முதல் வாசகம்
பதிலுரைப் பாடல் 1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 3 தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; 6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்;
யோவான் 8:12-20 தவக்காலம் -ஐந்தாம் வாரம் திங்கள்
நற்செய்தி வாசகம் அக்காலத்தில் இயேசு மக்களைப் பார்த்து, "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்றார். பரிசேயர் அவரிடம், "உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர்; உம் சான்று செல்லாது" என்றனர். அதற்கு இயேசு, "என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தாலும் என் சான்று செல்லும். ஏனெனில் நான் எங்கிருந்து வந்தேன், எங்குச் செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. ஆனால் நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார். இருவருடைய சான்று செல்லும் என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளது அல்லவா? என்னைப் பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்" என்றார். அப்போது அவர்கள், "உம் தந்தை எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, "உங்களுக்கு என்னையும் தெரியாது; என் தந்தையையும் தெரியாது. என்னை உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்" என்றார். கோவிலில் காணிக்கைப் பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை. இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. ------------------------- ஒளியினின்று ஒளியாக யோவான் நற்செய்தியாளரின் தனிச்சிறப்பு இந்த “நானே” என்ற வார்த்தைகளில் அடங்கியிருக்கின்றது. “நானே” என்ற வார்த்தையை ஏழு முறை யோவான் பயன்படுத்துகிறார். இவை மிக ஆழமான இறையியலையும், யூத வரலாற்றையும், இயேசுவைப் பற்றிய புரிதலையும் நமக்கு எண்பிக்கிறது. இவ்வுலகினைப் படைக்கும்போது இவ்வுலகம் வெறுமையாய் இருள் பரவியிருந்தது. (தொ.நூ 1:2) அப்பொழுது இவ்விருளினை அகற்ற கடவுள் முதன் முறையாகப் படைத்தது இவ்வொளியைNயு. அவ்வொளியே அனைத்திற்கும் முதல் புள்ளியாக இருந்தது. அவ்வொளியே மற்ற அனைத்தும் உருவாக, உயிர்பெறக் காரணமாக இருந்தது. பின்னர் இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்கு நடந்து செல்லும் போது ஆண்டவர் அவர்களை வழிநடத்த பகலில் மேகத்தூணிலும் இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார். (வி.ப 13:21) இதனைப் போலவே நம் பாவ அடிமைத்தனத்திலிருந்து நமக்கு வாக்களிக்கப்பட்ட நிலைவாழ்விற்கு அழைத்துச் செல்வதே இவரின் ஒளி. ஆம் இயேசுவின் ஒளி. நம்மை வழிநடத்துவதோடு மட்டும் இவ்வொளி நின்று விடாது. இவ்வொளியின் (இயேசு) நோக்கம் என்னவென்றால் நாமும் அவரைப் போன்ற ஒளியாக வேண்டும். நம்பிக்கை அறிக்கையில் இவ்வாறு கூறுகிறோம், “கடவுளினின்றுக் கடவுளாக ஒளியினின்று ஒளியாக…” ஆம் கடவுளின் ஒளி எவ்வாறு இயேசுவின் ஒளியாக மாறியதோ, அதுபோல நாமும் இயேசுவைப் போன்ற ஒளியாக மாற வேண்டும். இதையே மத்தேயு 5:14 ல் “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்” என்று வாசிக்கின்றோம்;. இயேசுவின் ஒளியை நாம் ஒவ்வொருவரும் ஏந்துவது இச்சமூகத்தில் இருக்கும் அனைத்துத் தீய சக்திகளையும் சுட்டெரிக்க இருளாமை என்னும் அறியாமையை நீக்க, வறுமையை ஒழிக்க….. - திருத்தொண்டர் வளன் அரசு ======================== இயேசுவைப் பின்தொடர்வோம் இயேசு தன்னைப் பின்தொடர்வதைப் பற்றி இன்றைய நற்செய்தியிலே பேசுகிறார். “பின் தொடர்தல்“ என்கிற வார்த்தைக்கான கிரேக்க வார்த்தை “அகோலேதின்“ (Akoluthein). இந்த கிரேக்க வார்த்தைக்கு ஐந்து அர்த்தங்கள் தரப்படுகிறது. 1. ஒரு போர்வீரன் தனது தளபதியைப் பின்தொடர்வது. தளபதி எங்கே சென்றாலும், என்ன செய்யச் சொன்னாலும் அவரையும், அவரது கட்டளையையும் பின்தொடர்வது. 2. ஓர் அடிமை தனது தலைவனைப் பின்தொடர்வது. அடிமைக்கு உரிமையில்லை. தலைவனைப் பின்தொடர வேண்டும். அதுதான் அவனது கடமை. 3. ஒரு ஞானியின் அறிவுரையைப் பின்பற்றுவது. நமது வாழ்வில் பல பிரச்சனைகள் வருகிறபோது, மூத்தவர்களிடத்தில் ஆலோசனைக்காகச் செல்கிறோம். அவர்களது அனுபவத்தில் கொடுக்கும் ஆலோசனைகளை ஏற்று நடந்து, அதனை பின்பற்றுகிறோம். 4. நாட்டின் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கக்கூடிய நிலை. ஒவ்வொரு நாட்டிலும் கொடுக்கப்பட்டிருக்கிற சட்டங்களை, மதித்து அதற்கேற்ப, அதனை அடியொற்றி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுதல். 5. ஆசிரியரின் அறிவுரையை ஏற்று நடப்பது. நமக்கு அறிவுபுகட்டுபவர் ஆசான். அவர் நம்மை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்பவர். அவருடைய அறிவுரையை நாம் பின்பற்றுகிறோம். இயேசுவைப் பின்பற்றுவது என்பது, நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருக்கே கொடுத்து பின்பற்றுவதுதான் என்பதை, மேலே குறிப்பிட்டிருக்கிற ஐந்து அர்த்தங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன. இத்தகைய பின்தொடர்தலைத்தான் இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். இயேசு நமக்கு ஆசிரியராக, ஞானியாக. தளபதியாக, தலைவராக, நல்வழியில் நடத்திச்செல்பவராக இருக்கிறார். அவரைப்பின்பற்றினால் நமக்கு நிச்சயம் நிறைவாழ்வு கிடைக்கும். சீடர்கள் இயேசுவை முழுமையாகப் பின்பற்றினார்கள். அதற்காக அனைத்தையும் தியாகம் செய்தார்கள். அதேபோல நாமும் இயேசுவை முழுமையாகப் பின்பற்றுவோம்.
