image

 

பொது

அருள்நெறியாளர்கள் பொது

1. திருத்தந்தைக்காக (அல்லது) ஆயருக்காக

வருகைப் பல்லவி

ஆண்டவர் தமக்குத்தாமே அவரைத் தம் தலைமைக் குருவாகக் தேர்ந்து கொண்டார்; தமது கருவூலத்தைத் திறந்து, நன்மைகள் 'அனைத்திலும் அவரை வளம்பெறச் செய்தார் (பாகம் - அல்லேலூயா).

அல்லது

காண். சீஞா 50:1; 44:16,22 இதோ தம் வாழ் நாளில் ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்த தலைமைக் குரு இவரே! ஆகவே அவர் உறுதியளித்தபடி யே தம் மக்களில் அவரை ஆண்டவர் வளர்ச்சி அடையச் செய்தார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).
டிகை

திருக்குழும் மன்றாட்டு

திருத்தந்தைக்காக

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் மக்களின் தலைவராகவும் வார்த்தை, எடுத்துக்காட்டு ஆகியவற்றால் அவர்களுக்கு முன் மாதிரியாகவும் இருக்க புனித (பெயர்) . . . ஐ நியமிக்கத் திருவுளமானீரே; அவருடைய பரிந்துரையால், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஆடுகளோடு உமது திரு அவையின் ஆயர்களையும் காத்து நிலையான மீட்பின் பாதையில் வழிநடத்துவீராக. உம்மோடு .

ஆயருக்காக

இறைவா, புனித (பெயர்) ... இல் உமது திரு அவைக்கு நல்ல ஆயன் எனும் எடுத்துக்காட்டை அருளத் திருவுள மானீரே; அவரது பரிந்துரையால் உமது மேய்ச்சலில் நாங்கள் நீங்கா இடத்தைப் பெற்றுக்கொள்ள தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் இப்பலியை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: உமது மாட்சியின் பொருட்டு புனித (பெயர்) . . . இன் பெருமைக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலி முடிவில்லா மீட்பை எங்களுக்கு அருள்வதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

'காண். யோவா 10:11
நல்ல ஆயர் தம் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுத்தார் (பாஸ்கா 'காலத்தில், அல்லேலூயா).
2018

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, உமது திரு அவைக்காக இடையறாது தம்மைக் கையளிக்க புனித (பெயர்) ... ஐ ஆர்வமுடன் பற்றியெரியச் செய்தீரே; நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு அதே அன்புத் தீயை எங்களிலும் வளர்ப்பதாக. எங்கள்.

வருகைப் பல்லவி

காண். சீஞா 45:30
ஆண்டவர் அவருடன் அமைதியின் உடன்படிக்கை செய்து கொண்டார்; அவருக்குக் குருத்துவத்தின் மேன்மை என்றும் நிலைக்க அவரைத் தலைவராக்கினார் (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா'.

திருக்குழும் மன்றாட்டு

திருத்தந்தைக்காக

இறைவா, 'புனித (பெயர்) . . . ஐத் திரு அவை அனைத்துக்கும் ஆயராக நியமித்து வியத்தகு நற்பண்பாலும் போதனையின் மேன்மையாலும் ஒளிரச் செய்தீரே; இத்தகைய ஆயரின் பேறுபயன்களைக் கொண்டாடும் நாங்கள் மக்கள் முன் நற்செயல்களால் ஒளிரவும் உம் முன் அன்பின் தீயால் பற்றியெரியவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

திருத்தந்தைக்காக
இறைவா, புனித (பெயர்) .... ஐ, பேதுருவின் பதிலாளியாக நியமித்து அவரிடம் திரு அவை அனைத்தின் காவலை ஒப்படைத்தீரே; அப்புனிதருடைய இடைவிடாப் பரிந்துரையால் உமது அன்பான மந்தையைக் காத்து | முழுமையான நம்பிக்கையுடனும் நிறைவான அன்புடனும் | விண்ணக வீட்டுக்கு அது வந்து சேர அருள்வீராக. உம்மோடு.

