![]() ![]() ![]() ![]() ![]() |
![]() |
பற்பல நவநாள் ஜெபங்கள் ஆண்வராகிய இயேசுவே, எங்கள் மேல் இரக்கம் வையும். எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்களைத் தீர்ப்பிடாதேயும். எங்கள் மூதாதையர், எங்கள் சகோதர, சகோதரிகள் வழி வந்த எல்லாக் குற்றங் குறைகளையும், பாவங்களையும், மன்னித்தருளும். எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கி விடும். எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு உமது ஆவியால் எங்களை வழி நடத்தியருளும்.
இயேசுவே! நீர் மரீத்தீர். ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கை ஊற்றாகவும், இரக்கத்தின் கடலுமாகவும், வழிந்தோடியது. ஓ! வாழ்வின் ஊற்றே! கண்டு பிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே! உலக முழுமையும் உம்முள் அடக்கி உமது இரக்கம் முழுமையும் எம்மீது பொழிந்தருளும். இயேசுவின் இதயத்திலிருந்து இரக்கத்;தின் ஊற்றாக வழிந்தோடும் இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன். இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்துவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும், சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும்.தவறி எங்களில் யாராவது உமது திரு இருதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றத்துக்கு நாங்கள் நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திரு இருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.இதுவுமன்றி உலகத்திலிருக்கும் எல்லா குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருத்தாப்பியருக்கு ஊன்று கோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக. இயேசுவின் இரக்கமுள்ள திரு இருதயமே! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே, இந்த விசாரணையிலுள்ள சகல பிள்;ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வ பயத்தையும் வளரச் செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரணசமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே, முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும். - ஆமென்.
நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல் புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் விரோதிகளின் பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும், மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேஸ்வரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே! - ஆமென்.
மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு நித்தியமாக பரிசுத்த மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே! குடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமான போதும், ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசணுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், செபங்களாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும் கூடுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறேன். துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசே: உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின் போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுகள் கடவுளுடைய திரு விருப்பத்திற்கு மாறானதாயிருந்தால் எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும். (இங்கு உம்மன்றாட்டு இன்னதெனச் சொல்லவும்) தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக நான்செய்யும் இந்நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையை காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திரு உள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து அதற்கு வணக்கமாக நான் செய்யும் இந்நவநாளையும் இப்போது நான் சொல்லப் போகும் அருள் நிறை செபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும். (இங்கு அருள் நிறை செபத்தை ஒன்பது முறை சொல்லவும்) கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே! அருள் நிறைந்தவள் என முதன் முதல் அதிதூதர் கபிரியேல் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துல்களைக் கூறுகிறேன். ஏற்றுக் கொள்ளும். நீர் அணிந்திருக்கும் முடியில் என் செபங்கள் அத்தனையும் விண்மீன்களெனத் துலங்குமாறு விரும்புகிறேன். வருந்துவோருக்கு
எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்திதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டிவந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், சந்தோஷமும் எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்கு காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ? உம்மைத்தேடி வந்த நிர்ப்பாக்கியருக்கு உதவியாயிரும். அழுகிறபேர்களை அரவணையும். அல்லல் படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? நீர்; ஆதரிக்காவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் மேலே தயவாயிரும். தயை கடலே தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்கு தஞ்சமே. உம்முடைய சந்நிதானம் தேடிவந்தோம். ஆறு, காடுகளைக் கடந்து ஓடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் வேண்டுதல் பலனற்றதாய் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அன்பான அம்மா! அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா! தஸ்நேவிஸ் மரியே அம்மா! எங்கள் குடும்பங்களை முழுதும் இன்று உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்;வதித்தருளும் தாயே - ஆமென்.
புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. ஏனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன். உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன். புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். - ஆமென்.
நெஞ்சுக்கும் மார்புக்கும் நிறைந்த சிலுவை! நீச பிசாசுகளை விரட்டிடும் சிலுவை - சிலுவை அடியில் தலையை வைத்தேன். திருவிரலால் உடலை வைத்தேன். எனக்கு உதவியாக வாரும் திருச்சிலுவை ஐயாவே! - ஆமென். குருசான குருசே!
எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம். புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும். உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்;ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும். எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும், நாங்கள் நேர்மையுடன் உழைக்கவும், மக்கள் யாவரும் மெய்யங்கடவுளைக் கண்டறிந்து, தக்க முறையில் அவரை வழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும். எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம். - ஆமென்.
