முதல் வாசகம் லூக்கா 1:26-38 டிசம்பர் 20 நற்செய்தி வாசகம்� ------------------------- டிசம்பர் – 20 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னை மரியாள் வாழ்க்கை பரிசுத்தமானது. அவர் வாழ்ந்த குடும்பத்தில் மிகச் சிறந்த பயிற்சி பெற்றார். ஆகவே உலகில் உள்ள இருளின் வசம் தன் வாழ்வை ஒப்படைக்காமல் ஒளியின் மகளாக பிரகாசித்து வந்தார். சுடர்ஒளியாய் வாழ்ந்து வந்தார். அவர் தன் மிகச் சிறப்பான வாழ்வால் வானதூதரை மண்ணகம் இறங்க வைத்தார். வானதூதரே அவருடைய வாழ்வால் அவரை இம்மானுவேலின் தாயாக மாறும் பாக்கியத்திற்காக தோ்ந்தெடுத்தார். இவையனைத்தும் கடவுளின் திட்டமே!. இது கிடைத்தது மரியாள் செய்த பாக்கியமே! நாமும் வானதூதரை சந்திக்க இரு செயல்களை செய்தால் போதும். 1. அமைதி 2. ஆனந்தம் மனதில் கேட்க… மனதில் பதிக்க… எசாயா 7: 10 – 14 ”நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்கிற வார்த்தைகள் நம்முடைய சிந்தனையைத் தூண்டுவதாக அமைகிறது. கடவுளைச் சோதிக்க முடியுமா? கடவுளைச் சோதித்தல் என்பது என்ன? இன்றைக்கு வாழ்க்கையில் துன்பம் வருகிறபோது, கடவுள் நம்மை கைவிட்டு விட்டது போல உணர்கிறோம். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்கிற கேள்வியும் நமக்குள்ளாக எழுகிறது. நம்முடைய துன்பங்களைச் சந்திக்கிறபோது, கடவுள் எங்கே சென்று விட்டார்? என்று நம்முடைய ஆற்றாமையில், கேள்வி எழுப்புகிறோம். இது தான் கடவுளைச் சோதிப்பது. நாம் கேட்கிற கேள்விகள், கடவுளையே சோதிப்பதாக அமைகிறது. கடவுள் இருக்கிறார் என்பதை அனுபவித்திருந்தும், அடையாளங்கள் பின்னால் செல்வதும், கண்முன்னே அதிசயங்கள் நடக்காதா? என்பதும், இதற்கான சான்றுகளாகும். அப்படிப்பட்ட நிலையில் தான், இஸ்ரயேல் மக்களும் இருக்கிறார்கள். கடவுள் அவர்களை விடுவிப்பதற்கு மீட்பர் ஒருவரை அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கிறார். ஆண்டுகள் உருண்டோடுகிறது. மக்கள் நம்பிக்கையிழந்து போகிறார்கள். கடவுளின் வாக்குறுதி என்ன ஆயிற்று? எனவே, அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? அது கடவுளை சினமூட்டுகிறது. ஆண்டவர் ஆகாசு அரசனிடம் சொல்கிறார்: ”உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்”. கடவுளின் கோபத்தைக் கண்டு பயந்த ஆகாசு அரசன், ”நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்று சொல்கிறார். ஆக, இறைவன் மீது நம்பிக்கை இழந்தவர்களுக்கு, இது பாடமாக அமைகிறது. நம்முடைய வாழ்க்கையில், நம்பிக்கை இழந்துபோகிற தருணத்தில், நாம் எப்போதும் கடவுளைச் சோதனைக்கு உட்படுத்தக்கூடாது. நம்முடைய நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும். கடவுள் நிச்சயம் பதில் தருவார் என்று எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். அது கடினமானது தான். கடுமையானது தான். ஆனாலும், நாம் எப்போதும் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க, ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
