image

 

புனிதருக்கு உரிய சிறப்புப் பகுதி


மார்ச் 4
புனித கசிமீர்

புனிதர் பொது: புனிதர் ஒருவர் (பக். 945).

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உமக்கு ஊழியம் புரிவது ஆட்சி செய்வதாகும்; புனித கசிமீர் எங்களுக்காகப் பரிந்து பேசுவதால் நாங்கள் நீதிநெறியில் நடந்து, புனிதராய் என்றும் உமக்குப் பணி புரிய எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

மார்ச் 7
புனிதையர் பெர்பெத்துவா, பெலிசிட்டி: மறைச்சாட்சியர்
நினைவு

வருகைப் பல்லவி

கிறிஸ்துவின் அடிச்சுவட்டைப் பின் பற்றிய புனிதர்களின் ஆன்மாக்கள் விண்ணுலகில் மகிழ்கின்றன. ஏனெனில் அவர் மீது கொண்ட அன்பினால் தங்கள் இரத்தத்தைச் சிந்தியதால்
கிறிஸ்துவோடு முடிவில்லாது அக்களிக்கின்றார்கள்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்முடைய அன்பின் தூண்டுதலால் மறைச்சாட்சியரான பெர்பெத்துவா, பெலிசிட்டி எனும் புனிதையர் தங்களைத் துன்புறுத்தியோரைப் பொருட்படுத்தாமல் கொடிய சாவின் மீது வெற்றி கொண்டார்கள்; அதனால் இவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசுவதால் நாங்கள் உம்முடைய அன்பில் என்றும் வளர அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, பெர்பெத்துவா, பெலிசிட்டி எனும் புனிதையரின் விண்ணக வெற்றியை நாங்கள் நினைவுகூர்ந்து இன்று பேரின்பத்துடன் இப்பலியை ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் உம் அரும்பெரும் செயல்களை அறிக்கையிடவும் இப்புனிதையரின் மாட்சிக்கு உரிய பரிந்துரையைப் பெற்று மகிழவும் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

2 கொரி 4:11 இயேசுவின் வாழ்வு சாவுக்கு உரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு,
நாங்கள் இயேசுவுக்காக எங்களைச் சாவுக்குக் கையளிக்கிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, பெர்பெத்துவா, பெலிசிட்டி எனும் புனிதையரின் நினைவைக் கொண்டாடி திருவிருந்தில் பங்குகொண்டதால், என்றென்றுமுள்ள மகிழ்ச்சியைப் பெற்றுள்ள நாங்கள் உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது பணியை நாங்கள் தகுதியுடன் நிறைவேற்ற நீர் அளித்தவற்றை உமது கொடையால் நாங்கள் கவனமுடன் புரிந்து கொள்வோமாக. எங்கள்.


மார்ச் 8
இறைவனின் புனித ஜான்: துறவி

புனிதர் பொது: துறவியர் (பக். 950) அல்லது இரக்கப் பணி செய்தோர் (பக். 953).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, இரங்கும் உள்ளத்தைப் புனித ஜானுக்கு அளித்தீரே; அதனால் நாங்கள் அனைவரும் அன்புப் பணி புரிந்து, உமது ஆட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களோடு இணைந்திட அருள் புரிவீராக. உம்மோடு.

மார்ச் 9

உரோமை நகர்ப் புனித பிரான்செஸ்:

துறவி புனிதர் பொது: புனிதையர் (பக். 955) அல்லது துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, இல்லறம், துறவறம் எனும் இரு வகை வாழ்க்கை நிலைகளுக்கும் தலைசிறந்த எடுத்துக்காட்டாகப் புனித பிரான்செசை எங்களுக்குத் தந்தருளினீரே; அதனால் நாங்கள் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் உம்மைக் கண்டு, உம்மைப் பின்பற்றி உமக்கு நிலையான பணி புரிவோமாக. உம்மோடு.

