சுருக்கமான சிலுவைப்பாதை இங்கே

சிலுவைப்பாதை

a

வுநஒவந யடவநசயெவகை

(பீடத்துக்கு முன்பாக:)

திருச்சிலுவைப் பாதைதொடக்க செபம்

முதல்வர்:பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென்!

எல்லோரும்:இரக்கத்தின் ஊற்றே இறைவா, உம் திருமகன்இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள்நினைவுகூர்கின்றோம். அவர் நடந்துசென்ற சிலுவையின்பாதையில் அவரைப் பின்சென்று நடந்திட நாங்கள்வந்துள்ளோம். இறுதிவரை இயேசுவின் உண்மைச்சீடராக நாங்கள் வாழ வரமருள வேண்டுமென்று உம்மைஇறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்!

 

சுருக்கமான உத்தம மனஸ்தாப ஜெபம்:

என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும் , நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.

திவ்விய இயேசுவே! எங்களுக்காகவும் உத்தரிப்புநிலை ஆன்மாக்களுக்காகவும் சிலுiவைப் பாதையைத் தியானிப்பவர்களுக்கு அளிக்கப்படும் பலன்களை அடைய விரும்பி, உம் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

புனித மரியாவே! வியாகுல அன்னையே! இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நீர் உடனிருந்து, அவருடைய பாடுகளில் பங்கேற்றது போல, நாங்களும் எங்கள் அயலார் அனுபவிக்கும் துன்பங்களில் அவர்களுடன் இருந்து துணைபுரியும் ஆற்றலைப் பெற உம் திருமைந்தனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

 

----------------------------

பழிகளைப் சுமத்திப் பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்பளித்தார்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

முதலாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்:

a

விவிலியச் சிந்தனை(மத்தேயு 27:1-2, 22-24, 26)
பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின்மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்குஎதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டிஇழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.பிலாத்து அவர்களிடம், #8220;அப்படியானால் மெசியா என்னும்இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்றுகேட்டான். அனைவரும், #8220;சிலுவையில் அறையும்” என்றுபதிலளித்தனர். அதற்கு அவன், #8220;இவன் செய்த குற்றம்என்ன?” என்று கேட்டான். அவர்களோ, #8220;சிலுவையில்அறையும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை,மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு,கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து,#8220;இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை.நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறித் தன்கைகளைக் கழுவினான். அப்போது அவன் பரபாவைஅவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில்அறையுமாறு ஒப்புவித்தான்.

செபம்: (எல்லோரும்)
எங்கள் அன்பு இயேசுவே! யாதொரு குற்றமோ பாவமோஅறியாத உம்மைச் சாவுக்குத் தீர்ப்பிட்டார்கள். வாழ்வும்,வழியும், உண்மையுமான உம்மையே நாங்கள்பின்பற்றவும், தவறான தீர்ப்பு வழங்காதிருக்கவும்எங்களுக்கு அருள்தாரும். ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்.

 

----------------------------

தாளாச் சிலுவையைச் சுமக்க வைத்தார் -உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


இரண்டாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.

a

விவிலியச் சிந்தனை(மத்தேயு 27:27-31)
ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன்மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்தபடைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்றுகூட்டினர் அவருடைய ஆடைகளை உரிந்து,கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்குஅணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரதுதலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒருகோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு,#8220;யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி ஏளனம்செய்தனர் அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்துஅவருடைய தலையில் அடித்தனர் அவரை ஏளனம்செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக்கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்துஅவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச்சென்றனர்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உம்மேல் சுமத்தப்பட்ட சிலுவைஎங்கள் பாவங்களின் விளைவு என்பதைஉணர்கின்றோம். யார்மீதும் அநியாயமாகப்பழிசுமத்தாமல் இருக்கவும், எங்கள் வாழ்வில் வருகின்றதுன்பங்கள் என்னும் சிலுவையைப் பொறுமையோடுஏற்றுக்கொள்ளவும் எங்களுக்கு அருள்தாரும். ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

மூன்றாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் குப்புற விழுகிறார்.