ஆயருக்காக
எல்லாம் வல்ல இறைவா, ஆயரான புனித (பெயர்) . . . இன் நினைவைத் தகுந்த முறையில் இன்று கொண்டாடும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: தாம் தலைமைதாங்கும் மக்களுக்கு அவர் சொல்லாலும் எடுத்துக்காட்டாலும் முன்மாதிரியாய் இருக்க நீர் திருவுளம் கொண்டது போல, அவர் உம்மிடம் தொடர்ந்து பரிந்து பேசுவதால் நாங்களும் என்றும் உமது உதவியைப் பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருப்பலியின் வழியாக அனைத்துலகின் பாவங்களை மன்னிக்கத் திருவுளம் கொண்ட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புனித (பெயர்) ... இன் விழாவில் நாங்கள் கொண்டு வரும் காணிக்கை எங்களுக்குப் பயன் அளிக்கச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 21:17
ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே! நான் உம்மை அன்பு
செய்கிறேன் என்பதை நீர் அறிவீர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, புனித (பெயர்) . . . இன் விழாவில், நாங்கள் பெற்றுக்கொண்ட கொடைகளின் ஆற்றல் அதன் பயனால் எங்களை நிரப்புவதாக; எங்களுக்கு இவ்வுலக வாழ்வுக்கான உதவியையும் முடிவில்லாப் பேரின்பத்தின் மகிழ்ச்சியையும் பெற்றுத் தருவதாக. எங்கள்...

==============13^ 9061 ^-----------

11. ஆயருக்காக

வருகைப் பல்லவி

காண். எசே 34:11, 23-24, ஆண்டவர் கூறுகின்றார்: நானே என் மந்தையைத் தேடிச் செல்வேன்; அவற்றை மேய்க்கும்படி நான் ஒர் ஆயனை அமர்த்துவேன்; ஆண்டவராகிய நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன் (பாஸ்கா 'காலத்தில், அல்லேலூயா).

அல்லது

- காண். லூக் 12:42 இவரே நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர். இவரை ஆண்டவர் தம் வீட்டுக்குத் தலைவராக ஏற்படுத்தினார்; அதனால் அவர் அவர்களுக்கு வேளா வேளை படியளப்பார். (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா).
2018 |

திருக்குழும் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, ஆயரான புனித (பெயர்) ... ஐ உமது புனித மந்தையின் தலைவராக நியமிக்கத் திருவுளமானீரே; இவ்வாறு அவரது துன்பங்களின் பேறுபயன்களினால் உமது பரிவிரக்கத்தின் அருளைத் தாராளமாய்ப் பொழிவீராக. உம்மோடு.

அல்லது

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, ஆயரான புனித (பெயர்) ... ஐ உமது புனிதத் திரு அவைக்குக் கொடுத்துள்ளீரே; ஆவியாரின் அருளால் தூண்டப்பெற்று, அவர் எங்களுக்குப் போதித்தது எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பதாக: உமது கொடையால் அவரை நாங்கள் பாதுகாவலராகப் பெறுவது போல உமது இரக்கத்தைப் பெறப் பாதுகாப்பாளராகவும் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித (பெயர்) ... இன் விழாவில் புனித பீடத்தின்முன் நாங்கள் கொண்டு வந்துள்ள பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நீர் எங்களுக்கு இரக்கம் காட்டுவதன் வழியாக அவை உமது பெயருக்கு மேன்மை அளிப்பனவாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 15:16நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ள வில்லை, என் கிறார் ஆண்டவர். நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்க, சென்று கனி தரவும், நீங் கள் தரும் கனி நிலைத்திருக்கவம் உங்களை ஏற்படுத்தினேன் (பாஸ்கர் காலத்தில், அல்ல,

அல்லது

காண். லூக் 12:36-37 அவருடைய தலைவர் வந்து கதவைத் தட்டும்போது விழித்திருக்கும் பணியாளர் பேறுபெற்றவர் (பாஸ்கர் காலத்தில், அல்லே லா
,

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்தூய மறைநிகழ்வுகளால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் புனித (பெயர்) . . . இன் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, அவர் நம்பியதை நாங்கள் அறிக்கையிட முயற்சிக்கவும் அவர் கற்றுக்கொடுத்ததைப் பின்பற்றவும் அருள்வீராக. எங்கள்.

