உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை

download

0177. உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா
எந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண்தணலிலும் மனம் குளிரும் (2)
உந்தன் கண்களின் இமைபோல்
எந்நாளும் என்னைக் காத்திடு என் இறைவா (2)

1. பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும் (2)
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும் (2)

2. வலையினில் விழுகின்ற பறவை
அன்று இழந்தது அழகிய சிறகை (2)
வானதன் அருள் மழை பொழிந்தே
நீ வளர்த்திடு அன்பதன் உறவை (2)