a

விவிலியச் சிந்தனை(புலம்பல் 1:14, 16-17)
என் குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால்பூட்டப்பட்டுள்ளது; அவை பிணைக்கப்பட்டு, என்கழுத்தைச் சுற்றிக் கொண்டன் அவர் என்வலிமையைக் குன்றச் செய்தார் நான் எழ இயலாதவாறுஎன் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார்.இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன் என் இருகண்களும் கண்ணீரைப் பொழிகின்றன் என் உயிரைக்காத்து ஆறுதல் அளிப்பவர் எனக்கு வெகு தொலையில்உள்ளார் பகைவன் வெற்றி கொண்டதால் என்பிள்ளைகள் பாழாய்ப் போயினர். சீயோன் தன் கைகளைஉயர்த்துகின்றாள் அவளைத் தேற்றுவார் யாருமில்லைசூழந்து வாழ்வோர் யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறுஆண்டவர் கட்டளையிட்டார் எருசலேம் அவர்களிடையேதீட்டுப்பொருள் ஆயிற்று.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! சிலுவையின் பாரத்தால் நீர் முகம்குப்புறக் கீழே விழுந்தீர். துன்ப துயரங்களின் சுமையால்வாடுகின்ற மக்களைக் கனிவோடு கண்ணோக்கிடஎங்களுக்கு அருள்வீராக. ஆமென்

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னைத் துயருற்றாள்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

நான்காம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்.

a

விவிலியச் சிந்தனை(புலம்பல் 2:13, 15, 18)
மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்னசொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள்சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னைஇணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம்கடலைப்போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்கயாரால் முடியும்? அவ்வழியாய்க் கடந்து செல்வோர்உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர்! மகள்எருசலேமை நோக்கித் தலையை ஆட்டிச்சீழ்க்கையடித்தனர்! #8220;அழகின் நிறைவும் மண்ணுலகின்மகிழ்ச்சியுமாக இருந்த மாநகர் இதுதானா?” என்றனர்.அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக்கூக்குரலிடுகின்றது; மகள் சீயோனின் மதிலே! இரவும்பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஒய்வுவேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்!

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உம்மை ஈன்றெடுத்த அன்னை மரியாஉம் துன்பங்களைக் கண்டு மனமுடைந்தார். அந்தஅன்னையின் அரவணைப்பில் நாங்கள் என்றும்மகிழ்வுகொள்ள அருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

ஐந்தாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்.

a

விவிலியச் சிந்தனை(லூக்கா 23:26)
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன்என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார்.அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின்சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்துகொண்டுபோகச் செய்தார்கள்.(மத்தேயு 16:24)பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, #8220;என்னைப் பின்பற்றவிரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத்தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” என்றார்.(மத்தேயு 11:29-30)இயேசு, #8220;நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டுஎன்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள்உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என்நுகம் அழுத்தாது என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! கடின சிலுவையை நீர் சுமந்துசெல்லசீமோன் என்பவர் துணைசெய்தார். எங்கள் சகோதரர்சகோதரிகளின் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு,அவர்களின் சிலுவைப் பாரத்தைக் குறைத்திடஎங்களுக்குத் துணைசெய்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

நிலையாய்ப் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

ஆறாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.

a

விவிலியச் சிந்தனை(மத்தேயு 25:37-40)
அதற்கு நேர்மையாளர்கள் #8220;ஆண்டவரே, எப்பொழுதுஉம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம்,அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத்தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக்கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடைஇல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக்கண்டு உம்மைத்தேடி வந்தோம்?” என்று கேட்பார்கள்.அதற்கு அரசர், #8220;மிகச் சிறியோராகிய என் சகோதரர்சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம்எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச்சொல்லுகிறேன்” எனப் பதிலளிப்பார்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! வியர்வையாலும் இரத்தத்தாலும்கறைபட்ட உம் திருமுகத்தை ஒரு பெண்மணிஅன்போடு துடைத்து உமக்கு ஆறுதலளித்தார். எங்கள்வீட்டிலும் நாட்டிலும் உலகிலும் கவலையால் வாடும்அனைவரின் துன்பங்களையும் துடைத்திட எங்களுக்குஅருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

ஏழாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.

