குருத்து ஞாயிறு புனித வியாழன் புனித வெள்ளி பாஸ்கா திருவிழிப்பு

படல்கள் மட்டும்

புனித வெள்ளி - ஆண்டவரின் திருப்பாடுகள்

as

;

மிகப் பழைமையான வழ்க்கப்படி, இன்றும் நாளையும் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை.

சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாயிருக்கும்.

பிற்பகலில், குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்ப, இதற்குப் பிந்தின நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்: இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து.

இன்று இறைமக்களுக்கு இச்சடங்கில்மட்டும் திருவுணவு கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கும் எந்நேரத்திலும் திருவுணவு கொண்டுபோகலாம்.

திருப்பலிக்குரிய சிவப்பு நிற உடைகள் அணிந்த குருவும் திருத்தொண்டரும் பீடத்தின்முன் வந்து, வணக்கம் செலுத்தி, முகம் குப்புற விழுந்து அல்லது வசதிக்கேற்ப முழந்தாட் பணிந்து இருப்பார்கள்: எல்லாரும் சிறிது நேரம் மௌனமாக மன்றாடுவர்.

பின் குருவும் பணியாளரும் தத்தம் இருக்கைக்குச் செல்வர். குரு அங்கு மக்களை நோக்கி நின்று, கைகுவித்துக் கீழுள்ள மன்றாட்டுகளில் ஒன்றைச் சொல்வார்.

மன்றாட்டு: (செபிப்போமாக அல்லது மன்றாடுவோமாக என்று சொல்வதில்லை)

இறைவா, உம் திருமகன் கிறிஸ்து
உம் மக்கள் எங்களுக்காகத் தமது இரத்தத்தைச் சிந்தி உயிர் நீத்துப் பாஸ்கா மறைநிகழ்ச்சியை நிறைவேற்றினார்.
அவரது சாவிகளை இன்று சிறப்பாக நினைவுகூர்ந்து கொண்டாடுகின்ற நாங்கள்
எங்கள் சிந்தனை, சொல, செயல் அனைத்தாலும் இத்திருவழிபாட்டில் ஆழ்ந்து பங்கேற்கச் செய்தருளும். எங்கள்.

எல். ஆமென்.

 

(அல்லது)

 

இரக்கமுள்ள இறiவா,

முதல் மனிதரின் பாவத்தின் விளைவான சாவுக்குத் தலைமுறை தலைமுறையாக நாங்கள் ஆளாகித் தவிக்கின்றோம்.
எங்கள் ஆண்டவராகிய உம் திருமகன் கிறிஸ்துவின் பாடுகளினால் நீவிர் அந்தச் சாவினை அழித்தீர்.
இயற்கை நியதிப்படி பழைய ஆதாமின் சாயாலைத் தாங்கியிருக்கும் நாங்கள்,உமது அருளால் புனிதமடைந்து,
புதிய ஆதாமாகிய கிறிஸ்துவின் சாயலைத் தாங்கி, அனைத்திலும் அவரைப்போல் ஆகிடச் செய்தருளும்.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்

 

முதற் பகுதி இறைவாக்கு வழிபாடு

பின்னர் அனைவரும் அமர்ந்திருக்க, இசையாஸ் இறைவாக்கினரின் திருநூலிலிருந்து (52:13-53:12) வாசிக்கப்படும்: அதற்குரிய சங்கீதம் தொடரும்.

இறைவாக்கினர் எசாயா திருநூலிருந்து வாசகம்:

13 இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.

14 அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.

15 அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.

அதிகாரம் 53

1 நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?

2 இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்; நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை;

3 அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை.

4 மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.

5 அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.

6 ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.

7 அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

8 அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்; அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்; என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்.

9 வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.

10 அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.

11 அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

12 ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி

 

தியானப்பாடல் : திருப்பாடல் 31: 2,6 12-13, 15-16, 17, 25

பல்லவி: தந்தையே உம் கையில் என் ஆவியயை ஒப்படைக்கிறேன்

ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்
ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்
உம்முடைய நீதியின்படி என்னை விடுவித்தருளும்.
உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே
வார்தையில் தவறாத இறைவா
நீர் என்னை மீட்டருள்வீர்

என் எதிரிகள் அனைவரும்டையவும் பழிச்சொல்லுக்கு நான் ஆளானேன்
என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்
எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன்
வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்
இறந்து போனவன் போல் பிறர் கண்களுக்கு மறைவானேன்
உடைந்து போன மட்கலத்தைப் போலானேன்

ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நான் உம்மீது நம்பிக்கை வைக்கன்றேன்
நீரே என் கடவுள் என்றேன்
என்கதி உம் கையில் உள்ளது ஆண்டவரே
என் எதிரிகளிடமிருந்தும் என்னைத்
துன்புறுத்து வோரிடமிருந்தும்
நீர் என்னை விடுவித்தருளும்

கனிந்த உம் திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்
உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்
ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்களே
மனத்திடன் கொள்ளுங்கள்
உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்

 

எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து (4:14-16; 5:7-9) இரண்டாம் வாசகம் தொடரும்

அப்போஸ்தலரான புனித பவுல் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்

14 எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!

15 ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்.

16 எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

7 அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார்.

8 அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.

9 அவர் நிறைவுள்ளவராகி, "தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி

 

பின் நற்செய்திக்கு முன் வசனம் பிலிப்பியர் 2:8-9

8 தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.

9 ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்

 

பின்பு, அருளப்பர் எழுதிய திருப்பாடுகளின் வரலாறு (18:1-19:42) வாசிக்கப்படும்.(வாசகம் இங்கே)

முடிவில் வசதிக்கேற்ப, சுருக்கமாக மறையுரையாற்றலாம். பின் சிறிது நேரம் மௌனமாக மன்றாட குரு மக்களை அழைக்கலாம்.

விசுவாசிகளின் மன்றாட்டு

இறைவாக்கு வழிபாடு விசுவாசிகளின் மன்றாட்டுடன் முடிவடையும். அதன் முறையாவது: திருத்தொண்டர்வாசக மேடையில் நின்றுகொண்டு, பின்வரும் மன்றாட்டின் கருத்தை அறிவிப்பார். அக்கருத்துக்காக அனைவரும் சிறிது நேரம் மௌனமாகச் செபிப்பர். பின் குரு, இருக்கையருகில் அல்லது தேவையானால் பீடத்தருகில் நின்றுகொண்டு, கைகளை விரித்து மன்றாட்டைச் சொல்வார். விசுவாசிகளின் மன்றாட்டின்போது மக்கள் முழந்தாளில் இருக்கலாம் அல்லது நிற்கலாம்.

குருவின் மன்றாட்டிற்குமுன் இறைமக்கள் (எடுத்துக்காட்டாக: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் என்று) ஒன்றாக ஆர்ப்பரிக்க வேண்டும் அல்லது திருத்தொண்டர்: முழந்தாளிடுங்கள் - எழுந்திருங்கள் என்று அழைப்பு விடுக்க, எல்லாரும் முழந்தாட்பணிந்து பணிக்கலாம்.

