 குடிக்கணக்கு எடுத்தலும், தாவீதுக்குத் தண்டனை அறிவித்தலும் 2 சாமு 24: 12-14 தாவீது அதிகாலையில் எழுந்திருந்தபோதுஇறைவாக்கினரும், திருக்காட்சியாளருமான காது என்பவருக்கு ஆண்டவருடைய வார்த்தை வந்தது. நீ தாவீதிடம் போய் 'இம்மூன்று காரியங்களில் ஒன்றைநீ தேர்ந்து கொள்ளலாம். அதில் உனக்குப் பிடித்தமானது எதுவோ அதை நான்உனக்குச் செய்வேன் என்று ஆண்டவர் சொன்னார் என்று சொல்' என்பதாம்.அதன்படியே காது, தாவீதிடம் வந்து அவரை நோக்கி 'உனது நாட்டில் ஏழுஆண்டுகள் பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப் பின்தொடர மூன்றுமாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள்கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் மறுமொழிசொல்லவேண்டும். எனவே சிந்தித்து முடிவு செய்' என்றார். அப்பொழுதுதாவீது, அவரை நோக்கி 'நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன்.ஆண்டவரது கையில் நாம் விழுவோம். ஏனெனில் அவரது இரக்கம் பெரிது.மனிதரின் கையில் விழவேண்டாம்' என்று கூறினார். 2.3. களம் வாங்கிப் பீடம் கட்டுதல; ( பிற்கால எருசலேம் கோவில் நிலம் ) குடிக்கணக்கு எடுத்த தாவீது அரசர் மனம் கலங்குகிறார். அப்போதுகாது தாவீதிடம் 'எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்திலேயேஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பும்' என்றார் ( 2 சாமு 24:18-19 ) .அவ்வாறே பலியிடுமாறு களம் வாங்கப்பட்டது. பலிபீடம் கட்டப்பட்டது.பிற்காலத்தில் தாவீதின் மகன் சாலமோன் மாமன்னரால் இந்த இடத்தில்எருசலேம் பேராலயம் கட்டப்பட்டது. எனவே இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தநிகழ்ச்சியாகும்.
3. நாத்தான் நாத்தான் (கடவுள் தந்தார்) என்ற பெயரைப் பழைய ஏற்பாட்டில் பலர்தாங்கியிருப்பினும் அவர்களில் மிக சிறப்பானவர் நாத்தான் இறைவாக்கினர்ஆவார். காது இறைவாக்கினரைப் போலவே இவரும் தாவீது மாமன்னரின்காலத்தவர்; அரசவை இறைவாக்கினர், எனினும் இறைவனால் நேரடியாகஅழைக்கப்பட்டவர். மீட்பின் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவர்; எருசலேம் கோவில்கட்டத் தூண்டுதல் தந்தவரும் பின்னர் தற்போது கட்டவேண்டாம் எனத்தடுத்தவரும் இவரே; வழிபாட்டு சீரமைப்புக்கு உதவியவர் இவர்; காது என்றஇறைவாக்கினரும் அவரோடு ஒத்துழைத்தார். நாத்தான் இறைவாக்கினர்'உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்' (2 சாமு 7:16)என இறைவாக்கு அறிவித்தார். மெசியாவை எதிர்பார்க்கையில் நாம் சிறப்பாகநினைவுகூரும் அருள்வாக்கு இதுவே. தாவீதுக்குப்பின் அவரது மகன்சாலமோன் மாமன்னராவதற்குப் பின்னணியில் நின்று உதவியவரும் அவரே.நாத்தானின் இளமை வாழ்வு நமக்குத் தெரியாது. அவரது வாழ்வின்இறுதிக் கட்டங்களும் மறைந்தே நிற்கின்றன. நாத்தான் இடம்பெறும் விவிலியப் பகுதிகள் 3.1. (2 சாமு 7:1-17) 'தாவீதின் அரசுக்கு முடிவே இல்லை ' எனஅறிவித்தவர் நாத்தான்இப்பகுதி முக்கியமானதொன்றாகும். 7:1-2 - சூழ்நிலை: எருசலேமில் தாவீதின் அரண்மனை வேலைமுடிவு பெற்றுவிட்டது. நாட்டிலே அமைதியும் நிலவுகிறது. புதிய ஏற்பாட்டில் இறைத்தூதர் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னபோது, நாத்தானின் வார்த்தையையே எதிரொலிக்கிறார். தாவீதின் மகன்இயேசு தாவீது குல அரசை நிலை பெற வைப்பவர்.லூக் 1:32-33. 'அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார். உன்னதக் கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையானதாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர்யாக்கோபின் குலத்தின்மீது என்றென்றும் அரசாள்வார். அவருடைய ஆட்சிக்குமுடிவே இராது'.நாத்தானின் இறைவாக்கு சுமார் 1000 வருடங்களுக்குப் பின் இயேசுவில்நிறைவு காண்கிறது. 3.2. 2 சாமு 12:1-25 தாவீதின் பாவத்தைக் கண்டித்து, எளியோருக்காகப்பரிந்து பேசுபவர் நாத்தான்நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே! அரசன் இரகசியமாகப் பாவம்செய்தாலும் அது இறைத் துரோகமே என்று கூறுகிறார் இறைவாக்கினர்.தாவீது மன்னன் உரியாவின் மனைவி பத்சேபாவுடன் பாவம்செய்ததையும் (2 சாமு 11:1-5), பாவம் செய்துவிட்டு அவளது கணவனைஇரகசியமாகப் போர்க்களத்தில் கொன்றதையும் (2 சாமு 11:6-25) வன்மையாகக்கண்டிக்கிறார் நாத்தான்.அப்போது நாத்தான் கூறிய 'ஏழையும், செல்வந்தனும்' என்ற உவமைஉலகப் புகழ்பெற்றதாகும். வலியோன் முன் எளியோனுக்காகப் பரிந்து பேசுபவர்இறைவாக்கினர். நாத்தான் தன் மேல் சுமத்தப்பட்ட பணியை நன்முறையில்செய்து முடிக்கிறார்.உண்மை இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டு நடந்தஅரசர்கள் வாழ்வு பெற்றனர். நாடும் நலமுற்றது. நாத்தான் எவ்வளவுஅச்சமின்றிப் பேசுகிறார் பாருங்கள்! தாவீதின் ஏற்றுக் கொள்ளும்மனப்பான்மையும் பாராட்டிற்குரியது. 3.3. 1 அரச 1:5-40- சாலமோன் மாமன்னன் ஆக வழி செய்தவர் நாத்தான்(2 குறி 29:25-29)மாமன்னன் தாவீதுக்குப் பின் ஒன்றிணைந்த முடியரசைஆளவேண்டியது யார்? பதவிக்குப் போட்டிகள் இருந்தன. பத்சேபா வழியாகப்பிறந்த சாலமோனே ஆட்சிக்கு வரவேண்டும் எனக் கருத்துச் சொன்னவரும்,அதைச் செயல்படுத்தியவரும் நாத்தான் இறைவாக்கினரே. அவர் கருத்துஇறைவாக்காக மலர்ந்தது.மன்னன் அவையில் நாத்தான் இறைவாக்கினருக்குதான் எத்தனைசெல்வாக்கு! மேலே குறிப்பிட்ட பகுதிகள் மூன்றையும் நிறுத்திக் கவனமாகவாசித்தால் அரசவை இறைவாக்கினர் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும்.
