புனித பவுலின் கடிதங்கள் பேரருள்திரு. வ. மரியதாசன் விவிலிய அன்பர்களே, கிறிஸ்தவர்களைத் தொலைப்பதற்காக யூதத் தலைவர்களின்அனுமதியுடன், தமஸ்கு சாலையில்பயணம் செய்த பவுல் (திப 9:1) அதேகிறிஸ்துவின்தூதுவராக அழைக்கப்படுகிறார். இது ஏதோ திடீரெனஏற்பட்டகடவுளின்அழைப்புஎன்றுசொல்லிவிடமுடியாது. பவுல்தன்தாயின்வயிற்றில் இருந்தபோதே கடவுளின் அருளால் நற்செய்தியின் பணியாளராகஅழைக்கப்பட்டிருந்தார்(கலா15: 1).தனது அழைப்பின் மேன்மையை நன்குஉணர்ந்த பவுல், "நற்செய்தியைஅறிவிக்கவில்லையெனில் ஐயோ எனக்குக்கேடு”(1கொரி9:16) என்றுகூறும்அளவுக்குத் தனது நற்செய்திப்பணியை கி.பி43 முதல் 63 வரையிலும ;தீவிரமாகஆற்றினார்.புனிதப் பவுலின ;நற்செய்திப்பணியின் காரணமாக இரண்டு முக்கியமானதிருப்புமுனைகள் திருச்சபையில் உருவாயின.முதலாவது, பிறஇனத்தவரிடையே தலத்திருச்சபைகள் உருவாயின.இரண்டாவது, திருச்சபையின் இறையியல் போதனைகளை விளக்கிக்கூறும்மடல்கள ;எழுந்தன.திருச்சபையில் இதுவரை யாருமே ஆற்றியிராத அளப்பரியப் பணியைபுனித பவுல் தனது குறுகிய கால தூதுரைப் பணியில் செய்து முடித்தார்.இருப்பினும் அவர் இறுமாப்புக்கொள்ளவில்லை. "கிறிஸ்து இயேசுஎன்னைஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்துஓடுகிறேன்” (பிலி 3:12) என்று தாழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் தமதுவாழ்க்கைப்பயணத்தைத்தொடர்ந்து, இளந்திருச்சபையின்இருதூண்களில்ஒருவராகத்திகழ்ந்து(மற்றவர் புனிதபேதுரு), மறைசாட்சியாகதமதுஉயிரைநீத்தார்.புனித பவுல் எழுதிய மடல்களின் சுருக்கத்தை இங்கே தெளிவாகத்தருகிறார்பேரருள் திரு. வ. மரியதாசன்அவர்கள். அவர்களுக்கு எனதுநன்றிஉரித்தாகுக. இறைவார்த்தைப் பணியில் பொருளடக்கம்
1. திருமுகங்கள் "திருமுகம்” (கடிதம், மடல்) என்பது இலக்கிய வகைகளுள்ஒன்று.புதிய ஏற்பாட்டின் 27 நூல்களில் 21 நூல்கள் திருமுகங்கள் எனஅறிவோம். திருவெளிப்பாடுகூட ஏழுசபைகளுக்குஅனுப்பப்பட்ட கடிதம்வடிவையே பெற்றுள்ளது!பழைய ஏற்பாட்டை நாம் வாசிக்கும்போது அங்கும்திருமுகங்களைப் பார்க்கிறோம். தாவீது யோவானுக்கு எழுதிய கடிதம் (2சாமு 11 : 14-15); ஈசபேல் அரசி எழுதிய குற்றச்சாட்டுக் கடிதங்கள் (1 அர21:8-10); சிரியா அரசன்எழுதியகடிதம்(2 அர 5:5-6); ஏகூஎழுதியகடிதம்(2 அர 10:1-6) ஆகியவை குறிப்பிடத் தக்கவை. அடிமைத்தனத்தின் காலத்திலும் கடிதங்கள் எழுதப் பெற்றன்எஸ்ரா 4:11-16 இல் "பொதுமக்களின் மனு” ஒன்றும், 4:17-22 - இல்அரசன்அனுப்பிய பதிலும் காணப்படுகிறது.திருமுகங்கள்வரைவதுபண்டைய பழக்கம். எரேமியா பாபிலோன்அடிமைத்தனத்திலுள்ள மக்களுக்கு எகிப்திலிருந்து எழுதிய தொன்மைவாய்ந்த மடல் மிகவும் குறிப்பிடத்தக்கது (எரே 29:1-23). புதிய ஏற்பாட்டில் புனித பவுல் எழுதியவை அனைத்தும்கடிதங்களாகும். அக்கடிதங்கள் இறை ஏவுதல் பெற்றவை. 1.1. கடிதங்களின்இலக்கிய அமைப்பு
2 மக் 11 : 21; 11 : 33; 38-இல்காண்பதுபோல்அதிகாரப் பூர்வமானகடிதங்களில் 'தேதி குறிப்பிடலாம் 'இறுதி வாழ்த்துரை' எழுதப்பட்டால்அது தற்கால 'கையொப்பத்திற்கு' இணையாகும். சொல்லச் சொல்லவேறு யாராவது எழுதியிருந்தால், இறுதியில் அனுப்புவர் ஒரு சிலவார்த்தைகள் எழுதி அதையே கையொப்பமாக கருதுவது வழக்கம். 1.2. புதிய ஏற்பாட்டுத் திருமுகங்கள் 1) தொடக்கவுரை:இது கிரேக்கர் - உரோமையர் முறையைத்தழுவி உள்ளது; ஆனால் சற்று விரிவாக உள்ளது. தொடக்கவுரையில்நாம் காண்பவை: விடுநர், பெறுநர், விடுநரைப் பற்றிய குறிப்பு,பெறுநரைப் பற்றிய விளக்கம். தேவைப்படும்போது விடுநரைப்பற்றிய குறிப்பு நீளும். பெறுநர்பற்றிய விளக்கம் குறுகும். சில சமயங்களில்உடனிருப்போர் பெயர் சேர்க்கப் படுகிறது. (காண்1 கொரி 1:1-2; 2 கொரி 1:1; பிலி1:1 1 தெச 1:1; 2தெச 1 : 1).ஷலோம்ஷலோம்ஷலோம்என்று "வாழ்த்து” மட்டும்கூறாமல் "அருளும் சமாதானமும்” என்றுவாழ்த்துவார். இது பவுலுக்கே உரிய வாழ்த்து.கிரேக்க "காரேயா” எபிரேய "ஷலோம்” கலந்தவாழ்த்து இது. இத்தகைய வாழ்த்து குருத்துவஆசீரில் இல்லாமல் இல்லை (எண் 6:24-26).புதிய ஏற்பாட்டு திருவழிப்பாட்டிலுள்ளவாழ்த்தைபவுல் தம் கடிதங்களில் பயன்படுத்தினார் என்றுகூறுவாருமுண்டு. 