மிக முக்கியமானதொரு பொதுத் தேவைக்காகத் தனிப்பட்ட கருத்தையும் சேர்த்துக்கொள்ள ஆயர் அனுமதி அல்லது கட்டளை தரலாம்.

இங்குத் தரப்பட்ட கருத்துகளில் இடத்திற்கும் காலத்திற்கும் மிகப் பொருத்தமானவற்றைக் குரு தேர்ந்துகொள்ளலாம்: ஆனால் விசுவாசிகளில் மன்றாட்டிற்குப் பொதுவாகக் குறிப்பிட்ட கருத்துகளை விட்டுவிடக்கூடாது (இவற்றைப் "பொதுப் போதனை", எண் 46இல் காண்க)

1. தூய திருச்சபைக்காக:

அன்புச் சகோதரர்களே சகோரிகளே இறைவனின் புனித திருச்சபைக்காக மன்றாடுவோம்.

நம் இறைவனாகிய ஆண்டவர் திருச்சபைக்கு
அமைதியும் ஒற்றுமையும் அளித்து, அதனைப் பேணிக்காக்க வேண்டுமென்றும்,
நாம் கலக்கமின்றி அமைதியான வாழ்வு நடத்தி
எல்லாம் வல்ல இறைத்தந்தையை மகிமைப்படுத்த
நமக்கு அருள்புரிய வேண்டுமென்றும் மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறiவா,

கிறிஸ்து வழியாக உமது மாட்சியை உலக மக்களுக்கெல்லாம் வெளிப்படுத்தினீர்:
நீர் இரக்கத்துடன் ஏற்படுத்திய திருச்சபையைப் பேணிக்காத்து,
அது உலகெங்கும் பரவி, உறுதியான விசுவாசம் கொண்டு,
உமது திருப்பெயரை என்றும் புகழ்வதில் நிலைத்திருக்கச் செய்தருளும்.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

 

2. திருத்தந்தைக்காக

நம் திருத்தந்தை (பெயர். . . )க்காக மன்றாடுவோம்.

துலைமை ஆயர் நிலைக்கு அவரைத் தேர்ந்தெடுத்த நம் இறைவனாகிய ஆண்டவர்
எவ்வகைத் தீங்குமின்றி அவரைப் பேணிக்கர்ப்பாராக.
இதனால் அவர் இறைமக்களை வழிநடத்தித் திருச்சபை வளம் பெறச் செய்யவேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,

உமது திட்டப்படியே அனைத்தும் அமைந்திருக்கின்றன.உமது அதிகாரத்தினால் ஆளப்படும்
கிறிஸ்தவ மக்களாகிய எங்கள் வேண்டுதலைக் கேட்டு,
திருத்தந்தையின் தலைமையின்கீழ் நாங்கள் விசுவாசத்தில் வளரும்படி
அவரைப் பரிவுடன் காத்தருளும்.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

 

3. திருச்சிபையில் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்காக

இங்குக் குறிப்பிடவேண்டிய ஆயர்களையும், குறிப்பிடும் முறையையும் "பொதுப் போதனை" எண் 109இல் காண்க.

நம் ஆயர் (பெயர்...)க்காகவும்,
திருச்சபையிலுள்ள எல்லா ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்க்காகவும்,
விசுவாசிகள் அனைவர்க்காகவும் மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,

உம்முடைய ஆவியால் திருச்சபை அனைத்தும் அர்ச்சிக்கப்பெற்று, ஆளப்படுகின்றது.
உம்முடைய திருப்பணியாளர்கள் அனைவர்க்காகவும்
நாங்கள் செய்யும் செபத்தை கனிவோடு கேட்டருளும்.
எல்லா நிலையினரும் உமது அருள்துணையால்
உமக்கு உண்மையோடு ஊழியம் புரிவார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

 

4.திருமுழுக்குப் பெறத் தயாரிப்புச் செய்வோர்க்காக

திருமுழுக்குப் பெறத் தயாரிப்புச் செய்வோர்கக்காகவும் மன்றாடுவோம்.

நம் இறைவனாகிய ஆண்டவர் தம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களுடைய இதயங்களைத் திறந்துவிடுவாராக்
இவ்வாறு அவர்கள், புதுப்பிறப்பளிக்கும் திருமுழுக்கினால், பாவங்களுக்கெல்லாம் மன்னிப்படைந்து,
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் வாழவேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,

புதிய மக்களைச் சேர்த்துத் திருச்சபை வளம்பெறச் செய்கின்றீர்.
திருமுழுக்கு பெற இருப்போரிடம் விசுவாசமும் அறிவும் வளரச் செய்தருளும்.
இவர்கள் திருமுழுக்கு நீரினால் புதுப்பிறப்படைந்து,
தேர்ந்துகொள்ளப்பட்ட உம்முடைய மக்களின் திருக்கூட்டத்தில் சேர்ந்துகொள்வார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

 

5. கிறிஸ்துவர்களின் ஒற்றுமைக்காக

கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டுள்ள நம் சகோதரர் சகோதரிகள் அனைவர்க்காகவும் மன்றாடுவோம்.

நம் இறைவனாகிய ஆண்டவர் தம்மில் விசுவாசம் கொண்டோர் அனைவரையும் உண்மையின் பாதையில் வழிநடத்தித்
தமது ஒரே திருச்சபையில் கூட்டிச்சேர்த்துக் காத்தருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,

பிரிந்தவற்றை இணைப்பவரும் இணைந்தவற்றைப் பேணிக்காப்பவரும் நீரே.
உம் திருமகனின் மந்தையைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்.
ஒரே திருமுழுக்கினால் திருநிலைப்படுத்தப்பெற்ற அனைவரையும்,
விசுவாசத்தின் முழுமையால் இணைத்து, அன்பின் பிணைப்பால் ஒன்றுசேர்த்தருளும்.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

 

6. யூத மக்களுக்காக

யூத மக்களுக்காக மன்றாடுவோம்.

முற்காலத்தில் அவர்களோடு பேசிய நம் இறைவனாகிய ஆண்டவர், தமது திருப்பெயரின்மீதுள்ள அன்பிலும்
தமது உடன்படிக்கைமீதுள்ள பற்றுறுதியிலும் இவர்களை வளர்ச்சியடையச் செய்தருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
ஆபிராகாமுக்கும் அவர்தம் வழிவந்தோர்க்கும். நீர் அளித்த வாக்குறுதிகளை நினைவுகூரும்
உமது திருச்சபையின் வேண்டுதலுக்குத் தயவாய்ச் செவிசாய்த்து, முதன்முதலாக நீர் தேர்ந்துகொண்ட இம்மக்கள்
உமது மீட்பின் நிறைவைப் பெற அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்

 

7. கிறிஸ்துவில் இன்னும் விசுவாசம் கொள்ளாதவர்களுக்காக

கிறிஸ்துவில் இன்னும் விசுவாசம் கொள்ளாதவர்களுக்காகவும் மன்றாடுவோம்.