------------------------------------------------ திருப்பாடல் 24: 1 – 2, 3 – 4ஆ, 5 – 6 மனிதன் தன்னுடைய வாழ்நாளில் செல்வம், சொத்து சேர்க்க ஆசைப்படுகிறான். தனக்கானது என்று அவன் சேர்த்து வைக்கிறான். அதற்கு உரிமையும் கொண்டாடுகிறான். இந்த உலகத்தில் இருக்கிற எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் மனிதனிடத்தில் இல்லை. தான் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறான். அதற்கு ஏற்றாற்போல, தன்னுடைய வாழ்வை அவன் நகர்த்துகிறான். இன்றைய திருப்பாடல், இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிற மனிதர்களுக்கு ஓர் ஆழமான உண்மையை எடுத்துரைக்கிறது. இந்த உலகத்தில் இருக்கிற அனைத்துமே இறைவனுக்கு சொந்தம் என்கிற உண்மை தான் அது. இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது. இந்த உலகத்தில் வாழ்கிற மனிதர்களும், இறைவனால் படைக்கப்பட்டவர்கள் தான். இறைவன் தான், அனைத்திற்கும் தொடக்கமும், முடிவுமாக இருக்கிறார். இந்த பூமியில் இருப்பது மட்டுமல்ல, இந்த மிகப்பெரிய வான்வெளியின் தொடக்கம் அவரே. நாம் அனைவரும் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்கிற எண்ணம் வேண்டும் என்பதுதான், திருப்பாடல் ஆசிரியர் சொல்ல வருகிற செய்தி. இந்த உலகமும், அதில் இருக்கிற உடைமைகளும் எனக்கே சொந்தம், என்கிற மனித மனநிலை மாற்றம் பெறுவதற்கு இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. “எல்லாம் எனக்கு மட்டும்“ என்கிற தவறான எண்ணத்தை, இது களைவதாக இருக்கிறது. இந்த உலகம் எனக்கானது மட்டுமல்ல, அனைவருக்கும் சொந்தம் என்கிற பொதுவான் எண்ணம் அனைவரின் உள்ளத்திலும் வர வேண்டும். சுயநல எண்ணத்திலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். இந்த உலகத்தில் வளங்கள் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், ஒவ்வொருவரும் அதனை, தங்களுக்கே உரிமை கொண்டாடுவது தான், இந்த உலகத்தின் பிரச்சனைகளுக்கு காரணம். பொதுநலத்தோடு சிந்திக்கும் வரம் வேண்டுவோம்.
---------------------------------------------------- நேர்மையுற்றோரின் வாழ்வு கடவுளின் தூதர் மரியாளை வாழ்த்துகிறபோது, மரியாள் கலங்குகிறாள். “இந்த வாழ்த்து எத்தகையதோ” என்ற அச்சம் கொள்கிறாள். மரியாள் எதற்காக கலங்க வேண்டும்? கடவுளின் தூதரே அவரை வாழ்த்துகிறபோது, அவள் மகிழ்ச்சி தானே கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, அவள் கலங்குவது எதற்காக? என்ற கேள்வி நிச்சயம் நமது உள்ளத்திலே எழும். யார் நம்மைப் புகழ்ந்தாலும், அதிலே மகிழ்ச்சி அடைவதை விட, அதில் நாம் எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பது மிக முக்கியமானதாகிறது. யார் நம்மைப் புகழ்கிறார்களோ அவர்கள் மட்டில் கொண்டிருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வல்ல, நமது வாழ்வை இதே போன்று வாழ வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு நமக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சிறப்பாக வாழ்ந்திருக்கிறோம். இனியும், மற்றவர்களின் நல்ல வார்த்தைகளுக்கு ஏற்ப, புகழ்ச்சிக்கு ஏற்ப, நமது வாழ்வை வாழ வேண்டிய பொறுப்புணர்வு இங்கே நமக்கு தேவைப்படுகிறது. அந்த பொறுப்புணர்வு, இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்வை, இனிவரக்கூடிய நாட்களிலும் சிறப்பாக வாழ வேண்டிய, அந்த கடமையுணர்வுதான், மரியாளை கலங்கச் செய்கிறது. ஆனால், கபிரியேல் தூதர் ”அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்” என்று சொல்கிறார். அதாவது, நல்ல எண்ணங்களோடு வாழ்கிறபோது, அந்த வாழ்வை சிறப்பாக வாழ, கடவுளே நமக்கு துணைசெய்வார் என்பது, மரியாளின் வாழ்வில் வெளிப்படுகிறது. நாம் நேர்மையோடு வாழ்கிறபோது, அந்த வாழ்வை மற்றவர்கள் அங்கீகரித்து பாராட்டுகிறபோது, நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. இதுநாள் வரை நம்மைக் காத்து வந்த தேவன், இனி வரக்கூடிய நாட்களிலும் கைவிட மாட்டார் என்கிற எண்ணத்தோடு நமது வாழ்வை நாம் வாழ்வோம்.