4. அகியா அகியா என்ற பெயரை (ஆண்டவரின் சகோதரன்) பழைய ஏற்பாட்டில்9 பேர் கொண்டுள்ளனர். நாம் காணும் 'அகியா இறைவாக்கினர்' நாடு பிரியும்முன்னும், நாடு பிரிந்த பின்னும் வடநாட்டில் (இஸ்ரயேல் நாடு) சீலோ என்னும்திருத்தலத்தில் எரொபவாம் மன்னன் காலத்திலும் (கி.மு. 931-910)பணியாற்றியவர். இவரைப் பற்றிய விவிலியப் பகுதிகள்: 4.1. நாடு இரண்டாகப் பிரியும்: இதோ, அகியா இறைவாக்கினர் செயல்படுத்திய ஓர் அடையாளச்செயல்: 4.2. 'எரொபவாம் குலம் அழியும் 1 அரச 14:5-10 அந்நேரத்தில் ஆண்டவர் அகியாவிடம், #8220;இதோ!எரொபவாமின் மனைவி நோயுற்றிருக்கிற தன் மகனைப் பற்றி உன்னிடம் கேட்கவருகிறாள். நான் கூறும் வண்ணம் நீ அவளிடம் பேச வேண்டும். அவள் மாறுவேடத்தில் வருகிறாள்” என்றார். அவ்வாறே அவள் வாயிலில் நுழைந்தவுடன்,அவளது காலடி ஓசையைக் கேட்ட அகியா கூறியது: #8220;எரொபவாமின்மனைவியே! உள்ளே வா! மாறுவேடத்தில் நீ வருவது ஏன்? துயரமானசெய்தியையே உனக்குச் சொல்ல வேண்டும் என்பது எனக்கு வந்த கட்டளை.நீ எரொபவாமிடம் போய், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறுகூறுகின்றார்; மக்களிடையே நான் என்னை உயர்த்தினேன். என் மக்களாகியஇஸ்ரயேலருக்கு உன்னைத் தலைவனாக்கினேன். தாவீதின் வீட்டினின்றுஅரசைப் பிடுங்கி, அதை உன் கையில் ஒப்படைத்தேன். ஆயினும் என் ஊழியன்தாவீதைப் போல் நீ நடந்து கொள்ளவில்லை. அவன் என் விதிமுறைகளைக்கைக்கொண்டு, நான் காட்டிய வழியில் தன் முழு இதயத்தோடு நடந்து, என்பார்வையில் ஏற்புடையவற்றை மட்டுமே செய்தான். நீயோ அவ்வாறுசெய்யவில்லை. அது மட்டுமின்றி, உனக்கு முன் ஆட்சியில் இருந்தஎல்லாவற்றையும் விட நீ மிகுதியான தீமைகளைச் செய்துள்ளாய். நீ போய்வேற்றுத் தெய்வங்களை, வார்ப்புச் சிலைகளை உனக்கென உருவாக்கிக்கொண்டு என்னை ஒதுக்கித் தள்ளினாய்; எனக்கு சினமூட்டினாய். ஆகையால்,எரொபவாம் வீட்டுக்கு அழிவு வரும். இஸ்ரயேலில் அடிமையாகவோ,குடிமகனாகவோ உள்ள எரொபவாமின் ஆண் மக்கள் அனைவரையும் அழித்து விடுவேன். குப்பையை எரித்து ஒன்றும் இல்லாமல் ஆக்குவது போல்,எரொபவாமின் வீட்டை அறவே அழித்தொழிப்பேன். அவ்வாறே, அரச மகன் அபியா இறந்தான். குலமும் முழுக்கஅழிந்தது. இந்த இறைவாக்கினரும் வட நாட்டின் அரசியலில் மிகுந்த ஈடுபாடுகொண்டிருந்தார் என்பது தெளிவு.
5. செமாயா செமாயா (ஆண்டவர் கேட்டுக்கொண்டார்) என்ற பெயரில் இருஇறைவாக்கினர் உள்ளனர்.மன்னன் எரொபவாம் காலத்தில் (931-910) வடநாட்டில் வாழ்ந்து அகியாஇறைவாக்கினருடன் பணியாற்றியவர் ஒருவர். இன்னொருவர் தென் நாடுஅழியும் காலத்தில் இறைவாக்கினர் எரேமியா காலத்தில் தென் நாட்டில் போலிஇறைவாக்குப் பணியாற்றியவர் (எரே 29:24-32). மத அடிப்படையில் சீரழிந்துபோன வடநாட்டில் மன்னன் எரொபவாம்காலத்தில் வாழ்ந்த இறைவாக்கினர் செமாயா என்பவரைப் பற்றி இவண்காண்போம். இவரைப் பற்றிய விவிலியப் பகுதிகள்: அரசியல் சூழ்நிலை: 5.1. போர் வேண்டாம் 5.2. பாவத்திற்குத் தண்டனை 2 குறி 12:5-8 : இறைவாக்கினர் செமாயா சீசாக் அரசனுக்குப்பயந்தோடிய ரெகபெயாமிடமும் எருசலேமில் கூடியிருந்த மூப்பர்களிடமும் வந்துஅவர்களை நோக்கி 'ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என்னைபுறக்கணித்ததால் சீசாக்கின் கையில் பிடிபடும்படி நானும் உங்களைப்புறக்கணித்துவிட்டேன்” என்றார். அதை கேட்ட இஸ்ரயேல் தலைவர்களும்அரசனும் தங்களையே தாழ்த்தி, 'ஆண்டவர் நீதியுள்ளவர்' என்றனர். அவர்கள்தங்களையேத் தாழ்த்திக் கொண்டதைக் கண்டு ஆண்டவர் மீண்டும்செமாயாவிடம், "அவர்கள் தங்களையே தாழ்த்திக் கொண்டதால் அவர்களைநான் அழிக்க மாட்டேன். விரைவில் அவர்களுக்கு விடுதலை அளிப்பேன்; என்கடும் சினம் சீசாக்கின் வழியாக எருசலேம் மீது விழாது. ஆயினும் எனக்குஊழியம் செய்வதற்கும் மற்ற நாடுகளின் அரசர்களாக ஊழியம்செய்வதற்குமுள்ள வேறுபாட்டை உணரும் வண்ணம், அவர்கள் சீசாக்கின்அடிமைகளாக இருப்பார்கள்” என்றார். 5.3.2 குறி 12:15: தென் நாட்டு மன்னன் ரெகபெயாமின் அரசவையில் வரலாற்று குறிப்புஎழுதிய இருவருள் ஒருவர் இறைவாக்கினர் செமாயா எனச் சாட்சியம்பகர்கிறார் குறிப்பேட்டு ஆசிரியர். எனவே இவரும் அரசவை இறைவாக்கினரே!
