முதல் வாசகம் மத்தேயு 8:5-17 பொதுக்காலம் 12 வாரம் சனி
நற்செய்தி வாசகம் ------------------------- 30.06.2018 – மத்தேயு 8: 5 – 17 "உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர். நீ நாடு கடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் செல்லவில்லை" என்று, எரேமியா இறைவாக்கினர் கூறுகிறார். இது யூதர்கள் பாபிலோனியர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட நிகழ்வையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் படம்பிடித்துக் காட்டுகிறது. அந்த தருணத்தில், இறைவாக்கினர் எரேமியா அரசனிடம், பாபிலோனியர்களிடம் சரணடைந்து விடுவதுதான், நாட்டிற்கு நல்லது என்றும், அதுதான் கடவுளின் வார்த்தை என்றும் அரசனுக்கு அறிவித்தார். ஆனால், அரசர் பொய்யான இறைவாக்கினர்களின் பேச்சைக் கேட்டு அதனை நம்பி மறுத்து, இத்தகையை இழிநிலையை, மக்களுக்கு கொண்டு வந்துவிட்டான் என்று வருத்தப்படுகிறார். யூதாவின் கடைசி காலத்தில் ஏராளமான போலி இறைவாக்கினர்கள் வாழ்ந்து வந்தனர். இதனை இறைவாக்கினர் எரேமியாவும், எசேக்கியாவும் எடுத்துரைத்தனர். போலி இறைவாக்கினர்கள் கடவுள் என்ன சொல்கிறார்? என்று கூறுவதை விட, அரசனுக்கு எது மகிழ்ச்சியைத் தருமோ, அதனை அறிவித்து அவனுடைய நற்பெயரைப் பெறுவதில் போட்டி போட்டுக்கொண்டனர். ஆனால், உண்மையான இறைவாக்கினர்களோ, அரசருக்கு மகிழ்ச்சியோ, கவலையோ அது முதன்மையல்ல. மாறாக, கடவுள் என்ன சொல்கிறாரோ, அதனைச் சொல்வது தான், தங்கள் கடமை என்று, அதனைத் துணிந்து சொல்கின்றனர். போலி இறைவாக்கினர்களின் கூற்றுப்படி, கடவுள் பாபிலோனியர்களிடமிருந்து அரசனையும், நாட்டினையும் மீட்பார். ஆனால், எரேமியா அதற்கு எதிரான கருத்தைக் கூறியதால், சிறையில் அடைக்கப்படுகிறார். உண்மைக்கு அல்ல, பொய்மைக்குத்தான் மதிப்பு தரப்படுகிறது. இன்றைக்கு நாம் வாழும் சமூகத்திலும், போலித்தனத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. உண்மையான நட்பிற்கோ, உறவுக்கோ இங்கு மதிப்பு இல்லை. பொய்மைக்கு முதன்மையான இடம் தரப்படுகிறது. இப்படிப்பட்ட உலகத்தில் பொய்மையைப் பழித்துரைப்பதை விட, நாம் உண்மையான உறவுகளாக வாழ்வதில் முனைப்பு காட்டுவோம். உண்மைக்காக குரல் கொடுப்போம். இயேசுவின் பரந்த மனம் இயேசுவின் இன்றைய வார்த்தைகள், யூதர்களின் நம்பிக்கை பற்றிய பார்வையை அடியோடு புரட்டிப்போடுகின்ற வார்த்தைகள். நூற்றுவர் தலைவன், தனது பையனை குணப்படுத்த இயேசுவின் உதவியை நாடுகிறார். அதில் உள்ள பிரச்சனையும் அவருக்குத் தெரியும். யூதச்சட்டப்படி, ஒரு யூதர் புற இனத்தவரின் வீட்டிற்குச் செல்லக்கூடாது. புறவினத்தார் வாழக்கூடிய பகுதிகள், யூதர்களின் பார்வையில் தூய்மையற்றவை. இயேசு ஒரு யூதர். நூற்றுவர் தலைவன் ஒரு புற இனத்தவர். இந்த சிக்கல் இரண்டு பேருக்குமே தெரியும். அப்படியிருந்தும், இயேசு ”நான் வந்து அவனைக் குணப்படுத்துவேன்” என்று சொல்கிறார். இயேசு தெரியாமல் சொல்லவில்லை. மாறாக, மற்றவர்களின் பதிலை, எதிர்வினையை எதிர்பார்த்துச் சொல்கிறார். இங்கே தான், நூற்றுவர் தலைவனின் ஆழ்ந்த