------------------------------------------------ ஆழமான விசுவாசத்திற்காக மன்றாடுவோம் இயேசுவின் பிறப்பைப்பற்றிய பல கேள்விகள் இன்று நம் முன்னால் வைக்கப்படுகிறது. இயேசு மனிதராகப்பிறந்தாரா? கடவுளாகப்பிறந்தாரா? இயேசுவின் தந்தை யார்? இயேசு எப்படி மாதாவிடமிருந்து பிறந்தார்? அன்னை மரியாள் எப்படி கன்னியாகக் கருவுற முடியும்? எப்படி குழந்தையைப் பெற்றெடுத்த பிறகும் கன்னியாக இருக்க முடியும்? அப்படியென்றால், இந்த மண்ணகத்தில் பிறக்கிற குழந்தைகள் பாவத்தின் விளைவாகத்தான் தோன்ற முடியுமா? கணவன், மனைவிக்கு இடையேயான உறவு புனிதம் இல்லையா? இதில் நாம் எந்தக் கேள்விக்கும் மற்றவர்கள் நிறைவு கொள்கிற பதிலைக் கொடுத்துவிட முடியாது. இந்தக்கேள்விகள் கேட்கப்பட்ட தொடக்கமுதல் இன்று வரை இந்தக்கேள்விகளுக்கான பதிலை நாம் யாரும் சொல்ல முடியாது. ஆனால், விசுவாசம் என்கிற அளவுகோலை வைத்துக்கொண்டு, அனைத்துக்கேள்விகளுக்கும் ஒரு வினாடியில், ஒரு வரியில் பதில் சொல்லி விடலாம். அந்த விசுவாச அளவுகோல்: கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை”. ஒரு சிலவற்றை நம்மால், நமது மனித அறிவு கொண்டு புரிந்து கொள்ள முடியாது. அல்லது, அதைப்புரிந்து கொள்வதற்கு இன்னும் நமது அறிவு, வளர்ச்சி பெற வேண்டும். தொடக்க காலத்தில் விடைகாண முடியாத பலவற்றிற்கு நாம் இன்று விடை கண்டிருக்கிறோம். இன்னும் பலவற்றிற்கு முயன்று கொண்டிருக்கிறோம். இதற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், இந்த விசுவாச அளவுகோல் தான் நமக்குத்துணை. இதன் வழியாகத்தான், நமது மூதாதையர் வாழ்வு பெற்றனர். நமது விசுவாசம் எப்படி இருக்கிறது? அறிவுப்பூர்வமாக இருக்கிறதா? ஆழமானதாக இருக்கிறதா? பொறுமையாக இருக்கக்கூடியதாக இருக்கிறதா? அல்லது மறுக்கக்கூடியதாக இருக்கிறதா? சிந்திப்போம். ஆண்டவரில் நமது முழுநம்பிக்கையை வைப்போம்.
-------------------------------------------------------- மரியாளின் வழியில் நமது விசுவாசம் அன்னை மரியாவை விசுவாசத்தின் தாய் என்று சொன்னால் அது முழுக்க, முழுக்க பொருந்தும். அவளது விசுவாசம் ஒவ்வொரு வார்த்தையிலும், வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் வெளிப்படுகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு ”உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்” என்ற செய்தி வானதூதரால் முன்னறிவிக்கப்படுகிறது. ஆனால், நடந்தது என்ன? இயேசுவை அன்னை மரியாள் காதுபடவே இழிவாகவும், குறையாகவும் பேசினர். ஆனால், அன்னை மரியாள் தனது விசுவாசத்தை சிறிதும் இழக்கவில்லை. யாரிலே தான் நம்பிக்கை வைத்திருந்தோமோ அவரே சிலுவையில் அறையப்பட்டு தனது உயிருக்காக துடித்துக்கொண்டிருந்தபோதிலும், இறுதியாக இறந்தபோதிலும் அன்னை மரியாள் தனது விசுவாசத்தை இழக்கவில்லை. கடவுளின் வார்த்தை நிறைவேறும் என்று உறுதியாக நம்புகிறாள். ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகத்தைப் படைத்த கடவுளால், இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடிந்த கடவுளின் ஆற்றலால் அனைத்துமே நடக்கும் என்று அன்னை மரியாள் நம்பினாள். அதனால் தான் விசுவாசத்தின் தாயாக இன்று உயர்ந்து நிற்கிறாள். தனது பிறப்பு முதல் வாழ்வின் கடைசி மூச்சு வரை, கடவுள் மட்டில் அன்னை மரியாள் வைத்திருந்த விசுவாசம் அளப்பரியது. அன்னையிடத்தில் இருந்த அந்த விசுவாசம் நமதாக வேண்டும். அவளது விசுவாசப்பண்பை நாமும் நமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டும். வாழ்வில் நம்பிக்கை இழந்த சூழ்நிலையையும் கடவுள் மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர் என்று கடவுள் மட்டில் நமக்குள்ள விசுவாசத்தை இன்னும் ஆழப்படுத்துவோம்.