மார்ச் 17
புனித பேட்ரிக்: ஆயர்

அருள்நெறியாளர்கள் பொது: மறைத்தூதுப் பணியாளர் (பக். 928) அல்லது ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, அயர்லாந்து நாட்டு மக்களுக்கு உமது மாட்சியை எடுத்துரைக்க ஆயரான புனித பேட்ரிக்கைத் தேர்ந்தெடுத்தீரே; கிறிஸ்தவர் என அழைக்கப்படுவதில் பெருமை கொள்ளும் நாங்கள் இப்புனிதரின் பேறு பயன்களாலும் பரிந்துரையாலும் உம் அரும்பெரும் செயல்களை மனிதர்களுக்கு இடையறாது அறிவிக்க எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

மார்ச் 18
எருசலேம் நகர்ப் புனித சிரில்:

ஆயர், மறைவல்லுநர் அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919) அல்லது மறைவல்லுநர்கள் பொது (பக். 932).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஆயரான புனித சிரில் வழியாக மீட்பின் மறைபொருள்களை மிக ஆழமாக உணர்ந்து கொள்ள உமது திரு அவையை வியத்தகு முறையில் அழைத்துச் சென்றீரே; இப்புனிதரின் பரிந்துரையால் உம் திருமகனை அறிந்து நாங்கள் வாழ்வின் நிறைவைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

=============↑ பக்கம் 714
மார்ச் 19

புனித யோசேப்பு புனித கன்னி மரியாவின் கணவர்
பெருவிழா

வருகைப் பல்லவி

காண். லூக் 12:42 இதோ! நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான ஊழியரை ஆண்டவர் தம் வீட்டுக்குத் தலைவராக ஏற்படுத்தினார்.
""உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, மனித மீட்பு மறைநிகழ்வுகளின் தொடக்கமாகிய இயேசுவைப் புனித யோசேப்பின் நம்பிக்கைக்கு உரிய காவலில் ஒப்படைத்தீரே; அவருடைய பரிந்துரையால் உமது திரு அவை அந்த மீட்புப் பணியைத் தொடர்ந்து ஆற்றச் செய்வீராக. உம்மோடு.

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, கன்னி மரியாவிடமிருந்து பிறந்த உம் ஒரே திருமகனுக்குப் புனித யோசேப்பு பேரன்போடு பணி புரிந்தார்; அவ்வாறே நாங்களும் உமது பீடத்தில் தூய இதயத்துடன் திருப்பணி புரியத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

தொடக்கவுரை: புனித யோசேப்பின் பணி.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவதும்,
புனித யோசேப்பின் பெருவிழாவில்
தக்க புகழுரை சாற்றி, உம்மை ஏத்திப் போற்றுவதும்
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

நேர்மையாளராகிய அவரைக் கடவுளின் தாயாகிய கன்னி மரியாவுக்குக்
கணவராகத் தந்தருளினீர்;
தூய ஆவி நிழலிட்டதால், அந்த அன்னை கருத்தரித்த
உம்முடைய ஒரே திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவக்
தந்தையைப் போல இருந்து காப்பாற்றும்வண்ணம்,
நம்பிக்கையும் முன்மதியும் உள்ள பணியாளர் என
அவரை உமது குடும்பத்துக்குத் தலைவராக ஏற்படுத்தினீர்.

கிறிஸ்து வழியாகவே உமது மாண்பை வானதூதர் புகழ்கின்றனர்;
தலைமை தாங்குவோர் உம்மை வழிபடுகின்றனர்;
அதிகாரம் செலுத்துவோர் உம் திருமுன் நடுங்குகின்றனர்;
வானங்களும் அவற்றில் உள்ள ஆற்றல்களும் சேராபீன்களும்
ஒன்றுகூடி அக்களித்துக் கொண்டாடுகின்றனர்.

அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சிப்
புகழ்ந்து சொல்வதாவது: தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

மத் 25:21 நன்று, நம்பிக்கைக்கு உரிய நல்ல பணியாளரே, உம் தலைவரின்
மகிழ்ச்சியில் பங்குகொள்ளும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித யோசேப்பின் பெருவிழாவில் பேரின்பம் கொள்ளும் உமது குடும்பத்தை இப்பீடத்தின் திரு உணவால் நிறைவு செய்துள்ளீரே; முடிவில்லா உமது துணையால் இக்குடும்பத்தைப் பாதுகாத்து, உம் அருள்கொடைகள் அதனிடம் நிலைத்திருக்க அருள்புரிவீராக. எங்கள்.