விசுவாசம் வெளிப்படுகிறது. அந்த விசுவாசத்தை பாராட்டும் இயேசு, அடுத்த ஒரு இடி போன்ற செய்தியை அறிவிக்கிறார். அதாவது, ”கிழக்கிலும், மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்பதுதான் அந்த செய்தி. மெசியா வருகிறபோது, செய்யப்படுகிற விருந்தில், புற இனத்தவர்க்கு இடமே கிடையாது, என்ற நம்பிக்கையில் இருந்த யூதர்களுக்கு, இந்த செய்தி உண்மையிலே கடுமையான செய்திதான். ”உனக்கு பணிபுரியாத வேற்றுநாடோ, அரசோ அழிந்துவிடும்” (எசாயா 60: 12) என்று புறவினத்தாரைப்பற்றி வைத்திருந்த ஒரு பார்வையை, இயேசு முற்றிலும் மாற்றிக் கொடுக்கிறபோது, அது நிச்சயம் யூதர்களுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும். இயேசுவின் எண்ணம் பரந்துபட்ட எண்ணம். அது அடிமைத்தளைகளை உடைத்தெறிகிற எண்ணம். அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எண்ணம். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களையும், கடவுளின் பிள்ளைகளாகப் பார்க்கக்கூடிய எண்ணம். அதனையே நாமும், நமது வாழ்வில் கொண்டிருப்போம்.
-------------------------------------------------------- இயேசுவின் பரந்த மனம் இயேசுவின் இன்றைய வார்த்தைகள், யூதர்களின் நம்பிக்கை பற்றிய பார்வையை அடியோடு புரட்டிப்போடுகின்ற வார்த்தைகள். நூற்றுவர் தலைவன், தனது பையனை குணப்படுத்த இயேசுவின் உதவியை நாடுகிறார். அதில் உள்ள பிரச்சனையும் அவருக்குத் தெரியும். யூதச்சட்டப்படி, ஒரு யூதர் புற இனத்தவரின் வீட்டிற்குச் செல்லக்கூடாது. புறவினத்தார் வாழக்கூடிய பகுதிகள், யூதர்களின் பார்வையில் தூய்மையற்றவை. இயேசு ஒரு யூதர். நூற்றுவர் தலைவன் ஒரு புற இனத்தவர். இந்த சிக்கல் இரண்டு பேருக்குமே தெரியும். அப்படியிருந்தும், இயேசு ”நான் வந்து அவனைக் குணப்படுத்துவேன்” என்று சொல்கிறார். இயேசு தெரியாமல் சொல்லவில்லை. மாறாக, மற்றவர்களின் பதிலை, எதிர்வினையை எதிர்பார்த்துச் சொல்கிறார். இங்கே தான், நூற்றுவர் தலைவனின் ஆழ்ந்த விசுவாசம் வெளிப்படுகிறது. அந்த விசுவாசத்தை பாராட்டும் இயேசு, அடுத்த ஒரு இடி போன்ற செய்தியை அறிவிக்கிறார். அதாவது, ”கிழக்கிலும், மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்பதுதான் அந்த செய்தி. மெசியா வருகிறபோது, செய்யப்படுகிற விருந்தில், புற இனத்தவர்க்கு இடமே கிடையாது, என்ற நம்பிக்கையில் இருந்த யூதர்களுக்கு, இந்த செய்தி உண்மையிலே கடுமையான செய்திதான். ”உனக்கு பணிபுரியாத வேற்றுநாடோ, அரசோ அழிந்துவிடும்” (எசாயா 60: 12) என்று புறவினத்தாரைப்பற்றி வைத்திருந்த ஒரு பார்வையை, இயேசு முற்றிலும் மாற்றிக் கொடுக்கிறபோது, அது நிச்சயம் யூதர்களுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும். இயேசுவின் எண்ணம் பரந்துபட்ட எண்ணம். அது அடிமைத்தளைகளை உடைத்தெறிகிற எண்ணம். அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எண்ணம். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களையும், கடவுளின் பிள்ளைகளாகப் பார்க்கக்கூடிய எண்ணம். அதனையே நாமும், நமது வாழ்வில் கொண்டிருப்போம்.