கன்னிகையும் வேத சாட்சியுமான பக்தி மிகுந்த புனித பிரகாசியம்மாளே! நீர் இறைவனிடம் பெற்றுக்கொண்ட அருட்பலத்தால் இளமையிலே புண்ணிய வழியில் நடந்து தெய்வீக அழகு பெற்றுத் திகழ்ந்தீரே, உமது கன்னிமையை ஆண்டவராகிய இயேசுவுக்கு அர்ப்பணித்து, பெருந்துன்ப துயரங்கள் உம்மைத் தாக்கிய போதும் அசையாத தூணாக நின்று கன்னிமையை களங்கமில்லாமல் காத்து உமது ஆத்துமத்தை அவருக்குக் கையளித்தீரே, சீர்கூசா நகரத்தின் மகிமையும், அடைக்கலமுமான கன்னிகையே, பக்தியுடன் உம்மை நாடிவரும் அனைவருக்கும் பல நன்மைகளையும் அற்புதங்களையும் ஆற்றி வரும் அற்புத வரத்தியே நீர் எங்களுக்காக இறைவனை மன்றாடி நாங்கள் ஞான ஒளி பெற்று பாவ வழிகளை விலக்கி, இயேசுவின் அன்புப் பாதையில் நடந்து இறுதியாய் மோட்ச பேரின்பம் அடைய வரம் பெற்றுத் தருவீராக! (1 பர, 1அருள், 1திரி,)
அதிதூதரான புனித மிக்கேலே, யுத்த நாளில் எங்களைக் காப்பாற்றும் பசாசின் பட்டனத்திலும் கண்ணிகளிலும் நின்று எங்களை காத்தருளும். இறைவன் அதைக் கடிந்து கொள்ளும்படி தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். வானுலகசேனைக்கு அதிபதியாயிருக்கின்ற நீர்; ஆன்மாக்களை நாசஞ் செய்யும்படி உலகெங்கும் சுத்தித்திரியும் சாத்தானையும் மற்றும் பசாசுகளையும் தெய்வ வல்லமையைக் கொண்டு நரகபாதாளத்திN;ல தள்ளிவிடும்.
அப்போஸ்தலரும் வேத சாட்சியுமான புனித யூதாததேயுசே! நீர் நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினருள் ஒருவராயிருக்கிறீர்! புண்ணியத்திலும் புதுமை வரங்களிலும் மகா கீர்த்திப் பெற்றவர்! உம்மை மன்றாடுகிறவர்களுக்காகத் தவறாமல் மனுப் பேசுகிறீர்! திக்கற்றுத் தயங்குவோருக்கு விசே:ப் பாதுகாவலர் நீர்;! நம்பிக்கை இழந்தவர்களின் நம்பிக்கை நீர்! இந்த உமது வல்லபத்தில் நம்பிக்கை வைத்து இதோ நான் உம்மை நாடி வருகிறேன். எனக்கு மிகவும் அவசரமான இந்த வேளையில் உதவிப் புரியும்படி உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன். ஓ! தயாள இருதய ததேயுசே! இனிமேல் உள்ள என் வாழ்நாட்களில் உம்மை எமது பாதுகாவலாக வணங்குவேன் என்றும், எங்கள் அவசரங்களில் உதவில் செய்ய, நீர் வல்லமை மிகுந்தவரும், தீவிரமாய் பரிந்து பேசுகிறவருமாய் இருக்கிறீர்; என்ற உமது பக்தியை மக்களிடையில் பரவச் செய்வேன் என்றும் உறுதியாய் வாக்களிக்கிறேன்.
அற்புத குழந்தை சேசுவே! அமைதி அற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளுமாறு உம்மை இறைஞ்சுகிறோம். (வேண்டிய வரத்தை இங்கு குறிப்பிடுக) எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை, சோதனைகளையும், நீக்கி உம் குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உம் ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக! தேர்வு எழுதுவோருக்காக ஜெபம்
ஐந்து காய வரம் பெற்ற முதற்குருவே, புனித தந்தை பியோவே, அனைத்து ஆன்மாக்களும் விண்ணகம் சேர, தொடர்ந்து பரிந்து பேசி, பாவிகளை மனம் திருப்பி, பரமனிடம் சேர்க்க உறுதியளித்தவரே, நற்கருணை நாதரோடு ஒன்றித்த ஒப்பற்றவரே, செபமாலை பக்தியை சாத்தனை எதிர்க்கும் ஆயுதமாகக் கொண்டவரே, தவத்தை ஏற்று ஏழ்மை, தாழ்ச்சி, பிறரன்புப் புண்ணியங்களில் சிறந்து, இடைவிடா மன்றாட்டால் தீராத நோய்களைக் குணமாக்கும் வரம்பெற்ற வள்ளலே, எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரே, ஐந்து காயங்களிலிருந்து நறுமணம் பரப்பும் நாயகரே, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் நல்லவரே, இறைவனால் இவ்வுலகுக்கு அருளப்பட்ட மாபெரும் புனிதரான தூய பியோவே, இதோ வேதனைகளோடும், பிரச்சனைகளோடும், தீராத நோய்களோடும், வாழ்க்கை சுமைகளோடும் உம்மை நாடி தேடி வரும் எங்களைக் கண்ணோக்கி பாரும். நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றாட்டுக்களை (. . . . ) இறைவனிடம் பரிந்து பேசி தயவாய் எமக்கு பெற்றுத் தாரும். அகிலம் போற்றும் அற்புதத் தந்தை புனித பியோவே, இயேசுவின் ஐந்து காயங்களை தனது உடலில் சுமந்து, வேதனைகளை அனுபவித்து துன்பத்தில் இறைவனை உணர்ந்தவரே, நாங்களும் எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை ஏற்று புனித வாழ்வு வாழவும், உலகிற்கு அமைதியைக் கொணரவும் தேவையான வரங்களை இறைமகன் இயேசுவிடமிருந்து பெற்றுத் தாரும். - ஆமென்.