a

விவிலியச் சிந்தனை(எசாயா 53:3-6)
அவர் இகழப்பட்டார் மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்வேதனையுற்ற மனிதராய் இருந்தார் நோயுற்று நலிந்தார்காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில்அவர் இருந்தார் அவர் இழிவுபடுத்தப்பட்டார் அவரைநாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம்பிணிகளைத் தாங்கிக்கொண்டார் நம் துன்பங்களைச்சுமந்து கொண்டார் நாமோ அவர் கடவுளால்வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும்சிறுமைப்படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். அவரோநம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் நமக்குநிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறிஅலைந்தோம் நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்ஆண்டவரோ நம்அனைவரின் தீச்செயல்களையும்அவர்மேல் சுமத்தினார்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! சிலுவையின் பாரம் உம் தோள்களைஅழுத்தியதால் நீர் மீண்டும் ஒருமுறை கீழே விழுந்தீர்.ஆனால் மன உறுதியோடு மீண்டும் பயணத்தைத்தொடர்ந்தீர். நாங்களும் ஏமாற்றத்தையும் தோல்வியையும்கண்டு துவழ்ந்துவிடாமல் துணிந்து எழுந்து, உம்மேல்நம்பிக்கைவைத்து முன்னேறிச் சென்றிட அருள்வீராக.ஆமென்!

. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்.

----------------------------

விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
மொழி நீர் நல்கி வழி தொடர்ந்தீர்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

எட்டாhம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.

a

விவிலியச் சிந்தனை(லூக்கா 23:27-28)
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப்புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னேசென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி,#8220;எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும்அழுங்கள்” என்றார்.(திருத்தூதர் பணிகள் 21:13)அதற்குப் பவுல் மறுமொழியாக, #8220;நீங்கள் அழுது ஏன்என் உள்ளத்தை உடைக்கிறீர்கள்? நான் ஆண்டவர்இயேசுவின் பெயருக்காக எருசலேமில் கட்டப்படுவதற்குமட்டுமல்ல, சாவதற்கும் தயார்” என்றார்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உமக்கு நேர்ந்த சொல்லற்கரியதுன்பத்தையும் பாராமல் நீர் பிறருக்கு ஆறுதல் கூறினீர்.தன்னலம் பாராது பிறர்நலம் நோக்கவும்,துன்புறுவோருக்கு ஆறுதல் கூறவும் எங்களுக்குநல்மனத்தைத் தந்து, தூய வழியில் நாங்கள் நடந்திடஅருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திட மெய் நொந்தீர்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

ஒன்பதாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.

a

விவிலியச் சிந்தனை(திருப்பாடல்கள் 22:1; 40:11-13)
இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக்கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?...ஆண்டவரே, உமது பேரிரக்கத்தை எனக்குக் காட்டமறுக்காதேயும் உமது பேரன்பும் உண்மையும்தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக! ஏனெனில்எண்ணிறந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன்என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையைமறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிடமிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து என்னைக்கைவிட்டது. ஆண்டவரே, என்னை விடுவிக்கமனமிசைந்தருளும் ஆண்டவரே, எனக்கு உதவி செய்யவிரைந்து வாரும்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! மீண்டும் மீண்டும் கீழே விழுந்ததால்உம் உடல் எல்லாம் இரத்தமயமாயிற்று. எங்கள்பாவங்களுக்காக நீர் நொறுக்கப்பட்டீர். எங்கள்சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் நாங்கள்தூய்மையோடு வாழவும், பாவத்தை வெறுத்து, உம்அன்பில் எந்நாளும் வளரவும் எங்களுக்கு அருள்வீராக.ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

உடைகள் களைந்திட உமை தந்தீர் - ரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

பத்தாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.

a

விவிலியச் சிந்தனை(யோவான் 19:23-24)
இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர்அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்துஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள்.அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்தஅங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல்நெய்யப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஒருவரை ஒருவர்நோக்கி, #8220;அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்கும்கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப்போடுவோம்” என்றார்கள். #8220;என் ஆடைகளைத்தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப்போட்டார்கள்” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறுநிறைவேறியது.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உம் உடைகளைக் களைந்தவர்கள்உம்மை அவமானத்திற்கு உள்ளாக்கினார்கள். வறுமை,அரசியல் அடக்குமுறை, அதிகாரப்பாணி போன்றஅவலங்களால் மனித உரிமையும் மாண்பும் உரியப்பட்டுநிர்வாணமாக்கப்படுகின்ற எம் சகோதரர் சகோதரியரைநினைத்துப் பார்க்கின்றோம். உம் உடன்பிறப்புகளாகியஅவர்களது மாண்பினைக் காத்துப் போற்றிட எங்களுக்குஅருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