6. இறையடியாரும் வயது முதிர்ந்த ஓர்இறைவாக்கினர் ஊர் பேர் அற்ற இந்த இறையடியார் தென்னாட்டைச் (யூதாவை)சார்ந்தவர்; வட நாட்டு முதல் அரசர் எரொபவாம் காலத்தில் (கி.மு. 931-911)ஒருமுறை வட நாட்டில், பெத்தேல் சென்று பணியாற்றியதாக அறிகிறோம்.எரொபவாம் மன்னர் பெத்தேல் கோவிலில் தூபம் காட்ட பீடத்தண்டையில் நிற்கையில் 'பலிபீடம் இடியும்' என்று அறிவித்தார். இதனால்சினமுற்று அவரைப் பிடிக்க அரசன் கை நீட்டியபோது அவனது கைமரத்துப்போயிற்று. மேலும் 'இறையடியார்' (கடவுளின் மனிதர்) அறிவித்ததுபோல்,பலிபீடமும் இழ்?தத hம். இறுதியில் அரசனது கை விளங்க வைத்தார் இவர். இவரைப் பற்றிய விவிலியப் பகுதிகள்: யூதாவிலிருந்து வட நாடு வந்திருந்த 'இறையடியார்' ஆண்டவர்அறிவித்தபடி அரசனால் அளிக்கப்பட்ட உணவை உண்ணாமலும் குடியாமலும்வேறு வழியாய்த் திரும்பிச் சென்றார். அப்போது வட நாட்டில் பெத்தேலில்வாழ்ந்த 'வயது முதிர்ந்த ஓர் இறைவாக்கினர்' அவரைத் தம்மிடத்திற்குஅழைக்க, கடவுள் வாக்கை மீண்டும் நினைத்து அவர் போகவில்லை.அப்போது பெத்தேலின் 'இறைவாக்கினர்' அவரைப் பார்த்து. 'உம்மைப்போல் நானும் இறைவாக்கினர்தான்; உணவருந்தி தண்ணீர் குடிக்க நீ அவனைஉன் வீட்டிற்க்கு அழைத்துக் கொண்டு போ' என்று ஆண்டவர் ஒரு வானதூதர்வாயிலாக எனக்குச் சொன்னார்' என்றார் ( 1 அர 13:18).'இறையடியாருக்கு' தனக்குக் கிடைத்த கடவுளுடைய வார்த்தையில்அவநம்பிக்கை ஏற்பட்டதோ? கடவுள் தன்னிடம் அறிவித்ததை மறந்துவிட்டு'ஓர் (போலி) இறைவாக்கினர்' தெரிவித்த ஏமாற்று மொழியை நம்பிவிட்டார்;அவரோடு சென்றார்; உண்டார்; அதன் பலன் யாதெனில் பின்னர் அவர்சிங்கத்தால் அடிக்கப்பட்டுச் செத்தார். நல்ல இறைவாக்கினரும் போலிஇறைவாக்கினரால் ஏமாற்றப்பட முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
7. இத்தோ சவுல், தாவீது, சாலமோன் அரசர்களின் 'ஒருங்கிணைந்த முடியரசு'முடிவு பெற்றபோது நாடு 'வட நாடு' (இஸ்ரயேல் நாடு) என்றும் 'தென்நாடு'(யூதா) என்றும் பிரிந்ததை (கி.மு. 931ஃ921) மீண்டும் நினைவிற்கொள்க.வட நாடு ஆண்டவரின் திருச்சட்டத்தை மீறி நடந்தது, பொற்கன்றுவழிபாட்டை ஆதரித்தது. தென் நாடு ஆண்டவரை எருசலேம் தேவாலயத்தில்போற்றியது. தென் நாட்டின் முதல் அரசன் ரெகபெயாம் அரசவையில்வரலாற்றுக் குறிப்பு எழுதிய ஒருவர் 'இத்தோ' என்பவர். இவரைப்பற்றிய விவிலியப் பகுதிகள்: குறிப்பேட்டு ஆசிரியர் இறைவாக்கினர் இத்தோவைத் திருக்காட்சியாளர் எனக் குறிப்பிடுகிறார். அவரைப்பற்றிய ஏனையச் செய்திகள் நமக்குவந்து சேரவில்லை. இத்தோவின் நூல்களைத் தாம் பார்த்ததாகவும், அதனைப்பயன்படுத்தியதாகவும், அதன் உதவியோடு யூதாவின் முதல் அரசன்ரெகபெயாம் பற்றி அரசவைக் குறிப்பு எழுதியதாகவும் குறிப்பேட்டு ஆசிரியர்கூறுகிறார்.தென் நாட்டின் இரண்டாவது அரசனான அபியாமைப் பற்றியும் சுருக்கிஎழுத இத்தோவின் ஆய்வேடு பயன்பட்டது (2 குறி 13:22) எனக் குறிப்பேட்டுஆசிரியர் சாட்சியம் பகர்கிறார்.இத்தோ எழுதிய ஏடு நம் கைக்கு வரவில்லை. எனவே, அவரும் நூல்பெறாத இறைவாக்கினர் வரிசையில் இடம்பெறுவது இயல்பே!
8. அனானி 'ஆண்டவர் கருணையுள்ளவர்' என்பதே அனானி என்ற பெயரின்உட்பொருளாகும். இவரைப்பற்றிய விவிலியக் குறிப்பு குறிப்பேடு நூலில் மட்டுமேஉள்ளது (2 குறி 16:1-10). இவர் திருக்காட்சியாளர் என அழைக்கப்படுகிறார்(2 குறி 16:7).இவரும் தென் நாட்டவர். அங்கு ஆட்சி செய்த மூன்றாவது அரசரானஆசாவின் (கி.மு. 911-870) காலத்தவர். தென் நாட்டு ஆசாவை எதிர்த்துவந்தான் வடநாட்டு மன்னன் பாசா. போரில் வெற்றி கிடைக்காது எனஎண்ணிய தென் நாட்டு அரசன் சீரிய மன்னனுக்கு பொன்னும் பொருளும்அனுப்பி அவனது உதவியைப் பெற்றுக் கொண்டான். எனவே இந்தப்போரிலிருந்து தப்பினான்.எனினும் யாவே கடவுளில் நம்பிக்கை வைக்காமல் வேற்று நாட்டுமன்னரில் நம்பிக்கை வைத்ததால் வேறு பல போர்கள் எழும் எனஅச்சுறுத்துகிறார் இறைவாக்கினர் அனானி.2 குறி 16:9 : #8220;உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்றுபார்க்கின்றன. அவர் தம்மை முழு மனத்துடன் நம்பும் அனைவர்க்கும் ஆற்றல்அளிக்கிறார். நீயோ இதன் மட்டில் மதியீனமாய் நடந்து கொண்டாய்; எனவேஇன்று முதல் நீ போர்களைச் சந்திக்க வேண்டும்” என்றார்.