வருகைப் பல்லவி

காண்.1 சாமு 2:35
என் இதயத்துக்கும் ஆன்மாவுக்கும் ஏற்பச் செயல்படும் நம்பிக்கைக்கு உரிய ஒரு குருவை நான் எனக்கு எழுப்புவேன், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).

அல்லது

காண். லூக் 12:42
வீட்டு உரிமையாளரின் வீட்டுக்கு நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளராக தலைவர் ஏற்படுத்தியவர் இவரே. அதனால் தம் உடன் உழைப்பாளர்களுக்காக உணவைப் பெற்றுத் தருவார். (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, இறை அன்பினால் பற்றியெரிந்தவரும் உலகத்தை வெல்லும் நம்பிக்கையினால் சிறந்து விளங்கியவருமான புனித (பெயர்) ... ஐப் புனித அருள்நெறியாளர்களின் கூட்டத்தில் வியத்தகு முறையில் சேர்த்திர; இவ்வாறு அவருடைய பரிந்துரையால், நாங்கள் நம்பிக்கையிலும் அன்பிலும் நிலைத்திருந்து அவரது நிலையான மாட்சியில் பங்குகொள்ளத் தகுதி பெற அருள்புரிவீராக. உம்மோடு.

அல்லது

'ஆண்டவரே இறைவா, புனித (பெயர்) ... ஐ விண்ண கப் படிப்பினையால் நிரப்பத் திருவுளம் கொண்டீரே; 'அவருடைய பரிந்துரையால் அதே படிப்பினையை நாங்கள் உண்மையுடன் பாதுகாக்கவும் எங்கள் நன்னடத்தையால் அதை அறிக்கையிடவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு. '

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித (பெயர்) . . . இன் விழாவில் உம் மக்கள் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருளும்; நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஏற்றவாறு உமது பரிவிரக்கத்தின் உதவியையும் இவற்றின் வழியாக உணரச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 10:10 அவர்கள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா).

அல்லது

மாற் 16:17-18
நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஒட்டு வர்; அவர்கள் உடல் நலமற்றோர் மீது கைகளை வைக்க அவர்கள் குணமடைவர், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, திரு உடலாலும் உயர் மதிப்புள்ள திரு இரத்தத்தாலும் நிறைவு பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இறைப்பற்றுடன் நாங்கள் கொண்டாடுவது மீட்பின் உறுதியை எங்களுக்குத் தருவதாக. எங்கள்...

==============16^ 9064 ^-----------

III. அருள்நெறியாளர்கள்
அ. அருள்நெறியாளர்கள் பலர்

வருகைப் பல்லவி

எரே 3.0என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்போம் அவர்கள் உங்களை அறிவுடனும் முனமதியுடனும் வழிநடத்துவார்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

காண். தானி 3:84,87 கடவுளின் குருக்களே, ஆண்டவரைப் போற்றுங்கள்; தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே, கடவுளை வாழ்த்துங்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் மக்களுக்கு உணவூட்டி, அவர்களை வழிநடத்த ஆயர்களான (பெயர்) . . . , (பெயர்) ... எனும் புனிதர்களை உண்மையினுடையவும் அன்பினுடையவும் ஆவியினால் நிரப்பினீரே; அதனால் இப்புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் நாங்கள் அவர்களை மேன்மேலும் பின்பற்றி அவர்களுடைய பரிந்துரையால் உதவி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் புனிதர்களின் நினைவுக்கொண்டாட்டத்தில் உமது மாட்சிக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருளும்; உம்மீது நம்பிக்கை கொண்டுள்ள எங்களை இவற்றின் வழியாக, இன்றும் என்றும் தீமைகள் அனைத்தினின்றும் காப்பாற்றுவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 20:28
மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவ?" பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தா "
(பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, (பெயர்) . . . , (பெயர்) ... எனும் உம் புனிதர்களின் நினைவைக் கொண்டாடும் நாங்கள் விண்ணக உணவை உட்கொண்டுள்ளோம்; அதனால் நாங்கள் எதை இக்காலத்தில் கொண்டாடுகின அதை நிலையான மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளக கனிவுடன் அருள்புரிவீராக. எங்கள்.

