முதல் வாசகம் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 24 - 13: 5 அந்நாள்களில் கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது. பர்னபாவும் சவுலும் தங்கள் திருத்தொண்டை முடித்தபின், மாற்கு எனப்படும் யோவானைக் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றனர். அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரேன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும் போதகராகவும் இருந்தனர். அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், ``பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்'' என்று கூறினார். அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள். இவ்வாறு தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றார்கள்; அங்கிருந்து சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள். அவர்கள் சாலமி நகருக்கு வந்து அங்குள்ள யூதரின் தொழுகைக் கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள்; யோவானைத் தங்கள் உதவியாளராகக் கொண்டிருந்தார்கள். இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! 5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! யோவான் 12:44-50 பாஸ்கா காலம்-4 வாரம் புதன்
------------------------------------------------------------- திருப்பாடல் 67: 1 – 2, 4, 5 & 7 கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு, அவரது இரக்கம் நமக்கு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு எதற்கு இரக்கம் தேவைப்படுகிறது? இரக்கத்திற்கும், ஆசீர்வாதத்திற்கும் என்ன தொடர்பு? கடவுளின் ஆசீரைப் பெற வேண்டுமென்றால், கடவுளின் இரக்கத்தைக் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால், கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு நாம் தகுதியற்றவர்கள். ஆசீர்வாதம் என்பது புனிதத்தன்மை நிறைந்தது. கடவுளிடமிருந்து வருவது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு, மனிதர்களாகிய நாம் தகுதியற்றவர்கள். கடவுளின் இரக்கம் நம்மோடு இருக்கிறபோது மட்டும் தான், அவரது அருளை நாம் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இருக்கும். கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு முன்னதாக, நம்மையே கடவுளிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். பழங்காலத்தில், முனிவர்கள் காடுகளில் நோன்பிருந்து, தவம் செய்தார்கள். இந்த தவத்தை அவர்கள் செய்வது, கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்வதற்கான தயாரிப்பிற்காகத்தான். தங்களையே ஒறுத்து, தங்களின் தேவையற்ற ஆசைகளை அடக்கி, உடலை வருத்தி, கடவுளின் மன்னிப்புப்பெற்று, அதன் பிறகு தான், அவர்கள் கடவுளின் அருளைப் பெற்றார்கள். அதேபோல, கடவுளின் அன்பையும், அருளையும் பெற வேண்டுமென்றால், நாமும் முதலில், அவரது இரக்கத்திற்காக மன்றாட வேண்டும். கடவுள் எப்போதும் நம்மீது இரக்கம் காட்டக்கூடியவர். நாம் அவரிடத்தில் நம்மை முழுமையாகக் கையளித்தால், நிச்சயம் அவரது அன்பு நம் மீது எப்போதும் இருக்கும். அவர் வழங்கக்கூடிய நிறைவான அருளையும் நாம் எப்போதும் பெற்றுக்கொள்ளலாம்.