இவர்கள் தூய ஆவியின் ஒளியைப் பெற்று மீட்புப் பாதைக்கு வந்துசெர வேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,

கிறிஸ்துவை இன்னும் ஏற்றுக்கொள்ளாத மக்கள் உம் திருமுன் நேர்மையான உள்ளத்தோடு நடந்து,
உண்மையைக் கண்டடைவார்களாக.நாங்களும் உம் வாழ்வின் மறையுண்மைகளை மேன்மேலும் ஆழமாகக் கண்டுணர்வோமாக.
மேலும் உமது அன்புக்கு இவ்வுலகில் சிறந்த சாட்சிகளாய் விளங்குமாறு, ஒருவர் ஒருவரை அன்புசெய்து வாழவும்,
பிற சமய சகோதரர் சகோதரிகளோடு அன்புறவு கொண்டு ஒழுகவும் வரமருளும்.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

 

8. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காகவும் மன்றாடுவோம்.

இவர்கள் நேர்மையான உள்ளத்தோடு நன்னெறியில் வாழ்ந்து, உண்மைக் கடவுளைக் கண்டடையுமாறு மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல் இறைவா,

மாந்தர் அனைவரும் எப்போதும் உம்மையே விரும்பித் தேடவும்,
உம்மை அடைவதால் அமைதி பெறவுமேநீர் அவர்களைப் படைத்தீர்.
இவ்வுலகில் ஏற்பாடும் எல்லாவித இடையூறுகளுக்கு நடுவிலும்,
அவர்கள் அனைவரும் உமது அன்பைக் காட்டும் அறிகுறிகளையும்,
உம்மை விசுவாசிப்போர் ஆற்றும் நற்செயல்களின் சான்றுகளையும் கண்டுணர்ந்து,
உம்மை ஒரே மெய்யங்கடவுள் என்றும் மக்களின் தந்தை என்றும்மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளச் செய்தருளும்.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

 

9. நாடுகளை ஆள்வோர்க்காக

நாடுகளை ஆளும் அனைவர்க்காகவும் மன்றாடுவோம்.

உலக மக்கள் அனைவரும் உண்மையான அமைதியும் உரிமை வாழ்வும் பெறும்பொருட்டு,
நம் இறைவனாகிய ஆண்டவர் தம் திருவுளப்படி
இவர்களுடைய சிந்தனை, சொல், செயல் அனைத்தையும்
ஆண்டு நடத்தியருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,

மனித இதயங்களின் எதிர்ப்பார்ப்புகளை நீர் அறிவீர் அவர்களின் உரிமைகளை நீரே பேணிக்காக்கின்றீர்.
உலகமெங்கும் அமைதியும் பாதுகாப்பும் வளமான வாழ்வும் சமய உரிமையும் நிலைபெறுமாறு,
எங்கள் தலைவர்களை உம்முடைய ஞானத்தால் நிரப்பி,
அவர்கள் உண்மையான மக்கள் தொண்டர்களாக விளங்கிடச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்

 

10. துன்புறுவோர்க்காக

அன்புச் சகோதரர்களே சகோதரிகளே, துன்புறும் அனைவர்க்காகவும் மன்றாடுவோம்.

எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனின் அருளால், உலகிலிருந்து தவறுகள் அகலவும்,
பிணிகள் நீங்கிப் பஞ்சம் ஒழியவும், சிறைகள் திறக்கப்பட்டுத் தளைகள் தகர்க்கப்படவும்,
வழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவும், பயணம் செய்வோர் நலமாக வீடு திரும்பவும்,
நோயுற்றோர் நலம் பெறவும், இறக்கின்றவர் மீட்பின் நிறைவு பெறவும் மன்றாடுவோமாக.

மௌன மன்றாட்டு. பின்பு குரு:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,

துயருற்றோர்க்கு ஆறதலும், வருந்துவோர்க்குத் திடனும் நீரே. எத்தகையே துன்ப வேளையிலும்
உம்மை நோக்கிக் கூவியழைப்போரின் வேண்டுதலைக் கேட்டருளும்.இவர்கள் தங்கள் தேவைகளில்
நீர் இரக்கத்துடன் துணைபுரிவதைக் கண்டு மகிழ்வார்களாக. எங்கள்.

எல். ஆமென்.

இரண்டாம் பகுதி - திருச்சிலுவை ஆராதனை

 

விசுவாசிகள் மன்றாட்டு முடிந்தபின், திருசிலுவை ஆராதனை சிறப்பான முறையில் நடைபெறும். திருச்சிலுவையைக் காட்ட இரு வகைகள் தரப்பட்டுள்ள இவற்றுள், மக்கள் நலனுக்குப் பொருத்தமானதைத் தேர்ந்துகொள்ளலாம்.

முதல் வகை

இரு பணியாளர் எரியும் திரிகளுடன் இரு பக்கத்திலும் வர, துகிலால் மூடப்பட்ட திருச்சிலுவை பீடத்திற்குக் கொண்டுவரப்படும். பீடத்தின்முன் நிற்கும் குரு அதைப் பெற்றுக்கொண்டு. அதன் உச்சியிலிருந்து துகிலைச் சிறிது அகற்றி, அதை உயர்த்திப் பிடித்து, திருச்சிலுவை மரம் இதோ என்னும் பாடலைத் தொடங்குவார். பின்வரும் சொற்களைத் திருத்தொணடர் அல்லது தேவையானால் பாடகர் குழு, அவருடன் பாடுவர். மக்கள் எல்லாரும் வருவீர், ஆராதிப்போம் எனப் பதிலுரைப்பார்கள். பின் அனைவரும் முழந்தாட்பணிந்து சிறிது நேரம் மௌனமாக ஆராதிப்பார்கள்: குரு மட்டும் சிலுவையை இன்னும் சற்று உயர்த்திப் பிடித்து நிற்பார்..

அடுத்து, குரு சிலுவையின் வலது கையிலுள்ள துகிலை அகற்றி, மீண்டும் அதை உயர்த்தி பிடித்துக்கொண்டு பாடலைத் தொடங்க, அனைத்தும் முன்போல நடைபெறும்.

இறுதியாக, குரு துகிலை முற்றிலும் அகற்றிவிட்டு, சிலுவையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பாடலைத் தொடங்க, முன்போல யாவும் நடைபெறும்.

பின், எரியும் திரிகளுடன் இரு பணியாளர் கூடிவர, குரு சிலுவையைப் பீடமுற்றத்தின் வாயிலுக்கு அல்லது வேறு வசதியான இடத்திற்குக் கொண்டுபொய் அதை அங்குக் கிடத்துவார் அல்லது பணியாளர் பிடித்துக்கொள்ளக் கொடுப்பார். சிலுவையின் இருபுறமும் திரிகள் வைக்கப்படும், எண். 18 இல் குறித்தபடி ஆராதணை நடைபெறும்.

