image

 

மறைச்சாட்சியர் பொது

I. பாஸ்கா காலத்துக்குப் புறம்பே

அ. மறைச்சாட்சியர் பலர்
1

வருகைப் பல்லவி

கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின் பற்றிய புனிதர்களின் ஆன் மாக்கள் விண்ணகத்தில் மகிழ்கின்றன; ஏனெனில் அவரது அன்புக்காகத் தங்களது இரத்தத்தைச் சிந்திய அவர்கள் என்றென்றும் கிறிஸ்துவுடன் அக்களிக்கின்றனர்.

அல்லது

புனிதர்கள் ஆண்டவருக்காகத் தங்களது மாட்சிக்கு உரிய இரத்தத்தைச் சிந்தினார்கள்; தங்கள் வாழ்வில் கிறிஸ்துவை அன்பு செய்தார்கள்; தங்கள் சாவில் அவரைப் பின்பற்றினார்கள்;
அதனால் வெற்றியின் மணிமுடி சூடத் தகுதி பெற்றார்கள்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, மறைச்சாட்சியரான (பெயர்) . . . , (பெயர்) . . . எனும் புனிதர்களுடைய இறப்பின் நாளை ஆண்டுதோறும் பற்றன்போடு நாங்கள் நினைவுகூருகின்றோம்; அதனால் அவர்களுடைய நம்பிக்கையின் உறுதியைப் பின்பற்றவும் நீர் எங்கள் மன்றாட்டுகளைக் கேட்பதால் அக்களிப்புடன் பயன் அடையவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

தூயவரான தந்தையே, புனித மறைச்சாட்சியரின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் கொண்டுவரும் இக்காணிக்கைகளை ஏற்றருளும்; உமது பெயரை அறிவிப்பதில், உம் அடியார்களாகிய நாங்கள் நிலைத்து நிற்பவர்களாய் விளங்கத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

லூக் 22:28-30
நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் "" நான் உங்களுக்கு ஆட்சியுரிமை கொடுக்கிறேன், என்கிற", ஆண்டவர். அதனால் என் ஆட்சியில் நீங்கள் என்னோடு உலக 9 குடிப்பீர்கள்.

அல்லது

இதோ, புனிதர்களின் நிறைவான பரிசு ஆண்டவரிடம் உள்ளது; அவர்கள் உண்மையாகவே கிறிஸ்துவுக்காக இறந்தார்கள்; நிலையாக வாழ்வார்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, உமது புனித மறைச்சாட்சியரின் வாழ்வில் சிலுவையின் மறைபொருளை வியத்தகு வகையில் ஒளிரச் செய்தீரே; அதனால் இத்திருப்பலியின் வழியாக நாங்கள் வலுப்பெற்று, கிறிஸ்துவோடு உண்மையாகவே இணைந்திருக்கவும் திரு அவையில் அனைவரின் மீட்புக்காக உழைக்கவும் அருள்வீராக. எங்கள்.

2

வருகைப் பல்லவி

காண். திபா 33:20-21 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல ; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.

அல்லது

காண். திவெ 7:14; தானி 3:95 இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டி யின் இரத்தத்தில் துவைத்தவர்கள். கடவுளின் பொருட்டு அவர்கள் தங்கள் உடல்களைத் தண்டனைக்குக் கையளித்தார்கள்; அவர்கள் அழியாத
மணிமுடி பெற்றுக்கொண்டார்கள்.

திருக்குழும் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, (பெயர்) . . . , (பெயர்) ... என்னும் புனிதர்களுக்குக் கிறிஸ்துவுக்காகத் துன்புறும் கொடையை அளித்தீரே; எங்களுடைய வலுவின்மைக்கு ஏற்ற விண்ணக உதவியை அளித்தருளும்: அதனால் அவர்களைப் போன்று உமக்காக இறக்க நாங்கள் தயங்காதிருக்கவும் இவ்வாறு நாங்கள் துணிவோடு உம்மை அறிக்கையிட்டு வாழவும் ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு .

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனிதப்படுத்தப்பட வேண்டிய இப்பலிப்பொருள்கள் உயர்மதிப்புள்ள மறைச்சாட்சியரின் கொண்டாட்டத்தின் வழியாக உமக்கு ஏற்புடையனவாக விளங்க உம்மை வேண்டுகின்றோம்: இவை எங்கள் பாவங்களினின்று எங்களைத் தூய்மைப்படுத்தி, உம் ஊழியர்களின் வேண்டல்களை உம்மிடம் கொண்டு வருவனவாக. எங்கள்.
2018 11

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 15:13 தம் நண்பர்களுக்காகத் தம் உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை, என்கிறார் ஆண்டவர்.

அல்லது

லூக் 12:4 என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உங்களைத்
துன்புறுத்துவோருக்கு அஞ்ச வேண்டாம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவால் வளம் அடைந்து கிறிஸ்துவில் ஒரே உடலாக இணைக்கப்பட்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அவரது அன்பிலிருந்து என்றும் பிரிந்துவிடாதிருக்கவும் உம் மறைச்சாட்சியரான (பெயர்) . . . , (பெயர்) ... எனும் புனிதர்களின் எடுத்துக்காட்டால், எங்களை அன்பு செய்யும் அவருக்காக அனைத்தையும் துணிவுடன் மேற்கொள்ளவும் அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

==============25^ 9043 ^-----------

3

வருகைப் பல்லவி

காண். திபா 36:39
நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது. நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.

அல்லது

காண். சாஞா 3:6-7,9 பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல, ஆண்டவர் தேர்ந்து கொண்டோரைப் புடமிட்டார்; எரிபலி போல் அவர்களை ஏற்றுக்கொண்டார். உரிய நேரத்தில் அவர்களைப் பெருமைப் படுத்து வார்; கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களுக்கு அருளும்
அமைதியும் உண்டு.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, எமது`````` குழுமம் உம் மறைச்சாட்சியரின் மணிமுடியைப் பற்றிப் பேரின்பம் கொள்கின்றது; எங்கள் நம்பிக்கைக்கு அது மேன்மேலும் வலிமை தந்து ஒவ்வொரு துன்பத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக. உம்மோடு.

அல்லது

ஆண்டவரே, மறைச்சாட்சியரான (பெயர்) . . . , (பெயர்) .... எனும் புனிதர்களின் மன்றாட்டு எங்களை உமக்கு உகந்தவர்களாக்கிட உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது உண்மைக்குச் சான்று பகர அது எங்களை உறுதிப்படுத்துவதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மறைச்சாட்சியரான உம் புனிதர்களுடைய பாடுகளின் நினைவாக உம் மக்களின் காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இவை (பெயர்) ... , (பெயர்) ... எனும் புனிதர்களுக்கு மறைத் துன்புறுத்தலின்போது மன வலிமையை அளித்தது போல எங்களுக்கும் எதிர்ப்புகளின் நடுவில் 'நிலையான மனத்திடனை அளிப்பனவாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். மாற் 8:35 என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார், என்கிறார் ஆண்டவர்.

அல்லது

மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இற.
அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது கொடையை எங்களுள் பாதுகாத்தருளும்; மறைச்சாட்சியரான (பெயர்) . . . , (பெயர்) .... எனும் புனிதர்களின் விழாவில் உம்மிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட திரு உணவு எங்களுக்கு மீட்பையும் அமைதியையும் அளிப்பதாக. எங்கள்.

வருகைப் பல்லவி

காண். திபா 33:18 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்று விடுவிக்கின்றார்.

அல்லது

இறைவனின் புனிதர்கள் ஆண்டவரின் உடன்படிக்கையாலும் மூதாதையரின் சட்டங்களாலும் சகோதரத்துவ அன்பில் நிலைத்திருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் ஒரே உள்ளமும் ஒரே
நம்பிக்கையும் கொண்டு எப்போதும் ஒன்றித்திருந்தார்கள்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, (பெயர்) . . . , (பெயர்) ... எனும் புனிதர்களின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் வழியாக நீர் எங்களுக்குப் பேரின்பம் நல்குகின்றீர்; அதனால் அவர்களது விண்ணகப் பிறப்பைக் கொண்டாடும் நாங்கள் துன்பத்தில் அவர்கள் காட்டிய வலிமையைப் பின்பற்ற எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