------------------------------------------------------- ஒரு வார்த்தை! இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் “ஒரு வார்த்தையின்” பெருமையை இருமுறை பறைசாற்றுகிறது. கப்பர்நாகும் ஊர் நூற்றுவர் தலைவரின் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் போராடியபோது, அவர் இயேசுவிடம் “ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் பையன் நலமடைவான்” என்று சொல்லி, இயேசுவையே வியப்படையச் செய்தார், அதனால் மகனையும் நலமாகப் பெற்றுக்கொண்டார். மாலைவேளையில் பேய் பிடித்த பலரும் இயேசுவிடம் கொண்டுவரப்பட்டபோது, “அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின”. இந்த நற்செய்திப் பகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை:
மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தையால் நாள்தோறும் எங்களை வழிநடத்துவதற்காகவும், நலப்படுத்துவதற்காகவும் நன்றி கூறுகிறோம். நாங்கள் நல்ல வார்த்தைகளையே பேச தூய ஆவியால் எங்களை நிரப்புவீராக, ஆமென். அருள்பணி. குமார்ராஜா
ஒரு வார்த்தை சொல்லரூhநடடip; ! இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, நேற்றைய வாசகத்தில் இயேசு தொழுநோயாளரைத் தொட்டுக் குணமாக்கிய நிகழ்ச்சியை வாசித்தோம். இன்று ஒரு வார்த்தையால் அலகைகளை விரட்டிய நிகழ்ச்சியை வாசிக்கிறோம். #8220;பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின” என்று வாசிக்கிறோம். இயேசுவின் தொடுதல் எவ்வாறு ஆற்றல் மிக்கதாக இருந்ததோ, அதுபோலவே அவரது சொற்களும் வலிமை மிக்கனவாக இருந்தன. இதைப் பலரும் அனுபவத்தில் கண்டுணர்ந்திருந்தனர். எனவேதான், நுhற்றுவர் தலைவன் இயேசுவிடம் #8220;ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் பையன் நலமடைவான்” என்று துணிவுடன், நம்பிக்கையுடன் கூறமுடிந்தது. இன்றும் இயேசு நம்மோடு பேசுகிறார். அவரது வார்த்தையை விவிலியத்தில் வாசிக்கிறோம். அந்த வார்த்தைகள் ஆற்றலோடும், வல்லமையோடும் நம்மில் செயல்பட நம்மை அனுமதிப்போம். இறைவார்த்தை நம் வாழ்வை மாற்ற வரம் கேட்போம். மன்றாடுவோம்: வார்த்தை மனுவான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். ஒரு வார்த்தையால் நீர் குணமாக்கினீர். அசுத்த ஆவிகளை விரட்டினீர். இன்றும் உமது வார்த்தையால் எங்களுக்கு நலமும், வலிமையும், ஞானமும் அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். --அருள்தந்தை குமார்ராஜா ---------------------------------
''நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, 'ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்துவைக்க நான் தகுதியற்றவன். அன்பார்ந்த இணையதள நண்பர்களே! -- திருப்பலிக் கொண்டாட்டத்தின்போது நற்கருணை உட்கொள்வதற்கு முன், ''ஆண்டவரே, தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் என் ஆன்மா குணமடையும்'' என நாம் கூறுகின்ற சொற்கள் நற்செய்தியில் வருகின்ற இயேசுவின் ஒரு புதுமையை அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கப்பர்நாகுமுக்குச் செல்கிறார். அப்போது பிற இனத்தவராகிய உரோமையரைச் சார்ந்த ஓர் அதிகாரி அவரை அணுகுகிறார். பாலஸ்தீனப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த உரோமைக் காவல் படையினர் நூறு பேருக்கு அவர் தலைவர். எனவே அவருடைய பதவிப் பெயர் ''நூற்றுவர் தலைவர்'' என்பதாகும். இந்த அதிகாரி தம் பணியாள் (அல்லது அவருடைய ''குழந்தை'') நோய்வாய்ப்பட்டிருப்பதாக இயேசுவிடம் கூறுகிறார். இயேசு நினைத்தால் பணியாளுக்கு நலம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை அந்த அதிகாரியிடம் இருந்தது. பிற