-------------------------------------------------------- அருள் நிறைந்த மரியே, வாழ்க! பங்குமக்கள் அடிக்கடி இந்தப்பகுதியைப் படிக்கின்றபோதெல்லாம், ஒரு கேள்வியை அடிக்கடி கேட்பதுண்டு. கன்னிமரியாளுக்கு வானதூதர் மங்களவார்த்தை சொல்கிறபோது கேட்கும் அதே கேள்வியைத்தான், செக்கரியாவும் கேட்கிறார். கன்னிமரியாளுக்குப்பதில் சொல்லப்படுகிறது. செக்கரியாவுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறதே? இருவரும் ஒரே கேள்வியைத்தானே கேட்கிறார்கள்? என்று. ஏனெனில் கன்னிமரியாள், ‘இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே?’ என்று கேட்கிறாள். செக்கரியாவும் வானதூதரிடம், ‘இது நடைபெறும் என எனக்கு எப்படித்தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே?’ என்றார். இதற்கு பல பதில்களை நாம் சொன்னாலும், ஒரே ஒரு பதில் நம் கேள்விக்கு நிறைவானப்பதிலைத்தரும். கணவனை அறியாத கன்னி கருவுறுதல் என்பது நடைபெறவே முடியாத ஒன்று. ஆனால், வயதானவர்கள் பிள்ளை பெறுவது மீட்பின் வரலாற்றில் நடந்திருக்கிறது. ஆபிரகாம் வயதுமுதிர்ந்த வயதில் பிள்ளை பெற்றார். குருத்துவப்பணி ஆற்றக்கூடிய செக்கரியாவுக்கு இது நன்றாகத்தெரிந்திருக்க வேண்டும். அப்படித்தெரிந்திருந்தும் கேட்பதால்தான், வானதூதரால் அவருக்கு ஓர் அடையாளம் தரப்படுகிறது. அது தண்டனை அல்ல. அடையாளம். இன்றைக்கு பிரிவினைச்சபைகள் கன்னிமரியாளுக்கு சிறப்பு வணக்கம் செலுத்துவதை குறைகூறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இன்றைய நற்செய்திப்பகுதியில் தந்தையாகிய கடவுளே அன்னைக்கு புகழ்மாலை சாற்றுவதை நாம் ஆதாரத்தோடு நிரூபிக்கலாம். கபிரியேல் அதிதூதர் இறைவனின் திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களில் ஒருவர். அவருடைய பணி தூதுரைக்கும் பணி. ஒரு தூதுவனின் பணி என்ன? பண்டையக்காலங்களில் அரசர் சொல்கிற செய்திகளை, எந்த நாட்டு அரசரிடம் சொல்கிறாரோ, அந்த அரசரிடம் எதைச்சொல்லச்சொன்னாரோ, அந்தச்செய்தியை ஒரு வார்த்தை கூட்டவோ, குறைக்கவோ மாட்டாமல், அப்படியேச்சொல்வது தான் தூதுவரின் பணி. இங்கே தூதுவராக அன்னைமரியாளைப்பார்த்து, கபிரியேல் வானதூதர் சொல்கிற, ‘அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’ என்கிற வார்த்தைகள் கபிரியேலின் வார்;த்தைகள் அல்ல, மாறாக, தந்தையாகிய கடவுளின் வார்த்தைகள். தந்தையாகிய கடவுளே, அன்னை மரியாளை வாழ்த்திப் போற்றுகிறார் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்? கடவுள் மரியாளை ஏதோ வாழ்த்த வேண்டுமென்பதற்காக வாழ்த்தவில்லை. அந்த வாழ்த்துக்கு மரியாள் முற்றிலும் தகுதியானவள் என்பதால் வாழ்த்தினார். இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட உயர்ந்த கொடை அன்னைமரியாள். நமக்காக எந்நாளும் தந்தையாகிய இறைவனிடம் பரிந்துபேசிக்கொண்டேயிருக்கிறாள். அன்னையின் உதவியை மன்றாடியவர்கள் யாரும் கைவிடப்பட மாட்டார்கள். அந்த அன்னையிடம் நம் முழுமையான நம்பிக்கை வைப்போம். அவளிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம். - அருட்பணி. தாமஸ் ரோஜர் ======================= அன்னை மரியாவின் ஆன்மீக வாழ்வு ”உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று அன்னை மரியாள் கபிரியேல் தூதர் வழியாக, ஆண்டவருக்குச் சொன்ன அந்த வார்த்தைகள் சிந்திக்கக்கூடியவை. இந்த உலகத்திலே, வாழ்க்கை