2) நன்றியுரை: கிரேக்க, உரோமைய மடல்களைப் போல் பவுலின்திருமுகங்களும் நன்றியுரை கொண்டுள்ளன. திருமுகத்தின்உட்பொருளை இது முன்னுணர்த் தும். ஆயினும் கலாத்தியருக்குகோபமுடன் எழுதிய திருமுகத்தில் இது "கண்டிப்புப்” பகுதியாக உள்ளதுஇயல்பே. சிலவேளை நீண்டதோர் ஆசீர் இடம் பெறுவதும் உண்டு(2கொரி 1:3-11; எபே 1:3-14). எங்கே நன்றியுரை முழ்?து கடிதத்தின்உட்பொருள்தொடங்குகிறதுஎன்றுகண்டுபிடிப்பதுஎப்போதும்எளிதன்று. 3) உட்பொருள்: ஒரு சில கடிதங்களில் பவுல் உட்பொருளை(செய்தியை) இரண்டாகப் பிரிக்கிறார். (1) போதனைப் பகுதி (2) அறிவுரைப் பகுதி சான்றாக: உரோமையர் 1-11; 12-16கலாத்தியர் 1-4; 5-6எபேசியர் 1-3; 4-6கொலோசையர் 1-2; 3-4 ஏனைய கடிதங்களில் போதனையும் அறிவுரையும் கலந்துகாணப்படுகின்றன. 4) முடிவும் இறுதி வாழ்த்தும்: இப்பகுதியில் பவுல் பொதுவாகதம்மைப் பற்றிய செய்திகளை வழங்குகிறார். சில நபர்களுக்குச் சிறப்புச்செய்திகள் அறிவுரைகள் வழங்குவதுண்டு.இறுதிவாழ்த்து, "நம் ஆண்டவராகிய...” என்றுஅமைகிறது(1 தெச5:28; 2 தெச 3:18). பவுல் சில கடிதங்களின்இறுதியில் தம் கைப்பட ஒருசில வரிகள் எழுதுவதுண்டு. அது அவருடைய சொந்தக் கையெழுத்து....! சிறப்பு கையொப்பத்துக்கு இணையானது (கொலோ 4:18; 2 தெச 3:17,18; கலா 6:11-18; 1கொரி 16:21; உரோ 16:17-22). -------------------------- 2. திருமுகமா? சுற்றறிக்கையா? பவுல் எழுதியவை திருமுகமா (கடிதம், மடல்) அல்லதுசுற்றறிக்கையா (நிருபம்) என்பதுஆராய்ச்சிக்குரியது. டாய்ஸ்மான்என்றஅறிஞரின் ஆய்வுக்குப்பின் "சுற்றறிக்கை” என்ற வார்த்தையை விட்டுவிட்டு, "திருமுகம்” என்ற வார்த்தையையே பயன்படுத்தி வருகிறோம்.இதற்குக் காரணங்கள் உள்ளன. 2. 1. திருமுகத்தின் (கடிதம், மடல்) பண்புகள்
2.2.சுற்றறிக்கையின்(நிருபம்) பண்புகள;
சான்றாக:-பத்திரிகைகளில் காணப்படும்"ஆசிரியருக்குக்கடிதம்' 2.3. பவுலின் படைப்புக்கள் எத்தகையவை? அடிப்படையில் அவை கடிதங்களே எனினும், இக்கடிதங்கள்அவற்றின் சிறப்பால், வரவரப் பொது கடிதங்களாகக் போற்றப்பட்டுபிறராலும் வாசிக்கப்பட்டன.இவ்வாறு தம் மடல்கள் வேறு சபைகளில் வாசிக்கப்படுவதுபவுலுக்கே தெரியும் (2கொரி 10:10). சில கடிதங்கள் அவ்வாறுவாசிக்கப்படுவதையும் அவர் விரும்பினார் (கொலோ 4:16).மேலும் உரோமையர், எபேசியர் போன்ற பின்னையக் கடிதங்களைஅவர் ஏறத்தாழ சுற்றறிக்கை வடிவிலேயே எழுதினார்.பவுல் தனி மனிதன் என்ற முறையில் மட்டும் கடிதம் எழுதாமல்"திருத்தூதர்” என்ற முறையில் சபைகளுக்குக் கடிதங்கள் எழுதி இந்தக்கடித இலக்கியத்தை தம் மறைபரப்பும் பணிக்குப் பயன்படுத்தியதால்,சுற்றறிக்கையின்தன்மைகள் உள்ளடங்குகின்றன. தனிப்பட்ட பிரச்சினைகளுக்குப் பதில் அனுப்பும் கடிதங்களிலும்பொதுவாக யாவருக்கும் தேவையான நற்செய்தி தூதுரை (கலா 1:3-4), மறையுரை (உரோ 1:18-32), அறவுரைகள் (கலா 5:19-24), குடும்பஒழுக்கம் (எபே 5;21-33; 6:1-9), புகழ் கீதம் (பிலி 2:6-11; பாடல் 1 கொரி13; உரோ 8: 13-39), திருவழிபாட்டு உரை (1 கொரி 11:23-26), சாட்சியம்(உரோ 3:10-18) ஆகியவற்றைப் புகுத்தியுள்ளார். இவை யாவருக்கும்பொதுவானவை அல்லவா? ஆக, பவுல் கடிதம் எழுதினாலும் கடிதத்தின்இலக்கிய பண்புகளுக்கு அடிமைப்பட்டவர் அல்லர். 2.4. பவுலின் மடல்களின் தொகுப்பு மேலும் "கண்ணீர் கடிதம்” ஒன்று கொரிந்தியருக்கு எழுதியதாகபவுல் 2 கொரி 2:3-4-இல் கூறுகிறார். 1 கொரிந்தியர் கடிதத்திற்குப் பின்இதுஎழுதப்பட்டிருக்க வேண்டும். இஃதும் மறைந்துவிட்டதா? (இக்கடிதம்2 கொரி 10:1-13:10 என்ற பகுதியே என்பாரும் உண்டு.).கொலோ 4:16இல் "லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தைநீங்களும் வாசியுங்கள்” என்கிறார் பவுல். லவோதிக்கேயருக்கு அவர்எழுதிய கடிதம் எங்கே? (அது எபேசியருக்கு எழுதிய கடிதம்தானா?) ஆக பவுல் 13 + 1 க்கும் அதிகமான கடிதங்கள் எழுதியிருக்கவேண்டும். 2.5. கடிதங்களின ;வரிசை