அல்லது

இறைவா, (பெயர்) . . . , (பெயர்) ... எனும் இப்புனிதர்கள் இம்மாபெரும் மாட்சியை அடைய உமது அருளின் கொடைகளை வழங்கினீரே; இமமறைச்சாட்சியரின் பரிந்துரைகளின் உதவியால் உம் ஊழியர்களுக்குப் பாவ மன்னிப்பும்
"லேருந்து விடுதலையும் அளிப்பீராக. உம்மோடு...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, (பெயர்) . . . , (பெயர்) ... எனும் இப்புனிதர்களின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் இக்காணிக்கைகளை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் புனித நம்பிக்கையின் பேரொளியை | நீர் அவர்களுக்கு அளித்தது போல எங்களுக்கும் மன்னிப்பையும் அமைதியையும் நிறைவாகத் தந்தருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

2 கொரி 4:11 இயேசுவின் வாழ்வு சாவுக்கு உரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு, நாங்கள் இயேசுவுக்காக எங்களைச் சாவுக்குக் கையளிக்கிறோம்.

அல்லது

மத் 10:28 ஆன் மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும்
கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இவ்விண்ணக அருளடையாளங்கள் வழியாக மறைச்சாட்சியரான (பெயர்) . . . , (பெயர்) ... எனும் புனிதர்களின் கொண்டாட்டத்தில் பலவகையான உம் அருள் வரங்களை எங்களுக்குத் தந்தருளும்; அதனால் அவர்களுடைய துன்பங்களின் மாபெரும் வேதனையிலிருந்து நாங்கள் உறுதியான பொறுமையில் இணைந்திருக்கவும் அவர்களது அன்பின் வெற்றியில் மகிழ்ந்திருக்கவும் கற்றுக்கொள்வோமாக. எங்கள்.

வருகைப் பல்லவி

புனித மறைச்சாட்சியரின் இரத்தம் கிறிஸ்துவுக்காக உலகில் சிந்தப்பட்டது; அதனால் நிலையான கொடைகள் அளிக்கப்பட்டன.

அல்லது

காண். சாஞா 3:1-2,3 நீதி மான் களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள் ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல அவர்கள் தோன்றினார்கள். ஆனால் அவர்களோ அமைதியில் திளைக்கிறார்கள்.

==============28^ 9046 ^-----------

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உமது இரக்கத்தால் நாங்கள் நம்பிக்கையில் வளர உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மறைச்சாட்சியரான (பெயர்) . . . , (பெயர்).., எனும் உம் புனிதர்கள் இரத்தம் சிந்தும் அளவுக்கு தங்கள் நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்து நின்று மாட்சி அடைந்தது போல நாங்களும் அதே நம்பிக்கையை உண்மையாகவே பின்பற்றி, உமக்கு ஏற்புடையோர் ஆவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் அளிக்கும் இப்பலிப்பொருள்களால் நீர் உண்மையிலேயே மன நிறைவு அடைய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளின் மறைநிகழ்வைக் கொண்டாடும் நாங்கள், (பெயர்) . . . , (பெயர்) ... எனும் புனிதர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றிப் பற்றன்புடன் அதில் பங்குகொள்வோமாக. எங்கள்.

அல்லது

ஆண்டவரே,
(பெயர்) . . . , (பெயர்) .... எனும் புனிதர்களின் வெற்றியை இன்று கொண்டாடும் நாங்கள் இப்பலிப்பொருளை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; இது எங்கள் இதயங்களை உமது அன்பின் அனலால் என்றும் பற்றியெரியச் செய்து, இறுதிவரை நிலைத்திருப்போருக்கு நீர் வாக்களித்த கொடைகளை அளிப்பதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். உரோ 8:38-39
""வா, வாழ்வோ , வேறெந்தப் படைப்போ நம் கிறிஸ்து வன அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது.

அல்லது

மத் 10:30-31
உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. ' 99வகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எ அஞ்சாதீர்கள்.
மலானவர்கள். எனவே

==============29^ 9047 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மறைச்சாட்சியரான (பெயர்) . . . , (பெயர்) . . . எனும் உம் புனிதர்களின் நினைவுக்கொண்டாட்டத்தில் உம் ஒரே திருமகனின் உடலையும் இரத்தத்தையும் விருந்தாக உட்கொண்ட நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இவ்வாறு நிலையான அன்பினால் நாங்கள் உம்மில் நிலைத்திருக்கவும் உம்மால் வாழவும், உம்மை நோக்கி ஈர்க்கப்பெறவும் அருள்வீராக. எங்கள்.