மார்ச் 23
புனித மாங்க்ரோவேகோ துரீபியுஸ்: ஆயர்

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, திருத்தூதுப் பணியில் அக்கறையும் உண்மைமீது ஆர்வமும் கொண்டிருந்த ஆயரான புனித துரீபியுஸ் வழியாக உமது திரு அவை வளர்ச்சி பெறச் செய்தீரே; அதனால் உமக்கு அர்ப்பணிக்கப்பெற்ற மக்களாகிய நாங்கள் நம்பிக்கையிலும் புனிதத்திலும் என்றும் புத்தெழுச்சி பெறச் செய்வீராக. உம்மோடு.

மார்ச் 25
ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு
பெருவிழா


இப்பெருவிழா புனித வாரத்தில் இடம் பெறுமானால், அது பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைக்குப்பின் வரும் திங்கள்கிழமைக்கு மாற்றப்படும்.

வருகைப் பல்லவி

எபி 10:5,7 ஆண்டவர் உலகில் நுழைந்தபோது கூறினார்: கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.
"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, கன்னி மரியாவின் வயிற்றில் உம்முடைய திருவாக்கு உண்மையாகவே மனிதராகப் பிறக்கத் திருவுள மானீரே; அதனால் எங்கள் மீட்பர் கடவுளும் மனிதனுமாக இருக்கின்றார் என அறிக்கையிடும் நாங்கள், அவருடைய இறை இயல்பிலும் பங்கேற்பவர்களாகத் தகுதி பெற 'அருள்புரிவீராக. உம்மோடு.

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும். "தூய ஆவியால் மனிதர் ஆனார்" எனச் சொல்லும்போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உமது திரு அவையின் காணிக்கையை உளம் கனிந்து ஏற்றருளும்; அதனால் உம் ஒரே திருமகன் மனிதர் ஆன மறைநிகழ்ச்சியைத் திரு அவை தனது தொடக்கம் என உணர்ந்து இப்பெருவிழா மறைநிகழ்வை மகிழ்ச்சியோடு கொண்டாடச் செய்வீராக. எங்கள்.

தொடக்கவுரை : மனிதர் ஆதலின் மறைபொருள்

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்து மனிதரிடையே மனிதர்களுக்காகப் பிறப்பார் என்று
வானதூதர் அறிவித்த நற்செய்திக்குக்
கன்னி மரியா நம்பிக்கையோடு செவிசாய்த்தார்.
தூய ஆவியின் வல்லமை நிழலிட்டதால்,
கன்னி மரியா கிறிஸ்துவைத் தமது திருவயிற்றில்
அன்போடு கருத்தாங்கினார்.
இவ்வாறு இஸ்ரயேல் மக்களுக்கு நீர் அளித்த வாக்குறுதிகள்
உண்மையாகவே நிறைவேறின என்றும்
உலக மாந்தரின் எதிர்பார்ப்பும்
சொல்லற்கரிய முறையில் நிறைவேறும் என்றும் விளங்கச் செய்தீர்.

அவர் வழியாக உமது மாண்பை வானதூதர்களின் அணிகள் வழிபடுகின்றன;
உம் திருமுன் எக்காலத்தும் மகிழ்கின்றன.
அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு
நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சிப் புகழ்ந்து
அக்களிப்புடன் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

எசா 7:14 இதோ, கன்னி கருவுறுவார்; ஒரு மகனைப் பெற்றெடுப்பார்;
அவரது பெயர் 'இம்மானுவேல்' என அழைக்கப்படும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உண்மையான நம்பிக்கையின் மறையுண்மைகளை எங்கள் உள்ளங்களில் பதித்தருள உம்மை வேண்டுகின்றோம்: கன்னி மரியாவிடம் கருவுற்ற அவர் உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமாக இருக்கிறார் என அறிக்கையிடும் நாங்கள் அவருடைய மீட்பு அளிக்கும் உயிர்ப்பின் ஆற்றலால் நிலையான மகிழ்ச்சியைக் கண்டடையத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

=============↑ பக்கம் 721

ஏப்ரல் 2

பவோலா நகர்ப் புனித பிரான்சிஸ்: வனத் துறவி

புனிதர் பொது: துறவியர் (பக். 950).

திருக்குழும மன்றாட்டு

தாழ்மையுற்றோரின் உயர்வாகிய இறைவா, பவோலா நகர்ப் புனித பிரான்சிசை உம் புனிதரின் மாட்சிக்கு உயர்த்தியுள்ளீரே; அதனால் தாழ்ச்சியுள்ளோருக்கு வாக்களிக்கப்பெற்ற பரிசை நாங்கள் அவருடைய பேறுபயன்களாலும் எடுத்துக்காட்டாலும் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்ள அருள் புரிவீராக. உம்மோடு.