பதினோராம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்.

a

விவிலியச் சிந்தனை(யோவான் 19:16-19,25)
அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறுஅவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம்பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு சிலுவையைத்தாமே சுமந்துகொண்டு #8220;மண்டை ஒட்டு இடம்”என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில்#8220;கொல்கொதா” என்பது பெயர். அங்கே அவர்கள்இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும்சிலுவைகளில் அறைந்தார்கள் அவ்விருவரையும் இருபக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச்சிலுவையின் மீது வைத்தான். அதில் #8220;நாசரேத்து இயேசுயூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது. சிலுவைஅருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும்குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலாமரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! சிலுவையில் நீர் அறையப்பட்டபோதுஉம் கைகளையும் கால்களையும் ஆணிகளால்துளைத்தார்கள். உம் திருக்காயங்களால் நீர் எங்கள்காயங்களைக் குணமாக்கினீர். நீர் சிந்திய இரத்தத்தால்நாங்கள் கழுவப்பட்டுள்ளோம். அவமானச் சின்னமாகியசிலுவையை நீர் மீட்பின் கருவியாக்கியதுபோலநாங்களும் எங்கள் துன்பதுயரங்களை உம்சிலுவையோடு இணைத்து உம் மீட்பின் பலன்களைஇடைவிடாது துய்த்து அனுபவித்திட எங்களுக்குஅருள்வீராக. ஆமென்!

. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்.

----------------------------

இன்னுயிர் அகன்றது உமைவிட்டு - பூமி
இருளினில் ஆழ்ந்தது ஒளி கெட்டு
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

பன்னிரண்டாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையில் இறக்கிறார்.

a

விவிலியச் சிந்தனை(மத்தேயு 27:45-46, 50, 54)
நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்றுமணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்றுமணியளவில் இயேசு, #8220;ஏலி, ஏலி லெமா சபக்தானி!”அதாவது, #8220;என் இறைவா, என் இறைவா, ஏன்என்னைக் கைவிட்டீர்!” என்று உரத்த குரலில்கத்தினார். இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்திஉயிர்விட்டார். நூற்றுவர் தலைவரும் அவரோடுஇயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும்நிகழ்ந்த யாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, #8220;இவர்உண்மையாகவே இறைமகன்” என்றார்கள்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! வானத்திற்கும் பூமிக்கும் இடையே நீர்சிலுவையில் தொங்கினீர். மனிதரைக் கடவுளின்பிள்ளைகளாக்கிட நீர் எம்மில் ஒருவராக மாறினீர்.சிலுவையில் தொங்கியபோது நீர் உரைத்த சொற்களைநினைத்துப் பார்க்கிறோம். #8220;தாகமாயிருக்கிறது” என்றுகூறிய இயேசுவே, எங்கள் ஆன்ம தாகத்தைவளர்த்தருளும். #8220;எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறிஉயிர்நீத்த இயேசுவே, நாங்கள் கடவுளின் திருவுளத்தைஇறுதிவரை நிலைத்துநின்று நிறைவேற்றிட அருள்தாரும்.ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

துயருற்றுத் துடித்தார் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலினை மடி சுமந்து
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

பதின்மூன்றாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இறந்த இயேசுவை அவர் தாயார் மடியில் வளர்த்துகிறார்கள்.

a

விலியச் சிந்தனை(யோவான் 19:38-40)
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர்இயேசுவின் சீடர்களுள் ஒருவர் யூதருக்கு அஞ்சியதால்தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக்காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலைஎடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதிகேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்புவந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டுபோனார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்தநிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர்வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்துஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்.அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்கமுறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால்சுற்றிக் கட்டினார்கள்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உயிரற்ற உம் சடலத்தை உம்அன்னை மரியா தம் மடியில் கிடத்தி அழுது புலம்பினார்.அவரை எங்களுக்கு அன்னையாக அளித்ததற்காகஉமக்கு நன்றி கூறுகின்றோம். எங்கள்மேல் கொண்டஎல்லையற்ற அன்பினால் நீர் எங்களுக்காகஉயிர்துறந்தீர். உமது சாவு எங்களுக்கு வாழ்வுவழங்கிற்று. நாங்களும் உமது புகழ்ச்சிக்காகவும்பிறருடைய ஈடேற்றத்திற்காகவும் அயராது உழைத்திடஅருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்
அடங்கிய கல்லறை உமதன்று
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