நடைமுறையிலே மக்கள் ஒவ்வொருவரும் செபிக்கிறார்கள். அவர்களின் செபம் எப்படி இருக்கிறது என்றால், ”எனது சொற்படி நிகழட்டும்” என்ற வகையில் அமைந்திருக்கிறது. ஆனால், அன்னை மரியா இறைவனுடைய திருவுளத்தை நிகழ்த்துவதற்கு தன்னையே அர்ப்பணிக்கிறாள். நமது செபிக்கும் மனநிலை மாற்றப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கடவுளிடத்தில் ஏராளமான விண்ணப்பங்களை எழுப்புகிறோம். நிச்சயம் இது மகிழ்ச்சியடையக்கூடிய ஒன்று. ஏனென்றால், ஒவ்வொரு விண்ணப்பங்களையும் ஆண்டவரிடத்தில் எழுப்புவது, நமது விசுவாசத்தின் வெளிப்பாடு. அந்த வகையில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அதே வேளையில் கவலை தரும் செய்தி என்னவென்றால், நாம் கேட்டது போல கடவுள் நடக்க வேண்டும் என்று நினைப்பது. இது அவிசுவாசத்தின் வெளிப்பாடு. நாம் எப்படிப்பட்ட மனநிலையோடு செபிக்க வேண்டும் என்பதை அன்னை மரியாள் கற்றுத்தருகிறாள். அன்னையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அவளது வார்த்தைகளும், வாழ்வும் நமது ஆன்மீக வாழ்வின் ஊற்று. அன்னையைப் பற்றிக்கொண்டு நமது ஆன்மீக வாழ்வில் நடைபயின்றால், உண்மையில் நம்மால் மிகச்சிறந்த ஆன்மீக வாழ்வு வாழ முடியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
-------------------------------------------------------- அறிவிப்பும், அர்ப்பணமும் ! இன்று கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். கபிரியேல் தூதர் அன்னை மரியாவுக்குத் தோன்றி, "கடவுளின் அருளைப் பெற்றுள்ளீர். கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்" என்று இயேசுவின் பிறப்பை முன் அறிவித்த நன்னாளே இந்நாள். இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்ட அந்த நாளைப் போலவே, அறிவிக்கப்பட்ட அன்னை மரியாவும் நற்பேறு பெற்றவர். அவர் வழியாகத்தான் இந்த உலகின் மீட்பர் பிறக்க உள்ளார். இந்த அறிவிப்பைப் பெறும் பேற்றைப் பெற்ற மரியா, "நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று சொல்லித் தம்மை அர்ப்பணித்தார், இறைத் திருவுளத்துக்குத் தம்மைக் கையளித்தார். இன்றைய நாளில் நம்முடைய சிந்தனை இதுவாக இருக்கட்டும். "நான் பல வழிகளில் பேறுபெற்றவன்": இவை அனைத்தையும் பெறும் நாம், அன்னை மரியாவைப் போலவே, "கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளோம்" என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி கூறுவோம். அந்த அன்னையைப் போலவே, நம் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்து, அவர் விருப்பப்படியே நம் வாழ்வு அமைய நம்மைக் கையளிப்போம். மன்றாடுவோம்: வானதூதர் வழியாக இயேசுவின் பிறப்பை அன்னை மரியாவுக்கு அறிவித்த இறைவா, உம்மைப் போற்றுகிறோம். அந்த அறிவிப்பை ஏற்று, மகிழ்வுடன் தம்மை அர்ப்பணித்த அன்னையைப் போல நாங்களும் எங்களை உமக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம். எங்களை ஏற்றுக்கொள்ளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். - பணி குமார்ராஜா ''பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை: அன்பார்ந்த இணைதள நண்பர்களே! -- மரியாவின் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தன. திருமண ஒப்பந்தம் ஆகி, இல்லறம் நடத்துவதற்கு முன் மரியா கடவுளின் திருமகனைத் தம் உதரத்தில் கருத்தாங்க