ஏப்ரல் 4 புனித இசிதோர்: ஆயர், மறைவல்லுநர் அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919) அல்லது மறைவல்லுநர்கள் பொது (பக். 932).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, புனித இசிதோரின் நினைவுக்கொண்டாட்டத்தில் எங்கள் வேண்டலுக்குச் செவிசாய்க்க உம்மை வேண்டுகின்றோம்: அவரது போதனையால் உமது திரு அவை மெய்யறிவு பெறுவது போல, அவருடைய பரிந்துரையால் அருள்துணையும் பெறுவதாக. உம்மோடு.
ஏப்ரல் 5 புனித வின்சென்ட் பெரர்: அருள்பணியாளர் அருள்நெறியாளர்கள் பொது: மறைதூதுப் பணியாளர்கள் (பக். 928).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, அருள்பணியாளரான புனித வின்சென்ட் பெரரை நற்செய்தி அறிவிப்பாளராக உயர்த்தினீரே; மண்ணுலகுக்கு நீதி அரசர் என வரவிருப்பவராக அவர் அறிவித்த கிறிஸ்துவை நாங்கள் விண்ணுலகில் அரசராகக் கண்டு மகிழ அருள் புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

=============↑ பக்கம் 722

ஏப்ரல் 7

லசால் நகர்ப் புனித ஜான் பாப்டிஸ்ட்: அருள்பணியாளர்
நினைவு

அருள் நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 929) அல்லது புனிதர் பொது: கல்விப் பணியாளர்கள் (பக். 954).


திருக்குழும மன்றாட்டு

இறைவா, கிறிஸ்தவ இளையோரின் கல்விக்காக லசால் நகர்ப் புனித ஜான் பாப்டிஸ்டைத் தேர்ந்தெடுத்தீரே; இளையோரின் மனித மற்றும் கிறிஸ்தவ உருவாக்கத்திற்காகத் தங்களை முழு உள்ளத்தோடு நேர்ந்தளிக்கும் ஆசிரியர்கள் உமது திரு அவையில் தோன்றச் செய்வீராக. உம்மோடு.

ஏப்ரல் 11

புனித ஸ்தனிஸ்லாஸ்: ஆயர், மறைச்சாட்சி

நினைவு

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர், பாஸ்கா காலத்துக்குப் புறம்பே (பக். 905) அல்லது பாஸ்கா காலத்தில் (பக். 910) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது மாட்சிக்காக, ஆயரான புனித ஸ்தனிஸ்லாஸ் துன்புறுத்துவோரின் வாளுக்கு இரையானார்; நாங்கள் சாகும்வரை எங்கள் நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்திருக்கும் ஆற்றல் பெற அருள்புரிவீராக. உம்மோடு.


ஏப்ரல் 13

புனித முதலாம் மார்ட்டின்: திருத்தந்தை, மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: மறைச்சாட்சி ஒருவர், பாஸ்கா காலத்துக்குப் புறம்பே (பக். 905) அல்லது பாஸ்கா காலத்தில் (பக். 910) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: திருத்தந்தை ஒருவர் (பக். 916).

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, திருத்தந்தையும் மறைச்சாட்சியுமான புனித மார்ட்டின் உலகின் அச்சுறுத்தலுக்கும் தண்டனைக்கும் அடி பணியாது அவற்றின் மீது வெற்றிகொள்ள அருளினீர்; அதனால் உலகில் ஏற்படும் எதிர்ப்புகளை நாங்கள் தளரா உள்ளத்தோடு என்றும் தாங்கிக்கொள்ள அருள்புரிவீராக. உம்மோடு.
=============↑ பக்கம் 723

ஏப்ரல் 21
புனித ஆன்சல்ம்: ஆயர், மறைவல்லுநர்

அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919) அல்லது மறைவல்லுநர்கள் பொது (பக். 932).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது ஆழ்ந்த ஞானத்தைத் தேடவும், அதைப் பிறருக்குக் கற்பிக்கவும் ஆயரான புனித ஆன்சல்முக்கு அருள்புரிந்தீரே; அதனால் நாங்கள் நம்ப வேண்டும் என்று நீர் பணித்தவற்றை எங்கள் உள்ளங்களில் சுவைத்து மகிழ நாங்கள் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கை எங்கள் அறிவாற்றலுக்கு உதவுவதாக. உம்மோடு.