பதினான்காம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரைக் கல்லரையில் அடக்கம் செய்கிறார்கள்.

a

விவிலியச் சிந்தனை(யோவான் 19:41-42)
அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்த இடத்தில்ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்றுஇருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம்செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்தநாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில்இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம்செய்தார்கள்.(லூக்கா 23:55-56)கலிலேயாவிலிருந்து அவரோடுவந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்றுகல்லறையைக் கண்டார்கள் அவருடைய உடலைவைத்த விதத்தைப் பார்த்து விட்டு, திரும்பிப் போய்நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும்ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள்ஒய்வுநாளில் ஒய்ந்திருந்தார்கள்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உமது உடல் கல்லறையில்வைக்கப்பட்டாலும் மண்ணோடு மண்ணாகிஅழிந்துபோகவில்லை. நாங்களும் திருமுழுக்கின்வழியாக உம்மோடு கல்லறையில் அடக்கப்பட்டோம்.பாவத்திற்கு இறந்தோம். ஆனால், நீர் புத்துயிர் பெற்றுஎழுந்ததுபோல எங்களுக்கும் ஆன்மீக வாழ்வு அளித்து,புதிய மனிதர்களாக வாழ நீர் வழிசெய்தீர். யாம் பெற்றவாழ்வு இவ்வையகம் பெற்று மகிழ்ந்திட அருள்வீராக.ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

முன்னர் பன்முறை உரைத்தது போல் - நீர்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தீர்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

பதினைந்தாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு சாவை வென்று உயிர்த்தெழுகிறார்

a

 

விவிலியச் சிந்தனை(லூக்கா 24: 1-6)
வாரத்தின் ஆதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள்ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக்கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்கல்லறை வாயிலிலிருந்து கல் புரட்டப்பட்டிருப்பதைக்கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கேஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போதுதிடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடைஅணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர். இதனால்அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்துநின்றுகொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களைநோக்கி, #8220;உயிரோடு இருப்பவரைக் கல்லறையில்தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன்எழுப்பப்பட்டார்” என்றனர்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! கடவுளின் ஆட்சியை இவ்வுலகில்கொணர நீர் வந்தீர். உமக்கு எதிராகச் செயல்பட்ட தீயசக்திகள் உமக்குக் கொலைத்தண்டனைவிதித்தபோதிலும், நீர் சாவின்மீது வெற்றிகொண்டீர்.எங்களைப் பாவத்தின் அடிமைத் தளையிலிருந்துவிடுவித்து எங்களுக்குப் புதுவாழ்வு தந்தீர்.உயிர்த்தெழுந்த ஆண்டவராகத் தந்தையின் வலம்அமர்ந்து எங்கள் அரசராக ஆட்சிசெய்கின்றீர். #8220;உலகமுடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்”என்று வாக்குறுதி அளித்துள்ளீர். உமது அன்புச் சீடராகநாங்கள் வாழவும், நீர் சென்ற வழியில் நடக்கவும்எங்களுக்கு அருள்வீராக. ஆமென்

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

 

பொறுத்தருளும் கர்த்தாவே! உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும். என்றென்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிராதேயும் சுவாமி. தயவாயிரும் சுவாமி தயவாயிரும். - மூன்று முறை

திருத்தந்தையின் கருத்துகளுக்காக ஒரு பர. அருள். திரி. மந்திரம் ஜெபிப்போம்.

 

நன்றி : அருட் சகோதரிகள் ஜோஸ்பின், கிளாரா, தேவி, (இயேசுவின் திருஇருதய கன்னியர் சபை - இத்தாலி )

 

 


சுருக்கமான சிலுவைப் பாதை .

பீடத்துக்கு முன்பாக:

என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும் , நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.