2.6. கடிதங்களின்பிரிவு மனப்பாடம் செய்க: ம., மா., லூ., யோவான் பணிஉரோமை., கொரிந்துக்குகலா, எபே, பிலி, கொலோதெச, திமோ, தீத்துக்குப்போபில, எபிரே, யாக்கோபு, பேதுருயோவான், யூதா, வெளிப்பாட்டுக்கு வா. --------------------------- 3. திருமுகம் எழுதும் இனிய பணி "ஆயினும் உங்களுக்கு நினைவூட்டும் வகையில் இக்கடிதத்தின்சில பகுதிகளில் மிகத் துணிவுடன் எழுதியுள்ளேன்” என்றுஉரோமையருக்கு எழுதும் பவுல் (உரோ 15:15) தனது மடல்கள் மூலம்கிறிஸ்தவ மக்களைத் தொடர்ந்து வழி நடத்தினார் என்று அறிகிறோம்.மாபெரும் நற்செய்திப் பயணங்கள் பல ஆற்றிய பவுல்,அப்பயணங்களுடே தான் நிறுவிச் சென்ற தலத் திருச்சபைகளுக்கு பலதரப்பட்ட காரணங்களைமுன்னிட்டுப் பலகடிதங்களையும் எழுதினார்.அவருடைய மடல்கள் கிறிஸ்தவ போதனை, நெறி முறைகள், விசுவாசசத்தியங்களின் விளக்கங்களாகவும், கிறிஸ்தவ சமயத்தின் மாபெரும்இலக்கியங்களாகவும் திகழ்கின்றன. அவை பற்றி விளக்கமாககாணுமுன், பவுல்வாழ்ந்த கி.பி. முதல் நூற்றாண்டில் எழுத்துக் கலையின்தன்மைகளைப் புரிந்துகொள்வோம். எபிரேயருக்குஎழுதியதிருமுகம்நீங்கலாக, பதிமூன்றுகடிதங்களை(திருமுகங்கள்) பவுல் எழுதினார் என்று பொதுவாக கருதப்படுகிறது.வெவ்வேறு காரணங்களுக்காகவும், வெவ்வேறு சூழ்நிலைகளிலும்,பலதரப்பட்ட மக்களுக்கும் இக்கடிதங்களை பவுல் எழுதினாலும் அவரதுமடல்கள் எல்லாமே அக்கால சமுதாயச் சூழ்நிலையின்கட்டுப்பாட்டுக்குள்தான் உருவாயின் இம்மடல்களை உருவாக்க அவர்பயன்படுத்திய பொருட்கள் என்னவென்று ஆராய்ந்தால், அக்கடிதங்களைஎழுத அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் அவற்றிலடங்கியுள்ளசிறப்பியல்பகளும் புலப்படும். 3.1. பயன்படுத்தப்பட்ட பொருட்கள; 1)நாணல் ஓலை இந்த பாப்பிரஸ்தாள் எகிப்தில் விளைவதனால், அதன்அரசியல்,சமூகச் சூழ்நிலையைச் சார்ந்தே இத்தாளின்விலையும்மாறுபட்டது. கி.மு.4-இல் ஒரு பாப்பிரஸ் தாள் 13 திராக்மா அதாவது ரூயஅp;. 15, ரூயஅp;. 25விலையிருந்தது. பவுலின் காலத்தில் இதன் விலை சற்றேகுறைந்திருப்பினும் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் 53 தாளின்விலை மட்டும் சுமார் ரூயஅp;. 400- ஆகியிருக்கும். அப்படியென்றால் ஒருதிருமுகம் எழுத எவ்வளவு செலவு செய்ய வேண்டுமென்று அறிந்துகொள்வோம். இதனால் தான் பலவித விளக்கங்களை பவுல் தனதுமடல்களில் விட்டுவிடுகிறார். 2)எழுதுகோல் 3.2.விளைவுகள், வேறுபாடுகள் 3.3. கடிதங்கள் எழுதும் முறைகள்
3.4. பவுலுக்குச் செயலர் மேலும், "என் கைப்பட” நானே உங்களுக்கு எழுதுகிறேன்."இப்பொழுது” என்ற வசனத்தைக் கலாத்தியருக்குஎழுதியதிருமுகத்தின்இறுதியிலும் (6:11) பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலும் (19)காண்கிறோம். இவற்றைக் கூர்ந்து நோக்கும்போது, இப்படிக்குறிப்பிடுகின்ற பகுதியைத் தவிர்த்து மற்றப் பகுதிகளை பவுல் தன்கைப்பட எழுத வில்லையென்றுபுலனாகிறது. ஆதலின், தமதுதிருமுகங்களை எழுத பவுல் செயலர்களைப் பயன்படுத்தினார் என்பதுதெளிவாகிறது.ஆனால், அவர்களை எப்படிப் பயன்படுத்தினார்?வார்த்தைக்கு வார்த்தை எடுத்துச் சொன்னாரா அல்லதுகருத்துக்களை மட்டும் கூறி, தமது செயலரை முழு திருமுகமாக எழுதச்சொன்னாரா? என்ற வினாக்கள் எழுகின்றன. பெரும்பாலானஆராய்ச்சியாளர்களின்கருத்துப்படி, பொதுவாக, பவுல்தமதுகடிதங்களைஅப்படியே பேசியிருப்பார்; அவற்றை அப்படியே மனதில் வைத்துக்கொண்டுஅவரதுசெயலர் எழுதியிருப்பார். இருப்பினும்உரோமையருக்குஎழுதிய திருமுகத்தின் அஞ்சல் (1:1-7) போன்ற பகுதிகளை பவுல்வார்த்தைக்கு வார்த்தை எடுத்துச் சொல்லி அவற்றை அவரது செயலர்எழுதியிருப்பார். 3.5. அக்காலத் தபால் முறை
------------------- 4. 1தெசலோனக்கர் 4.1. தெசலோனிக்கா நகர்(காண்க. திப 17:1-9) தொழுகைக்கூட்டத்தில்போதித்தார். யூதர், யூத மதத்தைத் தழுவியகிரேக்கர், பெருங்குடி மகளிர் பலர் மனந்திரும்பினர். தெசலோனிக்கர்சபையில் ஆவியின் வரங்கள் இருந்தன (1 தெச 5:12, 19-22). அவைமெதுவாக வளர்ந்து வந்தன(1 தெச 1:5, 6). தெசலோனிக்கர் இரண்டாம்வருகையில் நம்பிக்கை வைத்திருந்தனர். தெசலோனிக்கா நகரில் பொறாமை கொண்ட யூதர்கள் அமளிஉண்டாக்கினர். அன்றிரவே பவுல் பெரோயா சென்று விட்டார். 4.2. திருமுகம் 4.3. உள்ளடக்கம்