ஓ! பரிசுத்த சிலுவையே எங்கள் ஏக நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறோம். ஓ! பரிசுத்த சிலுவையே இரக்கத்தின் தேவனே உமது அடியார்களாகிய எங்களையும் எங்கள் குடும்பங்களையும் காப்பாற்றியருளும். பரிசுத்த சிலுவைக்கு பரிசுத்த சிலுவையே எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் கண்ணோக்கி பார்த்தருளும். பின் உமது திருவுளப்படி ஆகட்டும், ஆண்டவரே உமது சித்தத்தை ஏற்றுக் கொள்கிறேன். உமது இரக்கத்துக்கு என்னையே கையளிக்கிறேன். திருச்சிலுவையே நீர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர். ஓ! பரிசுத்த சிலுவையே என்ஏக நம்பிக்;கையை உமது பேரில் வைக்கிறேன். பரிசுத்த சிலுவையே என் பேரில் உமக்குள்ள அன்பை விசுவசிக்கிறேன். பரிசுத்த சிலுவையே உமது இராச்சியம் வருக. ஓ! பரிசுத்த சிலுவையே நான் அநேக உதவி உபகாரங்களை உம்மிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் அனைத்து உதவிகளையும் உமதிடமிருந்து பெற்றிருக்கிறேன். அதற்காக இறைவனுக்கு முழு மனதுடன் நன்றி செலுத்துகிறேன். ஆனால் இப்பொழுது எனக்கு மகா அவசியமான இந்த விண்ணப்பத்திற்காக உருக்கமாக மன்றாடுகிறேன். அதை ஏற்று உமது ஐந்து திருக்காயங்களுக்குள் வைத்தருளும். நித்திய பிதா திரு இரத்தத்தால் மூடப்பட்டிருக்கும் இவ்விண்ணப்பத்தை பார்க்கும்போது அவர் அதை மறுக்கமாட்டார். பரிசுத்த சிலுவையே இனிமேல் அது என்னுடைய விருப்பமல்ல, உம்முடையதே. ஓ! பரிசுத்த சிலுவையே எனது நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன். என்னை ஒரு போதும் கலங்க விடாதேயும். ஆமென். (தினமும் ஜெபிக்கவும்) அப்போஸ்தலரான புனித தோமையாரை நோக்கி செபம் எங்கள் செல்வ நாட்டில் திருமறையைப் போதிக்க வரம் பெற்ற் புனித தோமையாரே, நீர் ஆண்டவர் மீது கொண்டிருந்த பற்றுதலால் அவரோடு இறக்கவும் துணிந்திருந்தீரே! காணாமல் நம்புவோரின் வீர விசுவாசத்தையும், சாவுக்கும் அஞ்சாத தீர அன்பையும், எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும். நீர் எங்கள் நாட்டில் திருமறையைப் போதித்து, அரும் அடையாளங்களால் எங்கள் முன்னோர்களில் கணக்கற்ற பேரை மெய் மறையின் ஒளிக்குக் கொண்டு வந்தீர்! இன்னும் இந்த நாட்டில் எங்கள் சகோதரர்களில் எத்தனை கோடிப்பேர் இயேசுவை அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மனந்திரும்பி, இந்தியா முழுவதும் ஒரே மந்தையாய், கிறிஸ்துவின் அன்பரசின்கீழ் வருவது எப்போது? விசுவாசத்தில் உறுதியடைந்த அப்போஸ்தலரே, எங்கள் அனைவரையும் விசுவாசத்திலும் பக்தி ஒழுக்கத்திலும் உறுதிப்படுத்தி, எங்களில் துலங்கும் விசுவாசத்தின் ஞானஒளி எங்கும் பரவி, இந்தியா முழுவதும் கிறிஸ்து கொண்டு வந்த விடுதலையையும் அமைதியையும் பெற்று அவருடைய அரசின்கீழ் அணிவகுத்து நிற்கும்படியாக இறைவனை மன்றாட உம்மை வேண்டுகிறோம். ஆமென். புனித தோமையார் மன்றாட்டுமாலை சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. இறையன்னையை மிகவும் அன்பு செய்த அப்போஸ்தலரான புனித தோமையயாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் உலகின் பாவங்களைப் போக்குகிறரூhநடடip;ரூhநடடip;ரூhநடடip;மற்றதும், செபிப்போமாக புனித இஞ்ஞாசியார் திருநாளுக்கு முன் நவநாள் செபம் இயேசு சபையை நிறுவியவரும் மரியன்னையின் அன்புத் தொண்டருமாயிருக்கிற புனித இஞ்ஞாசியாரைக் குறித்து ஒன்பது மன்றாட்டுகளைக் கேட்கிறது. 