9. அசரியா அசரியா (ஆண்டவர் உதவுகிறார்) என்ற பெயர் கொண்டவர்கள்பழைய ஏற்பாட்டில் 22 பேர் உள்ளனர்.இவரைப் பற்றிய விவிலியப் பகுதி : 2 குறி 15:1-7 ஆகும். இவர் ஒதேதின் மகன்; ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர் எனத்திருநூல் கூறுகின்றது. இவர் தென் நாட்டில் (யூதா) ஆசா அரசன் காலத்தில்(கி.மு. 911-870) இறைவாக்குப் பணியாற்றியவர். இவரும் அரசவைஇறைவாக்கினர் ஆவார். ஆசா அரசனது காலத்தில் எருசலேமிலும்,கிராமப்பகுதியிலும் மதச் சீர்திருத்தம் தேவைப்பட்டது. நாட்டுப்புறங்களில்சிலைகள் அகற்றப்பட வேண்டும். எருசலேம் கோவிலில் பலிபீடம் சீர்படுத்தப்படவேண்டும்; உடன்படிக்கை புதுப்பிக்கப்பட வேண்டும். விழா கொண்டாடப்படவேண்டும் என்ற சூழல் நிலவின.இவற்றில் ஆசா மன்னன் புதுத் தெம்புடன் ஈடுபட அவனுக்குத்தூண்டுதல் தந்தவர் அசரியா என்ற இறைவாக்கினர். இவர் ஆவியால்ஆட்கொள்ளப்பட்டு சொன்ன இறைவாக்காவது:2 குறி 15:2-4 : 'ஆசாவே, யூதா, பென்யமின் எல்லா மக்களே!கேளுங்கள். நீங்கள் ஆண்டவரை நாடினால், அவரைக் கண்டடைவீர்கள்; நீங்கள்அவரைப் புறக்கணித்தால், அவரால் நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள்.இஸ்ரயேல் நெடுங்காலமாக உண்மைக் கடவுளைப் போதிக்கும் குருக்களையும்திருச்சட்டத்தையும் கொண்டிருக்க வில்லை. எனினும், இஸ்ரயேலர் தங்கள்துன்பத்தில் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பினர்; அவ்வாறு அவர்கள்தேடியபொழுது அவரைக் கண்டு கொண்டனர்'அசரியா என்ற இறைவாக்கினர் சொல் நற்பலன் தந்தது. நாட்டில்சமயச் சீர்திருத்தம் ஏற்பட்டது. இறைவாக்கினர் நாட்டின் காவலர்கள்அன்றோ? அரசன் அவர்களை மதித்து நடந்தால், நாட்டில் நல்லதே நடக்கும்,நல்லொழுக்கம் சிறக்கும், வழிபாடும் பொலிவுறும் என்பதற்கு இது ஒரு சான்று.
10. ஏகூ ஏகூ ('அவரே யாவே', 'கடவுளே ஆண்டவர்') என்ற பெயர்கொண்டவர்கள் ஐவர் பழைய ஏற்பாட்டில் உள்ளனர். அதில் ஒருவர் அரசர்;ஒருவர் இறைவாக்கினர். இந்த இறைவாக்கினர் வாழ்ந்த நாடு வட நாடாகியஇஸ்ரயேல் நாடு ஆகும். இவர் வாழ்ந்த காலம் மன்னன் பாசாவின் காலம் (கி.மு.909-886). இவரைப் பற்றிய விவிலியப் பகுதிகள் இவர் அனானீயின் என்பவரின் மகன்.இவரது இளமை வாழ்க்கை பற்றி நமக்குஅதிகம் தெரியாது. 10.1. இவர் வடநாட்டின் பாசாஅரசனுக்கு எதிராக அச்சுறுத்தும் இறைவாக்கு அளித்தவர்.1 அர 16:1-4 : பாசாவுக்கு எதிராகஅனாருநுயின் மகனான ஏகூவுக்குஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது;"தூசிக்கு நிகரான உன்னை நான்உயர்த்தி, என் மக்களாகிய இஸ்ரயேலுக்குத் தலைவனாக ஏற்படுத்தினேன்.நீயோ எரொபவாமின் வழிநடந்து, என்மக்களாகிய இஸ்ரயேலர் பாவம் செய்யக்காரணமாய் இருந்து, அவர்களுடைய பாவங்களால் எனக்குச் சினமூட்டினாய்.எனவே, இதோ! நான் பாசாவையும் அவன் வீட்டையும் முற்றிலும்அழிக்கப்போகிறேன்”.இவ்வாறு உண்மையைச் சொன்னதால் இவருக்குக் கிடைத்த பரிசுமரணம் (1 அரச 16:7). அரசன் சினம் கொண்டு அனாருநுயின் மகன் ஏகூஎன்ற இறைவாக்கினரைக் கொலை செய்தான்.ஆபத்து இருந்தும் உண்மையைச் சொல்பவர் உண்மை இறைவாக்கினர்அல்லவா? ஏகூ இறைவாக்கினரும் உண்மையைச் சொல்லி அதற்காகஉயிரைக் கொடுத்தார். இறைவாக்கினர் சொல்வது நடக்கும். ஏகூசொன்னபடியே யாவும் நடந்தன.பாசாவிடம் அறிவித்த அழிவுச் செய்தி அம்மன்னனின் மகன் ஏலாஎன்பவனின் காலத்தில் நிறைவேறியது. மன்னன் ஏலாவின் படைத்தலைவன்சாம்பரி அவரைக் குடிபோதையில் இருக்கும் போது கொன்றதால் 2 வருடத்தில்அவன் ஆட்சி முற்றுப் பெற்றது. மேலும் பாசா ஏலா இவர்களின் குடும்பமும்அழிக்கப்பட்டது. வாசிக்க: 1 அர 16:12-13. 10.2. குறிப்பேட்டு ஆசிரியர் ஏகூ இறைவாக்கினரை யூதா நாட்டுயோசபாத்து அரசனது வாழ்க்கையோடும் இணைக்கிறார் (2 குறி 19:2). வடநாட்டு ஆகாபு மன்னனும் தென் நாட்டு யோசபாத்தும் நட்புக் கொண்டாடிகலாத் நாட்டு ராமோத்தின்மேல் படையெடுத்துச் சென்றபோது ஆகாபு கொலைசெய்யப்படுகின்றான். யோசபாத்து தப்பி எருசலேமிலுள்ள தன் வீட்டுக்குச்சமாதானமாய்த் திரும்பி வந்த போது அனாருநுயின் மகன் ஏகூ என்றதிருக்காட்சியாளர் அவனுக்கு எதிரே வந்து :'நீர் தீயவனுக்குத் துணை நிற்கலாமா? ஆண்டவரை வெறுப்பவனோடுநட்புக் கொள்ளலாமா? அதனால் ஆண்டவரின் சினம் உம்மேல் விழ இருந்தது.ஆயினும், நீர் சில நற்செயல்கள் புரிந்துள்ளீர்; அதாவது அசேராக் கம்பங்களைநாட்டிலிருந்து எரித்து அகற்றிருநுர்; கடவுளை நாடுவதில் உம் இதயம்நிலையாயிருந்தது” என்று கூறினார் ( 2 குறி 19:1-3).10.3. மேலும் ஏகூவின் நூல்களை (இஸ்ரயேல் அரசர் வரலாறு) பின்பற்றி, அதனைச் சுருக்கி பாசா மன்னனின் வாழ்வைத் தாம் எழுதியதாகக் குறிப்பேட்டு ஆசிரியர் குறிப்பிடுகிறார் (2 குறி 20:34). ஆயினும் ஏகூ இறைவாக்கினர் ஏடு நம் கைக்கு வந்து சேரவில்லை. எனவே ஏகூ நூல் பெறாதஇறைவாக்கினர் வரிசையில் இடம் பெறுகிறார். ஏகூ அரசவை இறைவாக்கினர்;உண்மை இறைவாக்கினர்; அவர் வரலாற்றை திசை திருப்பியவர் என்பதுதெளிவு.