---------------------------------------------- கிறிஸ்துவைப்பற்றிய அறிவு பதினெட்டாம் நூற்றாண்டு இறையியல் அறிஞர் ஒருவர் கிறிஸ்தவ விசுவாசத்தை எளிமையான முறையில் அறிந்து கொள்ள, மறைக்கல்வி நூல் ஒன்றை எழுதினார். பாமர மக்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அது எழுதப்பட்டிருந்தது. இந்த கிறிஸ்தவ விசுவாசத்தை அறிந்து செயல்படுத்தாமல் வாழ்பவர்களுக்கு என்ன நேரிடும்? என்ற கேள்வி எழுந்தது. அதற்கான பதிலாக, “கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்” என்று சொல்லப்பட்டது. உண்மைதான். கிறிஸ்துவை அறிவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும், அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும். இன்றைக்கு இயேசுவைப்பற்றி அறிந்து கொள்ள நமக்கு பல வாய்ப்புகள் தரப்பட்டிருக்கிறது. பங்குத்தளங்களில் பலதரப்பட்ட பயிற்சிகள் இயேசுவைப்பற்றி அறிந்து கொள்ள நமக்கு தரப்படுகிறது. அறிவியல் உலகில் நாம் எதைப்பற்றி அறிய வேண்டுமானாலும், ஒரு வினாடியில் நமக்குத் தேவையான தகவல்களை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இப்படி கிறிஸ்துவை அறிவதற்கு நமக்கு பல வாய்ப்புகள் இருந்தாலும், அதைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம் என்றால், அது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. வெறுமனே கண்டனத்தோடு அதை நாம் நிறுத்திவிட முடியாது. அதற்கான விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும். கிறிஸ்துவை அறிவதற்கு எனக்குத்தரப்பட்டிருக்கிற வாய்ப்புகளை நான் எந்த அளவிற்கு சிறப்பாக பயன்படுத்தி, கிறிஸ்துவைப்பற்றி அறிய முயற்சி எடுக்கிறேன்? அதனை எனது வாழ்வாக மாற்றுகிறேன்? அதனை சிந்திப்போம். கிறிஸ்துவை அதிகமாய் அறிந்து, அதனை வாழ்வாக்கி, அந்த வாழ்வையே நற்செய்தியின் சான்றாக, மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடிய அருளை, நாம் இறைவனிடம் வேண்டுவோம்.
----------------------------------------------------- உண்மையான சீடர்கள் இயேசுவின் போதனையை யூத அதிகாரவர்க்கத்தினர் கண்டுகொள்ளவே இல்லை என்று நாம் ஒருபோதும் சொல்ல முடியாது. ஏனென்றால், அதிகாரவர்க்கத்தில் பலருக்கும் இயேசுவின் போதனையில் இருக்கும் உண்மை, உரக்க உரைத்தது. ஆனால், தங்களின் நம்பிக்கையை அறிக்கையிட அவர்கள் நடுங்கினர். காரணம், அப்படி அறிக்கையிட்டால், அவர்களும் தொழுகைக்கூடத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். எனவே, அவர்கள் இயேசுவின் மறைமுக சீடர்களாகவே இருக்க விரும்பினா். அத்தகைய மனிதர்களுக்கு, இயேசுவின் இன்றைய போதனை அமைந்திருந்தது. இயேசுவின் சீடர்களாக வெளிப்படையாக வாழ விரும்பினால், அதனால் தங்களுக்கு இழப்பு அதிகம் என்று அவர்கள் நினைத்தனர். இயேசு சொல்வது அனைத்தும் சரி என்பது அவர்களுக்குத்தெரியும். இயேசுவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதும், அது முறையல்ல என்பதும் அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், அவர்கள் தங்கள் நலனையே முன்னால் வைத்து, தங்கள் வாழ்வைப்பார்த்தனர். சவால்களை வெளிப்படையாக சந்தித்து, தங்களது சுகபோகங்களை இழக்க அவர்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு, தங்களின் வசதிகளும், வாய்ப்புகளும், அதிகாரமும்தான் பெரிதாகத் தெரிந்தது. அதைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, விழுமியங்களைக் காற்றிலே பறக்கவிட்டனர். இன்றைய நவீன சமுதாயத்திலும் இப்படிப்பட்ட மறைமுக சீடர்கள்தான் அதிகமான பேர் இருக்கிறார்கள். இந்த சமுதாயத்தில் நடப்பதில் பல அநியாயங்கள் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதனால் தங்களுக்கு ஏற்படும் இழப்புக்களை அவர்கள் பார்த்து, பயந்து ஒதுங்கிவிடுகிறார்கள். அது உண்மையான கிறிஸ்தவ வாழ்வாக இருக்க முடியாது.