1. புனித இஞ்ஞாசியாரே! இயேசுவின் மகிமை உலகமெங்கும் விளங்கவும். கோடா கோடி மக்கள் மீட்புப் பெறவும், இயேசு சபையை உண்டாக்கவும் மிகுந்த முயற்சியுடன் உழைத்தீரே: நீர் தொடங்கிய சபை உலகமெங்கும் தடை இல்லாமல் பரவவும், ஆண்டவருடைய புகழ் விண்ணுலகில் போல மண்ணுலகிலும் பெருக வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ரூனெயளர் பர. அருள். திரி. 2. இயேசுவின் அன்புப் படைத்தலைவராய் இருக்கிற புனித இஞ்ஞாசியாரே! தீய சக்திகளை அடக்கி ஒடுக்க வல்லமையைக் கொண்டிருக்கிறீரே. இந்த நாட்டிலுள்ள தீமை முழுவதும் சரிந்து இயேசுவின் திருப்பெயர் தடையின்றி விளங்கும்படிக்கு உம்மை மன்றாடுகிறோம். 3. ஆன்மாக்களை மீட்பதில் மிகுந்த கருத்தும் கூர்மதியும் கொண்டிருக்கிற புனித இஞ்ஞாசியாரே! திருச்சபைக்கு உதவி செய்கிறவர்களுக்கும், குருக்கள், . துறவியர், வேதியர்களுக்கும், பெரியவர்களுக்கும் வேண்டிய தூய கருத்தையும் கூர் மதியையும் தந்தருளவேணும் என்று உம்மை மன்றாடுகிறோம். ரூனெயளர் பர. அருள். திரி. 4. இயேசுவின் அன்பு மைந்தராய் இருக்கிற புனித இஞ்ஞாசியாரே! தவறுகளைத் தாக்கும் சம்மட்டியென்கிற விருதைச் சிறப்பாக உம்மிடத்திலே விளங்கச் செய்தீரே. பற்பல நாடுகளிலேயும் சிறப்பாக இந்நாட்டிலுமுள்ள ஒழுக்கக் கேடான போதகங்கள் சிதைந்து அழிய வேணுமென்று உம்மை மன்றாடுகின்றோம். ரூனெயளர் பர. அருள். திரி. 5. இளகாத மனதுடைய பாவிகளை உம்முடைய ஒறுத்தலையும் கடின தவத்தையுங்கொண்டு மனந்திருப்பின் புனித இஞ்ஞாசியாரே! பாவத்தில் நிலைகொண்டவர்கள் மனம் திரும்பவும் விசுவாமின்றிக் கெடுகிறவர்கள் பிடிவாதம் தீர்ந்து உறுதியான விசுவாசத்தைக் கொள்ளவும் வேணுமென்று உம்மை வேண்டுகிறோம். ரூனெயளர் பர. அருள். திரி. 6. புனித இஞ்ஞாசியாரே! கடலிலும் நிலத்திலும் வேதனைப்படும் எல்லாருடைய இன்னல்களையும் விலக்கி வந்தீரே. இந்த நாட்டிலுள்ள பஞ்சம், படை பெருவாரிக்காய்ச்சல் துன்ப துயரங்களிலே அவதிப்படுகிறவர்களுடைய பொல்லாப்பு நீங்க வேணுமென்று உம்மை வேண்டுகிறோம். பர. அருள். திரி. 7. புனித இஞ்ஞாசியாரே! இறை பக்தியினுடைய மிகுதியினாலே இறைவனுடைய அளவற்ற நன்மைத் தனங்களைத் தெளிவோடே தியானித்து மனிதரெல்லாரும் கரையேறவேணும் என்கிற ஆவலை நிறைவாய்க் கொண்டிருந்தீரே! எங்கள் மக்கள் அனைவரும் மெய்மறையை அறியவும், கிறிஸ்துவர்கள் எல்லோரும் விசுவாசம் உள்ளவர்களாக வாழவும் வேண்டும் என்று உம்மை வேண்டுகிறோம். ரூனெயளர் பர. அருள். திரி. 8. புனித இஞ்ஞாசியாரே! மிகுந்த கீழ்ப்படிதலைக் காட்டி நடந்ததுமல்லாமல் மற்றவர்கள் எல்லோரும் இந்த நற்பண்பிலே வளரவும் மிகவும் முயற்சி செய்தீரே! நாங்கள் எல்லோரும்; கீழ்ப்படிகிற நற்பண்பை எந்நாளும் கைக்கொண்டிருக்க வேணுமென்று உம்மை வேண்டுகிறோம். ரூனெயளர் பர. அருள். திரி. 