ஆ. மறைச்சாட்சி ஒருவர்

1

வருகைப் பல்லவி

இப்புனிதர் இறைவனின் சட்டத்துக்காகச் சாகும் அளவுக்குப் போராடினார். இறைப்பற்றில்லாதோரின் வார்த்தைகளுக்காக அவர் அஞ்சவில்லை. ஏனெனில் உறுதியான பாறைமீது அவர் கட்டப்பட்டுள்ளார்.

அல்லது

காண். சாஞா 10:12
எல்லாவற்றையும்விட ஞானம் வலிமை மிக்கது என்று அவர் உணருமாறு ஆண்டவர் அவருக்குக் கடும் போராட்டத்தைத் தந்தார்.

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, மறைச்சாட்சியான (பெயர்) ... எனும் உம் புனிதர் தம் பாடுகளின் வேதனைகளை மேற்கொள்ளத் திருவுளம் கொண்டீரே; அதனால் இவரது வெற்றியின் நாளைக் கொண்டாடும் எங்களை உமது பாதுகாப்பால் எதிரிகளின் சூழ்ச்சிகள் மேற்கொள்ளாமல் இருக்க எங்களுக்கு உதவிபுரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது ஆசியால் இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: உமது கொடையினால் புனித (பெயர்) ... உம் உடலின் துன்பங்கள் அனைத்தையும் வெற்றிகொண்டது போல், நாங்களும் உமது அதே அன்புத் தீயினால் பற்றியெரிவோமாக. எங்கள்.

அல்லது

ஆண்டவரே, மறைச்சாட்சியான (பெயர்) . . . எனும் உம் புனிதரின் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் உமக்கு அளிக்கும் இக்காணிக்கைகள் உமக்கு ஏற்புடையனவாய் இருக்க உம்மை வேண்டுகின்றோம்: இவை உமது மாண்புக்கு உகந்தனவாய் இருப்பது போல, இப்புனிதர் சிந்திய திரு இரத்தம் உமது முன்னிலையில் உயர்மதிப்புள்ளதாய் இருப்பதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். மத் 16:24 என்னைப் பின் பற்ற விரும்புகிறவர் தம்மையே துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும், என்கிறார் ஆண்டவர்.
E08 11 1

அல்லது

மத் 10:39 என் பொருட்டுத் தம் உயிரை இழப்பவர் அதை என்றும் காத்துக்கொள்வார், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களைக் காத்தருளுமாறு உம்மை வேண்டுகின்றோம்: மறைச்சாட்சியான (பெயர்) ... எனும் புனிதருக்கு எந்த மன வலிமை உமது ஊழியத்தில் நம்பிக்கையையும் பாடுகளில் வெற்றியையும் தந்ததோ அதே மன வலிமையை நாங்களும் அடைவோமாக. எங்கள்.

2

வருகைப் பல்லவி

கிறிஸ்துவின் பெயருக்காகத் தம் இரத்தத்தைச் சிந்திய உண்மை மறைச்சாட்சி இவரே. தீர்ப்பிடுவோரின் அச்சுறுத்தலுக்கு இவ " அஞ்சவில்லை. ஆனால் அவர் விண்ணரசை அடைந்தார்.

அல்லது

காண். பிலி 3:8,10 கிறிஸ்துவை அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று.
'ல் அவரை ஒத்திருக்கவும் அனைத்தையும் இழப்பாக அவா கருதினார்.
==============1^ 9049 ^-----------

 

'திருக்குழும் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, தம்முடைய இறப்புவரை நீதிக்காகப் போராடப் 'புனித (பெயர்) . . . க்கு அருள் தந்தீரே; 'நாங்களும் அவருடைய பரிந்துரையால் உமது அன்புக்காகத் துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவும் முழு வலிமையோடு எங்கள் வாழ்வாகிய உம்மை மட்டுமே நோக்கிப் 'பயணம் செய்யவும் அருள்வீராக. உம்மோடு. '

காணிக்கைமீது மன்றாட்டு

கனிவுமிக்க இறைவா, இக்காணிக்கைகள் மீது உமது ஆசியைப் பொழிந்தருளும்; புனித (பெயர்) ... இரத்தம் சிந்தி அறிக்கையிட்ட நம்பிக்கையில் எங்களையும் உறுதிப்படுத்துவீராக. எங்கள்.