-------------------------------------------------------- திப 12: 24-13: 5 என்னைக் காண்பவர் ... “என்னைக் காண்பவர் என்னை அனுப்பியவரையே காண்கிறார். என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டுமல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்” என்னும் ஆண்டவர் இயேசுவின் அமுத மொழிகளை இன்று தியானிப்போம். தந்தை இறைவனை யாருமே கண்டதில்லை. ஆனால், இயேசு அந்த இறைவனின் முகமாக இருக்கின்றார். அவரைக் கண்டவர்கள் இறைவனைக் கண்டதற்கு இணையாகின்றார்கள் என நம்பிக்கையுடன் சொல்கின்றார். அந்த அளவுக்கு இயேசுவின் செயல்களும், எண்ணங்களும் அமைந்திருந்தன. நாம் இப்படிச் சொல்ல முடியுமா? என்னைக் காண்பவர்கள் ஆண்டவர் இயேசுவையே காண்கின்றனர் என்னும் வகையில் என்னால் வாழ முடியுமா, பணியாற்ற முடியுமா? இதுவே இன்றைய நற்செய்தி வாசகம் விடுக்கும் அறைகூவல். அன்னை தெரசாவைக் கண்டவர்கள் ஆண்டவர் இயேசுவை அவரில் கண்டனர். புனிதர்கள், மறைசாட்சிகளைக் காண்பவர்கள் ஆண்டவரின் திருமுகத்தைக் காண்கின்றனர். இதுவே நற்செய்தி அறிவிப்பு, இதுவே சாட்சிய வாழ்வு. நமது வாழ்வும் அவ்வாறு அமைய முயற்சி எடுப்போம். மன்றாடுவோம்: தந்தையின் திருவுளப்படி வாழ்ந்த இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எனது வாழ்வும், பணிகளும் உம்மைப் பிறருக்கு எடுத்துரைக்கும் வண்ணம் அமைய அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். அருள்பணி. குமார்ராஜா
தீர்ப்பளிக்கும் வார்த்தை! இயேசு உலகைத் தீர்ப்பிட வரவில்லை. அதை மீட்கவே வந்தார். ஆனால், அவரது வார்த்தைகள் தீர்ப்பளிக்கின்றன என்கிறார் இயேசு. ஆம், சற்று சிந்தித்துப் பார்த்தால் வியப்பு தரும் செய்தி இது. இயேசுவின் வார்த்தைகள் ஆறுதல் தருகின்றன. வாழ்வு தருகின்றன. நலம் தருகின்றன. வழிகாட்டுகின்றன. அத்துடன், தீர்ப்பிடவும் செய்கின்றன. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்கிற எவரும் ஒன்றில் அவ்வார்த்தைகளின்படி நடக்க வேண்டும். அல்லது அந்த வார்த்தைகளைப் புறக்கணித்து, அவற்றிற்கு மாறாக வாழ வேண்டும். இவை இரண்டில் ஒன்றைத்தான் செய்ய முடியும். இரண்டுமே ஒரு வகையான தீர்ப்புதான். வார்த்தையின்படி வாழ்கிறவர்கள் நல்ல தீர்ப்பைப் பெறுகிறார்கள். பாராட்டப்படுகிறார்கள். வார்த்தைக்கு மாறாக, எதிர் சான்றாக வாழ்பவர்கள் கெட்ட தீர்ப்பைப் பெறுகிறார்கள். வாழ்வை இழக்கிறார்கள். தீர்ப்பளிக்கும் இறை வார்த்தை பற்றி எச்சரிக்கையாய் இருப்போம். மன்றாடுவோம்: முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகளின் ஊற்றான இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தையின்மீது நாங்கள் ஆர்வம் கொண்டு, அவற்றின்படி நடந்து உமக்குப் புகழ் சேர்ப்போமாக. உமது வார்த்தைகள் எங்களைத் தீர்ப்பிடாதபடி எங்களைக் காத்தருளும் ! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென் -- அருட்தந்தை குமார்ராஜா ----------------------