9. புனித இஞ்ஞாசியாரே! இந்த உலகத்திலே வாழ்ந்தபோது இறைவனுக்கு புகழ் உண்டாகவும் மக்கள் ஈடேறவும் எடுத்த முயற்சிகள் பலிக்க இப்போது விண்ணுலகிலே ஆண்டவரிடமாக மன்றாடி, நாங்கள் எல்லோரும் விசுவாசம், பக்தி, நம்பிக்கையிலே வளர்ந்து கொண்டு வரவும் நல்ல மரண மடையவும் உம்மை வேண்டுகிறோம். ரூனெயளர் பர. அருள். திரி. புனித இஞ்ஞாசியாரே! பாவிகளாகிய நாங்கள் செய்த இந்த ஒன்பது பரலோக மந்திரமும் ஒன்பது அருள் நிறைந்த மந்திரமும் உம்முடைய திருவடியிலே காணிக்கையாக வைக்கிறோம். நீர் உம்முடைய நற்பண்புகளோடே கூட இயேசுவின் திருவடியில் இவற்றைக் காணிக்கையாக வைத்து, இந்த ஒன்பது நாளும் நாங்கள் கேட்கிற மன்றாட்டுக்களை இறைவன் உம்மை முன்னிட்டு எங்களுக்கு அருள வேணுமென்று உம்மை வேண்டுகிறோம். ரூனெயளர் ஆமென். புனித இஞ்ஞாசியாரை நோக்கி செபம் இறைவனின் அதிமிகப் புகழை இப்பூவுலகில் பரவச் செய்வதற்கும், எண்ணிக்கையில்லாத மக்களை விண்ணுலகில் சேர்ப்பதற்கும் இறைவன் தேர்ந்தெடுத்த புனித இஞ்ஞாசியாரே! எளியேனுக்குத் தகுதியில்லை என்றாலும், உம் பேரிலுள்ள நம்பிக்கையாலும் உமது செல்வாக்கு வல்லபத்தாலும் ஏவப்பட்டு உமது சரணமாய் ஓடி வந்தேன். நீர் என் பாதுகாவலராயிருந்து என்னைக் காத்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஏனெனில் என் வாழ்நாளையும் என் இறுதி நேரத்தையும் உமக்கே ஒப்படைத்து விடுகிறேன். சோதனை வேளையில் எனக்கு ஆதரவாயிரும். இறைவன் திருமுன் பரித்துரைத்து என் குறைகளைப் போக்கியருளும். சிறப்பாக என் செயல்களையெல்லாம் அர்ச்சித்து பேறுபலனுள்ளனவாக்கி விண்ணுலகப் பரிசை உறுதிப்படுத்தும் வலிமையாகிய உத்தம இறையன்பை எனக்காகக் கேட்டுத் தந்தருளும். ரூனெயளர் ஆமென். தொத்து நோய் அகலப் புனித இஞ்ஞாசியாரை நோக்கி செபம் மாட்சிமை தங்கிய முதுபெரும் தந்தையாகிய புனித இஞ்ஞாசியாரே! பஞ்சம், வறுமை, நோய் போன்ற கொடுமைகளிலிருந்தும், சாவைத்தரும் தொத்து நோயினின்றும், சிறப்பாக கொடிய பாவத்தினின்றும் எங்களைக் காப்பாற்ற இறைவனின் திருமுன் பரிந்துரைக்கக் கருணை புரிந்தருளும். நாங்கள் உமது நன் மாதிரியைப் பின்பற்றி இறைவனுடைய அதிமிகப் புகழுக்காவும், மக்களின் மீட்புக்காகவும் வருந்தி உழகை;க உறுதியான ஆவலை எங்களுக்குத் தந்தருளும். கடைசியாய் இயேசுவின் திரு இதயம் எங்கள்பேரில் இரங்கி, அனைத்துக்கும் கொடுமுடியான நிலைமை வரத்தையும் விண்ணுலகப் பேற்றையும் எங்களுக்குக் கட்டளையிட்டருள எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ரூனெயளர் ஆமென். புனித இஞ்ஞாசியார் மன்றாட்டு மாலை சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
செபிப்போமாக புனிதரின் பேரின்பமாகிய இறைவா, உம்முடைய திருச்சபை பல்வேறு பிரிவினைக் கொள்கைகளால் அலைக்கழிக்கப்பட்ட காலத்தில் உம்முடைய திருப்பெயரின் மகிமையை எங்கும் பரப்பவும், திருச்சபையின் மறுமலர்ச்சிக்குக் கீழ்ப்படிதலுடன் ஒத்துழைக்கவும் புனித லொயோலா இஞ்ஞாசியாரை அழைத்தீரே. அவருக்காகவும் அவர் நிறுவிய சபைக்காகவும் உம்மைப் போற்றுகிறோம். அவருடைய எடுத்துக்காட்டாலும் உதவியாலும் நாங்கள் எல்லாத் தீமைகளையும் எதிர்த்து வீரத்துடன் போராடவும். நுpறைவாழ்வாம் வெற்றிவாகையைப் பெற்றுக் கொள்ளவும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம். ரூனெயளர் ஆமென். புனித சவேரியார் மூலம் கேட்கும் பத்து மன்றாட்டு 1. மெய் மறைக்கு ஓர் அழியாத வைரத்தூணாகிய புனித சவேரியாரே! இறைமக்கள் அனைவரும் திருமறையில் நிலைகொண்டு அதன்படி இறைவனுக்கு ஏற்ப அறநெறியைக் கடைப்பிடிக்கவும் ஆண்டவர் இறைமக்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் அருளவும், இறைவனின் கருணையை மன்றாட உம்மை வேண்டுகிறோம். - பர., அருள்., திரி. 