==============17^ 9065 ^-----------

ஆ. அருள்நெறியாளர் ஒருவர்

வருகைப் பல்லவி

காண். திபா 131:9
ஆண்டவரே, உம் குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக! உம் புனிதர்கள் அக்களிப்பார்களாக (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உமது இரக்கத்தைப் பணிந்து வேண்டுகின்றோம்: ஆயரான புனித (பெயர்) ... இன் பரிந்துரையால் எங்களுள் உம் கொடைகளை அதிகரிக்கவும் எங்கள் இவ்வுலக வாழ்நாள்களை அமைதியில் நாங்கள் நெறிப்படுத்தவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, (பெயர்) ... எனும் உம் புனிதரின் நினைவுக்கொண்டாட்டத்தில் உமது திருப்பீடத்துக்கு நாங்கள் கொண்டுவரும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இத்தூய மறைநிகழ்வுகளின் வழியாக, இவருக்கு நீர் மாட்சி அளித்தது போல, எங்கள் மீது இரக்கத்தைத் தாராளமாய்ப் பொழிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

- காண். மத் 24:46-47 ஆண்டவர் வந்து பார்க்கும்போது விழித்திருப்பவராகக் காணப்படும் பணியாளர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவரே அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

காண். லூக் 12:42 நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான ஊழியரை ஆண்டவர் தம் வீட்டுக்குத் தலைவராக ஏற்படுத்தினார்; அதனால் அவர் அவர்களுக்கு வேளா வேளை படியளப்பார். (பாஸ்கர் காலத்தில்,
அல்லேலூயா ).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, புனித (பெயர்) ... இன் விழாவைக் கொண்டாடி விண்ணக விருந்தில் பங்குபெற்ற அனைவரிடமும் விண்ணக ஆற்றல்களை உறுதிப்படுத்தி வளர்ப்பீராக; அதனால் நம்பிக்கையின் கொடையை 'நாங்கள் முழுமையாகப் பாதுகாத்து நீர் காட்டும் மீட்பின் பாதையில் நடப்போமாக. எங்கள்.

==============18^ 9066 ^-----------

வருகைப் பல்லவி

காண். லூக் 4:18வருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில் அவர் எனக்கு நள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும் நொறுங்குண்ட உள்ளத்தை நலமாக்கவும் அவர் என்னை அனுப்பினார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).
---

அல்லது

காண். சீஞா 45:20 அவருக்கு புகழ்ச்சிப் பலியை ஒப்புக்கொடுக்க ஆண்டவர் அவரைக் குருவாகத் தமக்கெனத் தேர்ந்து கொண்டார் (பாஸ்கா காலத்தி - 1
அல்லேலூயா). திருக்குழும் மன்றாட்டு

இறைவா, நம்பிக்கையாளரின் ஒளியும் ஆன்மாக்களின் ஆயருமானவரே, உமது மந்தைக்குத் தமது படிப்பினையால் உணவூட்டி தமது எடுத்துக்காட்டால் உருவாக்க, ஆயரான புனித (பெயர்) . . . ஐ உமது திரு அவையில் நியமித்தீரே; அவருடைய பரிந்துரையால் அவர் கற்றுக் கொடுத்த நம்பிக்கையைப் பாதுகாக்கவும் அவர் தமது எடுத்துக்காட்டால் காண்பித்த பாதையில் நாங்கள் செல்லவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, மாண்புக்கு உரிய உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: புனித (பெயர்)... இன் பெயரால் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகள் இறை ஆற்றலின் மாட்சிக்குச் சான்று பகர்வது போல உமது மீட்பின் பயனை எங்களுக்கு அளிக்கச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 28:20
இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்,
என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, Hத பயா) . . . தமது நம்பிக்கையுள்ள ஊழியத்தால் நிலையான மகிழ்ச்சிக்குத் தகுதி உள்ளவரானார்; நாங்கள் உட்கொண்ட இத்திருவிருந்து
" சிக்கு எங்களைத் தயாரிக்க அருள்புரிவீராக. எங்கள்.