மற்றொரு வகை

குரு அல்லது திருத்தொண்டர் அல்லது தகுதியான பணியாளர் தேவையான பணியாளர்களோடு கோயிலின் தலைவாயிலுக்குச் சென்று, மூடப்படாத சிலுவையை எடுத்துக்கொள்கிறார்: இரு பணியாளர் எரியும் திரிகளை இருபுறமும் பிடித்துக்கொள்வர். அங்கிருந்து பவனி கோயில் வழியாகப் பீடத்திற்கு வரும் வாயிலருகே, நடுக்கோயில், பீடமுற்றத்திற்குமுன் ஆகிய மூன்று இடங்களில் சிலுவை தாங்குவோர் நின்று சிலுவையை உயர்த்திப் பிடித்து, திருச்சிலுவை மரம் இதோ என்று பாட அதற்குப் பதிலுரையாக எல்லாரும். வாருங்கள், ஆராதிப்போம் எனப் பாடியபின், முழந்தாட்பணிந்து சிறிதுநேரம் மௌனமாக ஆராதனை புரிவார்கள்.

பின் எண் 16இல் உள்ளதுபோல் சிலுவையும் திரிகளும் பீடமுற்றத்தின் வாயிலண்டை வைக்கப்படும்.

திருச்சிலுவையைக் காட்டும்போது அழைப்பு

திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது உலகத்தின் இரட்ஷணியம் (3 முறை)

எல். வருவீர், ஆராதிப்போம்.(3 முறை)

 

திருச்சிலுவை ஆராதனை

திருச்சிலுவை ஆராதனைக்குக் குருவும் திருப்பணியாளரும் இறைமக்களும் ஒழுங்காகப் பவனி போல வந்து வணக்கம் செலுத்திச் செல்வர். முழந்தாட்படிந்தோ, நாட்டுப் பழக்கத்திற்கேற்ப வேறு வகையிலோ, உ-ம்: முத்திசெய்தோ கைகளில் தொட்டுக் கண்களில் (நெற்றியில்) ஒற்றிக்கொண்டோ இவ்வணக்கத்தைக் காட்டலாம்.

ஆராதனையின்போது ஆண்டவரே யாம் என்னும் பல்லவி, திருமுறைப்பாடுகள் அல்லது வேறு பொருத்தமான பாடல்கள் பாடப்படும். அப்போது ஆராதனைபுரிந்தவர்கள் எல்லாரும் அமர்ந்திருப்பர்.

ஒரே ஒரு சிலுவைதான் ஆராதனைக்கு வைக்கப்படவேண்டும். பெருங் கூட்டத்தின் காரணமாக ஒவ்வொருவரும் தனித்தனியே ஆராதனை செலுத்த முடியாதெனில். ஒருசிலர் ஆராதனை செய்தபின் குரு சிலுவையை எடுத்துப் பீடத்தின்முன் நின்றுகொண்டு. சிற்றுரையாற்றி அனைவரையும் ஆராதனை செய்ய அழைப்பார். அவர் சிலுவையைச் சிறிது நேரம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்க, எல்லாரும் மௌனமாக ஆராதிப்பர்.

ஆராதனைக்குப்பின் சிலுவை பீடத்திற்கு அருகில் அதற்குரிய இடத்தில் வைக்கப்படும். திரிகள் அதன் இருபுறம் அல்லது பீடத்தின்மீதோ அருகிலோ வைக்கப்படும்.

as

திருச்சிலுவை ஆராதனையின்போது பாடல்கள்:

எனது ஜனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்
எதிலே உனக்குத் துயர் தந்தேன் எனக்குப் பதில் நீ கூறிடுவாய்

எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக்கொண்டு வந்தேனே
அதனாலோ உன் மீட்பருக்கு சிலுவை மரத்தை நீ தந்தாய்

நாற்பது ஆண்டுகள் நான் உன்னை பாலைவனத்தில் வழிநடத்தி
உமக்கு மன்னா உணவூட்டிவளமிகு நாட்டினுள் வரச்செய்தேன்
அதனாலோ உன் மீட்பருக்கு சிலுவை மரத்தை நீ தந்தாய்

நான் உனக்காக எகிப்தியரை அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை
வதைத்து ஒழித்தேன்நீ என்னை கசையால் வதைத்து கையளித்தாய்

பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி எகிப்தில் நின்றுன்னை விடுவித்தேன்
நீயோ என்னைத் தலைமையாம் குருக்களிடத்தில் கையளித்தாய்

நானே உனக்கு முன்பாகக் கடலைக் திறந்து வழி செய்தேன்
நீயோ எனது விலாவை ஓர் ஈட்டியினாலே திறந்தாயே

மேகத் தூணில் வழிகாட்டி உனக்கு முன்னே யான் சென்றேன்
நீயோ பிலாத்தின் நீதி மன்றம் என்னை இழுத்து சென்றாயே

பாலைவனத்தில் மன்னாவால் நானே உன்னைக் உண்பித்தேன்
நீயோ என்னைக் கன்னத்தில் அடித்து கசையால் வதைத்தாயே

இனிய நீரைப் பாறை நின்று உனக்குக் குடிக்க தந்தேனே
நீயோ பிச்சும் காடியுமே எனக்கு குடிக்கத் தந்தாயே

கானான் அரசரை உனக்காக நானே அடித்து நொறுக்கினேன்
நீயோ நாணல் தடி கொண்டு எந்தன் தலையில் அடித்தாயே

அரசருக்குரிய செங்கோலை உனக்குத் தந்தகு நானன்றோ
நீயோ எந்தன் சிரசிற்கு முள்ளின் முடியைத் தந்தாயே

உன்னை மிகுந்த வன்மையுடன் சிறந்த நிலைக்கு உயர்த்தினேன்
நீயோ என்னை சிலுவை மரத்தில் தொங்க வைத்தாய்

 


நம்பிக்கை தரும் சிலுவையே நீ மரத்துள் சிறந்த மரமாவாய்

உன்னைப் போன்ற தழை பூ கனியை எந்தக் காவும் ஈந்திடுமோ
இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ

மாட்சிமை மிக்க போரின் வெற்றி விருதை நாவே பாடுவாய்
உலக மீட்பர் பலியதாகி வென்ற விதத்தைக் கூறியே
சிலுவைச் சின்னமதைப புகழ்ந்து செயத்தின் கீதம் ஓதுவாய்

தீமையான கனியைத் தின்று சாவிலே விழுந்த நம்
ஆதித் தந்தைக்குற்ற தீங்கை கண்டு நொந்த சிருஷ்டிகர்
மரத்தால் வந்த தீங்கை நீக்க மரத்தை அன்றே குறித்தனர்

கசந்த காடி அருந்திச் சோர்ந்து முட்கள் ஈட்டி ஆணிகள்
மென்மை உடலைத் துளைத்ததாலே செந்நீர் பெருகிப் பாயவே
விண்ணும் மண்ணும் கடலும் உலகும் அதனால் தூய்மை ஆயின

வளர்ந்த மரமே உன் கிளை தாழ்த்திவிரைத்த உடலைத் தளர்த்துவாய்
இயற்கை உனக்கு ஈந்த வைரம் இளகி மென்மை ஆகி நீ
உயர்ந்த வானின் அரசர் உடலின் வருத்தம் தணித்து தாங்குவாய்

மரமே நீயே உலகின் விலையைத் தாங்குகத் தகுதியாகினை
திருச்செம்மறியின் குருதி உன்மேல பாய்ந்து தோய்ந்த தாதலால்
புயில் தவிக்கும் உலகிற் கெல்லாம் புகலிடம் நீ பேழை நீ