2. எங்களுக்குக் காவலுமாய் அன்புள்ள தந்தையுமாயிருக்கிற புனித சவேரியாரே! இந்த பாரதத் திருச்சபை எப்போழுதும் உண்மை நெறி தவறாதிருக்கவும், சுற்றிலும் சூழ்ந்துள்ள தீமை இருளில் நுழையாமல் அற ஒளிவீசி விளங்கவும், இறைவனின் கருணையால் நாளுக்கு நாள் வளர இறைவனை மன்றாடும்படி உம்மை வேண்டுகிறோம். - பர., அருள்., திரி. 3. சிறந்த போதகரான புனித சவேரியாரே! நீர் புனித இஞ்ஞாசியாருக்கு உகந்த சீடராகி அற நெறியில் நடந்து, எல்லா கடின தவத்தையும் செய்து கொண்டு அனைவருக்கும் நன்மாதிரியாய் விளங்கினீரே. பாரதக் குருக்கள் எல்லாரும், உம்மைப்போல, நற்பண்புகளினாலே அழகு பெற்று, தங்கள் போதனையினாலும், மாதிரியையினாலும் அற வழியைக் காண்பித்துக் கொண்டு வர அவர்களுக்கு வேண்டிய திருவருளையும் உடல் நலத்தையும் இறைவன் அருள நீர் பரிந்து பேசும்படி உம்மை வேண்டுகிறோம். - பர., அருள்., திரி. 4. பாரதத் திருச்சபைக்கு உதவியும் தஞ்சமுமாயிருக்கிற புனித சவேரியாரே! திருச்சபைக்கு உதவி செய்கிறவர்களை இறைவன் ஆசீர்வதித்து அவர்களுக்கு எல்லா நன்மைகளையும் வழங்கியருளவும், மறை ஊழியத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வேதியர், ஆசிரியர் முதலானோர் தங்கள் கடமைகளைத் தக்கபடி ஆற்றிட, இறைவனிடம் பரிந்து பேச வேண்டும் என்று உம்மை வேண்டுகிறோம். - பர., அருள்., திரி. 5. பவ இருளைப் பல நாடுகளில் நீக்கினவராகிய புனித சவேரியாரே! பாரத நாட்டிலும் உலகமெங்கும் தீய சக்திகளின் ஆதிக்கம் ஒழிந்து, திருமறை எங்கும் பரவவும், திருச்சபையை எதிர்ப்பவர்களுக்கு இறைவன் நல்ல மனத்தைக் கொடுத்தருளவும் அவரை மன்றாடும்படி உம்மை வேண்டுகிறோம். - பர., அருள்., திரி. 6. பல்லாயிரம் பேருக்கு திருமுழுக்குக் கொடுத்த புனித சவேரியாரே! புறமதத்தினர் மெய்மறையை அறிந்து திருமுழுக்குப் பெற்றுத் திருச்சபையின் மீட்புப் பேற்றினைப் பெற திவ்விய மீட்பரை மன்றாட வேணுமென்று உம்மை வேண்டுகிறோம். - பர., அருள்., திரி. 7. கிறிஸ்துவர்களை மெய்மறையின்படியே நடத்தி ஈடேற்றவும், பாவிகளை அற நெறியிலே திருப்பவும் மிகவும் பாடுபட்ட புனித சவேரியாரே! மெய்மறையை அறிந்தவர்கள் எல்லாரும் அதன் உயர் நெறியை அனுசரிக்கவும், நன்னெறி தவறினோர் மனந்திரும்பவும் இறைவனிடம் மன்றாட வேணுமென்று உம்மை வேண்டுகிறோம். - பர., அருள்., திரி. 8. மக்களுடைய இன்னல்களை விலக்கவும், ஆபத்தினின்று பலரை மீட்கவும், வியப்புக்குரிய புதுமைகளைச் செய்தவராகிய புனித சவேரியாரே! இறைவன் கருணை கூர்ந்து பஞ்சம், படை, நோய், பெருவாரிக் காய்ச்சல், வைசூரி, இடி, பெருங்காற்று முதலிய துன்பங்கள் எளியோரை அணுக விடாமல் விலக்கவும், எல்லாத் தீமைகளினின்றும் எங்களைக் காத்து, துயரப்படுகிறவர்களுடைய துயரெல்லாம் தீர்த்து அவர்களைத் தேற்றவும், இறைவனின் கருணையை மன்றாட வேணுமென்று உம்மை வேண்டுகிறோம். 9. இறப்பு வேளையில் திரளான மக்களுக்கு நன்மரணமடைய உதவி செய்து கொண்டு வந்த புனித சவேரியாரே! நாங்கள் எல்லோரும்; பாவமில்லாமல் அறவழியிலே நடந்து நல்ல சாவையடைந்து பேரின்ப விண்ணுலக அரசிலே சேர எங்களுக்காக மன்றாடும்படி உம்மை வேண்டுகிறோம். - பர., அருள்., திரி. 