11. யாகசியேல் யாகசியேல் இறைவாக்கினர் தென் நாட்டவர். லேவி குலத்தவர். இவர்தந்தை சக்கரியர் யோசபாத்து அரசன் காலத்தில் (கி.மு. 870 -848) தென்நாட்டில் பணியாற்றியவர். ஆண்டவரின் ஆவியைப் பெற்றவர். இவரைப் பற்றிய விவிலியப் பகுதி : 2 குறி 20:15-17 "யூதா, எருசலேம் வாழ் மக்களே! அரசே யோசபாத்து!கவனமாய்க் கேளுங்கள், ஆண்டவர் உங்களுக்குக் கூறுவது இதுவே; இப்பெரும்படையினரைக் கண்டு நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; நிலை குலையவும்வேண்டாம். இப்போர் உங்களுடையதல்ல, கடவுளுடையது. நீங்கள்அவர்களுக்கு எதிராக நாளை படையெடுத்துச் செல்லுங்கள். அவர்கள் சீஸ்மலைச்சரிவின் வழியாக வருவார்கள்; நீங்கள் போய் எருசவேல் பாலைநிலத்திற்குஎதிரேயுள்ள பள்ளத்தாக்கின் எல்லையில் அவர்களைச் சந்திப்பீர்கள். அங்கேநீங்கள் போரிட வேண்டியதில்லை; அணிவகுத்து நின்றாலே போதும். யூதாவே!எருசலேமே! உங்கள் சார்பாக ஆண்டவர் கொள்ளும் வெற்றியைக் காண்பீர்கள்!எனவே, அஞ்சாமலும் நிலைகுலையாமலும் இருங்கள். நாளை அவர்களைநோக்கிச் செல்லுங்கள். ஆண்டவர் உங்களோடு இருப்பார்” என்றார்.
12. எலியேசர் எலியேசர் என்பதற்கு ' இறைவனே எனக்குதவி' என்று பொருள்.பழைய ஏற்பாட்டில் ஒன்பது பேருக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.இவர்களுள் முக்கியமான ஒருவர் இறைவாக்கினரான எலியேசர் ஆவார். இவரைப் பற்றிய விவிலியப் பகுதி: 2 குறி 20:35-37 இவரும் யோசபாத்து என்னும் தென்னாட்டு அரசன் காலத்தில் (கி.மு.870-848) இறைவாக்குப் பணியாற்றியவர். மாரேசா ஊரினர்; தோதவாஎனபவரின் மகன்.தென்னாட்டு அரசன் யோசபாத்து வடநாட்டு தீய அரசன் அகசியாஎன்பவனுடன் உடன்படிக்கை செய்ததும், அவனோடு சேர்ந்து கப்பல்கள்கட்டியதும் தவறு என எலியேசர் இறைவாக்கினர் உணர்த்தினார்.2 குறி 20:37 : மாரேசா ஊரானாகிய தோதவாவின் மகன் எலியேசர்யோசபாத்தை நோக்கி, 'நீர் அகசியாவோடு சேர்ந்து கொண்டமையால்,ஆண்டவர் உம் திட்டங்களை அழித்துவிடுவார்” என்று இறைவாக்குஉரைத்தார்.எலியேசர் கூறியபடியே கூட்டுச் சேர்ந்து அரசர்கள் கப்பல் கட்டியதுபயனற்றுப்போயிற்று. பயணத்தில் கப்பல்கள் உடைந்து போயின!
13. மீக்காயா மீக்காயா (ஆண்டவர்க்கு நிகர் யார்?) வட நாடாகிய இஸ்ரயேல்நாட்டைச் சார்ந்தவர். இம்லா இவரது தந்தை ஆவார்.இவர் வாழ்ந்தது ஆகாபு மன்னனின் காலம் (கி.மு. 874-853). இவர்அரசவையோடு தொடர்புகொண்டவர். இவரைப் பற்றிய விவிலியப் பகுதிகள்: 13.1. வடநாட்டு ஆகாபு அரசனும் தென்நாட்டு யோசபாத்தும் சேர்ந்துஇராமோத்தை எதிர்த்துச் சென்ற அரமேயப் போரில் ஏற்படவிருக்கும் ஆகாபின்தோல்வி, ஆகாபின் மரணம் பற்றி முன்னறிவித்தவர் இவரே. இவர் 'தீமையைஎடுத்துக் கூறும் இறைவாக்கினர் ' என அரசனால் அறிமுகம் செய்யப்படுகிறார்.தோல்வி, அழிவு போன்றவற்றை அறிவிப்பது அரசருடைய காதுகளுக்குஇனிமையானதல்ல. ஆனால் நல்ல இறைவாக்கினர் தோல்வியை, அழிவைமறைக்காமல் துணிந்து சொல்ல வேண்டுமே! இந்தத் துணிவு நல்லஇறைவாக்குக்கு உரைகல் என்கிறார் எரேமியா (28:6-9).அரசவை இறைவாக்கினர் 400 பேர் தப்பாக வெற்றி என்று அறிவித்துஅரசனுக்குத் தூபமிடுவதை 'பொய் ஆவியின் வேலை' என்று விளக்குகிறார்மீக்காயர் போலி இறைவாக்கினரை நன்றாகக் குத்திப் பேசுகிறார்! 13.2. உண்மை சொன்ன மீக்காயாவைப் போலி இறைவாக்கினர்தலைவன் செதேக்கியா கன்னத்தில் அறைந்தான்: ஆகாபு மன்னன் அவரைச்சிறைப்படுத்தினான். தான் வெற்றியோடு திரும்பி வரும் வரை சிறையில் அவரைஅடைக்க உத்தரவிடுகிறான். ஆனால் அரசன் உயிரோடு திரும்பி வரவில்லை!பின்னர் இந்த இறைவாக்கினருக்கு என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை.அரசவையில் 400 பேர் சொன்னாலும் அது இறைவனின் செய்திஇல்லையெனில் அது பொய்த்துவிடும். அரசவையில் ஒருவர் சொன்னாலும்,அது இறைவாக்கு எனில், அது நடந்து விடும்.