-------------------------------------------------------- நிலையான பேரின்ப வாழ்வு இயேசுவுக்கும், யூதச்சங்கத்தினருக்கும் நடைபெறும் இந்த வாக்குவாதம் யெருசலேம் ஆலயத்தின் கருவூலப்பகுதியில் நடைபெறுகிறது. ஆலயக்கருவூலப்பகுதி ஆலயத்தின் பெண்கள் முற்றத்தில் அமைந்திருந்தது. யெருசலேம் ஆலயத்தின் முதல் முற்றம் புறவினத்தார்க்கு உள்ள முற்றம். இரண்டாம் முற்றம் பெண்களுக்கானது. பெண்கள் முற்றத்தைச்சுற்றி அமைந்த சுவற்றில் 13 இடங்களில் காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவான வகையில் ‘எக்காளம்’ போன்ற ஒரு அமைப்பை வடிவமைத்திருந்தனர். ஒவ்வொரு காணிக்கைப்பெட்டியிலும் போடும் பணமும், குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. முதல் இரண்டு காணிக்கைப்பெட்டிகளில் ஒவ்வொரு யூதரும் செலுத்த வேண்டிய ஆலய வரிக்கான பணமாகும். 3 வது மற்றும் 4வது பெட்டிகளில், தூய்மைப்படுத்தும் சடங்கிற்காக காணிக்கை செலுத்தப்படும் இரண்டு மாடப்புறாக்கள் வாங்குகிற பணம் செலுத்தப்பட்டது. 5வது பெட்டியில், பலிசெலுத்துவதற்கு வாங்கப்படும் விறகுகளை வாங்குவதற்குப் பயன்பட்டது. 6வது பெட்டியில் சாம்பிராணி வாங்குவதற்கான காணிக்கை போடப்பட்டது. ஏழாவது பெட்டியில், பலிசெலுத்தப்பயன்படும் தங்கப்பாத்திரங்களை பராமரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. ஏனைய 6 காணிக்கைப்பெட்டிகளில், தங்களுடைய விருப்பக்காணிக்கைகளை மக்கள் போடுவது வழக்கமாக இருந்தது. எனவே, இந்த ஆலயக்கருவூலப்பகுதி எப்போதுமே மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக இருந்தது. இத்தகைய ஆலயத்தின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் வாக்குவாதம் நடைபெறுகிறது. கூடாரத்திருவிழாவின் முதல் நாளில் மாலை வேளையில், ஒளியின் திருவிழா ஆலயத்தின் பெண்கள் முற்றத்தில் உள்ள வளாகத்தில் கொண்டாடப்பட்டது. வளாகத்தின் நடுவில் நான்கு மிகப்பெரிய தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த தீபங்கள் யெருசலேம் முழுவதற்கும் ஒளி தருமாறு, ஏற்றப்பட்டது. மாலையில் ஏற்றப்படும் இந்த தீபம் அடுத்தநாள் காலை வரை எரிந்து ஒளிதரும். இந்த ஒளியின் முன்னால் இஸ்ரயேலின் பெரியவர்கள் ஆடிப்பாடி மகிழ்வார்கள். இயேசு இந்தப்பிண்ணனியில் தான், நானே உலகின் ஒளி என்கிறார். அதாவது, இங்கே இந்த முற்றத்தில் எரியவிடப்படும் தீபம் மாலை எரிந்து காலையில் அணைந்து விடும். யெருசலேம் நகர் மட்டும் ஒளி கொடுக்கும். ஆனால், நானோ வாழ்வு முழுவதும், இந்த உலகத்திற்கே ஒளி கொடுக்கும் விளக்கு என்று இயேசு சொல்கிறார். கிரேக்கத்தில் ஒளி என்பதை வாழ்வு தரக்கூடியதாக ஒப்பிடுகிறார்கள். எவ்வாறு ஒளி இல்லாமல், பூக்கள் மலராதோ, அதேபோல் இயேசு என்னும் ஒளி இல்லாமல் நமது வாழ்வு மலர முடியாது. இங்கே நமக்குத் தரப்படும் பதில்: இயேசு இல்லாமல் நமக்கு வாழ்வு இல்லை. இயேசுவை பின்பற்றிச்சென்றால் மட்டுமே நமக்கு வாழ்வு உண்டு என்பதுதான். வாழ்வு என்பது இந்தப்பூமியில் வாழ்கிற வாழ்வு மட்டுமல்ல, இறப்பிற்கு பின்னாலும் வாழப்படுகிற வாழ்வு. அந்த நிலையான வாழ்வைப்பெற நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும். அதாவது, இயேசு நமக்கு கற்றுத்தந்திருக்கிற வாழ்வின் மதிப்பீடுகளை