4.4. இரண்டாம் வருகை தெசலோனிக்கருக்கு எழுதிய திருமுகங்களில் மட்டும் ஆறுமுறை,"இரண்டாம் வருகை” எனும் சொல்வருகிறது(1:3, 10; 2:19; 3:13). முதல்திருமுகத்தில் பிரச்சினையை விவாதிப்பதற்கு முன்னரே ஐந்து முறைஇரண்டாம் வருகை சுட்டிக்காட்டப்படுகிறது. பின் விளக்கமான பதிலும்கூறப்பட்டுள்ளது (1 தெச 4:13-5:11).ஒருவன் வெற்றி கொள்கிறான் என்றால் வெற்றி வீரனாக,அரசனாக பட்டணப் பிரவேசம் செய்கிறான்; மக்கள் திரண்டு வருவர்;பட்டணத்துக்குவெளியேவந்துவரவேற்பர்; பட்டணத்திற்குள்பவனியாகஅழைத்து வருவர்; அத்தோடு அரசன் தன்னை எதிர்த்தகுற்றவாளிகளுக்குத் தண்டனையும், தனக்குக் கைகொடுத்தவர்க்குநல்லாசியும் அருள்வான். அவ்வாறே தம்மையே வெறுமையாக்கி இவ்வுலகில் மனிதனாகவாழ்ந்த இயேசு மரணத்தை வென்றார்; உயிர்த்த இயேசு தந்தைக்குஇணையானார்; அவர் மீண்டும் மகிமையில் வருவார்; அப்போதுஉயிர்த்தவரும் உருமாற்றம் பெற்றவரும் அவரை எதிர்கொள்வர் (1 தெச4:17). பொதுத்தீர்வையும் நடைபெறும். நல்லோர் இயேசுவோடுபுதுவாழ்வு வாழ்வார். இதுவே பவுல் தரும் செய்தியின் சாரம். 4.5. இரண்டாம் வருகைக்காகக் காத்திருப்போரின் கடமைமுக்கிய கடமை கடவுள்நம்மை தூயவாழ்விற்காகவேஅழைக்கின்றார் (1 தெச 2:11;5:23; 2 தெச 1:11). ஆண்டவர் இயேசுவின்வருகையின்போது நல்லவர்மட்டுமே அவரைப் புடைசூழ்ந்து நிற்கவியலும் (1தெச 3;12, 13).இவ்விறுதிக் காலம் தூயஆவியின்காலம்; எனவேதூயஆவியில்செயல்பட வேண்டும் (1 தெச 4:3-8; 5:19; 2தெச 2:13). இதுஇறைவனில்வளரும் காலம். அரசனாக வரும் இயேசுவை எதிர்கொள்ள "இராணுவ தயாரிப்பு”வேண்டும் 1 தெச 5:8; காண்க எபே 6:10-20; உரோ 13:11,12).மேலும்சோம்பல் தகாது (1தெச 5:14; காண்க 2 தெச 3:6-12). --------------------- 5. 2தெசலோனிக்கர் 5.1. திருமுகம்
5.2. உள்ளடக்கம்
5.3. எப்பொழுது இரண்டாம் வருகை? எனினும் எப்பொழுது வருவார் என்பது நிச்சயமில்லை,ஆண்டவரின் நாள் திருடனைப் போலவும், கர்ப்பவதிகளுக்கு வேதனைபோலவும் வரும் (1 தெச 5:1-3). மின்னல்போல் அந்நாள் வரும்(மத்24:27). தந்தைக்குத் தெரியுமேயன்றி வான தூதருக்கும், மானிடமகனுக்கும்கூட தெரியாது என்று இயேசுவே கூறியுள்ளார் (மாற் 13:32).எனவேதான்விழிப்பு தேவை (1 தெச 5:6-11).இரண்டாம் வருகையும் முன்னடையாளங்களும் (காண்க 2 தெச2:1-12).சோம்பல் தவிர்த்து விண்ணரசின் மதிப்பீடுகளையும் இவ்வுலகின்வளர்ச்சிநிலைகளையையும்கட்டியெழுப்ப வேண்டும்(3:6-15). நிலைஏன்இரண்டாம் வருகைக் காலதாமதம்? (காண்க 2 பேதுரு 3:8-9) -------------------------- 6. பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 6.1. பிலிப்பி நகர்(காண்க. திப 16:11-34) ஐரோப்பாவில் கிரேக்க நாட்டில் பவுல் முதல் முதல் சந்தித்த நகரம்பிலிப்பி. யூதர் ஒரு சிலர் அங்கு வாழ்ந்து இருந்தனர். ஆனால்தொழுகைக் கூடம் இல்லை. இரத்தாம்பரம் விற்கும் லீதியா என்ற யூதமறையைத் தழுவியவளும், அவள் வீட்டாரும் மனந்திரும்பினர்; தன்வீட்டில்தங்கஅவள்அவரை அழைத்தாள். வற்புறுத்தினாள். பிலிப்பியில்பெரும்பான்மையான கிறிஸ்தவர் பிற இனத்தாரிடமிருந்துமனந்திரும்பியவர்.சில மாதங்கள் பிலிப்பியில் தங்கியிருந்தார் பவுல். அவருக்குஎயோதியா, சிந்திக்கேயா போன்ற பெண்கள் பெரிதும் துணைநின்றனர்(பிலி4:2,3). துன்பத்தில் மகிழ்பவர் பவுல். பிலிப்பி நகரிலும் பெருந்துன்பம்அவருக்காகத் காத்திருந்தது.
மூன்றாம் பயணத்தின்போதும் பவுல்அவர்களைச் சந்தித்தார் (கி.பி.57). அதுவரை லூக்கா அதனைகண்காணித்து வந்தார். பவுல் மிகவும்அன்புசெய்த சபை பிலிப்பி. பொதுவாக உதவி பெற மறுக்கும் பவுல்தாராள குணம் கொண்ட பிலிப்பியரிடமிருந்து இரு முறை உதவிபெற்றிருந்தார் (பிலி 4:10-23). 6.2. திருமுகம் கொலோசையர், பிலமோன், எபேசியர் திருமுகங்கள் 61-63 இல்உரோம் சிறையிலிருந்து எழுதப்பட்டன. பிலிப்பியருக்கு அங்கிருந்தேதிருமுகம் எழுதப்பட்டதெனப் பலர் கருதி வந்தனர்.ஆனால் மூன்றாம் பயணத்தின்போது 56 ஆம் ஆண்டு எபேசுசிறையில் மரண ஆபத்தில் இருந்தபோது (காண்க 2 கொரி 1:8-10; 2கொரி 11:23) இது வரையப்பட்டது என இன்று பலர் கருதுகின்றனர். 6.3. உள்ளடக்கம்
குறிப்பு: பவுல் பிலிப்பியருக்கு எழுதிய பல கடிதங்கள் ஒரே கடிதமாகத்தொகுக்கப்பட்டுள்ளன என்பர் ஆராய்ச்சியாளர். மேற்குறித்த பகுதிகள்தனிக் கடிதமாகக் கருதப்படுதலும் உண்டு.