14. எலியா எலியா இறைவாக்கினர் திஸ்பே ஊரினர். அவரது இளமைபற்றிநாமறியோம். எலியா என்றால் 'என் கடவுள் யாவே' என்று பொருள். கடவுள்ஒருவரே; 'அந்த ஒருவர் யாவே' என எலியா கார்மேல் மலையில் போட்டியிட்டுநிரூயஅp;பித்துக் காட்டவில்லையா? உண்மை இறைவாக்கினர் ஒரே இறைவனைச்சுட்டிக்காட்டுபவர்.
வட நாடாகிய இஸ்ரயேலில், ஆகாபு (கி.மு. 874-853) அகசியா (கி.மு.853-852) என்ற தெய்வப் பற்றற்ற, நீதி நேர்மையற்ற அரசர்கள் காலத்தில்பணியாற்றியவர் எலியா. இதனால்தான் எலியா ஒரு தெய்வக் கொள்கைக்காகப்போராடியதுபோலவே, நீதிக்காகப் போராடி நாபோத் என்ற எளியோனுக்காகப்பரிந்து பேசவேண்டியிருந்தது. 'நீதியற்ற இந்த நாட்டிலே மழை பெய்யாது' என்றதிடீர் அறிவிப்புடன் எலியாவின் வரலாறு தொடங்குகின்றது. இவரது காலம்பாகாலின் இறைவாக்கினர்கள் மலிந்திருந்த காலம். அரசர் ஆகாபுவின்மனைவி ஈசபெல் என்பவள் ஆதரவில் வாழ்ந்தவர்கள் இவர்கள். இதனால்உண்மை இறைவாக்கினர் எலியாவுக்கு மிகுந்த தொல்லை ஏற்பட்டது.எலியா, 'இறைவாக்கினர் சங்கத்தோடு' தொடர்பு கொண்டவர். எனினும்இறைவனிடமிருந்து சிறப்பு அழைப்பு பெற்றவர்.அன்னிய தெய்வ பக்தியை அழிக்க ஒரே வழி ஆகாபு குலம்அழிவதுதான் எனப் படிப்படியாக உணர்ந்தவர் இவர்.இவர் வாழ்க்கைப் பகுதியில் ஆறு நிகழ்ச்சிக் கோர்வைகள் உள்ளன.இந்த ஆறு சுற்று வட்டங்களில் ஆறு முறை எலியா பணிக்கெனப் புறப்படுவதும்பணியை முடிப்பதும் குறிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளுக்கிடையில் எட்டுப்புதுமைகளும் செருகப்பட்டுள்ளதை காண்க. ஆறு நிகழ்ச்சி வட்டங்களும் எட்டுப் புதுமைகளும் நிகழ்ச்சி வட்டம் - 1: 1அர 17:1 நாட்டில் 3 வருடம் மழை பெய்யாதுஎன்பது முன்னறிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சி வட்டம் - 2: 1 அர 18:20-40 கார்மேல் மலையில் போட்டி. நிகழ்ச்சி வட்டம் - 3: எலியா செய்த பயணம்; 1 அர 19:1-14 ஈசபெல் அரசிக்குமிகவும் பயந்து எலியா ஓரேபு மலைக்கு ஓடினார் . இறைவனின் காட்சி 1 அர 19:9-13 (புதுமை எண் 6). நிகழ்ச்சி வட்டம் - 4: 1 அர 19:19-21 எலிசா மேல் தம் போர்வையை போர்த்திஅவரை இறைவாக்கினராக அழைத்தல். நிகழ்ச்சி வட்டம் - 5: 1 அர 21:1-29 நாபோத் என்பவனைஆகாபு அரசன் கொன்று அவனது தோட்டத்தைக்கவர்ந்ததால் அந்த அநீதியை முன்னிட்டு ஆகாபு அரச மரபுஅழியும் என முன்னறிவித்தல் ( 2 அர 10:11).நிகழ்ச்சி வட்டம் - 6: 2 அர 1:1-27 ஆகாபின் மகன் அகசியாஅரசன் தன் வாழ்வு, மரணம்பற்றி கடவுளிடம் விசாரிக்காமல்பாகால் செபூபு என்னும் தெய்வத்திடம் விசாரித்ததால் அவன்சாக வேண்டும்.50 பேர் அடங்கிய இரண்டு குழுவினர்மேல் விண்ணிலிருந்துஅற்புதமாக நெருப்பு விழுந்து அவர்களை அழித்தது 2 அர1:5-18.(புதுமை எண் 7). பெத்தல். . . எரிக்கோ. . . வழி சென்ற எலியா யோர்தானை இரண்டாகப்பிளந்து கடந்து செல்லல். எலியாவும் எலிசாவும் நிற்கும்போது அக்கினிக்குதிரைகள் பூட்டிய ரதம் எலியாவை மேலே எடுத்துக் கொண்டது. எலியாவின்மேலாடை விழ அதை எலிசா எடுத்துக்கொண்டார் (2 அர 2:1-18; மத் 2:58;சீராக் 48:9). (புதுமை எண் 8).
15. எலிசா எலியா இறைவாக்கினரோடு சேர்ந்தும் அவருக்குப் பின்னும் வடநாட்டில்பணிசெய்தவர் எலிசா. இவரது பணி ஐந்து அரசர்களின் காலத்திற்குவிரிந்திருந்தது.
அகசியா, யோராம் அரசர்களின் காலத்தில் எலியா இறைவாக்கினருடன் எலிசா கொண்டிருந்த தொடர்பை ஏற்கெனவே கண்டோம். சான்றாக,1 அர 19:19-21 எலிசா இறைவாக்கினராக அழைக்கப்படல்; எலிசாவின் வாழ்க்கை வட்டம் மேலும் ஒரு சில நிகழ்ச்சிகள் இவை யாவும் தொடர்பற்ற நிகழ்ச்சிப் பகுதிகளாக உள்ளன. எலிசா கோடிஅற்புதர் அந்தோனியார்போல் தோன்றுகிறார்! எலியாவைவிட அதிக அற்புதம்செய்வதாகக் காட்டப்படுகிறார். எலிசாவின் புதுமைகள் பல இயேசுவின்அருங்குறிகளை நினைவூட்டுகின்றன. நீரை இரசமாக்குதல்; உயிர்கொடுத்தல்;அப்பம் பலுகுதல்; தொழுநோயைக் குணமாக்குதல்; கடலில் மிதந்து நடத்தல் .. . இன்னும் பல.எலிசா இறைவாக்கினர் ஒரு சில அரசியல் திருப்பங்களில் தொடர்புகொண்டவராகக் காட்டப்படுகிறார்; அவரது அரசியல் ஆலோசனை பயன்உள்ளதாக அமைகிறது.
