image

புனித வார வழிபாட்டுப் பாடல் பகுதி

புனித வியாழன்

முழு வார்த்தை வழிபாடு மற்றும் பாடல்கள் es

தொடக்கச் சடங்குகள்:

தியானப்பாடல் பல்லவி: திரு.பா 116 12-13, 15-16, 17-18

கடவுளைப் போற்றி கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்ததில் பங்குகொள்வதே

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.

ஆண்டவர் தம் அன்பர்களின் சாவு
அவரது பார்வையில் மிக மதிப்புக்கு உரியது
ஆண்டவரே நான் உண்மையாகவே உம் ஊழியன்
நான் உம் பணியாள் உம் அடியாளின் மகன்
என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.

நான் உமக்கு நன்றி பலி செலுத்துவேன்.
ஆண்டவராகிய உம் பெயரை தொழுவேன்
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில்
ஆண்டவரே உமக்கு என் பொருட்தனைகளை நிறைவேற்றுவேன்

 

நற்செய்திக்குமுன் வசனம் யோவான் 13:34

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும்
புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.
நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல
நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.
என்கிறார் ஆண்டவர்

 

பாதம் கழுவுகையில்

ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?
அதற்கு இயேசு: "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால்
என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்றார்.

சீமோன் பேதுருவிடம் அவர் வந்தபோது
பேதுரு அவரை நோக்கிக் கூறினார்:
"ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?"

அதற்கு இயேசு: "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால்
என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்றார்.

"நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது,
பின்னரே புரிந்து கொள்வாய்."

"ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?"
அதற்கு இயேசு: "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால்
என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்றார்.

 

பாஸ்கா உணவினை அருந்திட

பாஸ்கா உணவினை அருந்திட சீடரோடு இயேசு வந்து 
பந்தியிலே அமர்ந்திருந்தார் 
தம் மேலாடை களைந்து இடுப்பினில் துண்டைக் கட்டி 
சீடரிடம் எழுந்து வந்தார்

குவளையில் தண்ணீர் மொண்டு சீடர்களின் பாதம் தொட்டு 
கழுவியே துடைத்து விட்டார் 
பணி வாழ்வின் பெருமை சொன்னார்

சீமோன் இராயப்பரை நாடி வந்து பாதங்களைக் கழுவிட 
இயேசு வந்த நேரத்திலே 
இராயப்பரோ பாதங்களை இயேசுவிடம் காட்டாது 
உரிமையில் கடிந்து கொண்டார் 
என்னுடைய பாதங்களை என் ஆண்டவர் கழுவுவதா 
ஒருபோதும் அனுமதியேன் ஒரு காலும் சம்மதியேன்

நான் செய்வது இன்னதென்று இப்போது புரியாது 
பின்னரே புரிந்து கொள்வாய் 
உன் பாதம் கழுவிட அனுமதியாவிடில் 
என்னோடு பங்கில்லை 
ஆண்டவரே போதகரே என் கால்களை மட்டுமல்ல 
என் கைகளை தலையையுமே முழுவதும் கழுவி விடும் 
முழுவதும் குளித்தவன் கால் மட்டும் கழுவினால் 
போதுமென்று அறியாயோ ? 
நான் செய்வதன் அர்த்தம் என்னவென்று உமக்கு 
இந்நேரம் புரியாதோ ?

நான் ஆண்டவர் போதகர் தான் முன் மாதிரி காட்டுகிறேன் 
நீங்கள் ஒருவர் ஒருவரது பாதங்களைக் கழுவுங்கள் 
இயேசு சொன்ன வார்த்தைகளை மனதில் இருத்தி 
நாமும் வாழ்ந்திடுவோம் 
பிறர் பணி செய்து வாழ்வதே நம் வாழ்வின் கடமை 
சீடரின் தகுதியென்போம் (2) - 3 

 

 

காணிக்கைப் பாடல்:

பல்லவி:
உண்மை அன்பு எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் -2

கிறிஸ்துவின் அன்பு நம்மை எல்லாம் ஒன்றாய் கூட்டி சேர்த்ததுவே
அவரில் அக்களித்திடுவோம் யாம் அவரில் மகிழ்சி கொள்வோமே - பல்லவி