குறிப்பு: இதனை ஒரு தனிக்கடிதமாகக் (கண்டிப்புக்கடிதம்)கொள்பவர் பலர். இங்கே திடீர் மாற்றம்; சூழ்நிலை வேறுபடுகிறது. பிறஇனத்தார் சட்டம், விருத்தசேதனம் ஏற்கவேண்டும் என வற்புறுத்துவோரைக் கண்டிக்கிறார் (3:2, 1:28) பவுல். எச்சரிக்கிறார்; மனம்புண்படவும் பேசுகிறார்.
குறிப்பு: இதனைத் தனிக் கடிதமாகக் (நன்றிக்கடிதம்)கொள்ளலாம். இங்கே நன்றியுணர்ச்சி வெளிப்படுதல் காண்க. பவுல்பிலிப்பியரிடமிருந்து மட்டுமே பொருளுதவிபெற்றுள்ளார்.
6.4.கருத்தியல் அடிப்படையில் உள்ளே 1)பிலிப்பியர்க்கு எழுதிய கடிதம் மகிழ்ச்சியின் கடிதம் பிலி 1:18,25; 2:2,17,18,28,29; 3:1; 4:1,4,10 புனித பவுலின் சீடரான லூக்கா எழுதிய நற்செய்தி ஏடு "மகிழ்ச்சி”எனும் கருத்தால் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2)கிறிஸ்துவை மையமாகக் கொண்ட புகழ்பாடல் தரும் கடிதம் இது என்பதும் ஒருகருத்து. "துன்புறும் ஊழியன்” இயேசு எனும் கருத்துதொடக்கத் திருச்சபையின் போதகத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது.இப்பாடலும் துன்புறும் ஊழியனைப் பற்றி அமைந்ததே.இப்பாடலின் மையம் இயேசுவே. நமது வாழ்வும் இயேசுமயமாகவேண்டும் எனஇப்பாடல் அழைக்கிறது. 3)நன்றியுணர்ச்சியைத் தட்டியெழுப்பிய கடிதம்: குறிப்பாக 4:10-20 ------------------------------ 7.1கொரிந்தியர் 7.1. கொரிந்து நகர் அந்நகர் ஒரு துறைமுகப் பட்டணம். பணமும், மோகமும் அதன்இரு தெய்வங்கள். இத்தகைய நகரில் எளியோர் பேறு பெற்றோர், தூயஉள்ளத்தோர் பெறுபெற்றோர் எனும் நற்செய்தியை மக்கள் ஏற்றுக்கொள்வது கடினம். கொரிந்து எனும் கோலியாத் முன் தாவீது போலகாட்சி தந்தார் பவுல். "அஞ்சாதே, நான் உன்னோடு இருக்கிறேன்”(காண்க. திப 18:1-17). உரோமிலிருந்து வெளியேற்றப் பட்டு சமீபத்தில்கொரிந்துக்கு வந்திருந்த அக்கிலா என்ற யூதன், அவனுடைய மனைவிபிரிஸ்கில்லா இவர்கள் வீட்டில் தங்கியிருந்தார் பவுல். முதலில்யூதர்களுக்கும், பின்பிறவினத்தாருக் கும் போதித்தார்,மனந்திரும்பியவர் நல்லொழுக்கம் நாடி நடைபோட்டனர்.ஆவியின்வரங்கள் அதற்குப் பெரிதும் உதவிற்று. எனினும் கொரிந்தியசபைதான்தன்ஸ்தாபகருக்குப் பெரிதும் தொல்லைகொடுத்த சபை. கி.பி.53-இல் பயணம் முடிவுற்றது (கொரிந்திலிருந்துதான் பவுல்தெசலோனிக்கேயருக்குக் கடிதங்கள் இரண்டு எழுதினார் எனக்கண்டோம்). அதே வருடம் மூன்றாம் தூதுரைப் பயணம் (1350 கற்கள்)தொடங்கிற்று. கலாத்தியா, பிரிகியா நாடெங்கும் சுற்றி எபேசுவந்தடைந்தார் (திப 18:22). அங்கே 54-57 வரை தங்கினார். அங்கிருந்துபிலிப்பி சபைக்கும் கடிதம் வரைந்தார் கொரிந்து சபைக்கு திருமுகங்கள்எழுதலானார் எனக் காண்போம். 7. 2. திருமுகங்கள்
7.3. உள்ளடக்கம் அஞ்சலி 1:1-3
2)வினாக்களுக்குப் பதில்வினாக்களுக்குப் பதில்வினாக்களுக்குப் பதில் (7:1-15; 58)
------------------------------------ 8. 2கொரிந்தியர் 8.1. திருமுகம்
எபேசு நகரில் தங்கியிருந்த போது திமொத்தேயு என்பவரைகொரிந்துக்கு அனுப்பி வைத்தார். 1 கொரிந்தியர் எழுதப்பட்ட இடம் எபேசுநகரமே.இவற்றால் பயனில்லை எனக் கண்டு பவுல் கொரிந்து நகருக்குப்பயணமாகிச் சென்றார்(டீசநைக pயiகெரட எளைவை: 2 ஊழச 2:1). நீண்ட காலம்கொரிந்தில் பின்பு தங்குவதாக வாக்களித்துவிட்டு எபேசு நகருக்குவிரைவில் திரும்பிவிட்டார். இதற்குப் பின் கொரிந்தியர் பவுலின் தூதுவரை அவமதித்து,பவுலின் அதிகாரத்தையே பழித்துப் பேசினர். அதற்குக் காரணம் பிறஇனத்தார் மோசேயின்சட்டத்தைப் பின்பற்றவேண்டும்எனவாதாடுவோர்(இவர்களைப்பற்றி - காண்க திப 15:5).இத்தகையோர் கொரிந்து நகருக்கு வந்துவிட்டனர் (2 கொரி 1:22);பின்வரும் பெயர்கள் இவர்களைக் குறிப்பிடுகின்றன.