அல்லது

ஆண்டவரே, கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட மறைச்சாட்சியான (பெயர்) ... எனும் உம் புனிதரின் இணைப்பை எவ்விதச் சோதனையும் பிரிக்க முடியவில்லை; அவரது நினைவுக்கொண்டாட்டத்தில் இப்பலிப்பொருள்களை உமக்கு நாங்கள் ஒப்புக்கொடுப்போமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 15:1,5 உண்மையான திராட்சைச் செடி நானே; நீங்கள் கொடிகள் என்கிறார் ஆண்டவர். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.

அல்லது

யோவா 8:12 என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, அததூய மறைநிகழ்வுகளால் புதுப்பிக்கப்பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: 1த (பெயர்) . . . இன் மாறாத வியத்தகு மனத்திடனைப் பின்பற்ற "பாறுமையின் நிலையான கைம்மாற்றை நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

==============2^ 9050 ^-----------

II. பாஸ்கா காலத்தில்
'அ. மறைச்சாட்சியர் பலர்
1

வருகைப் பல்லவி

காண். மத் 25:34என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்: தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிரு ஆட்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள், அல்லேலூயா.

அல்லது

காண். திவெ 7:13 14
வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் கொடி வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்தவர்கள், அல்லேலூயா.

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, மறைச்சாட்சியரான (பெயர்) . . . , (பெயர்) . . . எனும் புனிதர்கள் உமது வார்த்தைக்காகவும் இயேசுவுக்குச் சான்று பகர்வதற்காகவும் உயிரைக் கையளிக்க வரம் அளித்தீரே; தூய ஆவியாரின் ஆற்றலால் நாங்கள் நம்பிக்கையில் பணிவும் நம்பியதை அறிக்கையிடுவதில் துணிவும் கொண்டிருக்க அருள்புரிவீராக. உம்மோடு.

அல்லது

இறைவா, எங்கள் நம்பிக்கைக்கு மனத்திடனும் வலுவின்மைக்கு ஆற்றலும் உம்மிடமிருந்து வருகின்றன; இம்மறைச்சாட்சியர் (பெயர்) ..., (பெயர்) ... ஆகியோரின் எடுத்துக்காட்டாலும் இறைவேண்டலாலும் உம் ஒரே திருமகனின் பாடுகள், உயிர்ப்பு ஆகியவற்றில் எங்களைப் பங்கேற்கச் செய்வதனால், உமது முழுமையான மகிழ்ச்சி அவர்களோடு உம் திருமுன்னிலையில் நாங்கள் பெற்றுக்கொள்ள அருள்வீராக. உம்மோடு .

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய நேர்மையாளர்களின் உயர்மதிப்புள்ள இறப்பினை நினைவுகூர்ந்து, மறைச்சாட்சியத்தின் ஒரே ஊற்றாகிய இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுப்போமாக. எங்கள்.
முழுமையான மகிழ்ச்சியையும்

==============3^ 9051 ^-----------

திருவிருந்துப் பல்லவி

காண். திவெ 2:7 கடவுளின் தோட்டத்தில் உள்ள வாழ்வு தரும் மரத்தினுடைய கனியை வெற்றி பெறுவோருக்கு உண்ணக் கொடுப்பேன், அல்லேலூயா.

அல்லது

காண். திபா 32:1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப்
புகழ்வது பொருத்தமானதே, அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக விருந்தின் வழியாக மறைச்சாட்சியரான (பெயர்) . . . , (பெயர்) . . . எனும் புனிதர்களின் விண்ணக வெற்றியைக் கொண்டாடி உம் திரு உணவை உட்கொண்டுள்ளோம்; அதனால் வாழ்வின் அப்பத்தை இங்கு உண்டு வெற்றி பெறவும் வெற்றி பெற்றவர்களாக வாழ்வு தரும் மரத்திலிருந்து விருந்துண்ணவும் செய்வீராக. எங்கள்.

2

வருகைப் பல்லவி

காண். திவெ 12:11 ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தால் வெற்றிபெற்ற புனிதர்கள் இவர்களே. இவர்கள் தாங்கள் சாகும்வரை தங்கள் உயிர் மீது ஆசை வைக்கவில்லை; எனவே இவர்கள் கிறிஸ்துவோடு என்றும் ஆட்சிபுரிகின்றனர், அல்லேலூயா.