அழைப்புப் பெறுகிறார். இது வியத்தகு நிகழ்ச்சி மட்டுமல்ல, மரியாவைப் பொறுத்தமட்டில் இது பெரும் அதிர்ச்சிதரும் செய்தியாக இருந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பின் யோசேப்பு மரியாவின் வாழ்வில் நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ள இயலாமல் திணறிக்கொண்டிருந்தார். இதுவும் மரியாவுக்கு ஒரு சோதனையாகவே அமைந்திருக்க வேண்டும். குழந்தைப் பேறு நெருங்கியதும் தம் குழந்தையை ஈன்றெடுத்து வசதியாகக் கிடத்துவதற்குக் கூட அவருக்குக் கிடைத்தது தீவனத்தொட்டியே. குழந்தை இயேசு எருசலேம் கோவிலில் காணாமற்போன நேரமும் மரியாவுக்குப் பெருவேதனை தந்தது. ஆனால் இத்துயரமான தருணங்களிலும் மகிழ்ச்சியான நேரங்களிலும் மரியா கடவுளின் வார்த்தையைத் ''தம் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்'' (லூக்கா 2:50). கடவுளின் வார்த்தை மரியாவுக்கு ஆறுதல் தரும் ஊற்றாயிருந்தது. -- மரியாவுக்கு ஏற்பட்ட மாபெரும் வேதனை அவர்தம் அருமைந்தன் எதிரிகளால் கொடுமைப்படுத்தப்பட்டதும், இயேசுவின் தோள்மேல் சிலுவை சுமத்தப்பட்டு இறுதியில் அச்சிலுவையில் ஒரு குற்றவாளிபோல அறையப்பட்டு உயிர்துறந்ததுமே. இத்துயரம் மரியாவின் இதயத்தை ஈட்டிபோல் துளைத்தது. இந்த நேரங்களிலெல்லாம் மரியா மன உறுதி இழக்கவில்லை; உள்ளதம் தளரவில்லை. மாறாக, கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டார். கடவுளால் எல்லாம் இயலும் என்பதை மரியா இத்தருணங்களில் மிக ஆழமாக உணர்ந்தார். மரியா கடவுளின் ''அடிமை'' என்றதும் கடவுள் அடிமைத்தனத்தை ஏற்கிறார் என்று பொருளாகாது. மாறாக, மரியா தம்மைப் படைத்து, பாவத்திலிருந்து காப்பாற்றிய கடவுளையே தம் வாழ்வின் மையாமாகக் கொண்டிருந்தார் என்பதே பொருள். இவ்வாறு செயல்பட்டதால் மரியா தம் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற முனையவில்லை. கடவுளின் திருவுளம் இவ்வுலகில் நிறைவேற வேண்டும் என்பது மட்டுமே மரியாவின் வாழ்க்கை நோக்கமாக இருந்தது. மன்றாட்டு --அருட்திரு பவுல் லியோன் வறுவேல் ''வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப்பெற்றவரே வாழ்க! அன்பார்ந்த இணையதள நண்பர்களே! -- அன்னை மரியாவை இயேசுவின் தாய் எனப் போற்றுகின்ற திருச்சபை அதே அன்னையைக் ''கடவுளின் தாய்'' எனவும் வாழ்த்திப் புகழ்கின்றது. கடவுளுக்கு நாம் அளிக்கின்ற ஆராதனையை நாம் மரியாவுக்கு வழங்குவதில்லை. ஏனென்றால் மரியா கடவுளின் படைப்பு. கடவுளுக்கு நிகரான நிலை அவருக்குக் கிடையாது. ஆனால் கடவுளின் திருமகனாகிய இயேசுவை அந்த அன்னை இந்த உலகிற்குப் பெற்றுத் தந்தார். எனவே, அவருக்குச் சிறப்பு மரியாதை செலுத்துவது பொருத்தமே என திருச்சபை கற்பிக்கிறது. வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றுகிறார். ''அருள்மிகப் பெற்றவரே'' என்று கூறி அவரை வாழ்த்துகிறார் (காண்க: லூக் 1:28). பழைய கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் ''அருள்நிறைந்தவளே, வாழ்க'' என்று இலத்தீன் பாடத்தின் நேர் தரவாக இருந்தது. புராட்டஸ்டாண்டு சபையினரின் பெயர்ப்பில் ''கிருபை பெற்றவளே, வாழ்க'' என்றுள்ளது. உண்மையிலேயே கடவுள் மரியாவுக்கு ஒரு சிறப்பான மாண்பை அளித்தார் என்பதில் ஐயமில்லை; அதற்கான விவிலிய ஆதாரமும் உள்ளது. ஆனால் கத்தோலிக்க திருச்சபை மரியாவைக் கடவுளின் நிலைக்கு உயர்த்தி வழிபடுகிறது என்று