வாழும் இறைவனுக்கு அஞ்சிடுவோம் அவருக்கன்பு செய்திடுவோம்
நேரிய உள்ளத்துடனே நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்வோம் - பல்லவி

எனவே ஒன்றாய் நாமெல்லாம் வந்து கூடும் போதினிலே
மனதில் வேற்றுமை கொள்ளாமல் விழிப்பாய் இருந்து கொள்வோமே - பல்லவி

தீய சச்சரவுகள் ஒளிந்திடுக பிணக்குகள் எல்லாம் மறைந்திடுக
நமது நடுவில் நம் இறைவன் கிறிஸ்து ஆண்டவர் இருந்திடுக - பல்லவி

பேறுபெற்றோரின் கூட்டத்திலே நாமும் ஒன்றாய் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின் மாட்சி திருமுகம் காண்போமே - பல்லவி

முடிவில்லாமல் என்றென்றும் ஊழி காலம் அனைத்திற்கும்
அளவில்லாத மாண்புடைய பேரானந்தம் இதுவே யாம்
- பல்லவி

ஆமென்.

 

நற்கருணை மன்றாட்டு

அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

அ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்

எல்.: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்

அ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்

எல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே

ஆண்டவரே தூயவரான தந்தையே என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எந்நாளும் எவ்விடத்திலும்
நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும்
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலுமாகும்.

என்றுமுள்ள மெய்யான குருவாகிய அவர்
நிலையான பலிமுறையை ஏற்படுத்தினார்.
மீட்பு அளிக்கும் பலிப்பொருளாக முதன் முதல் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்து,
தம் நினைவாக நாங்களும் பலிசெலுத்த வேண்டுமென்று கற்பித்தார்.
எங்களுக்காகப் பலியான அவருடைய திருஉடலை
உண்ணும்போதெல்லாம் நாங்கள் வலிமை பெறுகின்றோம்.
அவர் எங்களுக்காகச் சிந்திய திருஇரத்தத்தைப் பருகும் போதெல்லாம்
நாங்கள் கழுவப்பட்டுத் தூய்மை அடைகின்றோம்.

ஆகவே வானதூதர் முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர் தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது
(தொடக்கவுரையைத் தொடர்ந்து தூயவர் இடம் பெறும்)

தூயவர், தூயவர், தூயவர் - வான்
படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும்
உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஓசன்னா - 2
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்
உன்னதங்களிலே ஓசன்னா - 2

(அர்ச்சிப்புப் பகுதிக்குப் பின்)

அ.ப.: நம்பிக்கையின் மறைபொருள்

எல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.

 

திவ்விய நற்கருணையை இடம் மாற்றம் செய்யும்போது

பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் மறைபொருளை
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர் தம்
புதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த
தூய இரத்த மறைபொருளை எந்தன் நாவே பாடுவாயே

அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று
நமக்கென்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தூய வார்த்தையான வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார்

இருதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நியமனத்தின் உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்குத்
தம்மைத்தாமே தூய உணவாய்த் தம் கையாலே அருளினாரே

ஊன் உருவான வார்த்தையானவர் வார்த்தையாலே உண்மை அப்பம்
அதனைச் உடலாய் ஆக்கினாரே இரசமும் கிறிஸ்து இரத்தமாகும்
மாற்றம் இது நம் மனித அறிவை முற்றிலும் கடந்த தெனினும்
நேர்மையுள்ளம் உறுதிகோள்ள மெய் விசுவாசம் ஒன்றே போதும்

மாண்புயர் இவ்வருள் அடையாளத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும் இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறைகள் நீக்க நம்பிக்கையின் உதவி பெறுக

தந்தை அவர்க்கும் மகன் அவர்க்கும் புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மாட்சிமையோடு வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம் தூய ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி என்றுமே உண்டாகுக -ஆமென்.

=============================

திவ்ய நற்கருணை ஆராதனை

நிலையான புகழுக்குரிய தூய இறை நன்மைக்கே,
எல்லா காலமும், தொழுகையும் புகழும் போற்றியும் மாட்சிமையும்
உண்டாகக் கடவது.

 

image