திருப்பலியின் அமைப்புமுறை
தொடக்கச் சடங்குகள்
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
ஆமென்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உங்களோடு இருப்பதாக.
உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அமைதி உங்களோடு இருப்பதாக.
உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
பாவத்துயர்ச் செயல்*
சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே,
உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்;
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்
கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.
ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும் வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
ஆமென்.
சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
அ.ப. : ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பதில் : ஏனெனில் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
அ.ப. : ஆண்டவரே, எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும்.
பதில் : உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்... மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
ஆமென்.
அ.ப: ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்
பதில்: ஏனெனில் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
அ.ப: ஆண்டவரே, எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும்.
பதில்: உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
அ.ப: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
பதில்: ஆ - மென்
சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
அ. ப.: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு, நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.
அ.ப. : உள்ளம் நொறுங்கி வருந்துவோரை நலமாக்க அனுப்பப்பெற்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.
பதில் : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அ.ப. : பாவிகளைத் தேடி வந்த கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
பதில் : கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அ.ப. : தந்தையின் வலப் பக்கம் வீற்றிருந்து, எங்களுக்காகப் பரிந்து பேசுகின்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.
பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லாம் வல்ல இறைவன் நம் மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
ஆமென்.
அ.ப. : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
பதில் : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அ.ப. : கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
பதில் : கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அ.ப. : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
பதில் : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
உலகினிலே நன் மனத்தோருக்கு அமைதி ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே,
'ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே,
தந்தையின் திருமகனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள்மேல் இரக்கமாயிரும்
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
தந்தையின் வலப் பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர். நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய
இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.
மன்றாடுவோமாக.
ஆமென்.
வார்த்தை வழிபாடு
ஆண்டவரின் அருள்வாக்கு.
எல். இறைவனுக்கு நன்றி.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனுக்கு நன்றி.
தந்தையே, ஆசி வழங்கும்.
தமது நற்செய்தியைத் தகுதியுடனும் முறையாகவும் நீர் அறிவிக்குமாறு, ஆண்டவர் உம் இதயத்திலும் உதடுகளிலும் இருப்பாராக. தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
ஆமென்.
எல்லாம் வல்ல இறைவா, உமது நற்செய்தியைத் தகுதியுடன் நான் அறிவிக்குமாறு என் இதயத்தையும் உதடுகளையும் தூய்மைப்படுத்தியருளும்.
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
(பெயர்) எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்.
ஆண்டவரே, மாட்சி உமக்கே!
ஆண்டவரின் அருள்வாக்கு.
கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.
இந்நற்செய்தியின் வார்த்தைகளால் நம் பாவங்கள் நீங்குவனவாக.
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை யாவும் படைத்த
எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம்
உடல் எடுத்து மனிதர் ஆனார்.
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப்
பாடுபட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப் பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும்
ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த
எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன்.
அவருடைய ஒரே மகனாகிய
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் தூய ஆவியால் கருவுற்று,
கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டுச்
சிலுவையில் அறையப்பட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள்
இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி,
எல்லாம் வல்ல தந்தையாகிய
கடவுளின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.
அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும்
தீர்ப்பு வழங்க வருவார்.
தூய ஆவியாரை நம்புகின்றேன்.
புனித, கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன்.
புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்பை நம்புகின்றேன்.
உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன்.
நிலைவாழ்வை நம்புகின்றேன். ஆமென்.
நற்கருணை வழிபாடு
ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக.
ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து
நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்;
நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான
இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
கிறிஸ்து நமது மனித இயல்பில் பங்குகொள்ளத் திருவுளமானார். இத்தண்ணீர், இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.
ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக.
ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து
நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம்.
திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான
இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
ஆண்டவரே, தாழ்மையான மனமும் நொறுங்கிய உள்ளமும் கொண்ட எங்களை ஏற்றருளும். ஆண்டவரே இறைவா, நாங்கள் இன்று உமது திருமுன் ஒப்புக்கொடுக்கும் இப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.
ஆண்டவரே, எனது குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும்; என் பாவத்திலிருந்து என்னைத் தூய்மையாக்கும்.
சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையது மான இப்பலி
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும் மாட்சிக்காகவும்
நமது நன்மைக்காகவும் புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும்
உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
30. பின்னர் அருள்பணியாளர் தம் கைகளை விரித்துக் காணிக்கைமீது மன்றாட்டைச் சொல்கின்றார். அதன் முடிவில் மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர்: ஆமென்.
நற்கருணை மன்றாட்டு
|
|
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. |
|
|
உம் ஆன்மாவோடும் இருப்பாராக. |
|
|
இதயங்களை மேலே எழுப்புங்கள். |
|
|
ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம். |
|
|
நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். |
|
|
அது தகுதியும் நீதியும் ஆனதே. |
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
====================
|