சிலர் குற்றம் காண்கிறார்கள். இவ்வாறு குற்றம் காண்பது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்டியாக வேண்டும். அண்மையில் ஒரு வலைப்பதிவில் கண்டது இது: கேள்வி: ''மரியாளை வணங்கக் கூடாது (றழசளாippiபெ ஆயசல ளை ளin) என உரோமன் கத்தோலிக்கர்களுக்கு விளக்குவது எப்படி?'' இதற்கு தரப்படுகின்ற பதில்: ''இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான். அதில் சந்தேகமில்லை. சோறு சமைக்க வேண்டுமென்றால் ஒரு பாத்திரம் (உழழமநச) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிட வேண்டும். பாத்திரத்தை (உழழமநச) அல்ல. மரியாள் பாத்திரம். இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது பாத்திரத்தைக் கடித்துச் சாப்பிடுவது போன்று இருக்கிறது''. -- மேலே தரப்பட்ட மேற்கோளிலிருந்து நாம் அறிவது என்ன? சிலர் கத்தோலிக்கர் பற்றி உண்மையிலேயே தவறான கருத்துக் கொண்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது. கத்தோலிக்கர் மரியாவைக் கடவுளாகக் கருதுவதும் இல்லை, நம் மீட்பரும் இடைநிலையாளருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிகராக மரியாவைக் கொள்வதும் இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) இந்த உண்மையை அழகாக எடுத்துரைக்கிறது. திருச்சபை வழக்கில் கடவுளுக்கு நாம் அளிக்கின்ற வழிபாடு ''ஆராதனை'' (யனழசயவழைn) எனவும் மரியாவுக்கு நாம் அளிக்கின்ற மரியாதை ''வணக்கம்'' (எநநெசயவழைn) எனவும் கலைச்சொற்களால் குறிக்கப்படுகின்றன. இதோ வத்திக்கான் சங்கம் தரும் போதனை: ''திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் (எநநெசயவழைn) தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில்...இவர் கடவுளின் தூய்மைமிகு தாய் ஆவார். தூய கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் 'கடவுளின் தாய்' என்றழைத்து வணங்கினர்... திருச்சபையில் என்றும் இருந்துள்ள இவ்வணக்கம் உண்மையிலேயே தனிப்பட்டது; மனிதரான வாக்குக்கும் தந்தைக்கும் தூய ஆவியார்க்கும் நம் அளிக்கும் ஆராதனையிலிருந்து (யனழசயவழைn) உள்ளியல்பிலேயே இது வேறுபட்டது; இந்த ஆராதனையை (யனழசயவழைn) இவ்வணக்கம் (எநநெசயவழைn) மிகச் சிறந்தவிதமாய் ஊக்குவிக்கும் எனலாம்'' (திருச்சபை, எண் 66). மன்றாட்டு
''கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' (லூக்கா1:37) அன்பார்ந்த இணையதள நண்பர்களே! -- கிறிஸ்து பிறந்த விழாவை டிசம்பர் மாதம் 25ஆம் நாம் கொண்டாடுகிறோம். அதற்கு சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்னர், மார்ச் 25ஆம் நாள், இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியைத் திருச்சபை நினைவுகூர்கிறது. கடவுளின் தூதர் மரியாவிடம் சென்று, அவர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவார் என அறிவிக்கிறார் (லூக் 1:26-33). திருமண ஒப்பந்தம் ஆகியிருந்தும் கணவரோடு கூடி வாழாதிருந்த மரியா, ''இது எப்படி நிகழும்?'' என்று கேட்ட கேள்விக்கு வானதூதர் அளித்த பதில்: ''கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' (லூக் 1:37) என்பதாகும். மனிதர் பல திறமைகளைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய திறமைக்கு ஒரு எல்லை உண்டு. எவ்வளவுதான் அறிவுத் திறன் கொண்டிருந்தாலும் மனிதரால் கூடுமான சாதனைகள் அளவுக்கு உட்பட்டவையே. ஆனால் ''கடவுளால் எல்லாம் கூடும்''. இவ்வாறு