பரம திரித்துவ இறைவனுக்கு முடிவில்லாத மங்களம்
தந்தை மகனும் தூய ஆவியும் சரிசமப் புகழ் பெறுகவே
அவர் தம் அன்பின் அருளினாலே நம்மைக் காத்து மீட்கின்றார்

 


தயை செய்வாய் நாதா என் பாவங்ளை நீக்கி

1. அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமையா
பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும்

2. என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும் - உம்
புனிதத்தை போக்கி நான் பாவியானேன் - நீர்
தீமையென்று கருதுவதைத் துணிந்து செய்தேன்

3. பாவத்தில் ஜென்மித்தேன் நீயறிவாய்
தோஷத்தில் பெற்றெடுத்தாய் என் தாயே - உம்
தீர்ப்பு தனில் குற்றமோ குறையோ இல்லை - உம்
முடிவுகளின் நீதியையும் எதிர்ப்பாரில்லை

4. உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகின்றீர் - என்
ஆத்துமத்தின் அந்தரத்தில் அறிவையூட்டும்
என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்
பனிவெண்மைக் குயர்வாக புனிதமாவேன்

5. வல்லவராய் பிதாவை நாம் வாழ்த்திடுவோம்
சுதனேசு கிறிஸ்துவுக்கும் தோத்திரமே - நம்
உள்ளத்தில் குடி கொள்ளும் ஆவிக்கும்
என்றென்றும் புகழ் ஒலிக்க -ஆமென்


ஆணிகொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்

பாவத்தாலுமைக் கொன்றேனே ஆயனே என்னை மன்னியும்

வலது கரத்தின் காயமே அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது கரத்தின் காயமே கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

வலது பாத காயமே பலம் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது பாதக் காயமே திடம் மிகத் தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திருவிலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்


மூன்றாம் பகுதி - திருவிருந்து

 

பீடத்தின்மீது துணி விரித்து, திருமேனித் துகிலும் திருப்பலிப் புத்தகமும் வைக்கப்படும் பின் திருத்தொண்டர் அல்லது அவர் இல்லையென்றால் குரதாமே புனிதமிகு நற்கருணையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து பீடத்திற்குக் குறகிய வழியாகக் கொண்டுவருவார்: அப்பொழுது அனைவரும் மௌனமாக நின்றுகொண்டிருப்பர். இரு பணியாளர் எரியும் திரிகளைக் குருவின் இரு பக்கத்திலும் பிடித்து வந்து அவற்றைப் பீடத்தின்மீது அல்லது அதன் அருகில் வைப்பர்.

திருத்தொண்டர் நற்கருணையைப் பீடத்தின்மீது வைத்து, நற்கருணைப் பாத்திரத்தைத் திறந்ததும் குரு அணுகிவந்து, தாழ்ந்து பணிந்து வணங்கி, பீடத்திற்கு ஏறிச்சென்று, கைகூப்பி, தெளிவான குரலில் சொல்வதாவது:

மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்ச்பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:

குரு கைகளை விரித்து நிற்க எல்லாரும் ஒன்றாக:

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக
உம்முடைய இராச்சியம் வருக
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல
பூலோகத்திலும் செய்யப்ப்டுவதாக.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்,
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

பின்னர் குரு மட்டும் கைகளை விரித்துத் தொடர்ந்து சொல்கிறார்:

ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து,
எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள
உம்மை மன்றாடுகின்றோம்.
உமது இரக்கத்தின் உதவியால்,
நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று,
யாதொரு கலக்கமுமின்றி நலமாயிப்போமாக.
நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும்
எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும்
மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.

கை குவிக்கிறார் மக்கள் குரலெழுப்பி ஆர்ப்பரிப்பதாவது:

ஏனெனில் அரசும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.

குரு கை குவித்து அமைந்த குரலில் சொல்கிறார்:

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே,

நான் உட்கொள்ளும் உம் திருவுடலும் இரத்தமும்

என்னை நீதித் தீர்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல்,

உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையும் உடலையும் பாதுகாக்கும்

அருமருந்தாகிட அருள்புரியும்.

பின் தாழ்ந்து பணிந்து வணங்கி, திருஅப்பம் ஒன்றைக் கையில் எடுத்து, நற்கருணைப் பாத்திரத்தின்மீது சிறிது உயர்த்திப் பிடித்து. மக்களுக்குக் காட்டித் தெளிவாகச் சொல்வார்:

இதோ இறைவனின் செம்மறி,
இதோ உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்.
செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றவர் பேறுபெற்றோர்.

பின்பு, இறைமக்களோடு சேர்ந்து, ஒருமுறை சொல்வார்:

ஆண்டவரே, நீர் என் இல்ல்த்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்
ஆனால் ஒரு வார்த்தைமட்டும் சொல்லியருளும்
எனது ஆன்மா குணமடையும்.

குரு பீடத்தின் பக்கம் திரும்பி வணக்கத்துடன் நற்கருணை உட்கொள்வார்.

பின் மக்களுக்கு நற்கருணை வழங்குவார். அப்பொழுது பொருத்தமான பாடல்களைப் பாடலாம்.

நற்கருணை வழங்கியபின், அதிகாரமுள்ள மற்றொரு பணியாளர் நற்கருணைப் பாத்திரத்தைக் கோயிலுக்கு வெளியே தகுதியான இடத்திற்குக் கொண்டுபோய் வைப்பர் அல்லது வேறு வழியில்லையென்றால், அதை நற்கருணைப் பேழையில் வைக்கலாம்.

வசதிக்கேற்ப சிறிது நேரம் மௌனமாகச் செபித்தபின், குரு கீழ்வரும் மன்றாட்டைச் சொல்வார்:

நன்றி மன்றாட்டு:

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய திருமகனின் பாடுகளாலும்
சிலுவைச் சாவினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளினீர். பேரிரக்கத்துடன் நீர் ஆற்றிய இம்மீட்புச் செயலின் பலன்
எங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவருடைய மரணத்தில் வெளிப்பட்ட உமது பேரன்பைக் கண்டுணர்ந்து,
நாங்கள் அவ்வன்பிலே என்றும் நிலைத்து வாழ்த்திட அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்

 

பிரியாவிடை கூற, குரு மக்களைநோக்கி நின்று அவர்கள்மீது தம் கைகளை விரித்துக் கொண்டு இச் செபத்தைச் சொல்கிறார்:

தயை நிறை தந்தையே,

உம் திருமகனின் உயிர்ப்பு எங்களுக்கு அளிக்கும் நம்பிக்கையோடு,
அவரது சாவை இப்பொழுது நினைவுகூர்ந்த உம் மக்கள் எங்கள்மீது
உமது ஆசி நிறைவாய் இறங்குவதாக.
உமது திருமகனின் பாடுகளுக்குக் காரணமாயிருந்த எங்களுக்கு மன்னிப்பு கிடைப்பதாக.
துன்பங்;களால் துயருறும் நாங்கள் ஆறுதல் அடைவோமாக
தளர்வுறும் எங்கள் விசுவாசம் வளர்ச்சி பெறுவதாக.
முடிவில்லா வாழ்வு கிடைக்கும் என்ற எங்கள் நம்பிக்கை உறுதி பெறுவதாக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்

எல்லாரும் மௌனமாகக் கலைந்து செல்கின்றனர். வசதியான நேரத்தில் பீடத்தின் அணிகளெல்லாம் அகற்றப்படும்.