திவ்விய இயேசுவே! எங்களுக்காகவும் உத்தரிப்புநிலை ஆன்மாக்களுக்காகவும் சிலுiவைப் பாதையைத் தியானிப்பவர்களுக்கு அளிக்கப்படும் பலன்களை அடைய விரும்பி, உம் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

புனித மரியாவே! வியாகுல அன்னையே! இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நீர் உடனிருந்து, அவருடைய பாடுகளில் பங்கேற்றது போல, நாங்களும் எங்கள் அயலார் அனுபவிக்கும் துன்பங்களில் அவர்களுடன் இருந்து துணைபுரியும் ஆற்றலைப் பெற உம் திருமைந்தனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

 

மைந்தனார் சிலுவை மீது மாத்துயருடன் வருந்த
நொந்தழுதாள் தாய் மரி

முதலாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்:

1

திவ்விய இயேசுவே! சிலுவையிலே நீர் அறையுண்டு சாகத் தீர்வையிடப் பட்டதை தியானித்து, நாங்கள் உம்மை வணங்குகிறோம். அகோரத் தீர்வையிலே நின்று எங்களை மீட்டருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்.

-------------------

திருமகன் அறையுண்ட சிலுவை அடியில் நின்று
தேவதாய் நொந்தழுதாள்


இரண்டாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.

2

திவ்விய இயேசுவே! நீர் பாரமான சிலுவையைச் சுமந்து சென்றதைத் தியானித்து உம்மைத் தொழுகிறோம். எங்களுக்கு இவ்வுலகில் வருகிற வேதனைகளையும் தீமைகளையும் பொறுமையோடு அநுபவிக்க அருள் தாரும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

------

வேதனைக் கடலமிழ்ந்த மாதா ஆத்துமம் வதைய
வாள் பாய்ந்தூடுருவிற்று

மூன்றாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் குப்புற விழுகிறார்.

3

திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே முதல் முறை குப்புற விழுந்ததைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் செய்கிற பாவங்களிலே மூர்க்கராய் நிலை கொள்ளாமல் உடனே அவைகளை விட்டு எழுந்திட உதவிருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

---------------

நேச மகனை இழந்த தாய் அனுபவித்த துயர்
தானுரைக்க நாவுண்டோ

நான்காம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்.

4

திவ்விய இயேசுவே! உம்முடைய புனித அன்னை உமக்கு எதிர்கொண்டு வருகிறதைக் கண்டு நீர் சொல்லிலடங்கா வேதனையை அநுபவித்ததை தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் சாகும் வேளையில் வியாகுல அன்னையின் அடைக்கலத்தை அடைய உதவிருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------

அருமையாய் ஈன்ற சுதன் அவஸ்தயைக் கண்டிளகி
உருகிப் புலம்பினாள்

ஐந்தாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்.

5

திவ்விய இயேசுவே! நீர் சிலுவை சுமந்து போகிறதற்குச் சீரேன் ஊராராகிய சீமோன் உதவி செய்ததைத் தியானித்து உம்மைத் தொழுகிறோம். எங்களுக்கு நியமித்திருக்கிற சிலுவையாகிய துன்பங்களை உம்மோடு கூட நாங்கள் சுமக்கக் கருணை புரிந்தருளும் சுவாமி -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------

இரட்சகர் திருத்தாயார் இக்கொடிய வதைப்பட
யார் கண்டழாதிருப்பார்


ஆறாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.

6

திவ்விய இயேசுவே! வெரோணிக்கம்மாள் உம்முடைய திருமுகத்தைத் துடைத்ததை தியானித்து, உம்மை தொழுகிறோம். நாங்கள் ஆள்பார்த்து செயல்படாமல், புண்ணிய நெறியில் உறுதியாய் நடக்க உதவிருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

------------------------

திருமகன் துயரத்தால் உருகுந்தாயயைக் கண்டுள்ளம்
கரையாதார் யாருண்டு

ஏழாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம்; முறை தரையில் குப்புற விழுகிறார்.

7

திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே இரண்டாம்; முறை குப்புற விழுந்ததைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் எந்த பாவத்திலும் திரும்ப விழாதபடிக்குக் கருணை கூர்ந்தருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்.

------------------

அன்புள்ள தன் திருமகன் துன்பதுயர் அவஸ்தையுள்
தன் ஜீவன் தரக் கண்டாள்

எட்டாhம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.