10. புனித சவேரியாரே! நீர் பத்தாண்டு காலமாய்ப் பாரத நாட்டில் பரமனின் திருமறையை நிறுவப் பாடுபட்டு கடைசியாய் வெள்ளிக் கிழமையில் நன் மரணம் அடைந்ததினால் உமது பெயரைக் குறித்து பத்து வெள்ளிக் கிழமையைக் கொண்டாடுகிறவர்கள் எல்லாரும் நினைத்த நற்செயல்கள் நிறைவேறவும். மண்ணுலகில் இருக்குமளவும் இறைவனுக்குப் பத்தியோடே பணிபுரிந்து, உமது மன்றாட்டின் உதவியால், இறைவனின் பேரின்ப வீட்டில் உம்மோடு முடிவில்லாத காலம் வாழ்ந்திருக்கவும் எமக்காகப் பரிந்து பேச உம்மை வேண்டுகிறோம். - பர., அருள்., திரி. மக்கள் மனந்திரும்புவதற்காக புனித சவேரியாரின் செபம் என்றென்றும் வாழ்பவரும் எல்லாவற்றையும் படைத்தவருமாயிருக்கிற இறைவா! எல்லா மக்களும் உம்முடைய சாயலாகப் படைக்கப்பட்டிருக்கிறதை நினைத்தருளும். இதோ! உம் மகத்துவத்துக்கு எதிராக பலர் அழிவடைகிறார்கள். ஆ! சுவாமி உம் ஒரே மைந்தனாகிய இயேசு அவர்களை மீட்பதற்காகத் தம்முடைய விலை மதியாத திரு இரத்தத்தைச் சிந்தி எண்ணிலா வேதனைகளை அனுபவித்துக் கொடிய சாவை அடைந்ததை நினைத்தருளும். ஆண்டவரே! அனைவருடைய திவ்விய மீட்பராகிய உம்முடைய திரு மைந்தனை அவர்கள் தங்கள் தீச்செயல்களினால் பிடிவாதமாய் நிந்திக்க விடாமல் புனிதர் அனைவரின் மன்றாட்டுகளினாலும், உம்முடைய திருச்சபையின் வேண்டுதலினாலும், மனந்திரும்பச் செய்தருளும். உம்மால் அனுப்பப்பட்டவரும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை மெய்யங்கடவுளாக அவர்கள் ஏற்று வணங்கச் செய்தருளும். உமக்கும் எங்களை மீட்ட அந்தத் திவ்விய ஆண்டவருக்கும் தூய ஆவியாருக்கும் முடிவில்லாத காலமும் புகழ் உண்டாகக் கடவது ரூனெயளர் ஆமென். தவறாது பலன் தரும் புனித சசேரியாருடைய நவநாள் செபம் மிகவும் வணக்கத்துக்குரியவரும், இறையன்பு நிறைந்தவருமான புனித சவேரியாரே! உம்மோடு கூட நெடுஞ்சாண்கிடையாக திவ்விய சந்நிதானத்தைத தொழுகிறேன். இறைவன் உம்மை இவ்வுலகில் பல வரங்களாலும், சாவுக்குப் பிறகு முடிவில்லாத மணிமுடியாலும் அணி செய்தார் என்கிற உண்மை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்காக அவருக்கு நன்றி கூறி உமது வல்லமையுள்ள மன்றாட்டால் எனக்கு மிகத் தேவையான நல்ல வாழ்க்கையையும், நல்ல சாவையும், அத்தோடு கூட இறைவனின் திருவுளத்துக்கும் மகிமைக்கும் ஒத்திருக்குமாகில், (வேண்டிய வரத்தைக் கேட்கவும்) எனக்கு அடைந்தருள வேணுமென்று மன்றாடுகிறேன். - 3 பர., 3 அருள்., 3 திரி. செபிப்போமாக இறைவா! புனித சவேரியாரின் போதனையாலும், புதுமைகளாலும் பாரத நாட்டு மக்களை உமது திருச்சபைக்கு அழைக்கத் திருவுளமானீரே: அவருடைய புகழைக் கொண்டாடுகிற நாங்கள் அவரது நன்மாதிரியைப் பின்பற்றி வாழ வரமருளுமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ரூனெயளர் ஆமென். ஓ என் இறைவா! நான் உம்மை அன்பு செய்கிறேன். நீர் என்னை மீட்பீர் என்பதற்காக அல்ல, அல்லது உம்மை அன்பு செய்யாதவர்களை முடிவில்லாத தீயில் தள்ளித் தண்டிப்பீர் என்பதற்காகவும் அல்ல : ஆனால் என் இயேசுவே, ஆணிகளாலும், ஈட்டிகளாலும், நிந்தை அவமானங்களாலும் கொடிய வேதனைகளுக்குள்ளாகி பாவியாகிய எனக்காக, ஆம், எனக்காகவே உமது