''இயேசு உரத்த குரலில் கூறியது: 'என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, அன்பார்ந்த இணையதள நண்பர்களே! -- யோவான் நற்செய்தியின் கருப்பொருளாக அமைந்த செய்தியை இயேசு ''உரத்த குரலில் கூறினார்'' என நற்செய்தி நூலாசிரியர் எழுதுகிறார் (யோவா 12:44). உலக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்று உண்மையிலேயே இயேசு குரல் எழுப்புவது இங்கே குறிக்கப்படுகிறது. மக்களுக்குக் கடவுளின் ஆட்சி பற்றிய செய்தியை அறிவித்த இயேசு அவர்களிடமிருந்து ''நம்பிக்கையை'' எதிர்பார்த்தார். அவர் கூறியவை உண்மையே என முழுமனத்தோம் இதய நெகிழ்ச்சியோடும் ஏற்றிட வேண்டும் என்பதே அவருடைய வேண்டுகோள். இவ்வாறு இயேசுவில் நம்பிக்கை கொள்கின்ற மனிதர் இயேசுவை உலகிற்கு அனுப்பிய கடவுள் மீது நம்பிக்கை கொள்கின்றார்கள் என்பது பொருள். இதை இயேசு தெளிவாக எடுத்துக் கூறுகிறார். இயேசு கடவுளிடமிருந்து வந்தார் என்பதை ஏற்க பல யூதர்கள், குறிப்பாக யூத சமயத் தலைவர்கள் தயங்கினார்கள். இயேசு இறந்து உயிர்த்தெழுந்த பிறகு இயேசுவின் சீடர்கள் ஒன்றுகூடி இயேசுவின் பெயரால் ஒரு புதிய சமூகமாக உருவாகிய நிலையிலும் அவர்களுக்கு யூதர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இயேசு உண்மையிலேயே கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை ஏற்கத் தயங்கியவர்களுக்கு எழுதப்பட்ட ஒரு செய்தியாக, சவாலாக யோவான் நற்செய்தியை நாம் பார்க்கலாம். -- இயேசுவிடம் நம்பிக்கை கொள்வதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். இயேசுவை நம்புவோர் அவருடைய போதனைக்குச் செவிமடுப்பர். அவர் நல்லதென அறிவிப்பதை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்திட முன்வருவர். மனிதருக்கென்று கடவுள் வகுத்த திட்டத்தை இயேசு நமக்கு அறிவிப்பதால் இயேசுவை ஏற்போர் கடவுளை ஏற்கின்றனர். இதையே நம்பிக்கை என்கிறோம். இந்த நம்பிக்கை நம்மில் நாளும் ஆழப்படவேண்டும் என்றால் நாம் இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்ல வேண்டும். இயேசு கூறுகிறார்: ''என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்'' (யோவா 12:46). இயேசு என்னும் ஒளியை ஏற்று அக இருள் நீங்கப்பெற்றோர் நிலைவாழ்வு பெறுவர் என இயேசு நமக்கு வாக்களித்துள்ளார். அவருடைய வாக்கு பொய்க்காது. மன்றாட்டு --அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
------------ "தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது." அன்பார்ந்த இணையதள நண்பர்களே! ஆனால் மனிதன் தீர்ப்பிலிருந்து தப்ப முடியாது. தினமும் ஏதாவது ஒரு விதத்தில், நாமே நமக்கு அல்லது பிறர் நமக்கு தீர்ப்பு வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.எதன் அடிப்படையில் இத்தீர்ப்பை நாம் நமக்குக் கொடுக்கிறோம். ஒருவர் மற்றவருக்குத் தீர்ப்பிடுகிறார்கள் என்பதைப் பொருத்து அந்த தீர்ப்பின் பாதிப்பும் அமையும். இறை வார்த்தை ஒன்றே தீர்ப்பளிக்கும் தகுதி வாய்ந்தது. இறை வார்த்தை மட்டுமே தீர்ப்பளிக்க அடிப்படையாக இருக்கவேண்டும்.தீர்ப்பளிக்கும் நீதிபதியிடம் இறை உணர்வு மேலோங்கி இருக்க வேண்டும். இறைவனிடம் உள்ள அன்பு, இரக்கம், பாவியின் மனமாற்றம்,புது வாழ்வு, போன்ற இரக்க உணர்வுகள் நீதி வழங்குவோரிடம் இருக்க வேண்டும். இறை வார்த்தையால் உருவாகும் மனிதனிடம் இப்பண்புகள் மிகுந்திருக்கும். இறை வார்த்தை நம் அளவு கோலாக இருக்கட்டும். தீர்ப்புகள் தண்டனையாக கசக்காது. திருத்தங்களாக தித்திக்கும். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர். --அருட்திரு ஜோசப் லியோன்
|