8

திவ்விய இயேசுவே! உம்மை நோக்கி அழுத எருசலேம் பட்டணத்துப் பெண்களுக்கு நீர் ஆறுதல் சொன்னதைத் தியானித்து, உம்மை தொழுகிறோம். நாங்கள் புரிந்த பாவ துரோகங்களுக்காகத் துயரப்பட்டு, அவைகளுக்காக எப்போதும் அழுதுகொண்டிருக்க அருள் பொழியும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------

பட்ச ஊருணி மாதாவே பரிதவித்தே உம்மோடு
பாவி நான் அழச் செய்யும்


ஒன்பதாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.

9

திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே மூன்றாம் முறை குப்புற விழுந்ததைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் சாவான பாவத்தோடே செத்து, முடிவில்லா நரகத்திலே விழாதபடிக்கு எங்களைக் காத்தருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

------------------

ஆதி இயேசுவை நேசித்தே யான் அவருக்கினியனாய்
அன்பால் என்னுள்டம் சுடும்

பத்தாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.

10

திவ்விய இயேசுவே! உம்முடைய ஆடைகளைக் களைந்ததையும் உமக்குப் புளித்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்ததையும் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் அனைத்திலும் உம்முடைய திருவுளத்துக்குக் கீழ்படிந்து, பொறுமையோடு நடக்கக் கருணை கூர்ந்தருளும் சுவாமி.-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

-------------------

தேவதாயே தயை கூர்ந்து பாவி என்னிருதயத்தில்
இயேசு காயம் பதியும்

பதினோராம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்.

11

திவ்விய இயேசுவே! நீர் சிலுவையில் அறையப்பட்டதைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் இவ்வுலகச் செல்வங்களையும் இன்பங்களையும் மட்டுமே நாடாமல், அவற்றைக் கொண்டு விண்ணுலக அரசினைச் சம்பாதித்துக் கொள்ள அருள் தாரும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்.

----------------

சிலுவை அடியில் நின்று தேவதாயே உம்மோடே நான்
புலம்ப ஆசிக்கின்றேன்

பன்னிரண்டாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையில் இறக்கிறார்.

12

திவ்விய இயேசுவே! நீர் சிலுவை மரத்தில் உயிர் விட்டதை தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் உம்மை மாத்திரமே அன்பு செய்து, அருள் நிலையில் இறந்து விண்ணுலகில் உம்மோடே வீற்றிருக்க உதவியருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

-------------------------

கன்னியர் அரசே தாயே என் கண்ணீரை உம்முடைய
கண்ணீரோ டேற்றருளும்

பதின்மூன்றாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இறந்த இயேசுவை அவர் தாயார் மடியில் வளர்த்துகிறார்கள்.

13

திவ்விய இயேசுவே! உம்முடைய திருச்சடலத்தைத் சிலுவையினின்று இறக்கி வியாகுல அன்னையின் மடியிலே வளர்த்தியதைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். எங்களுடைய இதயத்திலே உம்முடைய திருக்காயங்களும், தூய ஆவியின் வியாகுலங்களும் பதிந்திருக்க உதவியருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

-------------------

அன்பால் அக்கினியை மூட்டி அடியேனைத் தீர்வை நாளில்
ஆதரிப்பீர் கன்னியே

பதினான்காம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரைக் கல்லரையில் அடக்கம் செய்கிறார்கள்.

14

திவ்விய இயேசுவே! உம்முடைய திருச்சடலம் அடக்கம் செய்யப்பட்டதைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் சாகுமட்டும் உம்மை நேசிக்கவும் உம்முடைய பேரின்ப அரசுக்கு வந்து சேரவும் அருள் தாரும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்
----------------------

மண் உடல் உயிர் பிரிந்தால் வான் மோட்சம் விரைவில்
சேர்ந்து வாழவும் செய்தருளும்.

 

பொறுத்தருளும் கர்த்தாவே! உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும். என்றென்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிராதேயும் சுவாமி. தயவாயிரும் சுவாமி தயவாயிரும். - ஐந்து முறை

திருத்தந்தையின் கருத்துகளுக்காக ஒரு பர. அருள். திரி. மந்திரம் ஜெபிப்போம்.