0476. சக்தியானவா ஜீவநாயகா அன்பாலே வாழும் தேவா
ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய்
என்றென்றும் வாழும் தேவா
1. மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்க வா
அச்சமின்றியே வாழ்வில் ஒத்துழைக்க வா
திக்கனைத்துமே உண்மை எதிரொலிக்க வா
யுத்தம் நீங்கியே அமைதி உதிக்கச் செய்ய வா
பூமி எங்குமே நெஞ்சம் யாவும் தங்கியே
அன்பாலே வாழும் தேவா
2. வறுமை போக்கியே வளமை மகிழ்வளிக்க வா
சமத்துவத்திலே மனித மாண்புயர்த்த வா
ஆணவத்தையே வென்று பணிவை ஆக்க வா
தாழ்ச்சி கொண்டவர் உள்ளம் ஊக்கமூட்ட வா
நீதி நேர்மையில் என்னை நாளும் ஆளவே
அன்பாலே வாழும் தேவா
|