அல்லது

காண். மத் 25:34 புனிதர்களே, ஆட்டுக்குட்டியின் திருமுன்னிலையில் அகமகிழுங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஒர் ஆட்சி ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கிறது, அல்லேலூயா.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, மறைச்சாட்சியரான (பெயர்) . . . , (பெயர்) ... எனும் உம் புனிதர்கள் உம் ஒரே திருமகனின் பாடுகளையும் உயிர்ப்பையும் முழு மனதோடு அறிக்கையிட்டு, மாட்சிமிக்க சாவினால் உயர்மதிப்புள்ள இரத்தம் சிந்தச் செய்தீரே; இமமறைச்சாட்சியரின் மாட்சிக்கு உரிய கொண்டாட்டத்தால் நாங்கள் பேரின்பம் கொள்ள அருள்புரிவீராக. உம்மோடு.
ன் பாட்டு செய்தீரே

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, ஒப்புக்கொடுக்கப்பட்ட இக்காணிக்கைகளைக் கனிவுடனும் பரிவிரக்கத்துடனும் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு தூய ஆவியாரின் ஆசியால் இவை நிரப்பப்படவும் தங்கள் உடல் வேதனைகளை மேற்கொண்ட மறைச்சாட்சியரான (பெயர்) . . . , (பெயர்) . . . எனும் புனிதர்களின் வலிமைமிக்க அன்பால் எங்கள் உள்ளங்கள் தூண்டுதல் பெறவும் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்து பல்லவி

காண். 2 திமொ 2:11-12 : நாம் கிறிஸ்துவோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம், அல்லேலூயா.

அல்லது

காண். மத் 5:12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள். ஏனெனில் விண்ணுலகில்
உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மறைச்சாட்சியரான (பெயர்) ... , (பெயர்) ... எனும் புனிதர்களின் நினைவுக்கொண்டாட்டத்தில் ஒரே அப்பத்தின் ஆற்றலால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமது அன்பில் நாளும் உறுதி செய்யப்பட்டு, புதிய வாழ்க்கையை நடத்த எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

ஆ. மறைச்சாட்சி ஒருவர்

வருகைப் பல்லவி

காண். 4 எஸ் 2:35
ஆண்டவரே, முடிவில்லாத ஒளி எக்காலத்துக்கும் உம் புனிதர்கள்மது ஒளிர்வதாக, அல்லேலூயா.

அல்லது

துன்ப நாளில் கடவுளால் கைவிடப்படாத மனிதர் இவரே; 8 ஆண்டவரின் கட்டளைகளுக்கு உண்மையுள்ளவராய வள் வெற்றி கண்டார்; அவரால் முடிசூட்டப்பட்டார், அல்லேலூயா

==============5^ 9053 ^-----------

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித (பெயர்) . . . உடைய மறைச்சாட்சியத்தின் வெற்றியால் உமது திரு அவையை அணிசெய்யத் திருவுளமானீரே; அவர் ஆண்டவருடைய பாடுகளைப் பின்பற்றியது போல, நாங்களும் அவருடைய பாதையில் சென்று, முடிவில்லா மகிழ்ச்சியில் வந்து சேரத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மறைச்சாட்சியான (பெயா) ... எனும் புனிதரின் நினைவுக்கொண்டாட்டத்தில், மாண்புக்கு உரிய உமக்கு நாங்கள் ஒப்புக்கொடுக்கும் மகிழ்வு, புகழ்ச்சி இவற்றின் பலிப்பொருளை ஏற்றருளும்; இது எங்களைப் பாவ மன்னிப்புக்கு இட்டுச் செல்லவும் நன்றிச் செயலில் இடைவிடாது நிலைத்திருக்கச் செய்யவும் அருள்வீராக. எங்கள்.
யோவா 12:24

திருவிருந்துப் பல்லவி

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன், அல்லேலூயா.
திபா 115:15

அல்லது

ஆண்டவர்தம் புனிதர்களின் சாவு அவரது பார்வையில் மிக
மதிப்புக்கு உரியது, அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இன்றைய விழாக் கொண்டாட்டத்தில் பேரின்பம் கொள்ளும் நாங்கள், உமது விண்ணகக் கொடைகளைப் பெற்றுக்கொண்டுள்ளோம்; உமது இப்புனித விருந்தின் வழியாக உம் திருமகனின் மரணத்தை அறிவிக்கும் நாங்கள் அவரது உயிர்ப்பிலும் மாட்சியிலும் புனித மறைச்சாட்சியருடன் பங்குபெறத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

