முதல் வாசகம்
43: 3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; லூக்கா 4:24-30 தவக்காலம் -மூன்றாம் வாரம் திங்கள் நற்செய்தி வாசகம் ------------------------- லூக்கா 4: 24 - 30 சமீபத்தில் நான் வாசித்த “நண்பா நீர் தான் ஹீரோ” என்ற புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு சொற்றொடர் One Indian is Equal to Ten Japaneses. இதனை தமிழில் ஒரு இந்தியர் பத்து ஜப்பானியர்களுக்குச் சமம் என்று மொழி பெயர்க்கலாம். இந்த சொற்றொடர் உண்மையா? என்று சிந்தித்துப் பார்த்தால் உண்மை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்தியர்களிடையே இருக்கக்கூடிய திறமை, அறிவுத்திறன் அசாதாரணமானவை. ஆனால் அதில் சிக்கல் இருக்கின்றது. ஏனென்றால் இந்தியர்கள் தனியாக செயல்பட்டால் பத்து ஜப்பானியர்களுக்கு சமமாக செயல்படுவார்கள். அதே நேரத்தில் குழுவாக இணைந்து செயல்பட சொன்னால், ஒரு ஜப்பானியர் செய்யக்கூடிய வேலையை பத்து இந்தியர்கள் சோ்ந்து செய்தாலும் செய்ய முடியாது. ஏனென்றால் இந்தியர்களிடம் இணைந்து செயல்படக்கூடிய தன்மை இன்னும் வரவில்லை என்று ஆசிரியர் சுஜித்குமார் கூறுவார். எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் கடவுளின் திட்டம். ஆனால் யூதர்கள் தாங்கள் மட்டும் தான் தூய்மையானவர்கள், கடவுளுக்கு நெருக்கமானவர்கள், சட்டத்தி்ன நுணுக்கங்களை அறிந்தவர்கள், வல்லுநர்கள் என்று எண்ணி மற்றவர்களை தேவையற்றவர்கள் என்று கருதி அவர்கள தீட்டாகவே கருதினார்கள். இது தவறு என்று இயேசு சுட்டிக்காட்டி, அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை மாற்றியமைக்க முயலுகின்றார். இயேசுவின் கண்ணோட்டத்தை அறிந்த யூதர்கள் இவரை அழித்தொழிய நாம் வாழ்வு பெற இயலாது என்று எண்ணுகின்றார்கள். எனவே தான் இயேசுவின் மீது கோபம் மற்றும் எரிச்சல் கொண்டு புறக்கணிக்கின்றார்கள். இணைந்து செயல்படுதல் என்ற வார்த்தை ஒரு எட்டாத கனியாகவே யூதர்கள் பார்க்க துணிந்து விட்டார்கள். நாம் நம்முடைய குடும்பங்களில் சமுதாயத்தில் இணைந்து செயல்பட முயல்கிறோமா? அல்லது நான் தான் பெரியவன் என்ற கண்ணோட்டத்தில் வாழ முயல்கிறோமா? சிந்திப்போம். - அருட்பணி. பிரதாப் ======================== இயேசுவின் போதனையும், தாக்கமும் இதுவரை கேட்டிராத போதனை யூதர்களை குழப்பத்திலும், இயேசுவின் மீது கோபத்தோடு தாக்கவும் செய்கிறது. தாங்கள் மட்டும் தான் இறையாட்சி விருந்துக்கு தகுதியானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த யூதர்களுக்கு, இயேசுவின் போதனை புதிய போதனையாக இருக்கிறது. இதுவரை கேட்டிராத போதனையாகவும் இருக்கிறது. அவர்களுக்கு குழப்பம் என்பதைக் காட்டிலும், கோபம் அதிகமாக இருக்கிறது. யூதர்கள் மத்தியில் வாழ்ந்த போதகர்கள் அனைவருமே, யூதர்கள் மட்டும் தான், இறையாட்சி விருந்திற்கு தகுதிபெற்றவர்கள், என்கிற ரீதியில் போதித்துக்கொண்டிருந்தனர். அவர்களது போதனை மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர்கள் சொல்வது யூதர்களுக்கு மகிழ்ச்சியைத்தருவதாக அமைந்திருந்தது. ஒருவிதமான மயக்கத்தில் இருந்தனர். கேட்கக்கூடிய பொய்யான வாக்குறுதிகளுக்கு அவர்கள் கட்டுண்டு