எனவே "வேதனையோடு ஒரு கடிதம்” அனுப்பினார் (2 கொரி2:4,9); துயர் தரும் கடிதம் அது (2 கொரி 7:8). அதுநன்மைபயக்காமலில்லை. கி.பி. 57இல் அக்கடிதத்தின் பலனைக்கண்டுவரச் சென்றிருந்தார் தீத்து. அவரைக் காணாததால் உள்ளம்அமைதியின்றி தவித்தவராய் மாசிதோனியாவுக்கு பவுல் வந்துவிட்டார்(கி.பி. 57). தீத்து நல்ல செய்தியுடன் அங்கு வந்து சேர்ந்தார் (தி.பணி19:21-22; 2 கொரி 2:12-13; 7:5-13; 11:18). கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் மாசிதோனியாவிலிருந்தே அனுப்பப்பட்டது. அதுபொதுவாகஅமைதிநிறைந்த கடிதமாகும். 8.2. உள்ளடக்கம் 1) அஞ்சலி 1:1-2 குறிப்பு:இது அமைதி விளங்கும் கடிதம் 4) தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார் 6:11-7:1 குறிப்பு: பரத்தமையில் ஈடுபடுவோரோடு உறவு வைத்துக் கொள்ளவேண்டாம் என்று கண்டித்து எழுதியிருந்த கடிதத்தில் ஒரு பாகம் இதுஎன்பர் சிலர். 1கொரி 6:10க்குப்பின் ஏற்கனவே விளக்கப்பட்டிருந்த விவாதத்தைமுறிக்கும் அளவில் திடீரென்று புதிய கருத்து புகுத்தப்படுகிறது. இப்பகுதிகும்ரான்இலக்கியத்தோடு தலைசிறந்த ஒற்றுமை கொண்டுள்ளது. ஒளிஇருள் இவற்றின் போர்பற்றி விளக்கப்பட்டுள்ளது. 5) எருசலேம் சபைக்காக நன்கொடை திரட்டும் திட்டம்: அதி 8-9 6) தம்மைப் பற்றிய சாட்சியம்
குறிப்பு:இப்பகுதி (10:1-13:13) மிகவும் கண்டிப்பான தொனியில்எழுதப்பட்டுள்ளது. இது ஒரு தனி கடிதம் என்றனர் சிலர்; வேதனைதரும் (2 கொரி 2:4; 9) கடிதமே ஒரு பகுதி இது என்கின்றனர். இவர் திருத்தூதர் பணி துன்பத்தோடு இணைந்தது என்பதை இக்கடிதம்உணர்த்துகிறது.இவ்வாறு பவுல் கொரிந்தியருக்குப் பல்வேறு கடிதங்கள்வரைந்துள்ளார் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். கவனிக்க: 1, 2 கொரிந்தியர் பற்றிய விளக்கவுரை அடுத்தப் பாடநூலில் வெளிவருகிறது. ------------------------------- 9. கலாத்தியர் கி.பி. 57, 58இல்எழுதப்பட்டகலாத்தியர், உரோமையர் திருமுகங்கள்சுமாராக ஒரே ஆழ்ந்த கருத்தையே வலியுறுத்துகின்றன. கிறிஸ்துவில்விசுவாசம் வழியாய் மட்டுமே மீட்பு, ஏற்புடைமை ஏற்படுகிறது என்பதேஅக்கொள்கை (பழைய சட்டம், விருத்தசேதனம் வழியாக அன்று).இக்கொள்கையை கலாத்தியர் திருமுகத்தில் பொதுப்படையாகவும்,உரோமர் திருமுகத்தில் சிந்தனைக் கோர்வையாகவும் அளிக்கிறார் பவுல். 9.1. கலாத்தியர் கடிதம் எழுதிய இடம், காலம்: 9.2. உள்ளடக்கம் 1) முன்னுரை 2) நிகழ்ச்சிப் பகுதி1:11-2:21 3) கொள்கைப் பகுதி3:1-4:31 4) அறிவுரைப் பகுதி5:1-6:10 5) முடிவுரை6:11-189.3. பொதுவான கொள்கைகள்பவுல் மனந்திருப்பிய கலாத்தியரிடையே, ஒரு சிலர் விரைவில்புகுந்து அங்குள்ள பிறவின கிறிஸ்தவரை யூத நெறிப்படி வாழுமாறுவற்புறுத்தினர். இவ்வாறு வற்புறுத்தி யவரே "யூத கட்சியினர்” அல்லது"போலிச் சகோதரர்கள்” நாய்ப்படை என அழைக்கப் படுகின்றனர்.பிறவினகிறிஸ்தவர் யூதச் சட்டத்தை ஏற்க வேண்டும், விருத்தசேதனம்பெற வேண்டும்; அப்போதுதான் அவர் மீட்பு பெறமுடியும் என "போலிச் சகோதரர்கள்” போதித்துக்குழப்பினர். இவர்களுக்குப் பதில் மொழியாக 1-4அதிகாரங்கள் அமைகின்றன.இயேசுவின் மேலுள்ள நம்பிக்கையினாலும், திருமுழுக்கினாலும் மனிதன்இறைவனுக்குஏற்புடையவன் ஆகிறான். மீட்பு பெறுகிறான்.கிறிஸ்துவன் யூதச் சட்டத்துக்கு (விருத்தசேதனம்உட்பட) அடிமையல்ல. சட்டத்தாலும்விருத்தசேதனத்தாலும் அவனுக்கு மீட்பு கிட்டப்போவதில்லை என்பதே முக்கிய கருத்து. நற்செயல்கள் தேவையில்லை என்ற போக்குடையோரும்இச்சபையில்இருந்தனர். இத்தகையவிடுதலைவிரும்பிகளுக்கு எதிராகஎழுதப்பட்டவை 5-6ஆம் அதிகாரங்கள்.ஆவியில்வாழ்வு5:16-26; 4:6-7, அன்பின்பஞ்சத்திலிருந்து (4:3,8-11) கடமை (5:14)கிறிஸ்தவ சுதந்திரம் (பழைய சட்டசமயத்திலிருந்து, அடிமை நிலையிலிருந்து,சாவிலிருந்து (4:1-11), மேலும், கிறிஸ்தவசமத்துவ சமுதாயம் (4:26-29); கிறிஸ்தவர்க்குதனிக்கவனம் (6:10) ஆகிய கருத்துக்களும்இக்கடிதத்தில் இடம்பெறுவது தெளிவு. 9.4. அன்புக்கு மட்டுமே அடிமையாகலாம் (கலா 5:13) ---------------------------------- 10. உரோமையர் 10.1. முக்கிய கொள்கை 10.2. உரோமைத் திருச்சபை உண்மையில் பெந்தகொஸ்தே தினம் அன்றே, உரோமையராகியயூதர்கள் எருசலேமில் மனந்திரும்பியிருக்க வேண்டும். (தி.பணி2:10).பின்னர் கிறிஸ்தவ வணிகர்கள் உரோமை நகரில் திருச்சபை பரவகாரணமாயிருந்திருக்க வேண்டும். இந்தக் கிறிஸ்தவ பெருந்தொகையினர் கி.பி. 50-இல்உரோமையிலிருந்துநாடுகடத்தப் பட்டதுபற்றிதி.பணி18:2 கூறுகிறது. 10.3. உரோமைத் திருச்சபையோடு பவுலின் தொடர்பு 10.4. இடம் காலம் 10.5. உள்ளடக்கம் 1) முன்னுரை1:1-15
3) அறிவுரைப் பகுதி12:1-15:13 1. ஆன்மீக வழிபாடு (புதுவாழ்வு) 21:1-13:14 4) முடிவுரை15:14-16:27 ஆனால் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வழியாகவே மீட்புஏற்படுகிறதுஎன்பதுபவுலின்போதனை: பரம்பரை கிறிஸ்தவபோதனை.இக்கொள்கையை உரோமையில் சென்று போதிக்க, முன்தயாரிப்பாக பவுல் அவர்களுக்கு மிக நீண்ட கடிதம் வரைகிறார்.பல்லாண்டு அனுபவத்தின்சுவையானகனிஇத்திருமுகம். மனிதர் பாவத் தளைகளில் சிக்கித் திணறுவதை மனநூல்நிபுணரும், உலகம் சமூகப் பாவ கட்டுக்களிலிருந்து விடுபட முடியாமல்தவிப்பதை சமூக இயல் வல்லுநரும் நமக்குத் தெளிவுப்படுத்துகின்றனர்.மனிதர் பாவி, இன்றைய உலகம் பாவ மயமானது என்பதை பவுலும்வலியுறுத்துகிறார். பிறவினத்தார் பாவிகள் (1:18-32); யூதரும் பாவிகள்(2:1-19); எனவே எல்லாரும் பாவிகள் (3:9-18) என்கிறார் பவுல். மேலும்,இதிலிருந்து நம்மை விடுவிப்பவர் இயேசுவே! (7:14-24). இயேசுவேபழைய சட்டங்களிலிருந்தும் நம்மை விடுவித்து புது வழிகாட்டியாய்விளங்குபவர். ஆவியை அளித்து நம்மை வாழ்விப்பவர் (8:1-10).அன்பையே சட்டமாகத் தருபவர் (8:31-39). எனவே பாவம், விடுதலை,திரு முழுக்கு, தூய ஆவி, அன்பு, அன்பின் செயல் இவைகள்பற்றிஇக்கடிதத்தில் வலியுறுத்துகிறார் பவுல்.தேர்ந்தெடுக்கப்பட்டஇஸ்ரயேல்குலத்தின்நிலைப்பற்றியும்கவலையோடு பேசுகிறார் பவுல் அடியார் (அதி 9-10-11).பின்வரும் அதிகாரங்களில் 12-15 கிறிஸ்தவ புதுவாழ்வுபற்றியவை யாகும். -------------
பிலி., கொலோ., பில., எபே., ஆகிய கடிதங்கள்சிறைக்கூடமடல்கள்மடல்கள்மடல்கள் ஆகும். இவற்றுள் பிலி. எபேசு சிறையிலிருந்து (கி.பி. 56)எழுதப்பட்டதுஎனக்கண்டோம். கொலோ., எபே, பிலஆகியவைஉரோமைசிறையிலிருந்து (கி.பி. 61-62) எழுதப்பட்டவையாகும் 11.1. கொலோசை நகர்எபேசிலிருந்து 100 கல் தொலைவில் லைகஸ் ஆற்றருகேஅமைந்த நகர் இது. வளமானநகர். மேலும்நிலநடுக்கத்தால்தாக்கப்படும்நகர். வியாபாரத்திற்குப் பேர் பெற்ற இடம். மந்தைகளுக்கு இங்கேகுறை வில்லை. உயர்ரக துணி நெய்தலுக்கும், சாயம் ஏற்றும்தொழிலுக்கும் பெயர் பெற்ற பட்டணம்.பிற்காலத்தில்லவோதிக்கேயர் நகர் புகழ்பெறவே, கொலோசை நகர்பொலிவிழந்து அழிந்தது. அது இருந்த இடத்தைக் கண்டுப்பிடிப்பதுகூடஇன்று கடினமாயுள்ளது.சுமார் 50,000 யூதர்கள்அங்குதங்கி குடியிருந்தனர். பவுலின்சீடர்எப்பாபிரா ஒரு சிலரை மனந்திருப்பி அங்கே சபை நிறுவினார். பவுல்இச்சபைக்குநேரே சென்றதில்லை(2:1). ஆனாலும் உரிமையோடுகடிதம்எழுதுகிறார். 11.2. உள்ளடக்கம்
11.3. முக்கிய நோக்கங்கள் எனவே தூதர்களின் உண்மைநிலை, கிறிஸ்துவின் மேன்மை,உண்மை விருத்தசேதனம், உண்மை தவம், காலநேர நம்பிக்கை, குடும்பவாழ்க்கை இவை பற்றி பவுல் நல்ல பல கருத்துக்கள் அளிக்கிறார். ---------------------
12.1. எபேசு நகர்எபேசு நகர் 'சின்ன ஆசியா'வில் கய்ஸ்டர் நதிக்கரையில் அமைந்துள்ளது. இது உரோமை ஆட்சியின்போது ஒரு மாவட்டத் தலைநகராகவிளங்கி யது. செல்வம் கொழிக்கும் நகர்; வியாபார மையமானதுறைமுகம்; புகழ்வாய்ந்த மாபெரும் தியானா தேவதையின் கோயில்இங்கிருந்தது. மேலும் விளையாட்டு அரங்கம், ஜிம்னாசியம்முதலியவற்றைக் கொண்டிருந்தது எபேசு மந்திரவாதிகளுக்கும்பேர்போனபட்டணமாகும்.பவுல் 2 ஆம் பயணத்தின்முடிவு காலத்தில் எபேசு சென்றிருந்தார்(கி.பி. 52). மூன்றாவது பயணத்தின்போது கி.பி. 54-57இல் எபேசில் நீண்டநாள் தங்கினார். அப்போது எபேசு நகரில் நடந்தவை:
