0551. வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே எழுந்து வாருமே
1. ஏனோ இந்தப் பாசமே ஏழை என்னிடமே
எண்ணில்லாத பாவமே புரிந்த பாவி மேல்
2. உலகம் யாவும் வெறுமையே உனை யான் பெறும் போது
உறவு என்று இல்லையே உன் உறவு வந்ததால்
3. தனிமை என்றே ஏங்கினேன் துணையாய் நீ வந்தாய்
அமைதியின்றி ஏங்கினேன் அதுவும் நீ என்றாய்
4. எந்த மன்னர் உம்மைப் போல் பொங்கும் அன்பினால்
வந்து எமது நடுவிலே தங்கி மகிழுவார்
5. அன்பு ஒன்றைக் கேட்கின்றேன் அதையே தருகின்றேன்
இதயத்தன்பு யாவுமே இனிதே தருகின்றேன்
|