கிடந்தனர். அதனைத்தாண்டி அவர்களால் எதையும் சிந்திக்க முடியவில்லை. வாழ்வு வறுமையாக இருந்தாலும், எதிர்கால இறையாட்சி விருந்து அவர்களுக்கு மகிழ்வைத் தந்தது. ஆனால், அதற்கு தடையாக வந்தது, இயேசுவின் புதிய போதனை. தான் போதிப்பது மக்கள் மத்தியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதை, இயேசு தெரிந்திருந்தாலும், விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், தாக்கத்தை ஏற்படுத்துவதிலும், அதன் மூலமாக மக்களை சிந்திக்க வைப்பதிலும் இயேசு கருத்தோடு செயல்படுகிறார். இன்றைக்கு மக்களை சிந்தனையில்லாத மழுங்கட்டைகளாக இருப்பதையே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். எனவே தான், தொலைக்காட்சியைக் கொடுத்து, அவர்களின் வாழ்வை கெடுத்துக் கொண்டிருக்கிறவர்களாக இருக்கிறார்கள். மக்கள் சிந்திப்பதை மறந்து, ஒருவிதமான மயக்கநிலையிலும், அடிமைநிலையிலும் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு நமது போதனைகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் போதிக்க, முயற்சி எடுப்போம்.
------------------------------------------------- கடவுள் பக்தி தொழுகைக்கூடத்திற்குச் சென்று வழிபாட்டில் பங்கேற்பது, இயேசுவின் பணிவாழ்வில் நிச்சயம் முக்கியமான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். தொழுகைக்கூடுத்தில் நடக்கும் வழிபாட்டில் பலவற்றில் இயேசுவுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், அவர் அதில் மறக்காமல் பங்கேற்றார். பல தவறுகள் அங்கே நடந்தாலும் கூட, இயேசு அதில் பங்கேற்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். காரணம், கடவுளுக்கான நாள், அவருக்காகவே செலவிடப்பட வேண்டும் என்பது தான். நம்மைப்படைத்த இறைவனுக்கு, அவருக்கான நாளில், அவரைப்போற்றிப் புகழ்வது நமது வாழ்வின் மையமாக இருக்க வேண்டும் என்பதை இயேசு இங்கே உணர்த்துகிறார். நமது ஆலயங்களில் நடக்கும் வழிபாடுகள் ஒவ்வொன்றும் ஆண்டவரைப்போற்றுவதாக, புகழ்வதாக இருக்க வேண்டும். ஆலயங்களைப் பராமரிக்கும் பணியாளர்கள் மட்டில் நமக்கு மனஸ்தாபம் இருந்தாலும், ஆண்டவரைப்போற்றிப்புகழ்வதில் நமக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பல வேளைகளில் அருட்தந்தையர்கள் மீது உள்ள கோபத்தால், ஆலய நிர்வாகத்தினர் மீதுள்ள கோபத்தால், கடவுள் மீது கோபப்படுகிற, ஆலயத்தையே மறந்துவிடுகிற மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை இன்று அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. ஆலயத்திற்குச் செல்வது, நமக்கும், ஆண்டவருக்கும் இடையேயான உறவு. அதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இன்று பிள்ளைகளை டீயூசன் படிப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும், பொழுதுபோக்கு செய்வதற்கும் அதிகமாக ஊக்குவிக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், நமது பிள்ளைகள் கடவுள் பக்தியாய் வாழ்வதற்கு நாம் அவர்களைப் பக்குவப்படுத்துகிறோமா? அவர்களின் ஆன்மீக வாழ்வில் அக்கறை எடுக்கிறோமா? சிந்திப்போம். கடவுள் பக்தியில் நமது பிள்ளைகளை வளர்த்தெடுப்பதில் நாம் உறுதிகொள்வோம்.