நாம் வாழ்வில் பின்பற்ற வேண்டும். அத்தகைய வாழ்வு நமக்கு நிலையான பேரின்ப வாழ்வைப்பெற்றுத்தரும். - அருட்பணி. தாமஸ் ரோஜர் ======================= ”உலகின் ஒளி நானே !” இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, #8220;உலகின் ஒளி நானே. என்னைப் பின் தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார். வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் ” என்னும் ஆண்டவர் இயேசுவின் அருள்மொழிகளை இன்று தியானிப்போம். யோவானின் இறையியல் மொழியில் ‘இருள்’ என்பது பாவத்தைக் குறிக்கிறது. இறைவனை விட்டுப் பிரிந்த நிலையைச் சுட்டுகிறது. எடுத்துக்காட்டாக, இறுதி இராவுணவின்போது யூதாஸ் இயேசுவைவிட்டுப் பிரிந்துசென்றபோது, யோவான் சொல்லும் வார்த்தை: #8220;அது இரவு நேரம்” (யோவா 13:30). #8220;பவுலடியாரும் இரவு முடியப்போகிறது. பகல் நெருங்கி உள்ளது. ஆகவே, இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்வோமாக. பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்துகொள்வோமாக. களியாட்டம், குடிவெறி, கூடாஒழுக்கம், காமவெறி, சண்டை சச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக” (உரோ 13:12-13) என்று கூறுகிறார். எனவே, நாம் இருளில் நடவாமல், ஒளியில் நடக்க நமக்கு ஒளியாக இருக்கிறார் ஆண்டவர் இயேசு. அவரைப் பின்தொடர்வோமாக. நமது வாழ்வு ஒளி நிறைந்த வாழ்வாக அமையட்டும். மன்றாடுவோம்: உலகின் ஒளியான இயேசுவே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். எங்களை இருளின் செயல்களிலிருந்து விடுவித்து, ஒளியின் மக்களாக வாழச் செய்வீராக. வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியை நாமக் கொண்டிருப்போமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். --அருட்தந்தை குமார்ராஜா ---------------- ''மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, 'உலகின் ஒளி நானே; சிந்தனை -- ஆனால் இயேசுவின் எதிரிகள் இயேசுவுக்கும் அவரை அனுப்பிய தந்தையாம் கடவுளுக்கும் இடையே நிலவுகின்ற நெருங்கிய உறவைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். இயேசு கடவுளைப் பற்றிய உண்மையை நமக்கு அறிவிக்கிறார் எனவும், கடவுளைக் காண வேண்டும் என்றால் நாம் இயேசுவில் அவரைக் காண வேண்டும் எனவும் நாம் நம்பாவிட்டால் நாமும் ''இருளில் நடப்போருக்கு'' ஒப்பாவோம். இயேசு காட்டுகின்ற ஒளியில் நடப்போர் பிறருக்கும் ஒளியாக மாறுவார்கள். ஏனென்றால் ''உலகின் ஒளி நானே'' (யோவா 8:12) என்று கூறிய இயேசு ''நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்'' எனவும் தம் சீடர்களை நோக்கிக் கூறுகிறார் (காண்க: மத் 5:14). இன்றைய உலகில் நாம் ஒளியாய் விளங்க வேண்டும் என்றால் இருள்நிறைந்த மனித உள்ளங்களில் இயேசுவின் ஒளியை நாம் பாய்ச்ச வேண்டும்; இருள்நிறைந்த உலகப் போக்குகளையும் மன நிலைகளையும் மாற்றியமைக்க நாம் செயல்பட வேண்டும்; கடவுள் பற்றிய உண்மையைக் கண்டுகொள்ள மறுத்து, தீக்கோழி போல மண்ணுக்குள் தலையைப் புதைக்கும் போக்கு மறைந்திட நாம் உழைக்க வேண்டும். இருளில் நடப்போருக்கு ஒளி துணையாவதுபோல நாமும் கிறிஸ்து என்னும் ஒளியை நம்மில் கொண்டிருந்தால் பிறருக்கும் ஒளியாக மாறுவோம். மன்றாட்டு -- அருட் தந்தை பவுல் லியோன்
|