அல்லது

எல்லாம் வல்ல இறைவா, திரு உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் புனித (பெயர்) . . . இன் எடுத்துக்காட்டை என்றும் பின்பற்றச் செய்தருளும்; உம்மை இடைவிடாத பற்றன்புடன் வழிபடவும், தளரா அன்பினால் அனைவருக்கும் நாங்கள் நன்மை செய்யவும் அருள்வீராக. எங்கள்.

IV. திரு அவைகளை நிறுவியவர்கள்
அ. நிறுவுநர் ஒருவர்

வருகைப் பல்லவி

காண். எசா 59:21; 56:7 உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகள் உன் வாயினின்று நீங்காதிருப்பனவாக. உன் காணிக்கைகள் என் பீடத்தின்மேல் ஏற்றுக்
கொள்ளப்படும், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, புனித (பெயர்) ... இன் போதனையால் எங்கள் முன்னோரை ஒளிர்விக்கத் திருவுளம் கொண்டீரே; கிறிஸ்தவர்கள் என்னும் பெயரில் பெருமை கொள்ளும் நாங்கள் எங்கள் செயல்களால் நம்பிக்கையை என்றும் வெளிப்படுத்த அருள்புரிவீராக. உம்மோடு.

அல்லது

ஆண்டவரே, புனித (பெயர்) ... உண்மையின் வார்த்தையால் தோற்றுவித்து, வாழ்வு தரும் அருளடையாளத்தால் உணவூட்டிய உமது குடும்பத்தைக் கண்ணோக்கியருளும்; அவருடைய திருப்பணியால் அவர்களை நம்பிக்கைக்கு உரியவர்களாக்கிய உமது அருளாற்றல் அவருடைய வேண்டலால் அவர்களை அன்பினில் ஆர்வமுடன் இருக்கச் செய்வதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம் மக்களின் இப்பலியை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: புனித (பெயர்) . . . இன் நினைவுக்கொண்டாட்டத்தில் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை விண்ணகக் கொடைகளோடு ஒன்றிணையக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

பலருடைய மீட்புக்காகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு மானிட மகன் வந்துள்ளார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடிய
(பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித (பெயர்) .... இன் விழாவில் பேரின்பம் கொண்டிருக்கும் நாங்கள், நிலையான மீட்பின் பிணையை உட்கொண்டுள்ளோம்; இது எங்கள் இவ்வுலக வாழ்வுக்கும் மறுவுலக வாழ்வுக்கும் ஏற்ற துணையாய் அமைந்திட அருள்புரிவீராக. எங்கள்.

ஆ. நிறுவுநர்கள் பலர்

வருகைப் பல்லவி

ஆண்டவர் உண்மையான அன்போடு தேர்ந்து கொண்ட புனிதர்கள் இவர்களே. அவர் நிலையான மாட்சியை இவர்களுக்கு அருளினார். இவர்களின் படிப்பினையால் திரு அவை ஒளிர்கின்றது (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உமது திரு அவையைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: (பெயர்) . . . , (பெயர்) .... எனும் புனிதர்களின் திருத்தூது ஆர்வத்தால் இத்திரு அவைக்குத் திருமறையின் தொடக்கத்தை அளித்தீரே; அவர்களின் பரிந்துரையால் கிறிஸ்தவ நெறிக்கான தொடர்ந்த பற்றுணர்வைத் தந்தருள்வீராக. உம்மோடு .