16. யோனா இந்த யோனா வட நாட்டவர்; கத்கேப்பரை சேர்ந்த அமித்தாயின் மகன்.இரண்டாம் எரொபவாம் (கி.மு. 783-743) அரசன் காலத்தில் பணி செய்தவர்.ஆமோஸ், ஓசேயா போன்ற இறைவாக்கினர் வாழ்ந்த காலமும் அதுவே. சமய,சமூக, அரசியல் சீரழிவு நிறைந்த காலக்கட்டம் அது.இவரைப் பற்றிய விவிலியப் பகுதி: 2 அர 14:25-27. ஆண்டவர் யோனா வழியாய் அறிவித்தது போல, அரசன் எரொபவாம்'அமாத்து முதல் அராபாத் கடல்வரை இஸ்ரயேலின் எல்லைகளைஇணைத்துக்கொண்டான்' என நாம் அறிகிறோம். யோனாவும் அரசவைஇறைவாக்கினரே!
17. ஒதேது ஒதேது இறைவாக்கினர் தென்னக அரசன் ஆக்காசின் ஆட்சிக்காலத்தில் (கி.மு. 736-716) வாழ்ந்து இறைபணியாற்றியவர்; இந்த ஆக்காசின்காலத்தில் வாழ்ந்த வேறு இரு இறைவாக்கினர்கள் இலக்கியப்பணி விட்டுச்சென்ற எசாயாவும், நூல் பெறா இறைவாக்கினர் மீக்காயாவும் ஆவர்! இவரைப் பற்றிய விவிலியப் பகுதி: சிரியாவுக்கும் இஸ்ரயேலுக்கும் தென்நாட்டு அரசன் ஆக்காசு நாள்களில் ஒதேதுதோன்றுகிறார். தென் நாட்டுக்காகப் பரிந்துபேசுகிறார். 2 குறி 28:9-11 அங்கே ஓதேது என்பவர்ஆண்டவரின் இறைவாக்கினராக இருந்தார்.சமாரியாவுக்குள் வந்திருந்த போர்ப்படைக்குமுன் அவர் சென்று, அவர்களை நோக்கி,"இதோ உங்கள் மூதாதையர்களின் கடவுளானஆண்டவர் யூதாவின் மேல் சினம்கொண்டு,அவர்களை உங்களது கையில் ஒப்படைத்தார். நீங்களோ அவர்களைவெஞ்சினத்தோடு கொன்றீர்கள். அது வான்மட்டும் எட்டியுள்ளது. ஆதலால்இப்பொழுது, யூதா எருசலேம் மக்களை உங்களுக்கு ஆண், பெண்அடிமைகளாகக் கீழ்ப்படுத்த வேண்டுமென்று திட்டமிடுகிறீர்கள்; ஆனால்உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு முன் நீங்களும் குற்றவாளிகள்அல்லரோ? ஆதலால், இப்பொழுது எனக்குச் செவி கொடுங்கள், ஆண்டவரின்கோபக்கனல் உங்கள் மேலும் இருப்பதால், உங்கள் சகோதரரிடமிருந்து நீங்கள்சிறைப்பிடித்து வந்தோரைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்” என்றார்.ஒதேது அறிவித்த இறைவாக்குக்கு வடநாட்டுப் படையினர் பணிந்தனர்.தென் நாட்டுக் கைதிகள் நாடு திரும்பினர்.என்னே இறைவாக்கினரின் பணிகள்!
18. குல்தா பெண்களும் இறைவாக்கினர் பணி செய்ததற்குச் சிறந்த சான்று குல்தாஎன்ற பெண்மணி ஆவார். இவரைப் பற்றிய விவிலியப் பகுதி: குல்தா தென் நாட்டவர்; எருசலேமில் குடியிருந்தவர்; எருசலேம் கோவில்ஆடைகளைப் மேற்பார்த்து வந்த தோக்காத் என்பவரின் மருமகள். தென்நாட்டில் நல்ல அரசர் எனப் பெயர்பெற்ற யோசியாசின் காலத்தவர் (கி.மு. 640-609). சமய சீரழிவினாலும், சமுகச் சீர்கேட்டினாலும் வடநாடு கி.மு. 721இல்அழிந்தொழிந்ததைத் தென்நாடு கண்டது. புனர்வாழ்வு ஏற்படாவிட்டால் தன்நாட்டுக்கும் இதே கதி நிகழலாம்.எனவே சமயச் சீர்திருத்தம் தேவைப்பட்டது. சமயச் சீர்திருத்தம்தொடங்கியவன் யோசியா மன்னன். (2 அர 22, 23) அவனுக்குப் பக்கபலமாகப்பல இறை வாக்கினர் இருந்தனர். குறிப்பாக செப்பனியா, எரேமியா, குல்தாபோன்றோர்.இந்தச் சீர்திருத்தத்திற்குத் தூண்டுகோலாக இருந்தது கி.மு. 622 -இல் எருசலேம் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நூல் ஆகும். அதுவேஇணைச்சட்ட நூல். இணைச்சட்ட நூல் வழியில் யோசியாக் காலத்தில்செய்யப்பட்ட மதச்சீர்த்திருத்தம் மாபெரும் சாதனையாகும்; ஆயினும் பலருக்குஅது வேதனையாக அமைந்தது.ஒரே கடவுளுக்கு ஒரே கோயில் என்ற கொள்கை சிறப்பிடம் பெற்றது.மேட்டுக் கோயில்கள் பல இடிக்கப்பட்டன. சிலைகள் தகர்க்கப்பட்டன.அங்குள்ள அர்ச்சகர்கள் கொல்லப்பட்டனர் அல்லது பணி இழந்தனர். இன்னும்பல கோயில்களை நம்பி தொழில் செய்தவர் வேலை இழந்தனர். ஒரே கோயிலான எருசலேம் திருக்கோயில் சிறப்பிடம் பெற்றது; திருவிழாக் கொண்டாட்டங்கள் அங்கே உயிரூயஅp;ட்டம் பெற்றன. பாஸ்கா விழா புதுப்பிக்கப்பட்டது கோவிலில் 622 -இல் கண்டெடுக்கப்பட்ட திருச்சட்டம் (இணைச்சட்டம்) வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டது. ஆண்டவரை முழு இதயத்துடன் அன்புசெய்வதாக உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டது. இவ்வாறு ஒரு பக்கம் சாதனை;இன்னொரு பக்கம் வேதனை.இந்தத் துணிச்சலான மதச்சீர்திருத்தக் காலத்தில் யோசியாமன்னனுக்குப் பக்கபலமாக நின்றவர் குல்தா என்ற பெண் இறைவாக்கினர்என்பது குறிப்பிடத்தக்கது.குரு இல்க்கியாவும் ஏனையோரும் அவளிடம் விசாரிக்கச் சென்றதாகஅறிகிறோம். அவர்களை அனுப்பிவைத்தவர் அரசன். எனவே குல்தா நகரத்தில்சிறப்பிடம் பெற்றவராக இருந்திருக்கவேண்டும்.அவர் கூறிய இறைவாக்கின் ஒரு பகுதி 2 அர 22:18-20.எதிர்ப்பு ஏற்பட்டாலும், மதச்சீர்திருத்தம் தேவை என்பதை குல்தாதெரிவித்தார். இல்லையெனில், நாடு முழுக்க அழிந்து போகும் எனஎச்சரித்தார். அவர் வாக்குக்கு மதிப்பு அளிக்கப்பட்டது.