இனத்தாரோடு யூதர் பழகுவதில்லை. ஆனால் இயேசுவோ அந்த அன்னியராகிய அந்த உரோமை அதிகாரியைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, அவருடைய வீட்டுக்குச் சென்று பணியாளரைக் குணப்படுத்தப் போவதாக இயேசு கூறுகிறார். அப்போது நூற்றுவர் தலைவர் இயேசுவைப் பார்த்து, ''ஐயா, நான் தகுதியற்ற மனிதன்'' என்று கூறி, இயேசு ஒரு வார்த்தை சொன்னால் போதும், தன் பணியாள் குணமாவார் என்கிறார். -- இச்சொற்களைக் கேட்ட இயேசு அந்த அதிகாரியின் ஆழ்ந்த நம்பிக்கையைப் போற்றுகிறார். இஸ்ரயேலரிடம்கூட அத்தகைய ஆழ்ந்த நம்பிக்கை இல்லையே என இயேசு வருத்தத்தோடு கூறுவது நம் காதுகளில் விழுகிறது (காண்க: மத் 8:10). பிற இனத்தாருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டு, அவர்களும் இறையாட்சியில் பங்குபெற வருவர் என்பதை இயேசு இச்செயல்வழியாகக் காட்டுகிறார் (காண்க: எசா 2:2-4; மீக் 4:1-4; செக் 8:20-23). எனவே உலகின் எத்திசையிலுமிருந்து மக்கள் வந்து இறையாட்சியில் பங்கேற்பர். இதை இயேசு ''விருந்து'' என்னும் உருவகம் வழியாக எடுத்துக் கூறுகிறார் (மத் 8:11). வழக்கமாக இயேசு நோயாளரை நேரடியாகச் சந்தித்து அவர்களைக் குணமாக்குவார். இங்கோ அவர் நோயாளரின் அருகே செல்லாமலே, தொலையிலிருந்துகொண்டே குணமளிக்கிறார். இதில் இயேசுவின் ''அதிகாரம்'' (மத் 8:9) வெளிப்படுகிறது. ஒருவேளை பிற இனத்தாராகிய நூற்றுவர் தலைவரின் வீட்டுக்குள் நுழைந்தால் தீட்டு ஏற்பட்டுவிடலாம் என்பதற்காக இயேசு அங்குச் செல்லவில்லையோ என சில அறிஞர் கருதுகின்றனர். கடவுளின் முன்னிலையில் நாம் தகுதியற்றவர்களாகவே உள்ளோம். ஆனால் அவரே முன்வந்து, இயேசு வழியாக நம்மைத் தம்மோடு ஒன்றுபடுத்துகிறார். இந்த உறவு என்னும் அருள்கொடையை நாம் நன்றியோடு ஏற்று எந்நாளும் இறைபுகழ் பாடிட வேண்டும். மன்றாட்டு --அருட்திரு பவுல் லியோன் வறுவேல் அனுபவமே சிறந்த விசுவாசம் அன்பார்ந்த இணையதள நண்பர்களே! முதல் அருஞ்செயலில் தொழுநோயாளியைத் தொட்டு குணப்படுத்தி, இறை உறவில் புதிய வரலாறு படைத்த இயேசு, மத்தேயுவின் இரண்டாவது அருஞ்செயலில் புற இனத்தாராகிய உரோமைப் படையின் நூற்றுவர் தலைவரின் பையனைக் குணப்படுத்தி மீண்டும் ஒரு சமூக மறுமலர்ச்சி ஏற்படுத்துவதை இங்குக் காண்கிறோம். "இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை." என்ற பாராட்டு இஸ்ராயேல் மக்களுக்கு ஒரு படிப்பினையாக இருந்தாலும் பிற மக்களுக்கு ஒரு பாராட்டாக அமைந்தது. "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்."(மத் 8:8) எத்தகைய நம்பிக்கை பாருங்கள்.இந்த இறை உறவை, விசுவாசத்தை, கடவுள் நம்பிக்கையை இந்த நூற்றுவர் தலைவன் தன் அன்றாட வாழ்க்கை அனுபவமாகப் பார்ப்பதை நாம் இங்கு காண்கிறோம்." நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் "செல்க" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம்" வருக" என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து" இதைச் செய்க" என்றால் அவர் செய்கிறார்"(மத் 8:9). கடவுள் பக்தி, நம் அன்றாட வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பிறப்பெடுக்க வேண்டும். அதுவே ஆழமான விசுவாசம். அசைக்க முடியாத நம்பிக்கை.புனிதமான அன்பு. நம் வாழ்வில் நாம் சந்திக்கும் நோய், இழப்பு, பிரச்சனை, மன அழுத்தம், பொருளாதார நெருக்கடி, குடும்ப பாரங்கள் இவைகளின் மத்தியில் நம் விசுவாசம் கட்டி எழுப்பப்பட வேண்டும். இத்தகைய நேரங்களில் வெளிப்படும் இறை நம்பிக்கை இறைவனின் பாராட்டுதலையும் பரிசையும் பெற்றுத் தரும்.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன். --அருட்திரு ஜோசப் லீயோன்
|