அல்லது

இறைவா,
உம் ஆயர்களான (பெயர்) ...., (பெயர்)... எனும் புனிதர்களின் போதனையா எங்கள் முன்னோர்களை நற்செய்தியின் வியத்தகு ஒளிக்கு அழைத அவர்களது பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் எங்களை வளரச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவு
"யாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் ""சந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, (பெயர்) . . . , (பெயர்) . . . எனும் உம் புனிதர்களின் திருவிழாவைக் கொண்டாடும் உம் மக்கள் நாங்கள் அளிக்கும் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: நீர் கனிவுடன் எம்மை ஏற்று நாங்கள் நேர்மையான இதயம் கொண்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 15:15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது, என்கிறார் ஆண்டவர். உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

1 பேது 2:9 உரிமைச் சொத்தான மக்களே, அவருடைய மேன்மை மிக்க செயல்களை அறிவியுங்கள். அவர் இருளிலிருந்து தமது வியத்தகு ஒளிக்கு உங்களை அழைத்துள்ளார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).
2018

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது திருப்பீடத்திலிருந்து நாங்கள் பெற்றுக்கொள்ளும் மீட்பு எங்களுக்குப் பேரின்பம் தருவதாக; (பெயர்) . . . , (பெயர்) ... எனும் புனிதர்களின் விழாவில் உம் நன்மைகளில் ஆர்வம் கொண்டு எங்கள் நம்பிக்கையின் உயர்மதிப்புள்ளத் தொடக்கத்தைப் போற்றி உம் புனிதர்களின் கூட்டத்தில் நீர் வியப்புக்கு உரியவர் எனப் பறைசாற்றுவோமாக. எங்கள்.

==============22^ 9070 ^-----------

'V. மறைத்தூதுப் பணியாளர்கள்
மறைத்தூது மறைச்சாட்சியர் (பக். 912 - 913).

வருகைப் பல்லவி

இறைவனின் நண்பரான புனிதர்கள் இவர்களே! இறை உண்மை .
கரைத்து, மாட்சி பெற்றவர்கள் இவர்களே (பாஸ்கா காலத்தில் அல்லேலூயா).

அல்லது

திபா 17:50; 22:23
உம் மக்களிடையே உம்மைப் போற்றுவேன். ஆண்டவரே, உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன் (பாஸ்கா காலத்தில் அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, நம்பிக்கையற்றோரை ஆயரான புனித (பெயர்) ... வழியாக இருளிலிருந்து உண்மையின் ஒளிக்கு அழைத்தீரே; அவருடைய பரிந்துரையால் நம்பிக்கையில் நாங்கள் தொடர்ந்து நிலைத்து நிற்கவும் அவர் போதித்த நற்செய்தியின் எதிர்நோக்கில் என்றும் வாழவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

அல்லது

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, ஆயரான புனித (பெயர்) ... இன் மாட்சியைக் கொண்டாடும் இந்நாளின் மகிழ்ச்சியைப் புனிதப்படுத்தியுள்ளீரே; அதனால் அவர் தணியா ஆர்வத்துடன் எப்பொழுதும் தமதாக்கிக் கொண்ட அதே நம்பிக்கையை, நாங்கள் உறுதியாய்ப் பற்றிக்கொள்ளவும் எங்கள் செயல்களில் நிறைவு செய்யவும் அருள்வீராக. உம்மோடு

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, புனித (பெயர்) . . . இன் விழாவில் 'நாங்கள் ஒப்புக்கொடுக்கும் பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; இவ்வாறு ஆண்டவருடைய பாடுகளின் மறைநிகழ்வுகளைக் கொண்டாடும் நாங்கள் அதற்கு ஏற்றவாறு வாழ வரம் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

எசே 34:15 நானே என் மந்தையை மேய்ப்பேன்; நானே அவற்றை இளைப்பாறச் செய்வேன், என் கிறார் ஆண்டவர் (பாஸ்கா 'காலத்தில், அல்லேலூயா).