இத்திருச்சடங்கில் பங்கெடுத்தவர்கள் திருப்புகழ்மாலையின் மாலை வழிபாட்டைச் செபிப்பதில்லை.

திருச்சிலுவை வழிபாட்டிற்கு பின்னரோ அல்லது அனைவருக்கும் பொருத்தமான வேறொறு நேரத்திலோ சிலுவைப்பாதை செய்யலாம்

சிலுவைப்பாதை

a

வுநஒவந யடவநசயெவகை

(பீடத்துக்கு முன்பாக:)

திருச்சிலுவைப் பாதைதொடக்க செபம்

முதல்வர்:பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென்!

எல்லோரும்:இரக்கத்தின் ஊற்றே இறைவா, உம் திருமகன்இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள்நினைவுகூர்கின்றோம். அவர் நடந்துசென்ற சிலுவையின்பாதையில் அவரைப் பின்சென்று நடந்திட நாங்கள்வந்துள்ளோம். இறுதிவரை இயேசுவின் உண்மைச்சீடராக நாங்கள் வாழ வரமருள வேண்டுமென்று உம்மைஇறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்!

 

சுருக்கமான உத்தம மனஸ்தாப ஜெபம்:

என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும் , நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.

திவ்விய இயேசுவே! எங்களுக்காகவும் உத்தரிப்புநிலை ஆன்மாக்களுக்காகவும் சிலுiவைப் பாதையைத் தியானிப்பவர்களுக்கு அளிக்கப்படும் பலன்களை அடைய விரும்பி, உம் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

புனித மரியாவே! வியாகுல அன்னையே! இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நீர் உடனிருந்து, அவருடைய பாடுகளில் பங்கேற்றது போல, நாங்களும் எங்கள் அயலார் அனுபவிக்கும் துன்பங்களில் அவர்களுடன் இருந்து துணைபுரியும் ஆற்றலைப் பெற உம் திருமைந்தனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

 

----------------------------

பழிகளைப் சுமத்திப் பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்பளித்தார்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

முதலாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்:

a

விவிலியச் சிந்தனை(மத்தேயு 27:1-2, 22-24, 26)
பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின்மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்குஎதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டிஇழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.பிலாத்து அவர்களிடம், “அப்படியானால் மெசியா என்னும்இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்றுகேட்டான். அனைவரும், “சிலுவையில் அறையும்” என்றுபதிலளித்தனர். அதற்கு அவன், “இவன் செய்த குற்றம்என்ன?” என்று கேட்டான். அவர்களோ, “சிலுவையில்அறையும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை,மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு,கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து,“இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை.நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறித் தன்கைகளைக் கழுவினான். அப்போது அவன் பரபாவைஅவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில்அறையுமாறு ஒப்புவித்தான்.

செபம்: (எல்லோரும்)
எங்கள் அன்பு இயேசுவே! யாதொரு குற்றமோ பாவமோஅறியாத உம்மைச் சாவுக்குத் தீர்ப்பிட்டார்கள். வாழ்வும்,வழியும், உண்மையுமான உம்மையே நாங்கள்பின்பற்றவும், தவறான தீர்ப்பு வழங்காதிருக்கவும்எங்களுக்கு அருள்தாரும். ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்.

 

----------------------------

தாளாச் சிலுவையைச் சுமக்க வைத்தார் -உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


இரண்டாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.

a

விவிலியச் சிந்தனை(மத்தேயு 27:27-31)
ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன்மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்தபடைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்றுகூட்டினர் அவருடைய ஆடைகளை உரிந்து,கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்குஅணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரதுதலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒருகோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு,“யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி ஏளனம்செய்தனர் அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்துஅவருடைய தலையில் அடித்தனர் அவரை ஏளனம்செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக்கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்துஅவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச்சென்றனர்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உம்மேல் சுமத்தப்பட்ட சிலுவைஎங்கள் பாவங்களின் விளைவு என்பதைஉணர்கின்றோம். யார்மீதும் அநியாயமாகப்பழிசுமத்தாமல் இருக்கவும், எங்கள் வாழ்வில் வருகின்றதுன்பங்கள் என்னும் சிலுவையைப் பொறுமையோடுஏற்றுக்கொள்ளவும் எங்களுக்கு அருள்தாரும். ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

மூன்றாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் குப்புற விழுகிறார்.

a

விவிலியச் சிந்தனை(புலம்பல் 1:14, 16-17)
என் குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால்பூட்டப்பட்டுள்ளது; அவை பிணைக்கப்பட்டு, என்கழுத்தைச் சுற்றிக் கொண்டன் அவர் என்வலிமையைக் குன்றச் செய்தார் நான் எழ இயலாதவாறுஎன் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார்.இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன் என் இருகண்களும் கண்ணீரைப் பொழிகின்றன் என் உயிரைக்காத்து ஆறுதல் அளிப்பவர் எனக்கு வெகு தொலையில்உள்ளார் பகைவன் வெற்றி கொண்டதால் என்பிள்ளைகள் பாழாய்ப் போயினர். சீயோன் தன் கைகளைஉயர்த்துகின்றாள் அவளைத் தேற்றுவார் யாருமில்லைசூழந்து வாழ்வோர் யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறுஆண்டவர் கட்டளையிட்டார் எருசலேம் அவர்களிடையேதீட்டுப்பொருள் ஆயிற்று.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! சிலுவையின் பாரத்தால் நீர் முகம்குப்புறக் கீழே விழுந்தீர். துன்ப துயரங்களின் சுமையால்வாடுகின்ற மக்களைக் கனிவோடு கண்ணோக்கிடஎங்களுக்கு அருள்வீராக. ஆமென்

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னைத் துயருற்றாள்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

நான்காம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்.

a

விவிலியச் சிந்தனை(புலம்பல் 2:13, 15, 18)
மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்னசொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள்சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னைஇணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம்கடலைப்போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்கயாரால் முடியும்? அவ்வழியாய்க் கடந்து செல்வோர்உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர்! மகள்எருசலேமை நோக்கித் தலையை ஆட்டிச்சீழ்க்கையடித்தனர்! “அழகின் நிறைவும் மண்ணுலகின்மகிழ்ச்சியுமாக இருந்த மாநகர் இதுதானா?” என்றனர்.அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக்கூக்குரலிடுகின்றது; மகள் சீயோனின் மதிலே! இரவும்பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஒய்வுவேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்!