==============6^ 9054 ^-----------

III. மறைத்தூது மறைச்சாட்சியருக்காக
அ. மறைத்தூது மறைச்சாட்சியர் பலர்

வருகைப் பல்லவி

காண். கலா 6:14; 1 கொரி 1:18நாமோ நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சில அன்றி, வேறு எதைப் பற்றியும் பெருமை பாராட்ட மாட்,ே ஏனெனில் சிலுவையின் வார்த்தை மீட்புப் பெற்றுள்ள நமக்கே
ளின் வல்லமை (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).
2018

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, மாண்புக்கு உரிய உமது கனிவைக் கெஞ்சி வேண்டுகின்றோம்: உம் ஒரே திருமகனைப் பற்றிய அறிவால் மறைச்சாட்சியரான (பெயர்) . . . , (பெயர்) ... எனும் புனிதர்கள் தங்களின் மறையுரை வழியாக மக்களின் உள்ளங்களை நிரப்பியது போல், அவர்களின் பரிந்துரையால் நாங்களும் எங்கள் தளராத நம்பிக்கையில் நிலைத்திருக்கச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் ஒரே திருமகன் தம் மறைச்சாட்சியரைத் தமது வார்த்தையால் உற்சாகப்படுத்தியதோடு நிறைவடையாமல் தமது எடுத்துக்காட்டாலும் அவர்களை உறுதிப்படுத்தினார்; உம் மறைச்சாட்சியர் (பெயர்) ..., (பெயர்) ... ஆகியோரின் பாடுகளை நினைந்து போற்றும் நாங்கள், இப்பலியின் வழியாக அவரது சாவைத் தகுதியுடன் அறிக்கையிடச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 5:10
T
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது (பாஸ்க அல்லேலூயா.

அல்லது

மத் 10:32
மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வோம்
என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா .

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இனிய விண்ணக விருந்தால் ஊட்டம் பெற்ற நாங்கள், உமமைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம். அதனால் (பெயர்) . . . , (பெயர்) . . . எனும் புனிதர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, உம் திருமகனின் அன்பு, பாடுகள் ஆகியவற்றின் அடையாளங்களை எங்கள் மனங்களில் தாங்கிக்கொண்டு, முடிவில்லா அமைதியின் பயனை இடையறாது பெற்றுக்கொள்வோமாக. எங்கள்.

ஆ. மறைத்தூது மறைச்சாட்சி ஒருவர்

வருகைப் பல்லவி

காண். பிலி 2:30 இப்புனிதர் கிறிஸ்துவின் பணிக்காகச் சாகும் நிலைக்கு ஆளானார்;
தம் உயிரையே கையளித்தார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் கொண்டாடும் புனித (பெயர்) ... ஐ மறைச்சாட்சியின் முடியைப் பெறத் தகுதியுடையவர் ஆக்கினீரே; அவரது நம்பிக்கையைச் சிறந்த இறைப்பற்றுடன் நாங்களும் பின்பற்ற அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித (பெயர்) ... இன் மறைச்சாட்சியத்தை நினைவுகூரும் நாங்கள் எங்கள் காணிக்கைகளை உமது பீடத்தில் ஒப்புக்கொடுத்து உம்மை வேண்டுகின்றோம்: ஆண்டவருடைய பாடுகளின் மறைநிகழ்வைக் கொண்டாடும் நாங்கள் அதை எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மாற் 8:35 என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா
காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக விருந்தைக் கொண்டாடும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: மறைச்சாட்சியான (பெயர்) .... எனும் புனிதரின் மாபெரும் நம்பிக்கையின் எடுத்துக்காட்டைக் கடைப்பிடிக்கவும், அவரது நினைவால் நாங்கள் தூண்டப்பெற்று உகந்த இறைவேண்டல் வழியாக உம்மிடம் வரவும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