அல்லது

மத் 10:27 நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள், என்கிறார் ஆண்டவர். நீங்கள் காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின்
மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உண்மையின் நம்பிக்கைக்காக புனித (பெயர்) ... அயராது உழைத்துத் தமது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்; அதனால் இம்மறை நிகழ்வின் வல்லமையால் உம் அடியார்களை அதே நம்பிக்கையில் உறுதிப்படுத்தி அவர்கள் தங்கள் வார்த்தையாலும் வாழ்வாலும் எங்கும் அதை எடுத்துரைக்கச் செய்வீராக. எங்கள்.

வருகைப் பல்லவி

காண். எசா 52:7 அமைதியை அறிவித்துப் பறைசாற்றும், நலம் தரும் செய்தியைப் பறைசாற்றி மீட்பை அறிவிக்கும் காலடிகள் மலைகள்மேல் எத்துணை
அழகாய் இருக்கின்றன (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா. திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உமது திரு அவையைப் புனித (பெயர்) . . . இன் மறை ஆர்வத்தாலும் திருத்தூது அக்கறையாலும் வளரச் செய்தீரே; இவ்வாறு அவருடைய பரிந்துரையால் நம்பிக்கையிலும் புனிதத்திலும் 'நாங்கள் என்றும் புது வளர்ச்சி பெற அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுடைய மன்றாட்டுகளைக் கேட்டு பாவங்கள் அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்தருளும்; இவ்வாறு நாங்கள் நிகழ்த்தும் இம்மறைநிகழ்வுகள் புனிதமாக்கும் உமது அருளால் எங்களைத் தூய்மைப்படுத்துவனவாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மாற் 16:15; மத் 28:20தங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என் கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).
யோவா 15:4-5

அல்லது

நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).
Hi 10 11

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, புனித (பெயர்) . . . திருத்தூதுப் படிப்பினையால் நம்பிக்கையைப் போதித்து, அக்கறையுடன் பாதுகாத்தார்; நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு அதே நம்பிக்கையை எங்களுள் ஊட்டி வளர்ப்பதாக. எங்கள்.

வருகைப் பல்லவி

திபா 95:3-4 பிற இனத்தாருக்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். ஏனெனில் ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத்தக்கவர் (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா..

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உமது சொல்லற்கரிய இரக்கத்தால் புனித (பெயர்)... கிறிஸ்துவின் விலைமதிப்பில்லாச் செல்வங்களை நற்செய்தியாக அறிவித்தார்; அவருடைய பரிந்துரையால் நாங்கள் உம்மைப் பற்றிய அறிவில் வளரவும் அனைத்து நற்செயல்களால் கனி தந்து, நற்செய்தியின் உண்மைக்கு ஏற்ப உம் திருமுன் நேர்மையுடன் நடக்கவும் அருள்வீராக. உம்மோடு .

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, (பெயர்) .... எனும் உம் புனிதரின் நினைவை எடுத்துரைக்கும் இன்று உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் மீது விண்ணினின்று உமது ஆசியைப் பொழிந்தருளும்; இவற்றிலிருந்து உண்ணும் நாங்கள் பாவங்கள் அனைத்தினின்றும் பாதுகாக்கப்பெற்று | விண்ணக விருந்தால் நிரப்பப்படுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். லூக். 10:1,9 இறையாட்சி உங்களிடையே நெருங்கி வந்து விட்டது என நகரங்களுக்கு அறிவிக்க ஆண்டவர் சீடர்களை அனுப்பினார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).
2018

அல்லது

காண். மத் 13:8,23 நல்ல நிலத்தில் விழுந்த விதையாகிய இவர்கள் சீரிய, நல் உள்ளத்தோடு பொறுமையுடன் பலன் தருவர் (பாஸ்கா காலத்தில்,
அல்லேலூயா ).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட உம் திரு உணவு எங்களுக்கு வாழ்வளிப்பதாக; இவ்வாறு (பெயர்) ... எனும் உம் புனிதரின் நினைவுக்கொண்டாட்டத்தில் மகிழ்வுறும் நாங்கள், அவருடைய திருத்தூது ஆர்வத்தின் எடுத்துக்காட்டால் பயன் அடைவோமாக. எங்கள்.

=============↑ பக்கம் 931

====================

image