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உம்மை ஈன்றெடுத்த அன்னை மரியாஉம் துன்பங்களைக் கண்டு மனமுடைந்தார். அந்தஅன்னையின் அரவணைப்பில் நாங்கள் என்றும்மகிழ்வுகொள்ள அருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

ஐந்தாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்.

a

விவிலியச் சிந்தனை(லூக்கா 23:26)
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன்என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார்.அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின்சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்துகொண்டுபோகச் செய்தார்கள்.(மத்தேயு 16:24)பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்றவிரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத்தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” என்றார்.(மத்தேயு 11:29-30)இயேசு, “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டுஎன்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள்உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என்நுகம் அழுத்தாது என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! கடின சிலுவையை நீர் சுமந்துசெல்லசீமோன் என்பவர் துணைசெய்தார். எங்கள் சகோதரர்சகோதரிகளின் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு,அவர்களின் சிலுவைப் பாரத்தைக் குறைத்திடஎங்களுக்குத் துணைசெய்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

நிலையாய்ப் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

ஆறாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.

a

விவிலியச் சிந்தனை(மத்தேயு 25:37-40)
அதற்கு நேர்மையாளர்கள் “ஆண்டவரே, எப்பொழுதுஉம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம்,அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத்தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக்கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடைஇல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக்கண்டு உம்மைத்தேடி வந்தோம்?” என்று கேட்பார்கள்.அதற்கு அரசர், “மிகச் சிறியோராகிய என் சகோதரர்சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம்எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச்சொல்லுகிறேன்” எனப் பதிலளிப்பார்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! வியர்வையாலும் இரத்தத்தாலும்கறைபட்ட உம் திருமுகத்தை ஒரு பெண்மணிஅன்போடு துடைத்து உமக்கு ஆறுதலளித்தார். எங்கள்வீட்டிலும் நாட்டிலும் உலகிலும் கவலையால் வாடும்அனைவரின் துன்பங்களையும் துடைத்திட எங்களுக்குஅருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

ஏழாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.

a

விவிலியச் சிந்தனை(எசாயா 53:3-6)
அவர் இகழப்பட்டார் மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்வேதனையுற்ற மனிதராய் இருந்தார் நோயுற்று நலிந்தார்காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில்அவர் இருந்தார் அவர் இழிவுபடுத்தப்பட்டார் அவரைநாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம்பிணிகளைத் தாங்கிக்கொண்டார் நம் துன்பங்களைச்சுமந்து கொண்டார் நாமோ அவர் கடவுளால்வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும்சிறுமைப்படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். அவரோநம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் நமக்குநிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறிஅலைந்தோம் நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்ஆண்டவரோ நம்அனைவரின் தீச்செயல்களையும்அவர்மேல் சுமத்தினார்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! சிலுவையின் பாரம் உம் தோள்களைஅழுத்தியதால் நீர் மீண்டும் ஒருமுறை கீழே விழுந்தீர்.ஆனால் மன உறுதியோடு மீண்டும் பயணத்தைத்தொடர்ந்தீர். நாங்களும் ஏமாற்றத்தையும் தோல்வியையும்கண்டு துவழ்ந்துவிடாமல் துணிந்து எழுந்து, உம்மேல்நம்பிக்கைவைத்து முன்னேறிச் சென்றிட அருள்வீராக.ஆமென்!

. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்.

----------------------------

விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
மொழி நீர் நல்கி வழி தொடர்ந்தீர்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

எட்டாhம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.

a

விவிலியச் சிந்தனை(லூக்கா 23:27-28)
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப்புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னேசென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி,“எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும்அழுங்கள்” என்றார்.(திருத்தூதர் பணிகள் 21:13)அதற்குப் பவுல் மறுமொழியாக, “நீங்கள் அழுது ஏன்என் உள்ளத்தை உடைக்கிறீர்கள்? நான் ஆண்டவர்இயேசுவின் பெயருக்காக எருசலேமில் கட்டப்படுவதற்குமட்டுமல்ல, சாவதற்கும் தயார்” என்றார்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உமக்கு நேர்ந்த சொல்லற்கரியதுன்பத்தையும் பாராமல் நீர் பிறருக்கு ஆறுதல் கூறினீர்.தன்னலம் பாராது பிறர்நலம் நோக்கவும்,துன்புறுவோருக்கு ஆறுதல் கூறவும் எங்களுக்குநல்மனத்தைத் தந்து, தூய வழியில் நாங்கள் நடந்திடஅருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திட மெய் நொந்தீர்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

ஒன்பதாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.

a

விவிலியச் சிந்தனை(திருப்பாடல்கள் 22:1; 40:11-13)
இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக்கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?...ஆண்டவரே, உமது பேரிரக்கத்தை எனக்குக் காட்டமறுக்காதேயும் உமது பேரன்பும் உண்மையும்தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக! ஏனெனில்எண்ணிறந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன்என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையைமறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிடமிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து என்னைக்கைவிட்டது. ஆண்டவரே, என்னை விடுவிக்கமனமிசைந்தருளும் ஆண்டவரே, எனக்கு உதவி செய்யவிரைந்து வாரும்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! மீண்டும் மீண்டும் கீழே விழுந்ததால்உம் உடல் எல்லாம் இரத்தமயமாயிற்று. எங்கள்பாவங்களுக்காக நீர் நொறுக்கப்பட்டீர். எங்கள்சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் நாங்கள்தூய்மையோடு வாழவும், பாவத்தை வெறுத்து, உம்அன்பில் எந்நாளும் வளரவும் எங்களுக்கு அருள்வீராக.ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

உடைகள் களைந்திட உமை தந்தீர் - ரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

பத்தாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.

a

விவிலியச் சிந்தனை(யோவான் 19:23-24)
இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர்அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்துஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள்.அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்தஅங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல்நெய்யப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஒருவரை ஒருவர்நோக்கி, “அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்கும்கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப்போடுவோம்” என்றார்கள். “என் ஆடைகளைத்தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப்போட்டார்கள்” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறுநிறைவேறியது.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உம் உடைகளைக் களைந்தவர்கள்உம்மை அவமானத்திற்கு உள்ளாக்கினார்கள். வறுமை,அரசியல் அடக்குமுறை, அதிகாரப்பாணி போன்றஅவலங்களால் மனித உரிமையும் மாண்பும் உரியப்பட்டுநிர்வாணமாக்கப்படுகின்ற எம் சகோதரர் சகோதரியரைநினைத்துப் பார்க்கின்றோம். உம் உடன்பிறப்புகளாகியஅவர்களது மாண்பினைக் காத்துப் போற்றிட எங்களுக்குஅருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

பதினோராம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்.

a

விவிலியச் சிந்தனை(யோவான் 19:16-19,25)
அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறுஅவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம்பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு சிலுவையைத்தாமே சுமந்துகொண்டு “மண்டை ஒட்டு இடம்”என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில்“கொல்கொதா” என்பது பெயர். அங்கே அவர்கள்இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும்சிலுவைகளில் அறைந்தார்கள் அவ்விருவரையும் இருபக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச்சிலுவையின் மீது வைத்தான். அதில் “நாசரேத்து இயேசுயூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது. சிலுவைஅருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும்குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலாமரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! சிலுவையில் நீர் அறையப்பட்டபோதுஉம் கைகளையும் கால்களையும் ஆணிகளால்துளைத்தார்கள். உம் திருக்காயங்களால் நீர் எங்கள்காயங்களைக் குணமாக்கினீர். நீர் சிந்திய இரத்தத்தால்நாங்கள் கழுவப்பட்டுள்ளோம். அவமானச் சின்னமாகியசிலுவையை நீர் மீட்பின் கருவியாக்கியதுபோலநாங்களும் எங்கள் துன்பதுயரங்களை உம்சிலுவையோடு இணைத்து உம் மீட்பின் பலன்களைஇடைவிடாது துய்த்து அனுபவித்திட எங்களுக்குஅருள்வீராக. ஆமென்!

. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்.

----------------------------

இன்னுயிர் அகன்றது உமைவிட்டு - பூமி
இருளினில் ஆழ்ந்தது ஒளி கெட்டு
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

பன்னிரண்டாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையில் இறக்கிறார்.

a

விவிலியச் சிந்தனை(மத்தேயு 27:45-46, 50, 54)
நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்றுமணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்றுமணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி!”அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன்என்னைக் கைவிட்டீர்!” என்று உரத்த குரலில்கத்தினார். இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்திஉயிர்விட்டார். நூற்றுவர் தலைவரும் அவரோடுஇயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும்நிகழ்ந்த யாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, “இவர்உண்மையாகவே இறைமகன்” என்றார்கள்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! வானத்திற்கும் பூமிக்கும் இடையே நீர்சிலுவையில் தொங்கினீர். மனிதரைக் கடவுளின்பிள்ளைகளாக்கிட நீர் எம்மில் ஒருவராக மாறினீர்.சிலுவையில் தொங்கியபோது நீர் உரைத்த சொற்களைநினைத்துப் பார்க்கிறோம். “தாகமாயிருக்கிறது” என்றுகூறிய இயேசுவே, எங்கள் ஆன்ம தாகத்தைவளர்த்தருளும். “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறிஉயிர்நீத்த இயேசுவே, நாங்கள் கடவுளின் திருவுளத்தைஇறுதிவரை நிலைத்துநின்று நிறைவேற்றிட அருள்தாரும்.ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

துயருற்றுத் துடித்தார் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலினை மடி சுமந்து
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

பதின்மூன்றாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இறந்த இயேசுவை அவர் தாயார் மடியில் வளர்த்துகிறார்கள்.

a

விலியச் சிந்தனை(யோவான் 19:38-40)
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர்இயேசுவின் சீடர்களுள் ஒருவர் யூதருக்கு அஞ்சியதால்தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக்காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலைஎடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதிகேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்புவந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டுபோனார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்தநிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர்வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்துஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்.அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்கமுறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால்சுற்றிக் கட்டினார்கள்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உயிரற்ற உம் சடலத்தை உம்அன்னை மரியா தம் மடியில் கிடத்தி அழுது புலம்பினார்.அவரை எங்களுக்கு அன்னையாக அளித்ததற்காகஉமக்கு நன்றி கூறுகின்றோம். எங்கள்மேல் கொண்டஎல்லையற்ற அன்பினால் நீர் எங்களுக்காகஉயிர்துறந்தீர். உமது சாவு எங்களுக்கு வாழ்வுவழங்கிற்று. நாங்களும் உமது புகழ்ச்சிக்காகவும்பிறருடைய ஈடேற்றத்திற்காகவும் அயராது உழைத்திடஅருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்
அடங்கிய கல்லறை உமதன்று
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

பதினான்காம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரைக் கல்லரையில் அடக்கம் செய்கிறார்கள்.

a

விவிலியச் சிந்தனை(யோவான் 19:41-42)
அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்த இடத்தில்ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்றுஇருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம்செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்தநாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில்இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம்செய்தார்கள்.(லூக்கா 23:55-56)கலிலேயாவிலிருந்து அவரோடுவந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்றுகல்லறையைக் கண்டார்கள் அவருடைய உடலைவைத்த விதத்தைப் பார்த்து விட்டு, திரும்பிப் போய்நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும்ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள்ஒய்வுநாளில் ஒய்ந்திருந்தார்கள்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உமது உடல் கல்லறையில்வைக்கப்பட்டாலும் மண்ணோடு மண்ணாகிஅழிந்துபோகவில்லை. நாங்களும் திருமுழுக்கின்வழியாக உம்மோடு கல்லறையில் அடக்கப்பட்டோம்.பாவத்திற்கு இறந்தோம். ஆனால், நீர் புத்துயிர் பெற்றுஎழுந்ததுபோல எங்களுக்கும் ஆன்மீக வாழ்வு அளித்து,புதிய மனிதர்களாக வாழ நீர் வழிசெய்தீர். யாம் பெற்றவாழ்வு இவ்வையகம் பெற்று மகிழ்ந்திட அருள்வீராக.ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

----------------------------

முன்னர் பன்முறை உரைத்தது போல் - நீர்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தீர்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக

பதினைந்தாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு சாவை வென்று உயிர்த்தெழுகிறார்

a

 

விவிலியச் சிந்தனை(லூக்கா 24: 1-6)
வாரத்தின் ஆதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள்ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக்கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்கல்லறை வாயிலிலிருந்து கல் புரட்டப்பட்டிருப்பதைக்கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கேஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போதுதிடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடைஅணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர். இதனால்அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்துநின்றுகொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களைநோக்கி, “உயிரோடு இருப்பவரைக் கல்லறையில்தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன்எழுப்பப்பட்டார்” என்றனர்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! கடவுளின் ஆட்சியை இவ்வுலகில்கொணர நீர் வந்தீர். உமக்கு எதிராகச் செயல்பட்ட தீயசக்திகள் உமக்குக் கொலைத்தண்டனைவிதித்தபோதிலும், நீர் சாவின்மீது வெற்றிகொண்டீர்.எங்களைப் பாவத்தின் அடிமைத் தளையிலிருந்துவிடுவித்து எங்களுக்குப் புதுவாழ்வு தந்தீர்.உயிர்த்தெழுந்த ஆண்டவராகத் தந்தையின் வலம்அமர்ந்து எங்கள் அரசராக ஆட்சிசெய்கின்றீர். “உலகமுடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்”என்று வாக்குறுதி அளித்துள்ளீர். உமது அன்புச் சீடராகநாங்கள் வாழவும், நீர் சென்ற வழியில் நடக்கவும்எங்களுக்கு அருள்வீராக. ஆமென்

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

 

பொறுத்தருளும் கர்த்தாவே! உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும். என்றென்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிராதேயும் சுவாமி. தயவாயிரும் சுவாமி தயவாயிரும். - மூன்று முறை

திருத்தந்தையின் கருத்துகளுக்காக ஒரு பர. அருள். திரி. மந்திரம் ஜெபிப்போம்.

 

நன்றி : அருட் சகோதரிகள் ஜோஸ்பின், கிளாரா, தேவி, (இயேசுவின் திருஇருதய கன்னியர் சபை - இத்தாலி )