19. உரியா உரியா இறைவாக்கினர்பற்றி 1, 2 அரசர், 1, 2 குறிப்பேடு நூல்கள் எதுவும்கூறவில்லை. மாறாக 'எரேமியா நூல்' இந்த இறைவாக்கினரை நமக்குஅறிமுகம் செய்து வைக்கிறது. வாசிக்க: எரே 26:20-24. உரியா இறைவாக்கினர் தென்னாட்டு யோயாக்கிம்மன்னன் காலத்தவர் (கி.மு. 609-598). தென்னாடுஅழிந்துவிட இன்னும் ஒரு சில வருடங்களே உள்ளன.இவர் கிரியத்து என்னும் ஊரைச் சார்ந்தவர். இவரதுதந்தை செமாய் ஆவார். எரேமியாவின் இறைவாக்குப்பணிக்கு இணையாக இவரும் பணி செய்தார். நல்லஅரசன் காலத்தில் குல்தா அறிவித்த செய்தியையேஇவரும் அறிவித்தார். ஆனால் யோயாக்கிம் மன்னன்கொடியவன். எரேமியாவின் உயிருக்கு ஆபத்து இருந்ததுபோலவே இவருக்கும் ஏற்பட்டது.எரே 26:20-23-உரியா எரேமியா சொன்னவார்த்தைகளைப் போலவே சொல்லி, இப்பட்டணத்திற்கும் இந்நாட்டுக்கும்விரோதமாய் இரைவாக் குரைத்தார். யோயாக்கிம் அரசனும் தலைவர்களும்போர் வீரர்கள் அனைவரும் அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டார்கள்.அரசன் அவரைக் கொல்லத் தேடினான். ஆனால் உரியா அதைக் கேட்டுஅஞ்சி எகிப்துக்குத் தப்பி ஓடினார். யோயாக்கிம் அரசன் அக்போர்என்பவனின் மகன் எல்னாத்தானையும், அவனோடு வேறு சிலரையும்எகிப்துக்கு அனுப்பினான். அவர்கள் எகிப்திலிருந்து உரியாவைப் பிடித்துவந்துயோயாக்கிம் அரசன்முன் விட்டார்கள். அவன் அவரை வாளால் கொன்றுஉடலைப் பொதுமக்கள் புதைக் கப்படும் இடத்திலே எறிந்துவிட்டான்.எரேமியா, உரியா போன்ற இறைவாக்கினருக்கு அரசனும் அவையோரும் பணியாததால்தான் நாடு இத்துனை விரைவில் அழிந்தது (கி.மு.587இல்). முடிவுரை ( அ) எண்ணிக்கை: தம் பெயரில் நூல் பெறாத முக்கியமானஇறைவாக்கினர் இத்தனை பேர் விவிலியத்தில் இடம் பெறுவது நம்மைவியக்கவைக்கிறது. ஒரு சிலர் நூல் எழுதியவரே ஆவர். ஆனால் அதுநம்மிடம் வந்து சேரவில்லை. ( ஆ) முக்கியத்துவம்: எழுதிய இறைவாக்கினர்களை நாம் பொதுவாகவாசிப்பதால், எழுதாதவர்களை மறப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆயினும்இவர்களும் மிக முக்கியமானவர்கள்! இவர்களும் தங்கள் அழைப்பைமுன்னிட்டு தியாகம் (உயிர்த்தியாகம்கூட) செய்திருக்கிறார்கள்(அனானியா, மீக்காயா, எலியா, உரியா). ( இ) பெண்களுக்கு இடம்: பெரும் பணி செய்து மதிப்போடு வாழ்ந்த பெண்இறைவாக்கினர் இருந்தனர் என்பது நம் உள்ளத்தைக் கொள்ளைகொள்கிறது. பெண்களுக்கும் இறைவாக்குப் பணியில் இடம் உண்டு(குல்தா). ( ஈ) சொல், அடையாளச் செயல்: ஏனைய இறைவாக்கினரைப் போலவேஇவர்களும் 'சொல்லாலும்', 'அடையாளச் செயலாலும்'இறைவிருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள் (அகியா). ( உ) அரசியல் ஈடுபாடு: நூல் விட்டுச் செல்லாத இறைவாக்கினர் பலர்அரசனோடும் அரசவையோடும் தொடர்புகொண்டவர்கள். அரசியல்திருப்பங்களை அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். வரலாற்றைப்படைத்துள்ளார்கள்; நாடு பிரிதல் - போர் புரிதல் - போர் தவிர்த்தல் -அரசனை ஏற்படுத்தல் - அரசாட்சியைக் கவிழ்த்தல் - அரசகுலத்தைஅழித்தல். . . இவ்வாறு எத்தனை எத்தனையோ ஈடுபாடுகள்! சாமுவேல்,காது, நாத்தான், அகியா, செமாயா, அனானியா, ஏகூ, யாகாசியேல்,எலியேசர், மீக்காயா, எலியா, எலிசா, யோனா, ஒதேது, உரியா. . .ஆகியோரை நினைவிற் கொள்க. ( ஊ) மெசியானிசம்: ஏனைய இறைவாக்கினரைவிடச் சிறப்பாகத் தாவீதுகுல மெசியாவை முன்மொழிந்தவர் யார்? நூல் பெறாத இறைவாக்கினர்அல்லவா (நாத்தான்)! ( எ) இயேசுவின் பிரதிபலிப்பு: நூல் பெறாத இறைவாக்கினர் ஒரு சிலர்இயேசுவின் பணிவாழ்வையும், அவரது அருங்குறிகளையும்பிரதிபலிப்பது தெளிவு (எலியா, எலிசா). ( ஏ) பெயர்ப் பொருத்தம்: நல்ல இறைவாக்கினருக்கு அளிக்கப்பட்டபெயர்கள் அனைத்தும் இந்த இறைவாக்கினருக்கும் பொருந்துகிறது.ஆனால் 'கடவுளின் மனிதர்', 'ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்','திருக்காட்சியாளர்' போன்ற ஒரு சில பெயர்களே இவர்களுக்குப்பயன்படுத்தப்படுகின்றன. ( ஐ) ஏமாற்றம்: (பொய்) இறைவாக்கினரால் (உண்மை) இறைவாக்கினர்ஏமாற்றப்படுவது நமக்கு வியப்பையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.ஆயினும் இப்படியும் ஒன்று வரலாற்றில் நடந்தது! (இறையடியாரும் ஒருவயது முதிர்ந்த இறைவாக்கினரும்). ( ஒ) சமயச் சீர்திருத்தம்: மதச் சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டிகள் இந்தஇறைவாக்கினர் எனக் கண்டோம் (அகியா, அசரியா, எலியா, குல்தா). ( ஓ) நீதிப் போராட்டம்: நீதிக்காகப் போராடும் இறைவாக்கினரைப் பற்றிஇன்றைய மக்கள் அடிக்கடி பேசிக்கொள்கிறார்கள். நூல் பெறாத இறைவாக்கினரும் நீதிக்காக நின்றவர் அன்றோ? (நாத்தான், எலியா . . ). -------------------------------------------------------------------- ---------------- ------ --
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||