-------------------------------------------------------- யார்தான் மீட்புப்பெற முடியும்? இயேசு தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் போதிக்கிறார். நாசரேத் என்பது ஒரு கிராமம் அல்ல. அது ஒரு பட்டணம் அல்லது நகரம். ஏறக்குறைய இருபதாயிரம் பேர் அங்கே வசித்து வந்தனர். இயேசுவின் போதனையைக்கேட்டு அவருடைய சொந்தமக்கள் இயேசுவிடத்தில் கோபப்படுகிறார்கள். இயேசு அப்படி என்ன தவறு செய்தார்? அவருடைய போதனையில் மக்களைக் கோபப்படுத்துகின்ற அளவுக்கு கூறப்பட்ட செய்தி என்ன? சீதோனும், சிரியாவும் புற இனத்துப்பகுதிகள். இயேசு பிறஇனத்தவரை உயர்த்திப்பேசுவதுதான் மக்களுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், யூதர்கள் தாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், கடவுள் பார்வையில் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தனர். எனவே, யூதர் அல்லாத மற்றவர்களை அவர்கள் இழிவாகக்கருதினர். இப்படித்தாங்கள் இழிவாகக்கருதும் பிறஇனத்தவரை, யூதரான இயேசு, புகழ்ந்துகூறியதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எனவே, அவரை வெளியே துரத்தி, மலைஉச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயன்றனர். இயேசு அவர்களிடம் இருந்து தப்பி, அங்கிருந்து போய்விடுகிறார். இயேசு எதற்காகப் பிற இனத்தவரை உயர்த்திப்பேச வேண்டும்? எதற்காக அதை யூதர்களுக்கு மத்தியில் சொல்ல வேண்டும்? இயேசு சாரிபாத்தில் வாழ்ந்த கைம்பெண்ணையும், நாமானையும் உதாரணமாகச்சொல்கிறார். இவர்கள் இரண்டுபேருமே பிறஇனத்தவர்கள். ஆனால், இரண்டுபேரிடத்திலுமுள்ள பொதுவான பண்பு: அவர்களின் நம்பிக்கை. கைம்பெண்ணிடம் மற்றவர்களுக்குக்கொடுக்கக்கூடிய அளவுக்கு மாவோ, எண்ணெயோ இல்லை. இதுதான் அவளிடம் கடைசியாக இருந்தது. இருக்கிற மாவும், எண்ணெயும் முடிந்தவுடன் அவளும், அவளுடைய பிள்ளையும் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான். ஏனென்றால், நாடு முழுவதும் பஞ்சம். ஆனாலும், எலியாவின் வார்த்தைகளை நம்பி, இருந்ததையும் அவருக்குக்கொடுக்கிறாள். அதேபோல, நாமான் பெரிய படைத்தளபதி. செல்வந்தன். இருந்தாலும், எலிசாவின் வார்த்தைகளை நம்பி, அவருக்குப்பணிகிறார். அவர் சொன்னதைச்செய்கிறார். நலமடைகிறார். நம்பிக்கைதான் இரண்டுபேருக்கும் மீட்பைத்தந்தது. இயேசு சொல்ல வருகிற கருத்து இதுதான்: யாராக இருந்தாலும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, கடவுளுக்கு நெருக்கமான இனமாக இருந்தாலும், நம்பிக்கைதான் ஒருவருக்கு மீட்பைத்தர முடியுமே தவிர, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்கிற தகுதி மட்டும், ஒருவருக்கு மீட்பைப்பெற்றுத்தர முடியாது. ஒவ்வொருவரும் நம்பிக்கையினால்தான் வாழ்வு பெறுகின்றனர். நான் கிறிஸ்தவன், நான் ஓர் அருட்சகோதரி, நான் ஓர் அருட்பணியாளர் என்பதால் நாம் மீட்பைப்பெற்றவிட முடியாது. நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட நம்பிக்கைக்கு ஏற்ற வாழ்வு வாழ வேண்டும். அப்போதுதான் நாம் மீட்புப்பெற முடியும். நம்பிக்கை வாழ்வு வாழ்கிற அனைவருக்கும் கடவுளின் அரசில் இடமுண்டு. - அருட்பணி. தாமஸ் ரோஜர் ======================= சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படாத இறைவாக்கினர்கள் ! சொந்த ஊரில், சொந்த வீட்டில், ஏன் சொந்த நாட்டில் ஏற்பிசைவும், பாராட்டும் பெறாத பலரை நாம் பார்த்திருக்கிறோம். எத்தனையோ கலைஞர்கள், படைப்பாளர்கள், அறிவியலாளர்கள் தக்க ஊக்குவிப்பு இல்லாததால், சோர்வடைந்து அடங்கிப் போவதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருவேளை நமக்கே கூட அத்தகைய அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். என்ன காரணம்? குயஅடையைசவைல டிசநநனள உழவெநஅpவ என்னும் பொன்மொழி ஆங்கிலத்தில் விளங்குகிறது. கூடவே இருப்பது ஏளனத்தை உருவாக்கும் என அதனை மொழி பெயர்க்கலாம். ஒருவர் நமக்குத் தெரிந்தவராக இருப்பதனாலேயே, அல்லது அவரது பிறப்பு, குடும்பப் பின்னணி, சில கொடுமையான நேரங்களில் ஒருவரின் சாதி- இவற்றைக் கொண்டு அவரைப் பார்ப்பதாலேயே அவரது திறன்களை, ஆற்றல்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நமக்குக் குழந்தைகளின் பார்வை, அல்லது இறைவனின் பார்வை தேவை. குழந்தைகள்தாம் எந்தப் பின்புலமும், பின்னணியும் இன்றி, முற்சார்பு எண்ணங்கள் எதுவுமின்றி பிறரை, நிகழ்வுகளை, இயற்கையைப் பார்க்கின்றனர், வியக்கின்றனர், ரசிக்கின்றனர், பாராட்டுகின்றனர், இறைவனும் அவ்வாறே. நாமும் நமது முற்சார்பு எண்ணங்களைக் களைந்து, மாந்தரை அவரது இயல்பை, திறன்களை மட்டுNமு கண்டு பாராட்ட முன்வருவோம். மன்றாடுவோம்: சொந்த ஊரில் புறக்கணிக்கப்பட்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். சாதீய நோயால் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சமூக நீதியை வழங்கும் பணியை நாங்கள் செய்ய உமது தூய ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். முற்சார்பு எண்ணங்களைக் களைந்து, மானிடரைக் குழந்தை உள்ளத்தோடு பார்க்கும் புதிய பார்வையை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். - பணி குமார்ராஜா
சொந்த ஊரில் ! இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, இறைவாக்கினர் எவருக்கும் தம் சொந்த ஊரில் மதிப்பில்லை என்னும் ஆண்டவர் இயேசுவின் அருள்மொழிகளை இன்று சிந்திப்போம். இறைவாக்கினர்களை மட்டுமல்ல, சிந்தனையாளர்களை, சாதனையாளர்களைக்கூட அவரது சொந்த ஊர் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றது. ஏன்? அதுதான் முற்சார்பு எண்ணம். ஒருவரது பெற்றோர், குடும்பப் பின்னணி, வாழும் சூழல் போன்றவற்றைக் கொண்டே ஒருவரது ஆளுமையையை, செயல்பாட்டைக் கணிக்கின்ற தவறை மானிட சமூகம் காலம் காலமாகச் செய்து வருகிறது என்பதனை இயேசுவின் காலத்திலிருந்து இந்நாள்வரை நிலவும் இந்தச் சமூகத் தீமையைக் கொண்டு நாம் அறிகிறோம். ஒவ்வொரு மனிதரும் அவரவர் மதிப்பீடுகளால், செயல்பாடுகளால், இயல்புகளால் மட்டுமே கணிக்கப்பட வேண்டும். மாறாக, அவர்களது