ஏப்ரல் 23
புனித ஜார்ஜ்: மறைச்சாட்சி மறைச்சாட்சியர் பொது: பாஸ்கா காலத்தில் மறைச்சாட்சி ஒருவர் (பக். 910).

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, இயேசுவின் பாடுகளில் பங்கேற்ற புனித ஜார்ஜின் விழாவை நாங்கள் கொண்டாடுகின்றோம்; அதனால் எங்களது வலுவின்மையில் எங்களுக்கு உதவிட 'அவர் விரைவாராக. உம்மோடு.

புனித அடால்பெர்ட்: ஆயர், மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: பாஸ்கா காலத்தில் மறைச்சாட்சி ஒருவர் (பக். 910) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: ஆயர் ஒருவர் (பக். 919).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, மனிதரின் மீட்புக்கான ஆர்வத்தால் பற்றியெரிந்த ஆயரான புனித அடால்பெர்ட்டுக்கு மறைச்சாட்சியின் மணிமுடி. யைச் சூட்டி னீரே; அதனால் ஆயர்களுக்கு மந்தையின் கீழ்ப்படிதலும் மந்தைக்கு ஆயர்களின் அக்கறையும் குறையாதிருக்க அவரது பரிந்துரையால் அருள்வீராக. உம்மோடு.

ஏப்ரல் 24

சிக்மரிங்கன் நகர்ப் புனித பிதேலிஸ்:
அருள்பணியாளர், மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: பாஸ்கா காலத்தில் மறைச்சாட்சி ஒருவர் (பக். 910) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக். 923)

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்மீது கொண்ட அன்பினால் பற்றியெரிந்து நம்பிக்கையைப் பரவச் செய்த சிக்மரிங்கன் நகர்ப் புனித பிதோசை மறைச்சாட்சியின் மணிமுடி யால் அணிசெய்தீரே; இப்புனிதரின் பரிந்துரையால் நாங்கள் அன்பில் வேரூன்றியவர்களாய் கிறிஸ்துவினுடைய உயிர்ப்பின் ஆற்றலை இப்புனிதரோடு கண்டறியும் தகுதி பெறுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

ஏப்ரல் 25
புனித மாற்கு: நற்செய்தியாளர்
விழா

வருகைப் பல்லவி

மாற் 16:15 உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப்
பறைசாற்றுங்கள், அல்லேலுயா. "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, நற்செய்தியை அறிவிக்கும் அருளைக் கொடுத்து உம் நற்செய்தியாளரான புனித மாற்கை உயர்த்தினீரே; அவரது போதனையால் பயன் பெற்று, நாங்கள் உண்மையில் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்ல அருள் புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித மாற்கின் பெருமையைப் போற்றிப் புகழும் நாங்கள் இப்புகழ்ச்சிப் பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் நற்செய்தி அறிவிக்கும் பணியில் உமது திரு அவை என்றும் நிலைத்திருக்க அருள்வீராக. எங்கள். திருத்தூதர்களின் தொடக்கவுரை II (பக். 549).

திருவிருந்துப் பல்லவி

மத் 28:20 இதோ, உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன்
இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உமது புனிதப் பீடத்திலிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட திரு உணவு எங்களைப் புனிதப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புனித மாற்கு போதித்த நற்செய்தியின் மீதுள்ள நம்பிக்கையில் அவ்வுணவு எங்களை உறுதியாய் இருக்கச் செய்வதாக. எங்கள்.

ஏப்ரல் 28
புனித பீட்டர் ஷானல்: அருள்பணியாளர், மறைச்சாட்சி

மறைச்சாட்சியர் பொது: பாஸ்கா காலத்தில் மறைச்சாட்சி ஒருவர் (பக். 910) அல்லது அருள்நெறியாளர்கள் பொது: மறைத்தூதுப் பணியாளர்கள் (பக். 928).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது திரு அவை செழித்தோங்கப் புனித பீட்டருக்கு மறைச்சாட்சியின் மணிமுடியைச் சூட்டினீரே; பாஸ்கா மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நாங்கள் கிறிஸ்துவின் இறப்பு, உயிர்ப்பு எனும் மறைநிகழ்வுகளில் அடிக்கடி பங்குகொண்டு, புது வாழ்வின் சாட்சிகளாகத் திகழும் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