எபேசு நகரில் தங்கியிருந்த அந்நீண்ட காலத்தில் ஒரு முறைகொரிந்து நகருக்கு 'மின்னல் பயணம்' செய்து திரும்பி வந்தார் (1 கொரி11:34). எபேசு நகரில்கொடியசிறைவாசம்அனுபவித்ததுமுண்டு(2 கொரி11:23). அப்போதுதான் பிலிப்பியருக்குத் திருமுகம் (சிறைக்கூட மடல்)எழுதினார். விடுதலை பெற்றபின் கொரிந்தியருக்கு முதல் கடிதம்வரைந்தார். கலாத்தியருக்கும் இங்கிருந்தே கடிதம் வரையப்பட்டது.பல்வேறு துன்பங்களுக்கிடையில் திருச்சபை எபேசு நகரில் நிலைநாட்டியபின் பவுல், மாசிதோனியா, அக்காயா பகுதிகளுக்குச் சென்றார்.பின் திரும்பி வருகையில் மிலேத்தில் இருக்கும்போது எபேசியரைவரவழைத்துபிரியாவிடை நல்கினார் (திப 20:17-38). பின்னர் எருசலேம்சென்றார். ஆக, மூன்றாம் பயணம் முழுவதும் எபேசியருக்கு மிகுந்தமுக்கியத்துவம் அளிக்கிறது. 12.2. இடம், காலம் 12.3. கடிதத்தின் உள்ளே
12.4.கொள்கைகள்
---------------------------
பவுல் ஆயர்களுக்கு ஆயர் பணி பற்றி எழுதிய கடிதங்கள்மேற்குறித்தவை.இவற்றுள்திமொத்தேயுவுக்கு வரைந்த முதல் கடிதம் கி.பி. 65 ஆம்ஆண்டில்எழுதப்பட்டது. அக்காலத்தில்திமொத்தேயுஎபேசு நகர் ஆயராகஇருந்தார் என்பது பொதுவானநம்பிக்கை. இக்கடிதம் எழுதப்பட்ட இடம்மாசிதோனியா பகுதி என்பர்.இக்கடிதத்தின்உட்பிரிவை விளக்கமாகக் கொடுக்கிறோம். அதைவாசித்தவுடனேயே வெவ்வேறு நிலையினருக்காக இக்கடிதத்தில்அளிக்கப்படும் அறிவுரைகள் எளிதாகப் புரியும். 1 திமொத்தேயு உட்பிரிவு: மடலின்அமைப்பு
3) திருக்கூட்டத்திற்குரிய வாழ்க்கை முறை 2:1-3:13
4) விவாதப் பிரிவு3:14-4:16
5) மேய்ப்பர் பணியை விவரிக்கும் பகுதி5:1-6:2
6) விவாதமும் அறிவுரைகளும்6:3-19
7)முடிவுரையும் வாழ்த்தும்6:20,21
தீத்து ஆயர் திருமுகங்களில் காலவரிசையில் இரண்டாவது இடம்பெறுவது தீத்துவுக்கு பவுல் எழுதிய திருமுகமாகும்.இவர் ஒரு பிற இனத்தார் (கலா 2:3). பவுலால் மனந்திருப்பப்பட்டவர் (தீத்து 1:4). பவுலுடனும், பர்னபாவுடனும் எருசலேமில் நடந்ததிருத்தூதர் கூட்டத்தில் கலந்து கொண்டார் (கலா 2:1). மூன்றாவது மறைஅறிவிப்புப் பயணத்தின்போது அவர் கொரிந்து சபையில் உருவான சிலமுக்கிய பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்படி பவுலால் கொரிந்துக்குஅனுப்பப்பட்டார். அதில்வெற்றியும் கண்டார் (2 கொரி 7:5-7). எருசலேம்கிறிஸ்தவர்களுக்காகப் பிரிக்கப்பட்ட நன்கொடையைப் பெற்று வருமாறுமீண்டும் கொரிந்துக்குச் சென்றார் (2 கொரி 8:16-17). முதல் முறைஉரோமையில்கைதானபிறகுபவுல்கிரேத்துநகரில்திருச்சபையைநிறுவி அதற்குத் தலைவராகத் தீத்துவை நியமித்தார். அதைத் தொடர்ந்துதீத்துவுக்கு கி.பி. 64-65-இல் இம்மடலை வரைந்தார். பவுல் இக்கடிதத்தை எழுதும்போது தீத்து கிரேத்து சபையைகண்காணித்து வந்தார் என்பது பரம்பரை.இக்கடிதத்தின் உட்பிரிவைப் பார்த்தவுடனே பவுல் எத்தகையஅறிவுரையை வலியுறுத்தினார் என்பது நமக்குப் புரியும்; கடிதத்தைத்தியானித்து வாசிக்கவும் உதவும். உட்பிரிவு 1) வாழ்த்துரை1:1-4
5) கிறிஸ்தவ வாழ்வுக்கு இறையியல் அடிப்படை2:11-3:7
6) இறுதி எச்சரிக்கை3:8-11
7)இறுதியுரையும் வாழ்த்தும் 3:12-15 2 திமொத்தேயு உரோமையில் இரண்டாம் சிறையிருப்பின்போது கி.பி. 67 இல்திமொத்தேயுவுக்கு புனித பவுல் இக்கடிதத்தை வரைந்தார் என்பர். தமதுமரணம் அருகிலிருப்பதாக உணர்ந்து பவுல் இக்கடிதத்தை எழுதுகிறார்(2திமோ 4:6-8).கீழே மடலின்அமைப்பு தருகிறோம். அதைக் கண்முன்கொண்டுகடிதத்தைப் பத்தி பத்தியாக வாசியுங்கள். மடலின் அமைப்பு : 1) முன்னுரை1: 1-5
2) அறிவுரைகள்1:6-2:13
3) விவாதப் பகுதி2:14-3:9
4) ஆக்கவேலைகள்3:10-4:5
5) முடிவுரைப்பகுதி4:6-22
14. பிலமோனுக்கு எழுதிய கடிதம் 14.1. பிலமோன் 14.2. இடம், காலம் 14.3. எழுதிய சூழ்நிலை, நோக்கம் அடிமைகளை வைத்திருக்கும் சமுதாய அமைப்பை பவுல்உடனடியாக உடைத்துவிட இயலவில்லை; அதற்கான புதுகண்ணோட்டத்தைப் புகுத்துகிறார். 14.4. உட்பிரிவு
15. எபிரேயர் எபிரேயருக்கு எழுதப்பட்ட இம்மடல் கடித சாயலைவிட திருவுரைபோக்கையே அதிகமாகக் கொண்டுள்ளது.திருமறையில்சேர்ந்த யூதர்கள்(எபிரேயர்கள்) ஏனையயூதர்களால்ஒதுக்கப்பட்டனர்; துன்புறுத்தப்பட்டனர். இவர்களை ஆற்றுப்படுத்த ஒருகடிதம் தேவைப்பட்டது. கிறிஸ்தவமறையைப் பின்பற்றிய யூதர்களுக்கு,குறிப்பாக யூத குருக்களுக்கு இந்நூல் எழுதப்பட்டது யூதர்க்குஎழுதுவதால் பழைய ஏற்பாட்டு செய்திகள் தாரளமாகப்பயன்படுத்தப்படுகின்றன. 15.1. காலம் 15.2. ஆசிரியர் 15.3. நூலின் அமைப்பு
15.4. கொள்கைகள்
------------------------------------------
-------------------------- ---------------- ------ --
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||