கடவுள் வல்லமை மிக்கவர் என நாம் கூறும்போது இரு அடிப்படையான உண்மைகளை வலியுறுத்துகின்றோம். முதலில், கடவுள்தாம் நம்மை உருவாக்கியவர். எனவே, நாம் கடவுளின் படைப்புகள் என்பதாலும் கடவுள் நம்மைப் படைத்தவர் என்பதாலும் மனிதர் ஒருபோதுமே கடவுளைப் போல வல்லமை மிக்கவர்களாக மாறிட இயலாது. இரண்டாவது, கடவுள் விரும்பினால் நம்மை மனித நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல இயலும். இதையே நாம் மீட்பு என்கிறோம். அதாவது, கடவுள் நம்மீது இரக்கம் கொண்டு, தம் ஒரே மகனை நம் மீட்பராக அனுப்பி, நம்மைத் தம் வாழ்வில் நிறைவாகப் பங்குபெற அழைத்துள்ளார். இது கடவுள் ஆற்றிய அரும்செயலாகும். -- எனவே, மனிதரால் இயலாதது ஒன்றுமில்லை என நாம் கூறலாமா? கடவுளின் அருளை நாம் பெறும்போது நாம் கடவுளின் நிலைவாழ்வில் பங்கேற்பதால் நாம் ஒருவிதத்தில் கடவுள் தன்மையைப் பெறுகிறோம். இதனால் மனித நிலை தன் நிறைவைப் பெறுகிறது. நாமும் கடவுளின் வல்லமையால் திடம் பெறுகிறோம். எனவே நாமும் தூய பவுலோடு சேர்ந்து, ''எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு'' எனக் கூறலாம் (பிலி 4:13). நம்மை உறுதிப்படுத்துகின்ற கடவுளோடு நாம் எப்போதும் இணைந்திருந்தால் நம் வாழ்விலும் அதிசய செயல்கள் நிகழும். மன்றாட்டு
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல் "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" அன்பார்ந்த இணையதள நண்பர்களே! நம் அன்னை மரியாவின் விசுவாச அறிக்கை இது. இன்று தான் அறிக்கையிட்டதை தன் வாழ்வின் இறுதிவரையிலும் வாழ்ந்து காட்டினாள். இந்த விசுவாச அறிக்கையின் அடிப்படையில் தன் வாழ்க்கை முழுவதும் கட்டி எழுப்பினாள். அவர் வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் வலுவூட்டி, வழிநடத்திச் சென்றது இந்த விசுவாச அறிக்கை. தன் விசுவாச அறிக்கை குருட்டு நம்பிக்கை அல்ல; மாறாக ஆழ்ந்த அறிவுப்பூர்வமானது என்பதை மரியா தன் பலவேறு கேள்விகளில் உறுதிப்படுத்துகிறார். வானதூதரின் வாழ்த்தில் மயங்கிவிடவில்லை. மிகப்பெரிய பதவியிலும் அசந்துவிடவில்லை. தன் கேள்விகளைக் கேட்கிறார். சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறார். வானதூதரால் சொல்லப்பட்ட செய்தியின் சான்றுகளை உறுதிசெய்கிறார். அறிவுப்பூர்வமாகச் சில உண்மைகளைக் கண்ட பின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஆண்டவனின் ஆற்றலுக்கு தன்னை அர்ப்பணிக்கிறாள். இவ்வாறு விசுவாசத்தற்கு விளக்கம் தருகிறார் அன்னை மரியா. ஆகவே விசுவாசம், கடவுள் நம்பிக்கை இவை மூட நம்பிக்கை அல்ல. அறிவில் ஆரம்பமாகி ஆண்டவனின் அருளில் நிறைவடைவது.முழுமையாக அதன் காரண காரியங்களை அறிவுப்பூரவமாகத் தெறிந்துகொண்ட காரணத்தால்,தன் வாழ்வின் எல்லாச் சூழலிலும் குறிப்பாக நிரபராதியான தன்அன்பு மகனை இளம் வயதில் குற்றவாளியாகச் சிலுவையில் அறைந்து கொன்றதை அமைந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள முடிந்தது.இது விசுவாசம். 'நான் ஆண்டவரின் அடிமை' என்றதன் வாழ்க்கை வடிவம். இந்த விசுவாச அறிக்கையும் வாழ்வும் நம் அன்னையை உலகம் போற்றும் பெண்ணாக, விண்ணக அரசியாக உயர்த்தியுள்ளது. அந்த அன்னையை வேண்டுவோம். அருள் நிறைந்த மரியே வாழ்க.. .. ..இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர். --அருட்திரு ஜோசப் லியோன்
|