==============8^ 9056 ^-----------

IV. கன்னி மறைச்சாட்சி ஒருவர்

வருகைப் பல்லவி

ஏதோ தன்னடக்கத்தின் காணிக்கையும் கற்பின் பலியுமான வீர கன்னி நமக்காகச் சிலுவையில் அறையப்பட்ட செம்மறியை, ஏற்கெனவே பின்செல்கிறார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).
2011 |

அல்லது

தம்மையே மறுத்துத் தம் சிலுவையைச் சுமந்த கன்னியரின் மணவாளனும் மறைச்சாட்சியரின் மன்னருமாகிய ஆண்டவரைப் பின்பற்றும் புனித கன்னியான இவர் பேறுபெற்றவரே (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, இன்று (பெயர்) ... எனும் புனிதையின் ஆண்டு நினைவுக்கொண்டாட்டத்தில் எங்களை மகிழ்வுறச் செய்கின்றீர்; அவருடைய அருள்பெருக்கின் துணையால் நாங்கள் உதவி பெறவும் அவரது கற்பு, துணிவு இவற்றின் எடுத்துக்காட்டால் நாங்கள் ஒளிபெறவும் எங்களுக்குக் கனிவுடன் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, (பெயர்) . . . எனும் புனிதையைக் கொண்டாடும் நாங்கள் உமக்குக் கையளிக்கும் காணிக்கைகளை ஏற்றருள் உம்மை வேண்டுகின்றோம்: அவருடைய துன்பப் போராட்டங்கள் உமக்கு உவப்பு அளித்தது போல் இக்காணிக்கைகள் உமக்கு ஏற்றவையாகிட அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திவெ 7:17
அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி, வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு அவர்களை வழிநடத்திச் செல்லும் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, (பெயர்) . . . எனும் புனிதையைக் கன்னிமை, மறைச்சாட்சியம் ஆகியவற்றின் இரட்டிப்பு வெற்றியா புனிதர்கள் மத்தியில் முடிசூட்டினீரே; இவ்வருளடையாளத்தின் ஆற்றலால் தீமை அனைத்தையும் நாங்கள் துணிவுடன் மேற்கொண்டு , விண்ணக மாட்சிக்கு வந்து சேர எங்களுக்கு அருள்புரிவீராக
"ளுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

==============9^ 9057 ^-----------

V. புனித பெண் மறைச்சாட்சி

வருகைப் பல்லவி

விண்ணரசு இவர்களுடையது. ஏனெனில் இவர்கள் உலக வாழ்வை வெறுத்தவர்கள். விண்ண கக் கொடைகளைத் தேடிய வர்கள். ஆட்டுக் குட்டி யின் இரத்தத்தில் தங்கள் தொங்கலாடைகளைத்
துவைத்தவர்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, வலுவற்ற நிலையில் உமது ஆற்றல் நிறைவடைய உமது கொடையால் எங்களுக்கு அருளுகின்றீர்; உம்மிடமிருந்து வெற்றிக்கான ஆற்றலைப் பெற்றப் புனித (பெயர்) ... அவருடைய மாட்சியை நினைவுகூரும் எங்களுக்கும் உம்மிடமிருந்து என்றும் வெற்றியின் அருளைப் பெற்றுத் தருவாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித (பெயர்) ... இன் விண்ணக வெற்றியை நாங்கள் நினைவுகூர்ந்து இன்று பேரின்பத்துடன் இப்பலியை ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் உம் அரும்பெரும் செயல்களை அறிக்கையிடவும் இப்புனிதரின் மாட்சிக்கு உரிய பரிந்துரையைப் பெற்று மகிழவும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திவெ 12:11-12 இவர்கள் தாங் கள் சாகும் வரை தங்கள் உயிர் மீது ஆசை வைக்கவில்லை; எனவே விண்ணுலகே, அதில் குடியிருப்போரே,
மகிழ்ந்து கொண்டாடுங்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித (பெயர்) ... இன் நினைவைக் கொண்டாடி, திருவிருந்தில் பங்குகொண்டதால் என்றென்றுமுள்ள மகிழ்ச்சி பெற்றிருக்கும் நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது பணியை நாங்கள் தகுதியுடன் நிறைவேற்ற நீர் அளித்தவற்றை உமது கொடையால் நாங்கள் கவனமுடன் புரிந்துகொள்வோமாக. எங்கள்.

==============10^ 9058 ^-----------

=============↑ பக்கம் 915

====================

image