பெற்றோர் யார்? அவர்களது பின்னணி என்ன? என்பன போன்ற தரவுகளால் அல்ல. ஆனால், இயேசுவின் சொந்த ஊரைச் சேர்ந்த மக்கள் இந்தத் தவறினைச் செய்தனர். அதுபோல, இன்றும் ஒவ்வொரு குடும்பத்திலும், பங்கிலும், தொழிலகத்திலும், ஊரிலும் இத்தகைய தவறுகள் நடந்துகொண்டே இருக்கலாம். எனவே, இன்று நான் சந்திக்கின்ற ஒவ்வொரு நபரையும் சற்று உன்னிப்பாகக் கவனித்து, அவர்களை முற்சாற்பு எண்ணமின்றிப் பார்க்கின்ற, மதிக்கின்ற பழக்கத்தை உருவாக்குவேன். மன்றாடுவோம்: ஆளுமையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இன்றைய வாசகத்தின் வழியாக நீர் கற்றுத் தரும் இந்தப் பாடத்திற்காக நன்றி. ஆண்டவரே, நான் எனது குடும்பத்தினரை, உறவினரை, உடன் ஊழியர்களைப் பார்க்கின்றபோது, முற்சார்பு எண்ணமின்றிப் பார்க்கவும், அவர்களின் சொந்த இயல்புகள், திறமைகளுக்காக அவர்களை மதிக்கவும் அருள் தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். --அருள்தந்தை குமார்ராஜா ------------------------ "இயேசு, 'இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
-- மக்களுக்குப் பிடிக்காத உண்மைகளையும் கசப்பான எதார்த்தங்களையும் இறைவாக்கினர் துணிந்து அறிவித்ததால் அவர்களுடையே உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட நேரங்களும் உண்டு. எனவே, இயேசு "இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை" என்று கூறிய சொற்கள் அவருடைய வாழ்க்கையிலேயே உண்மையாயின. இயேசு புரிந்த அரும் செயல்களைக் கண்டு, அவர் அறிவித்த இறையாட்சிச் செய்தியைக் கேட்டு மக்கள் எல்லாரும் உடனே அவரை வரவேற்று ஏற்கவில்லை. அவர்களுக்கு இயேசுவைப் பற்றிப் பல விவரங்கள் தெரிந்திருந்ததால் அவரைப் பற்றி மேலும் அறிய முன்வரவில்லை. நம் வாழ்க்கையிலும் இது நிகழக் கூடும். இயேசு யார் என்னும் கேள்விக்கு நாம் ஏற்கெனவே விடை கண்டுவிட்டதாக நினைத்தால் இயேசுவோடு நமக்குள்ள உறவு ஆழப்படுவதற்கு வழியில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் இயேசுவைப் புதிதாக அறிகின்ற மனம் நமக்கு இருந்தால் அவரது சாயல் நம்மில் மேலும் தெளிவாகத் தெரிந்திட வழிபிறக்கும். எனவே, இயேசு என்னும் இறைவாக்கினரின் குரல் நம் உள்ளங்களில் எப்போதும் ஒலிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அக்குரலுக்கு நாம் செவிமடுத்து அவரைத் தயக்கமின்றிப் பின்தொடர வேண்டும். மன்றாட்டு --அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
அன்பார்ந்த இணையதள நண்பர்களே! எந்த நிமிடம் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க முன்வந்தாரோ அந்த நிமிடமே அவரைக் கொல்லும் முயற்சியிலும் இறங்கிவிட்டார்கள். ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை என்று எப்போது பேசத் தொடங்கினாரோ, அப்போதே கொலை செய்யவும் அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. ஆமாம்."அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்" (லூக்4:29) --அருட்திரு ஜோசப் லியோன்
|