மான்போர்ட் நகர்ப் புனித லூயிஸ் மரிய கிரிஞ்ஞோன்:
அருள்பணியாளர்

அருள் நெறியாளர்கள் பொது: அருள்நெறியாளர் ஒருவர் (பக், 923),

திருக்குழும மன்றாட்டு

இறைவா, மீட்புப் பாதையிலும் கிறிஸ்துவின் அன்பு வழியிலும் அருள்பணியாளரான புனித லூயிஸ் மரியாவைப் பனித கன்னி மரியாவின் தோழமையால் வழிநடத்திடத் திருவுளமானீர்; அதனால் நாங்கள் அவரது எடுத்துக்காட்டைப் பின்பற்றி, உமது அன்பின் மறையுண்மைகளை உள்ளத்தில் இருத்தி உமது திரு அவையைக் கட்டியெழுப்பும் பணியில் அயராது உழைக்க அருள்வீராக. உம்மோடு.

அல்லது

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, அருள்பணியாளரான புனித லூயிஸ் மரியாவை உம் திருமகன் கிறிஸ்துவுக்கு முழுமையான அர்ப்பணத்தின் தலைசிறந்த சாட்சியாகவும் ஆசிரியராகவும் ஏற்படுத்தினீரே; அதனால் எம் அன்னையாம் புனித மரியா வழியாக நாங்கள் அவருடைய அதே அருள்நெறியைப் பின்பற்றி உமது ஆட்சியை என்றும் பரப்புவோமாக. உம்மோடு.


ஏப்ரல் 29

சியன்னா நகர்ப் புனித கத்தரின்:
கன்னி, மறைவல்லுநர்
நினைவு

வருகைப் பல்லவி

ஞானம் உள்ள கன் னி இவரே. எரியும் விளக்கை ஏந்தி, கிறிஸ்து வை எதிர்கொள்ளச் சென்ற முன் மதியுள்ள கன்னியருள்
இவரும் ஒருவர் ஆவார். அல்லே லூயா.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஆண்டவரின் பாடுகளை ஆழ்ந்து சிந்திக்கவும் உமது திரு அவைக்குப் பணி புரியவும் புனித கத்தரினை இறை அன்பால் பற்றியெரியச் செய்தீரே; அவரது பரிந்துரையால், உம் மக்களாகிய நாங்கள் கிறிஸ்துவின் மறைநிகழ்வில் இணைந்திருந்து, அவருடைய மாட்சி வெளிப்படும்போது அவரோடு என்றும் அக்களித்திட அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித கத்தரினின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் மீட்பின் பலிப்பொருளை ஏற்றருளும்; அனால் அவருடைய சிறப்பான படிப்பினைகளை நாங்கள் கற்றறிந்து, அதன் மிகுந்த ஆர்வத்துடன் உண்மைக் கடவுளாகிய உமக்கு நன்றி செலுத்த ஆற்றல் பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். 1 யோவா 1:7 கடவுள் ஒளியில் இருப்பது போல நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பாவம் அனைத்தினின்றும்
நம்மைத் தூய்மைப்படுத்தும், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இவ்விண்ணக விருந்தினால் புனித கத்தரினின் இம்மை வாழ்வுக்கு உணவளித்தீர்; இவ்விருந்தில் பங்குகொண்ட எங்களுக்கு நிலைவாழ்வை வழங்குவீராக. எங்கள்.


ஏப்ரல் 30

புனித ஐந்தாம் பயஸ்: திருத்தந்தை

அருள்நெறியாளர்கள் பொது: திருத்தந்தை ஒருவர் (பக். 916).

திருக்குழும மன்றாட்டு

இறைவா, நம்பிக்கையைக் காக்கும் பொருட்டும் உமக்கு உகந்த வழிபாட்டைச் செலுத்தும் பொருட்டும் 'உமது பராமரிப்பினால் திரு அவையில் புனித பயசைத் திருத்தந்தையாக ஏற்படுத்தினீரே; அவரது பரிந்துரையின் வழியாக உயிருள்ள நம்பிக்கையோடும் பயன் தரும் அன்போடும் உம் மறைநிகழ்வுகளில் பங்கேற்க எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

=============↑ பக்கம் 728

====================

image