உயிரையும் கொடுத்தீர். அப்படியானால் உம்மை நான் அன்பு செய்ய மாட்டேனா? ஓ மகா அன்பு நிறைந்த இயேசுவே! விண்ணுலகை விரும்பியாவது, நரகத்துக்கு அஞ்சியாவது, வேறு எந்த கைம்மாற்றை நம்பியாவது நான் உம்மை அன்பு செய்யாமல், நீர் எவ்விதம் என்னை அன்பு செய்தீரோ அவ்விதமே நானும் உம்மை அன்பு செய்கிறேன். ஏனெனில் நீரே என் அரசர். நீரே என் இறைவன்!. புனித சவேரியார் மன்றாட்டுமாலை சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே மு. ரூனெயளர் கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக. செபிப்போமாக அன்பின் இறiவா, வாழ்வளிக்கும் உம் திருமகளின் நற்செய்தியை நாங்கள் எங்கள் மக்களுக்கு அறிவிக்க புனித பிரான்சிஸ்கு சவேரியாரை அனுப்பத் திருவுளமானீர். அவருடைய அயரா உழைப்பினால் பல்வேறு நாட்டு மக்களை உமக்குச் சொந்தமாக்கிக் கொண்டதற்காக நன்றியுடன் உம்மைப் புகழ்கிறோம். அவருடைய மன்றாட்டினால் நாங்கள் உம் அருளாற்றலோடு ஒத்துழைத்து, எங்கள் நற்செய்தி வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளவும், உமது அருள்வாக்கை ஏற்று, அதற்குத் துணிவுடன் சான்று பகரவும் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ரூனெயளர் ஆமென். புனித அருளானந்தர் நவநாள் செபம் செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும், செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களைக் கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும். இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு. வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும். மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும் மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறவ நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத் தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும். ரூனெயளர் ஆமென். புனித அருளானந்தருக்குச் செபம் கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர். ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத தீரமும் உண்டாகச் செய்தருளும். கிறிஸ்துவின் மந்தையைச் சேராத எத்தனையோ இலட்சம் ஆடுகள் இந்நாட்டில் உண்டு. அவர்களுக்கெல்லாம் வழிகாட்டி ஒளியேற்ற இன்னும் பல குருக்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய ஆண்டவரை மன்றாடியருளும். தவிர, துன்பத்தாலும் நோயாலும் வறுமையாலும் நலிந்து வாழும் ஏழை மக்கள் மீதும்; இரக்கமாயிரும். அனைவர் நடுவிலும் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் நிலைத்து நிற்பனவாக! இறுதியாக, புனித அருளானந்தரே, எங்கள் ஆயர்கள், குருக்கள், துறவியர், மக்கள் அனைவரையும் உமது பாதுகாவலில் வைக்கிறோம். அவர்கள் எல்லாரும் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் அன்பில் எல்லா நலன்களையும் பெற்று, பரம தந்தையின் திருவுளத்துக்கு அமைந்து, புனிதர்களாய் வாழ்ந்து, என்றும் மாறாத பேரின்ப வாழ்வுக்கு வந்து சேரச் செய்தருளும். ரூனெயளர் ஆமென். புனித அருளானந்தரின் மன்றாட்டுமாலை சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. மறைச்சாட்சியரின் மாண்புமிகு அரசியாகிய மரியாவே. செபிப்போமாக
|